Tuesday, August 27, 2019

எது கருத்து சுதந்திரம்

எது கருத்து சுதந்திரம்.. கொள்கை ரீதியான விமர்சனம் கொண்ட கருத்தை எதிர்ப்பவர்களை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பது ..சரியோ தவறோ தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் பகை உணர்வோடு செயல்படுவது தவறான செயல் எனினும் அதில் உறுதியோடு நிற்பதென்பது வேறு .. கருத்தியல் ரீதியாக பொய்யான தகலல்கள் கூட சிலநேரம் கடந்து போய்விடலாம் ஆனால் இல்லாத ஒன்றை அதிலும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக தவறான தகவல்களை தந்தால் அதை கருத்து சுதந்திரமென சப்பைகட்டினால் திருப்பி அடிக்க வேண்டியிருக்கிறது தகுதியில்லாத தற்குறியென்று விட்டுவிட்டால் பொய்யை திரும்பதிரும்ப சொல்லி சட்டென்று நம்பிவிடுகிற மக்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாக்க எண்ணுவார்கள் .. முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது அவசியம் .. .. நம்புகிற மாதிரி கூட சொல்ல தெரியவில்லை வீண்பழி சுமத்தி அதில் குளிர்காயலாம் வெளிச்சம் பெறலாம் என நினைப்போருக்கு திமுக தரும் பதில் வழக்காக இருக்கவேண்டும். இதை ஆரம்பத்திலிருந்தே செய்திருந்தால் திமுக மீதும் கலைஞர் மீதும் வீண்பழிகள் வந்திருக்காது சுமக்க தேவையிருந்திருக்காது .. பொய்யை மட்டுமே மூலதனமாக செயல்படும் பாஜவினருக்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. தேசபக்தி போர்வையில் நாலுகாசு பார்க்கலாமென எண்ணுவோருக்கும் கடைசியில் மன்னிப்பு கேட்டுவிடலாமென எண்ணி செயல்படுவோருக்கும் திமுகவின் நகர்வு அச்சக்தை தந்திருக்கிறது .. விளம்பரபிரியர்களின் செயல்கள் சுயமரியாதை இயக்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது.. ஆனால் மக்கள் பெறும் பலன்கள்/பயன்கள் காலங்கடக்க செய்யமுடியும் .. இன்றைய சூழலில் ஆட்சியாளர்களின் தமிழ் விரோதபோக்கும் சனாதனத்தை திணிக்க நினைக்கும் பாசிசவாதிகளுக்கு வெண்சாமரம் வீசி வாய்பொத்தி கைகட்டி நிற்கிற கேவலமானவர்களின் அதிகார மோகத்தால் எதையும் சாதித்துவிடலாமென பகைவர் எண்ணி செயல்படும் வேளையில் திமுகவை பலவீனபடுத்த எடுக்கும் சிறு காரியங்களை கூட கண்காணித்து செயல்படவேண்டியது அவசியம்,.. .. யாராக இருந்தாலும் குற்றம் சாட்டினால் அதற்கான ஆதாரமிருந்தால் வழக்கை சந்தித்து எதிர்கொள்ளவேண்டுமே தவிர எனக்கு சுதந்திரமிருக்கிறது எதை வேண்டுமானாலும் பேசுவேன் என்றால் .. எதிர்க்கவும் மறுக்கவும், வழக்கு தொடுத்து தோலுரிக்கவும் சட்டம் எங்களுக்கு அனுமதியளித்திருக்கிறது .. உண்மையில் ஜனநாயக இயக்கம் என்பதால் தான் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் நாடியிருக்கிறது .. பெரும் தொண்டர்படை கண்ணசைத்தால் போதும் வேரோடு பிடிங்கியெறிந்துவிட கூடும்.. .. இனியும் பொறுப்பதில்லை .. பொறுத்ததால் சுமந்த பழிகள் போதும்.. சட்டப்படியான நடவடிக்கை நமதுரிமை.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment