Tuesday, October 1, 2019

தமிழ்க்குடி

கீழடி நாகரீகம் தமிழர் நாகரீகம் அல்ல பாரத நாகரீகம் பாண்டியராஜன் .. கீழடி தமிழ் கலாச்சாரமல்ல .. இந்து கலாச்சாரம் ..பொன்னர் .. ஒரே குரலில் ஒலிக்கிறார்கள் பின்னால் இருந்து இயக்குவதும் எழுதிகொடுத்த திரைகதையை வார்த்தை பிசகாமல் பேசுவதும் புரிகிறது .. அதிமுக அமைச்சர்களுக்கோ அல்லது அதிமுக தலைவர்களுக்கு இப்படி பேசவராது ஆனால் மாபா.பாண்டியராஜன் பேசுகிறாரென்றால் அவர் யார் எப்படி அதிமுகவிற்கு வந்தார் அவரால் இவ்வளவு சீக்கிரம் அமைச்சர் பதவியை அடைய முடிந்ததென்றால் அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது .. .. இந்து /பாரத நாகரீகம் என்ற சொல்லே தவறு அப்படியெனில் இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி இருந்திருக்கவேண்டும் அது தமிழாக இருந்திருக்கவேண்டும் இந்து நாகரீகமெனில் எந்தவொரு அடையாளமாவது இருந்திருக்கும் கோவில்களோ வழிபாட்டுமுறைகளோ அதற்காக சுவடுகளோ இருந்திருக்கும்.. எதுவுமே கிடைக்காத போது எங்கே தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் பண்பாடு இந்திய கலாச்சாரத்தை சேதபடுத்திவிடும் அல்லது இதுவரை கட்டிவைத்த பண்பாட்டு பொய்களெல்லாம் உண்மையில்லை என்றாகிவிடும் என அஞ்சி சில விசுவாசமான அடிமைகளை கொண்டு கூர்தீட்டுகிறார்கள் .. .. தமிழன் தொன்மையானவன் என்ற உண்மை அவர்களை சுட்டெரிக்கிறது ஆரிய கலாச்சாரத்தை இந்து கலாச்சாரமாக மாற்றி அதுவே இந்திய கலாச்சாரமென நம்பவைக்க சூழல் அமைந்திருக்க வேளையில் அதை சுக்குநூறாக்கியது கீழடி அகழ்வாய்வு முடிவுகள் இதுவரை கட்டிவைத்தது தகர்ந்ததால் வேறு வழியின்றி கீழடிக்கு மத சாயம் பூசி .. பாரத கலாச்சாரமென பரப்ப முயல்கிறார்கள் மொத்தத்தில் அவர்களின் பொய் புராணங்களும் நம்பிக்கை என்ற பெயரில் நம்பவைத்த மூடங்களும் தகர்ந்து தமிழர்களின் வாழ்வியல் மிக தெளிவாக மதங்களற்ற.. சாதியற்ற பெரும் சமூகமாய் வாழ்ந்த வரலாறு உலகுக்கு உணர்த்தியிருக்கும் வணிகத்திலும் நீர் மேலாண்மையிலும் சிறந்து விளங்கிய தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது ஒவ்வொரு தமிழனும் மதம் கடந்து சாதி மறந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டும் ஆம் உன் வரலாறு இவ்வுலகின் தொண்மையானதென்ற உண்மை நிரூபிக்கபட்டிருக்கிறது .. ஏனோ தமிழர்கள் மௌனமாய் இருக்கிறார்கள் .. பிரதமரின் கனியன் பூங்கன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பெருமை பேசுகிறார் தமிழை ஆட்சிமொழியாக அறிவித்து தமிழை பெருமைபடுத்துங்கள் என திமுக தலைவர் திரு.தளபதி.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார் ..இது தமிழர்களின் உள்ளத்தின் எழும் ஆசை இது ஒட்டுமொத்த கோரிக்கை ..இதை மத்திய அரசு சாதி மதமற்ற தமிழ் பெருங்குடியை வரலாறு உணர்த்தும் உண்மையை தொல்பொருள் ஆய்வு தரும் சேதியை உலகமே வியந்து நிற்கும் தமிழனின் ஆற்றலை அறிவை ஏற்று மரியாதை செய்திட வேண்டும்.. தமிழை ஆட்சி மொழியாக்கி வரலாறுபடைக்கவேண்டும்.. .. தமிழன் மூத்த பெருங்குடி.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment