Saturday, September 30, 2017
மாற்றான் தோட்டமாயினும்
மௌனமாய் கடந்து போவோமென்றிருந்தேன்..
நண்பர்கள் விடுவதாயில்லை.. திருமிகு.ஸ்டாலின் எப்படி கலந்துக்கொள்ளலாம்
எச்.ராசா மணிவிழாவில் என கேள்விகள்.. கொள்கை பிறழ் என்றெல்லாம் உள்ளடப்பில் கதைத்தார்கள் .. பதிலளிக்கவேண்டியது கடமையாகிறது..
..
தளபதியார் கொள்கையை விட்டுக்கொடுத்தாரா ..
ஏற்கனவே எஸ்.வி.சேகர் விடயத்தில் கூட மிக தெளிவாக நட்பு என்பது வேறு ஏற்றுக்கொண்ட
திராவிட இயக்க கொள்கையை விட்டுக்கொடுக்கமுடியாதென மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.. தனிநபரின் சொந்த விழாக்களில் கலந்துக்கொள்வதால் அனுசரித்து போவதாகவோ அல்லது அவர்களின் தயவை நாடுவதாகவோ பொருள் அல்ல..
ராசா சாரணர் தேர்தலில் போட்டியிடுகிறாரென்று அறிந்தவுடன் மிக கடுமையாக விமர்சித்தார்.. சாரணியர் தேர்தலை அரசியலாக்குவதாகவும் அதை காவிமயமாக்கி .. இளம் மாணவர்கள் நெஞ்சில் விசத்தை விதைக்க முயலுவதாகவும் .. இதற்கு முதல்வரும் அமைச்ர்களும் துணைபோவதாக கடுமையாக எச்சரித்தார் அதனால்தான் ராசாவின் தோல்வியை நாமெல்லாம் கொண்டாடினோம்.. கல்வியாளர்கள்.. கல்வித்துறை அதிகாரிகளென 200 மேற்பட்டவர்கள் வாக்குரிமை பெற்றவர்கள்.. அமைச்சரே நேரடியாக தொலைப்பேசியில் அழைத்து ராசாவிற்கு வாக்களிக்க சொன்னார்கள்.. வேறொரு ஆளில் பெயரில் விண்ணப்பம் பெற்று திருட்டுத்தனமாக வெற்றிபெற்றிடலாம் என்றிருந்த ராசாவின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர்.. தளபதியின் ஒற்றை அறிக்கை கல்வியாளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததோடு மணி அவர்களை போட்டியிடும் துணிவையும் தந்து வெற்றிபெறவும் செய்தது.. கொள்கை எப்போதும் விட்டுக்கொடுக்காமல்.. பாசிச நுழைய காலூன்றாவண்ணம் தடுத்துநிறுத்தியவர்..
..
பேராசான் பெரியார் கடுமையாக பார்பனர்களை விமர்சிப்பார் ஆனால் அவரது இல்ல நிகழ்வுகளுக்கு செல்வார் .. ராஜாஜியோடிருந்த நட்பு அரசியலை கடந்தது.. ராஜாஜியின் மகள் பால்ய விதவையாக வீட்டில் அடைப்பட்டுகிடந்ததை ராஜாஜியிடம் ஏன் குழந்ததையை வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் படிக்க அனுப்பலாமே என்ற போது அவ ப்ராப்தம் அவ்வளவுதானென சொன்னவரின் மனதை மாற்றி அவருக்கு மறுமணம் செய்துவைக்க பெரும் முயற்சி செய்தார் .. அந்த லட்சுமியின் மகன்தான் குடியரசுத் துணைதலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்.. திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணத்திற்கு அழைத்திருந்தார் திருமண நிகழ்வெல்லாம் முடிந்தபிறகு வீட்டிற்கே சென்று ஆசிர்வாதம் செய்கிறார்.. கல்கியிடம் குழந்தைகளை அழைத்துவாருங்களென சொல்லி குங்குமத்தை கொண்டுவர சொல்லி நெற்றியில் இட்டு வாழ்த்துகிறார்.. அருகிலிருந்த கல்கியின் உதவியாளர் இந்த சம்பவத்தை எழுதி பெரியாரின் இரட்டை வேடமென எழுதலாமென்ற போது கல்கி சொன்னார் பெரியார் கொள்கையில் பிடிவாதமானவர் .. நேர்மையானவர்.. நாம் மனம்கோண கூடாதென்பதற்காக.. நமது சடங்குகளை மதிக்கிறாரே தவிர அதை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமில்லை.. என்றார்.. அதைதான் தளபதியும் செய்தார்..
..
கொள்கையில் விட்டுகொடுப்பதல்ல ..மாறாக அவர்களின் கொள்கைகளுக்கு மதிப்பளிப்பது..
#மாற்றான்_தோட்டமாயினும்_மனமுண்டு.
..
தோழர். ஆலஞ்சி
ஜெயலலிதா நீதிவிசாரணை..
என் வாழ்நாளுக்குள் திமுகவை இருந்த இடம் தெரியாமல் அழிப்பேன் என்று சபதமேற்ற ஜெயலவிதாவிற்காக திமுக தான் நீதி கேட்கிறது..
என்ன விசித்திரம் என்கிறீர்களா.. அதுதான் திமுக..
..
மூட்டைப்பூச்சியைப்போல் நசுக்குவேனென்ற ராஜாஜியையும்.. 6000 அடி ஆழத்தில் புதைப்பேனென்ற பக்தவச்சத்தலத்தையும் திமுகவை இருக்குமிடம் இல்லாமல் செய்வேன் என்ற காமராஜரையும்.. ஏன் சுடுகாட்டிற்கு அனுப்புவேன் என்ற எம்ஜிஆரையும் பார்த்தாயிற்று..இவர்களுக்கெல்லாம் நினைவுமண்டபங்களை கட்டி அழகு பார்த்தவர் கலைஞர்.. தன் சிலையை உடைத்த இளைஞனை கூட கவிதையில் ரசித்தவர்..
செயல்ப்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னதம்பி முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அதுவரை நிம்மதி எனக்கு.. என்றார்
..
ஜெயலலிதா மிக மோசமான அரசியலை கையிலெடுத்தவர் நாகரீகமற்ற தனிநபர் தாக்குதலை செய்தவர் தனக்கு கிடைக்காத வாழ்வு பிறருக்கு கிடைத்திருக்கிறதே என்ற பொறாமையை அடிக்கடி செயலிலும் சொல்லிலும் வெளிப்படுத்தியவர்.. அடிமனதின் ஆழத்தின் ஏக்கம் அவரின் செயல்பாடுகளில் தெரிந்தது.. அதை காட்டிக்கொள்ளாமல் வாழ தெரியாமல் போனார்.. கூட இருந்தவர்கள் தன் நிழலை தவிர எல்லோருமே ஏமாற்றுகாரர்களென அறிந்தே இருந்தார்.. தாயார் தொடங்கி உறவினர்கள் நண்பர்களென எல்லோருமே இவரை பகடையாக பயன்படுத்தினார்கள்.. அதை அவர் அறிந்தே இருந்ததுதான் கொடுமை..
..
பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி தான் அடைய முடியாத கதாநாயகி தகுதி தன் மகளை கொண்டேனும் அடையவேண்டுமென நினைத்து தான் இரையான மகோராவிடமே மகளை சேர்த்ததில் தொடங்கி .. பணம் புகழென உயர்ந்த போது .. உடன்பிறந்தவரும் உறவினர்களும் அவரின் சொத்து மீது நாட்டம் கொள்ள ..கடைசியில் யாரையும் நம்பமுடியாத போதுதான்.. சசிகலா அறிமுகமானார்.. ஜெயலலிதாவிற்கு தெரிந்தே தான் சசிகலாவின் சட்டவிரோத செயல்பாடுகள் இருந்தாலும்..எல்லாம் இழந்தவர் கிடைத்த தும்பை பிடித்தேனும் நகரவேண்டுமென்ற நிலையில்.. சசி நம்பிக்கையானவராக காட்சி தந்தார்.. தன்னை வைத்து பிழைக்கிறார் ஆனால் தன்னை மீறியோ அல்லது காட்டிக்கொடுத்தோ தப்பிக்க நினைக்கவில்லையென்றவுடன் அவரோடான நெருக்கம் அதிகமானது.. அதை சசி&கோ சரியாக பயன்படுத்தி பள்ளத்திலிருந்தவர்கள் உச்சியை தொட்டார்கள் இதெல்லாம் யாவரும் அறிந்ததுதான்.. இப்போது ஜெயலலிதா சிறைச்சென்றால் கட்சியை விட்டே நீக்குவோமென்கிறார்களே இவர்களை விட அந்த மாபியா கும்பல் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாகதான் இருந்திருக்கிறது...இருக்கிறது..
..
இப்போதும் ஜெயலலிதாவின் அரசியலை வெறுத்து ஒதுக்கினோமே தவிர தனிநபரை அல்ல அதனால்தான் ஆளகூடாதென்றுதான் சொன்னோம் வாழகூடாதென்று அல்ல எங்களால் இரங்கற்பா பாடமுடிந்தது ..
அவரின் மரணம் குறித்து அவரின் கூட இருந்தவர்களே எழுப்பும் சந்தேகங்களும் கூட இருந்தே குழிப்பறித்தவர்களையும் ஜெயலலிதாவை சாய்த்தால் வளரலாமென திட்டம்தீட்டியவர்களையும் மக்கள் முன் தோலுறிக்கவேண்டியிருக்கிறது.. அதனால் தான் திமுக சிபிஐ விசாரணை கோருகிறது.
..
மிக கேவலமானவர்கள் கேடுக்கெட்டவர்களை அடையாளங்காட்டுவோம்
..
தோழர். ஆலஞ்சி
Friday, September 29, 2017
இந்திய பொருளாதாரம்
80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார் யஸ்வந்த் சின்ஹா-ஜெட்லி
இதுதான் பாசிசத்தின் முகம்..
..
சொல்லப்பட்ட கருத்தை/ குற்றசாட்டை எதிர்க்கொள்ள திராணியற்று தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதுதான் பழைமைவாதிகளின் செயலாக இருக்கும்.. குற்றசாட்டை மறுக்கமுடியாமல் அவரை தாக்குவதென்பது கோழைத்தனம் கையாலாகாதசெயல்..
..
யஷ்வந்த் சின்ஹா மோடியும் ஜெட்லியும் சேர்ந்து நாட்டை திவாலாக்குகிறார்கள் பொருளாதார மந்தநிலையில் கூட இந்திய பொருளாதாரம் தடம்புரளாமால் இருந்தது இப்போது உலகின் பொருளாதாரம் நல்லநிலையில் இருக்கும் வேளையில் இந்தியவின் நிலை மிகமோசமாக இருப்பதாக சொல்கிறார்.. 5.7 என்பது அல்ல உண்மையில் 3.7 தான் வளர்ச்சியென சொல்வதை .. எந்த பொருளாதார வல்லுநர்களும் தவறென்றோ காழ்ூ்புணர்ச்சியில் சொல்வதாக சொல்லாதபோது நாட்டின் நிதியமைச்சர் நிலைமையை நாட்டுமக்களுக்கு சொல்வதை விடுத்து யஷ்வந்த் சின்ஹாவை கிண்டல் செய்வதிலிருந்தே மிக மோசமாகி கொண்டிருக்கிறதென்பது தெரிகிறது..
..
நாங்கள் சொன்னோம் எதிர்க்கட்சிகளில் குற்றசாட்டாக கவனித்தில் கொள்ளவில்லை இப்போது பிஜேபியை சேர்ந்தவர்களே நிலைமையை உணர்ந்து கேள்வி கேட்கிறார்கள் என்கிறார் ப.சிதம்பரம்.. சிவசேனாவோ ஒருபடிமேலேபோய்.. பொருளாதார மேதைகள் டாக்டர்.மன்மோகன்சிங்கும் ப.சுதம்பரமும் முன்பே எச்சரித்தார்கள் இன்றைய மோசமாக நிலையை முன்கூட்டியே கணித்தார்கள் என்கிறது..
..
மதம் தலைக்கேறியவர்கள் வாய்ஜால வித்தைகாரர்கள்.. எப்போதும் பொய்பேசி திரிபவர்கள் இவர்களை மகாபுத்திசாலிகள் போல் காட்டி.. ஊழல் நிர்வாக சீர்கேடென ஏதேதோ சொல்லி நாட்டின் சிறந்த வல்லுநர்களை வேண்டாமென வைத்து கார்ப்பரேட்டுகளின் வியாபாரஉக்தியை அரசியலாக்கி மோடி போன்ற அரைவேக்காடுகளை .. உன்னதநிலைக்கு உயர்த்தி பிடித்ததன் விளைவு .. இன்று நாடு சந்திக்கிறது .. அதிரடி என கூறி ஒரே இரவில் பணமதிப்பிழப்பை அறிவித்து .. நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தியதை ஒஹோவென புகழ்ந்த மோடி ரசிகமணிகள் இப்போதும் சப்பைக்கட்டுவதை நினைத்து வேதனையாகிறது..
..
கருத்திற்கு/குற்றசாட்டிற்கு ஆதாரத்தோடு பதிலளிக்க திராணியில்லாமல் 80 வயதில் பதவிக்கு ஆசைபடுவதாக கொச்சைபடுத்துவதை ஏற்கமுடியாது..
பாஜக ஆர்எஸ்எஸ்காரர்களின் பேச்சு இப்படிதான் ஆணவத்தோடு இருக்கும் .. எதற்கும் பதில் சொல்ல வக்கில்லாமல் நேரடி தாக்குதலை செய்வார்கள் ..தமிழகத்தில் எச்.ராசா தமிழிசை போன்றோர்களின் பேச்சை கவனியுங்கள் இதே தொனியில்தானிருக்கும்.. ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தில் /பயிற்சியே இந்தமுறைதான் .. பதிலளிக்க முடியாமல் போகும்போதெல்லாம் தனிப்பட்ட தாக்குதலை செய்வார்கள் ..
..
ஜெட்லிக்கு பேச்சை நாடே எதிர்க்கிறது யஷ்வந்த் சின்ஹா அவர்கள் நான் வேலைக்கேட்டு விண்ணப்பம் செய்திருந்தால் இன்றைக்கு முதலிடத்தில் ஜெட்லி இருந்திருக்கமுடியாதென பதிலடி தந்திருக்கிறார்.. கருத்தை எதிர்க்கொள்ளமுடியாத கோழை ஜெட்லி..
..
#தேசத்தின்_பேராபத்து..
Thursday, September 28, 2017
அறிவிலிக்கூட்டத்தை விரட்டுவோம்
விகடன் அட்டைப்படம்..
விகடன் ஏற்கனவே கருத்துப்படங்களில் கேலிச்சித்திரங்களில் அமைச்சர்களை கிண்டல் செய்து வெளியிட்டிருக்கிறது கடுமையான விமர்சனங்களை ஆட்சியாளர்கள் மீது வைத்திருக்கிறது..
மகோரா [எம்ஜிஆர்]ஆட்சியில் ரௌடியைப் போல சித்தரித்த கேலிச்சித்திரத்திற்கு கைதுவரை சென்றார்
விகடன் ஆசிரியர் சீனிவாசன்
ஆனால் அதற்கு விளக்கமளித்த ஆசிரியர் விமர்சனபார்வையை கூட ஏற்க முடியவில்லையென்றார்...
கலைஞர் உட்பட ஜனநாயகத்தில் விமர்சனத்தை உள்வாங்கவேண்டும் பழிவாங்கும் போக்கு சிறந்த நடைமுறையல்ல என்றனர்
..
இப்போது விகடன் வெளியிட்டியிருக்கும் கேலிச்சித்திரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது ஜனநாயக கடமையை மீறி ஒரு உறுத்தல் தோன்றுகிறது .. சினிமா கொட்டகைகளில் பஜார்களில் தாயம் உருட்டும் சூதாட்டக்காரர்களென.. இந்த
திருடர்களை, கண்முன் காட்டி ஏமாற்றுக்காரர்கள் ..இவர்களென ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறது.. சட்டென்று சிரித்துவிட்டு கடந்துபோக முடியவில்லை .. இந்த அயோக்கிய கும்பல் ஆட்சிக்கு வர நாமும் காரணமாகிவிட்டோமே என மக்களின் மனதை உறுத்தவைத்தத்திருக்கிறது.. ஆம் நாமும் தான் காரணம் .. சொற்பகாசும் அது தரும் தற்காலிக நிம்மதிக்காக நீண்ட நெடும் துயரத்தை விலைக்கு வாங்கியிருக்கிறோம்.. தெரு பொறுக்கிகள்/சூதாடும் ரௌடிகள் அளவிற்கு தரம்தாழ்ந்து மாநில முதல்வர் விமர்சிக்கப்படும் போது நாமும் இம் மாநிலத்தில் வாழ்வதை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது..
..
அரசியலதிகாரம் இருக்கிறதென்பதற்காக இன்னமும் இவர்களை விட்டுவைப்பது ... நேரடியாக அரசாங்கத்தை சூதாட்டகாரர்களிடம் அல்லது ஏலமெடுப்போரிடம் தந்துவிடலாம்.. ஏலமெடுத்தவன் கூட அடுத்தமுறை நமக்கு கிடைக்கவேண்டுமென்பதற்காக சற்று ஈரத்தோடு நடந்துக்கொள்வான்
இனி எப்போதும் நமக்கு வாழ்வில்லை என்பதறிந்து மக்களைப்பற்றி கவலைக்கொள்ளாமல் பூம்பூம் மாட்டைப்போல தலையாட்டி திரிகிறார்கள்..
நக்கி பிழைக்கிறார் அதையே நல்லதென்கிறார் என்ற பாவேந்தர் வரிகளைப்போல அடிமைகளைவிட கேவலமாய் கூனிகுறுகி நிற்கிறார்கள்.. பொய்யும் புரட்டும் சர்வசாதாரணமாக வருகிறது இப்படியொரு கேடுக்கெட்ட கூட்டத்தை இதுவரை தமிழகம் கண்டதில்லை.. மாநில நலனுக்கெதிராக கொஞ்சம் கூட அச்சப்படாமல் நீட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டு .. விற்றுவிடுகிறார்கள்..
..
ஜனநாயகத்தின் மீதும் இந்த மண்ணின் மீது சிறுதும் அக்கறையின்றி இவர்கள் நடத்து சூதாட்டகூத்து எத்தனை நாள் பொறுப்பது.. இவர்களையும் இவர்களை ஆட்டுவிக்கும் கூட்டத்தையும் வேரோடு சாய்க்கவேண்டும்..
..
இவர்களை அரசியலை விட்டே விரட்ட உறுதியேற்போம்.. நமக்காக உழைக்கிறவனை அடையாளம் காண்போம்.. #நமக்கு_நாமே ..என முரசொலிப்போம்
வெற்றி வெகுதூரமில்லை.. இலக்கை சரியாக வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம்.. நிச்சயம் வெல்வோம்..
#வெற்றிமட்டுமே_நமது_இலக்கு…
..
தோழர். ஆலஞ்சி
Wednesday, September 27, 2017
கமல் ரஜினி
ரஜினி கமல்..
பாசிச சிந்தாந்தத்தின் மறைமுக மற்றும் வெளிப்படை யுக்திகள்/வரவுகள்..
முன்னவர் வருவது கடவுள் கையிலெனச்சொல்லி தப்பித்துக்கொள்ள இடையில் வந்த நரி மாட்டிக்கொண்ட கதையாக பின்னவர்.. இவரை சிலர் நம்மவரென்பவர் என்கிறார்கள்..ஆரம்பம் தொட்டே எதிர்ப்பவன் என்றவகையில் ..அறிந்தே சொல்கிறேன் கொஞ்சமும் தகுதியில்லாதவர்கள்..
..
அதீத மேதாவித்தனத்தை எப்போது யாரிடம் காட்டவேண்டுமென்று அறிதலே பாலபாடம் சாமானியரிடம் மேதாவியைப்போல நடித்தால்.. அவன் அனைத்தும் அறிந்தவன் என்ன அதிகம் வெளிகாட்டாத அடக்கம் .. பிய்த்தெறிந்துவிடுவான்.. செய்தியாளர்களிடமோ அல்லது கருத்தரங்குகளிலோ.. விவாதிப்பதல்ல களஅரசியல்.. வெற்றிடத்தில் உடனே காற்று நிரம்புமென நம்பி வந்தால் அது அகண்டவெளி என்று புரியும் எத்தனை வந்தாலும் ஒரத்தில் வைத்துவிடும் காற்றே இருப்பதாய் அறியாத இயல்புநிலை வரும்..
..
முன்பெல்லாம் அரசியல் எனக்கு தெரியாது நடிப்புதான் எனக்கு வருமென்றார் இப்போதும் கூட அரசியலை முழுமையாக அறிந்துவரவில்லை.. செலவிற்கு மக்களிடம் செல்வேன் என்கிறார் இவரை இயக்குகிறவர்கள் இப்போதைக்கு தரகூடும்..ஆனால் வேலைக்காகாது என்கிற போது கை கழுவிவிடுவார்கள்.. அரசியல் களப்பணிக்கு நிச்சயமாக ரசிகர்கள் பயன்படமாட்டார்கள்.. எங்களுரில் விஜயகாந்திற்கு இப்படிதான் தீடீரென சில இளைஞர்கள் பிரச்சாரமெல்லாம் செய்தார்கள் ..என்னப்பா ஐம்பது அறுபதுபேர் இருந்தீங்களே ஓட்டு ஐம்பது கூட வரலியே என்ற போது காசு கொடுத்தார்கள் வேலை செஞ்சோம்..அவ்வளவுதாண்னே என்றார்கள்.. ஆம் கொள்கை நாட்டின் நலன், இந்த சமூகத்தின் நடக்கும் கொடுமைக்களுக்கெதிராகவோ திரண்டவர்கள் இல்லை.. திடீரென முளைக்கிறவைகள் சிறிதுகாலம் தான் இருக்கும் அழிந்துவிடும்..
முறையாக விதைத்து வேலிகட்டி பார்த்து பார்த்து வளர்த்து இடையிடையே வேண்டாதபோதெல்லாம் கிளையை வெட்டி வளரவிட்டு பாருங்கள் அது தான் வைரம் பாய்ந்து நெடுநாள் நிற்கும்.. இவர்களெல்லாம் மழையில் முளைக்கிற காளான்கள்.. சிறிதுகால வாழ்வு அவ்வளவுதான்..
..
கடவுள் சொல்கிறவரை காத்திருப்பதாக சொல்வதிலிருந்தே இருக்கும் காசை கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்.. இருப்பதை இழந்துவிட்டு கெட்டு நிற்க விவரகேடில்லை என்கிறார் ஒருவகையில் அதுவும்சரிதான்.. தேசியம் பேசி திரிகிறவர் திராவிட மண்ணில் வேரூன்ற முடியாது இங்கே கொஞ்சம் நாத்திகமும் பேசவேண்டும்.. தெளிவாக எதிராளியை ..குறிப்பாக பாசிசத்தை காவிகளை அவ்வப்போது சாடவேண்டும்
யதார்த்த மக்களின் கோவத்தை உணர்ந்திருக்கவேண்டும்.. கவர்ச்சி சினிமா மோகம்.. ஒருவித மாயை/ போதையெல்லாம் 70 -80 களில் இருந்தது இப்போதெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள்.. நொடிக்குநொடி அரசியலை அறிந்துவைத்திருக்கிற காலம் சமூகவலைத்தளங்கள் கட்சியின் நிலைப்பாட்டையே மாற்றுகிற காலம்..இப்போதெல்லாம் அரிதாரம் வேலைக்காகாது..
..
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டுநாட்களில் கலையும்..
..
தோழர். ஆலஞ்சி
நாளுக்கொரு பேச்சு
நாளுக்கொரு பேச்சு..
தம்பிதுரை மீண்டும் இணைவார்கள் என்கிறார்..
ஜெயலலிதா மருத்துவமனை தொடர்பான விடயங்களை நான் விசாரணை கமிஷனில் சொல்வேன் என்கிறார்..
அதெல்லாம் கிடக்கட்டும்..
மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் சின்னம் தொடர்பான ஆவணத்தில் கைநாட்டு வைத்த நபர் யார் ஜெயலலிதாவின் கைநாட்டு எனில் அவர் சுயநினைவோடு இருந்தாரா..
ஏனெனில் மூன்று தினங்களுக்கு பிறகு ஜெயலலிதா சுயநினைவோடு இல்லையென்கிறார் அவரின் அண்ணன் மகன் ஜெ.தீபக்..
அதற்கு முன் காவிரி விடயமாக அதிகாரிகளோடு ஆலோசித்தாரென்ற அறிக்கை உண்மையா..
இதெற்கெல்லாம் பதில் வேண்டும்..
..
உண்மைக்கு மிக தூரம் அதிமுகவினர் அவர்கள் வாயில் எப்போதும் ஏமாற்றும் வார்த்தை பிரயோகம் தான் வரும் .. எதையும் ஆலோசித்து பேசும் ஆற்றலோ அறிவோ அவர்களுக்கில்லை.. அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அறிவுசார் கூட்டமாகவோ , கொள்கை இனப்பற்றால் இணைந்தவர்களோ இல்லை .. கருணாநிதி எதிர்ப்பு அல்லது கவர்ச்சி இரண்டை தவிர வேறொன்றும் இல்லை.. அவர்கள் யாருமே விவரமாக பேசகூடியவராகவோ, அறிவைக்கொண்டு விவாதிக்க தகுந்தவர்களோ அல்ல.. முன்னுக்குபின் பேசும் விவரகேடுகள் அவர்களின் தலைவரே தன் ரசிகர்களை கத்தி வைத்துக்கொள்ள சொன்னவர்தான்..
..
ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலகவேண்டுமாயின் அதற்கு திமுக ஆட்சிக்குவரவேண்டும்,அப்போதுதான் இன்றைக்கு கூப்பாடு போட்டுதிரியும் கழிசடைகள் யாரெல்லாம் மரணத்தில் பங்குண்டென அறிய முடியும்.. ஜெயாவின் சுவாசகருவி அகற்றிய விவரம் பன்னீருக்கு தெரியுமென RTI மூலம் வெளிவந்திருக்கிறது.. இவர்தான் தர்மயுத்தம் கேட்டவர்..
இவர் மட்டுமல்ல.. பாஜகவின் வெங்கைய்யா அப்போலோ அதிபர் கூட விசாரிக்கப்படவேண்டும்.. ஏன் 1 ந்தேதியே ஆருடம் சொன்ன பொன்.ராதாவையும் விசாரித்தால் முழுவிவரம் வரும்..
அவர் சாவின் மர்மம் விலகவேண்டுமென்பதைவிட அரசியலமைப்பையே கேலிகூத்தாக்கி சுயநினைவில்லாதவரின் கைரேகையை உருட்டிய செயலெல்லாம் மக்கள் அறியவேண்டும்.. மோடியின் இணையத்தில் ஜெயாவின் மரணம் குறுத்து விமர்சனம் வருவதாக சொல்கிறார்.. அப்படியெனில் மோடியிடம் விசாரணையை கொண்டுபோகலாம்...
..
நீண்ட நாட்கள் உண்மையை மறைத்தோ பொய்யை அலங்காரத்தோ வைக்கமுடியாது அதுவும் இந்த அறிவிலிக்கூட்டத்தினரால் அதை கொண்டு நடக்கமுடியாது .. மாறி மாறி பேசி வீதிக்கே கொண்டுவருவார்கள்.. இவர்களின் செயல்கள் இவர்களை காட்டிக்கொடுத்துவிடும்.. அப்பட்டமான பதவிவெறியும் பேராசையும் அன்றி வேறில்லை ..
..
#உண்மையை_மூடிமறைக்கமுடியாது
ஒருநாள் வெளிவந்தே தீரும்..
..
தோழர். ஆலஞ்சி
Monday, September 25, 2017
இனம்..
நண்பர் ஒருவர் இனத்தின் அடையாளம் மொழி என்றார்.. இல்லை ஒரு இனத்தின் அடையாளங்களில் பிரதான பங்கை மொழி வகிக்கிறது..
மொழி என்பது ஊடகம் அல்லது தொடர்புக்கானது..
ஒரு இனத்தில் பல்வேறு மொழி பேசுகிறவர்களை வரலாற்று நெடுக காணமுடியும் ஆனால் இனத்தால் அவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
..
யூத இனத்தை எடுத்துக்கொண்டால்.. யூதர்கள் பாலஸ்தீனியர்கள் சாமாரித்தர்கள் இவர்கள் யாவரும் யூத இனத்தை சேர்ந்தவர்கள்.. இப்போது கூட பிரதான எதிரியாக இருக்கிற பாலஸ்தீனியர்களும் யூதர்களும் தங்களை யஹூத் என்றே அறியப்படுகிறார்கள்.. ஆனால் அவர்களின் மொழி வழக்கம் வெவ்வேறாக இருக்கும்.. யூதமொழியை அறிந்தவர்களாக ஆனால் அரேபிய மொழியை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்கள் மதநம்பிக்கையும் அவர்களை வெவ்வேறாக்கியது.. இப்போது கூட சில ஆய்வாளர்கள் யூதர்களின் வழிதோன்றல்கள் தான் ஆரியர் எனச் சொல்கிறார்கள்.. அதற்கவர்கள் சொல்லும் பிரதான காரணம்.. யூதர்களின் புனிதநூல் என அறிய படுகிற தோரா விலும் கிருஸ்துவர்களின் பழைய ஏற்பாடாகவும் யூதர்களின் நூலாகவும் இருந்த ஏபிரேய விவிலியம்
ஏன் இஸ்லாமியர்களின் வேதநூலான குர்ஆனிலும் யூத இனத்தை மேன்மையானவர்கள் என்கிறது.. அதைதான் யஜூர் வேதமும் ஆரியர்களை மேன்மையானவர் என சொல்லி வர்ணத்தை தருகிறது.. தலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது
..
நம் விடயத்திற்கு வருவோம்
இனத்தின் நிறைய மொழிகளில் ஆதிக்கம் உண்டு
பார்ஸி இனத்தில் கூட பார்ஸி மொழி பேசுகிறவர்களும் தாரி மொழி மற்றும் அரபு பேசுகிறவர்களும் உண்டு.. ஆனால் அவர்கள் இனத்தால் பார்ஸிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.. இங்கே திராவிடர்களை குறிப்பிட வேண்டும் திராவிடர்கள் இயற்கை வணங்கிகள் என்றும் உலகின் முதல் இன தோன்றல் என்றும் சொல்லப்படுகிறது பழைமை நாகரீகம் என அறியபடுகிற சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம் என்றும் அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் தமிழர்கள் என நிறைய ஆய்வு முடிவுகள் பறைசாற்றுகிறது..
திராவிடத்தின் மூலமொழியாக தமிழே இருந்தது என்றும் .. பின் வட்டார வழக்கு சொற்களால்..பிரிந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் ஒரிய என பல்வேறு மொழி ஒலி வடிவங்களை பெற்றதாக சொல்லப்படுகிறது..
..
உலகின் ஒவ்வொரு இனமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் முதல் ஆயுதம் கலாச்சாரம் என்கிறார் இலங்கை சேர்ந்த பண்பாட்டு செயல்பாட்டாளர்
டாக்டர்.சி.சிவமோகன் ..
ஆம்..ஒரு இனத்தின் அடையாளம் என்பது அவர்களின் வாழ்வு முறை கலாச்சாரம் பண்பாடு அவர்களின் பழையான பழக்கவழக்கங்கள் அவர்களது நாகரீகம் இவைகளே அதோடு அவர்களின் வழக்கு மொழியும் பிரதான பங்கை வகிக்கும்..
..
#ஒருமனிதனின்அடையாளம்_இனம்..
#அஞ்சும்_வழக்கம்_திராவிடர்க்கில்லை
..
தோழர். ஆலஞ்சி
கமல்..
முதல்வர் ஆவேன் என எங்கே சொன்னேன், முள் கிரீடம் என்று தான் சொன்னேன்
..நடிகர் கமல் ஹாசன் @ நியூஸ் 18 தமிழ் ..
..
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை தெரியுமா..
உன்னால் முடியும் தம்பி என உத்வேக கட்டுரை எழுதியவர் அமெரிக்கா வாசத்தை முடித்துக்கொண்டு மக்கள் தொண்டாற்ற வந்தார் இளைஞர்களை தட்டியெழுப்பி புதிதாய் தமிழகம் சமைக்கபோகிறேன் என்றார்.. அவரின் எழுத்தும் கருத்தும் புதுயுகத்தின் விடியலுக்கானவையாக இருந்தது .. நூறு இளைஞர்கள் கொடுங்கள் என்ற விவேகானந்தர் கூட எனக்கு நினைவிற்கு வந்தார்..
நீ தான் தம்பி முதலமைச்சர் என்றெல்லாம் எழுதி குறிப்பாக இளைஞர்களை தட்டியெழுப்பியவர்.. மக்கள் சக்தி இயக்கம் கண்டு அரசியலில் நுழைந்தார்.. தேர்தல் அரசியல் வேறென்பதை அறியாமல் போனார் .. ஆயிரம் வாக்குகளுக்குள் முடங்கிப்போனார்..
அவரது எழுத்துக்களையோ அல்லது அவரது முற்போக்கு சிந்தனைகளையோ குறைகூறுதில்லை நோக்கம் ஆனால் யதார்த்தம் அறியாமல் கற்பனைகளில் மிதந்தது அரசியலைப்பற்றிய தெளிவில்லாமல் போனார்..
..
ஏன் இதை சொல்கிறீர் என கேட்டால் மிக அதீத புத்திமானாக காட்டிக்கொள்கிறவர்கள் திடீரென சறுக்கிவிழுவார்கள்.. முன்தினம் எழுதியத்தற்கான விடை இன்றைய பேட்டியில் கிடைத்தது.. கட்சி நடத்த பணம் எங்கிருந்து வருமென்ற கேள்விக்கு மக்கள் தருவார்களென உளறுகிறார் அதுவும் நேர்மையாக தரவேண்டுமென சொல்வதிலிருந்தே .. எப்படி பாஜகவிற்கு கணக்கில் வராத/எங்கிருந்து வந்ததாக தெரியாத ₹400 கோடி பணம் கட்சிக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறதோ அதைப்போல தான் இவரது தூய்மை /நேர்மையும் .. அரசியலில் என்ன கொள்கை எந்த வடிவத்தில் வருகிறதென்பதை பொறுத்தே விமர்சிக்க முடியும் ஆனால் திடீரென கெட்டுக்கிடக்கு .. ஊழலை ஒழிப்பேன் என்றால் மாநில அரசை அல்லது மாநில கட்சிகளைப்பற்றி மட்டுமே பேசுவேன் மத்தியில் ஆளும் அரசை விமர்சனம் செய்வதிலிருந்து மாறி நிற்பேன் என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடியே தெரியவில்லை என கருத வேண்டியிருப்பதோடு .. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானவராக தெரிவார்..
மோடியின் திட்டங்கள் வெறும் வார்த்தையோடு நிற்கிறதே.. தூய்மை திட்டம் தொடங்கி பணமதிப்பிழப்பு இவற்றைப்பற்றிய இவரின் கருத்துக்களிலிருந்தே இவரின் முகசாயல் நமக்கு விளங்கும் .. இவர் சரிப்பட்டுவரமாட்டார் என்ற நகைச்சுவை தான் நியாபகம் வருகிறது.. ஏனெனில் முன்னுக்குபின் மாறி பேசும் அரசியல் தொடக்கம் சரியான பாதையை தராது..
..
100 நாட்கள் திட்டம் போல் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாமென்பதிலிருந்தே .. அவரின் பின் வாங்கும் அல்லது நோட்டம் பார்க்கும் செயலாக தெரிகிறது.. உட்கட்டமைப்பை ஏற்படுத்தாமல் அரசியலில் அதுவும் தேர்தல் அரசியலில் ஈடுபடுதென்பது முட்டாள்தனமென அவர் அறிந்திருக்க கூடும் அதன் எதிரொலியாக தான் மிக சமாளிப்போடு கூடிய பதிலாகவே வந்தது..
..
வரணும் ..வந்தால் தான் மிச்சமுள்ள அரிதாரத்தையும் கலைத்து .. நிஜமெது என்பதை தமிழனுக்குணர்த்தலாம்..
..
தோழர். ஆலஞ்சி
இனத்தின் மீதான போர்
ஒரு இனத்தின் மீதான தாக்குதலுக்கும் ஒரு மொழியின் மீதான தாக்குதலுக்கும் இடையே மெல்லிய ரேகை மட்டுமே தென்படும்.. இனத்தின் மீதான தாக்குதலை புரிந்துக்கொள்ள நீண்டநாட்கள் தேவைபடும் ஆனால் மொழி மீதான தாக்குதலை சட்டென்று உணர்ந்துவிடுவீர்..
மொழியியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ இனத்தின் மீதான தாக்குதல் நீண்டகால போர்முறை.
மொழியின் மீதான தாக்குதல் திடீர் தாக்குதலைப்போல நிலைக்குலைய செய்யுமென்கிறார்.
..
ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டுமெனில் அதற்கு நீண்டகால திட்டமிடல் அவசியம்.. இங்கே திராவிட இனத்தின் மீதான தாக்குதலை ஆய்வு செய்தால் இது புலப்படும்.. இன்றைக்கு நேற்றல்ல ஏறக்குறைய பலநூற்றுாண்டுக்களுக்கு முன்பாகவே இனத்தின் மீதான மௌனப்போர் நடந்துவருகிறது.. சில ஆய்வாளர்கள் (இலங்கை சிவ சுப்ரமணியன்) போன்றோர் ஈராயிரம் வருடங்களுக்கு மேல் என்கிறார்கள்.. இதில் சுவாரஸ்யமே இனத்தின் மீதான போரை மொழிவளத்தை மெல்ல அழிப்பதில் தொடங்குகிறது.. மொழியறிவு அந்த இனத்திடமிருந்து பிடுங்கியெறியது என்பது மொத்த இனத்தின் ஆணிவேரையே அசைக்கிற செயல்..
..
ஆம்..
ஆரியர்கள் தங்களை திராவிட இனத்தின் தாய்மொழியான தமிழை கற்றுணர்ந்து தங்களை தமிழர்களாகவே அடையாளம் படுத்தினார்கள்..
இன்னும் சொல்லப்போனால் பண்டிதர்களாக தங்களை நிலைநிறுத்தினார்கள்..மெல்ல சமஸ்கிருத சொற்களை திணித்து தமிழை இரண்டாம் நிலை மொழி/சொற்களாக்கினார்கள்..
இப்போது மொழி மீதான தாக்குதலில் நேரடியாகவே இறங்க தொடங்கிவிட்டார்கள்..
சில பள்ளிகளில் தமிழ் மொழியே இல்லை விருப்பபாடமாககூட மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை இதை ஆட்சியாளர்களும் உணரவில்லையென்பதுதான் பெரும்சோகம்..
நவோதயா பள்ளிகளின் வருகையில்
மொழி மீதான வன்மமிருப்பதாக உணர்கிறேன்
தரம் உயர்ந்த பள்ளிகளைப்போல பிம்பத்தை ஏற்படுத்தி தாய்மொழிப்பள்ளிகள் தரம் குறைந்தவை அல்லது இந்த அகண்ட தேசத்தில் போட்டியிட முடியாது அதற்கான வலிமை இல்லை என்பதைப்போல பிரச்சாரங்கள் மேற்கொள்ளபடுகிறது.. அது தவறான செயல் தாய்மொழி வழி கல்வியே சிறந்த புரிதலை தரும்..
..
ஒருவரின் அடையாளம் மதமோ பிரிவோ ஜாதியோ அல்ல மாறாக ஒருவரை இனம்கொள்ள அவரின் இனம் மொழி முக்கியம்.. ஒரு இனத்தில் பல்வேறு மொழிவடிவங்கள் காணப்படலாம் ஆனால் இனம் மட்டுமே ஒருவரின் அடையாளம்..
ஒருவரின் அடையாளத்தை அழிப்பதென்பது இனஒழிப்பேயாகும்..
..
ஆரம்பம் தொட்டே தமிழ் மொழி மீதான தாக்குதல்களை மிக கச்சிதமாக செய்துவந்திருக்கிறார்கள்.. அவர்கள் பேசுகிற எழுதுகிற மொழியாக அதாவது வழக்குமொழியாக தமிழை கொண்டிருந்தாலும் அதை நீசபாஷை எனச்சொல்லி தங்களின் இனப்பற்றை முன்னெடுத்தார்கள்.. இயற்கையை மட்டுமே வணங்கி வாழ்ந்த ஒரு இனத்தின் மீது விக்ரஹ வழிபாடு எனச்சொல்லி கடவுளை புகுத்தி அவனிடம் பேசுகிற /சொல்கிற மொழியாக தங்களின் இனமொழியை கொண்டுவந்தார்கள்..
..
அவர்களின் நோக்கம் இதுதான் அது நீண்டகால போர்முறையில் இனத்தின் மீதான தாக்குதல் ..அது கடைசியில் இனத்தின் தாய்மொழி மீது கொண்டு சேர்க்கும்.. இப்போது தமிழை இரண்டாம்தர மொழியாக்க அல்லது பிறமொழியை திணிக்க செய்கிற வழிகள் எல்லாம் இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும்..
..
இப்போது புரிந்திருக்கும்.. தமிழ்மொழி மீதான தாக்குதல் எவ்வளவு வலிமையானதென்று.. ஒரு மொழியின் வளத்தை அழிக்க அவர்களின் கலாச்சாரத்தை அழித்தொழிக்க அல்லது பிற கலாச்சாரத்தை திணிக்கவேண்டும்.. அவர்களின் பண்பாட்டு மரபுகளில் இடைசொருகல்களை நிகழ்த்தி புதிய பண்பாட்டு சுவடுகளை உருவாக்கினால் மெல்ல இனத்தின் மீதான தாக்குதலை அது தானே செய்துக்கொள்ளும்..
..
மொழி இனத்தின் மீதான தாக்குதல் ஒருவனின் முகத்தையே மாற்றிவிடும்..
..
#இனம்_மொழிகாப்போம்_உணர்வுகொள்வோம்...
..
தோழர். ஆலஞ்சி
Sunday, September 24, 2017
துரோக வரலாறு
அம்மா சிறை சென்றிருந்தாலும் அவரை கட்சியிலிருந்து நீக்கி இருப்போம்- OS மணியன்.
“அம்மாவின் இறப்பைவிட ஆட்சிதான் பெரிதென்று இருந்தோம்...”
எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. ராமசந்திரன் தடாலடி..!
..
இதை சொல்ல தைரியமே வந்தமைக்கு நன்றி ஆனால் இந்த தைரியம் ஜெயலலிதா விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது .. அழுதுபுழம்பி பதவியேற்கும் போது ஏன் வரவில்லை அப்போது ஜெயலலிதா நீக்க ஏன் சொல்லவில்லை .. குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டபோது ஏன் ஜெயலலிதாவைப்பற்றி குறை கூறவில்லை..
இப்போது வரவா போகிறார் என்றெண்ணி ஏதேதோ பேசி திரிகிறார்கள்..
எம்ஜியார் என்ற துரோகியால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியில் துரோகிகளே உள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாய் திகழ்கிறது அதிமுக கூடாரம் ..
..
பேரறிஞர் அண்ணா 1967 ல் திமுகழகம் வெற்றி பெறுகிற செய்தியை தம்பிமார்கள் மகிழ்ச்சியோடு வந்து சொன்னபோது .. ஆட்சி வந்துவிட்டது கட்சி போய்விடுமோ என அஞ்சுகிறேன் என்றார்.. அதே போல எம்ஜிஆர் திமுகவை கைக்குள் கொண்டுவர வேண்டும் அல்லது உடைத்து வெளியேற நேரம் பார்த்தார்
திராவிட இயக்கத்தை சாய்க்கவேண்டுமென காத்திருந்த கூட்டம் தங்களின் அம்பை வெளியே கொண்டுவந்தது .. நல்லவேளையாக காலம் நமக்கு கலைஞரை கைக்காட்டியிருந்தது நாவலர் போன்ற பலவீனமானவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்திருந்தால் கட்சியை சிதைத்திருப்பார்கள்.. கலைஞர் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அவரின் தனக்கு மநிதிரி பதவி வேண்டுமென கேட்டார் .. அதை சாதூர்யமாக மறுத்தார் கலைஞர் .. கட்சியின் பொறுப்பிற்கு வரவேண்டுமன விரும்பி பொருளாளர் பதவிக்கு வர விரும்புவதாக சொன்னார் .. போட்டியிட்டு வென்றுவாருங்கள் என கலைஞர் சொல்லிவிட்டார் அப்போது பொருளாளர் பதவிக்கு முசிறியை சேர்ந்த கணேசன் போட்டியிடுவதாக சொன்னவுடன் எம்ஜிஆர் கலைஞரிடம் வந்து நீங்கள்தான் பேசி அவரை பின்மாற சொல்லவேண்டுமென்றார்..
கலைஞர் நீங்களே பேசி பாருங்கள் என்ற போது மறுத்து கலைஞரையே பேசி சொல்கிறார் .. 9 மாவட்ட செயலர்கள் பரிந்துரையோடு போட்டியிடுகிறேன் கூத்தாடிக்கா நான் விலக முடியாதென்றார் கலைஞர் தான் பேசி அவரை விலக வைத்து எம்ஜிஆர் பொருளாளராக்கினார்.. அப்போது எங்கள் பேராசான் பெரியார் சொன்னார் கலைஞருக்கு என்னவாயிற்று சகதியில் கால்வைத்துவிட்டாரே என்றார்..
ஆம் இயக்கத்திற்குள் சகதியானார் .. சகுனியாய் காய் நகர்த்தி தன்னை உயர்த்தி கொண்டுவந்தவரை..காங்கிரஸிலிருந்து அழைத்துவந்து அழகு பார்த்தவரையே முதுகில் குத்தினார் அன்று தொடங்கிய துரோக வரலாற்று தன் கடைசி பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறது..
துரோகத்தால் விளைந்தது
துரோகிகளாலேயே துடைத்தெறியப்படுகிறது ..
..
விதைத்த வினை விளைந்து நிற்கிறது.. ஜெயலலிதா தன்னோடிருந்தவர்களை எக்காலத்திலும் நம்பவில்லையென்பதற்கு இவர்களின் இன்றைய செயல் நமக்கு பாடம் நடத்துகிறது.. எதையும் ஜனநாயக முறைப்படி/செயல்படாத அணுகாத எந்த கட்சியும் புதைந்துப்போகுமென்பதற்கு அதிமுக மிகச்சிறந்த உதாரணம்..
..
தோழர். ஆலஞ்சி
Saturday, September 23, 2017
பொய் சொன்னோம் திண்டுக்கல் சீனிவாசன்
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரென பொய் சொன்னோம் திண்டுக்கல் சீனிவாசன்..
உண்மையில் வெட்கப்படவேண்டும்..
அமைச்சராக இருந்துக்கொண்டு மக்களை ஏமாற்றியிருக்கிறீர்..இது அயோக்கியத்தனமன்று தெரியவில்லையா பதவிக்காக பீ திங்க கூட தயங்கமாட்டீர்களா..
எவ்வளவு அலட்சியமாக பொய் சொன்னதாக அதுவும் தமிழக முதல்வராக இருந்தவரின் நிலைப்பற்றி உண்மையை எடுத்துச்சொல்லவேண்டிய அமைச்சரும் அதிகாரவர்க்கமும் மூடி மறைத்து மக்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.. தாங்கள் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணத்திற்காக உண்மையாக இருப்பேன் என்ற வாக்கியத்திற்கெதிராக அரசியல் அமைப்பையே கேலிக்கூத்தாகிக்கியிருக்கிறார் ..
..
உண்மையானவனாக விசுவாசியாக இருப்பேனென்பது அரசியல் சாசன சட்டத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் தான் என்பதை மறந்திருக்கிறார் உண்மையை மறைத்து ஒட்டுமொத்தமாக அரசியலமைப்பையே ஏமாற்றியிருக்கிறார்கள்.. ஜெயலலிதாவின் கையெழுத்தை பெற முடியவில்லையென்று கைநாட்டு பெற்றதாக சொன்னதும் பொய்..
இப்படி நிறைய சட்ட மீறல்களை செய்திருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்..
ஜெயலலிதா மீது இவர்களுக்கு கரிசனமெல்லாம் இல்லை மாறாக பதவி தொடர்ந்திருக்கவேண்டுமென்பதற்காக அன்று சசிகலா என்ன சொன்னாரோ அதையே திரும்ப சொல்லியிருக்கிறார்கள் அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் வரவேண்டும்.. சுகாதாரத்துறை செயலராக இருக்கும் ராதாகிருஷ்ணன் (ஆர்.வெங்கட்ராமனின் பேரன்) இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லபோகிறார்.. முதல்வரின் நிலை குறித்து தவறான தகவலை தருகிறார்களென அறிந்தும் மௌனம் காத்ததேன்..
..
ஒட்டுமொத்த அயோக்கியர்களின் கூடாராமாக அதிமுக இருந்திருக்கிறது.. இன்றைக்கு சசிகலாவோடு பிணக்கத்தால் இதையெல்லாம் வெளியே கொண்டுவருகிறார்கள்.. அப்போலோ அதிபரின் செய்தியாளர் சந்திப்பு கடைசி கட்டத்தில் உயிருக்கு போராடுவதாக நாடகம் ஆடியதெல்லாம் பொய்யா உண்மையில் நடந்ததென்ன .. இந்த உண்மையெல்லாம் வெளிவரவேண்டும் நிச்சயமாக தளபதி தலைமையில் வரும் ஆட்சியில் இவர்களையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.. உண்மை சிலகாலம் மறைக்கலாம் நெடுங்காலம் ஏமாற்ற முடியாது..
..
கலைஞர் போட்டோவை வெளியிடுங்கள் என்றார் அப்போதே போட்டோவை வெளியிட்டிருந்தால் இத்தனை மர்மங்களும் பொய்களும் வந்திருக்காது..
இன்று..
இந்த அயோக்கியர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.. ஜெயலலிதா சசிகலாவிடம் மட்டுமல்ல மக்களிடமும் கபடநாடகம் போட்ட வேடதாரிகள்.. சாயம் வெளுக்கிறது..
.
உண்மையில் ஜெயலலிதாவிற்கு நடந்ததென்ன.
..
தோழர். ஆலஞ்சி
Friday, September 22, 2017
கமலில் இரட்டை வேடம்
இரண்டே இரண்டு கேள்விகள் தான் ..கமல்
ஸ்வ்ச்பாரத் demonetisation ..
தூய்மை இந்தியா பணமதிப்பிழப்பு .. இரண்டு திட்டங்களையும் ஏற்பதாக சொல்கிறீர்..
..
எது தூய்மை இந்தியா கங்கையை சுத்தம் படுத்துவதாக சொல்லி பல்லாயிரம் கோடிகள் பணம் செலவு செய்ததாக காட்டி கொள்ளையடித்ததை சரியென்கிறீர்.. நாடக நடிகர்ரள் தங்கள் அலுவலக வாசலில் துடைப்பத்தோடு காட்சி தந்ததை தூய்மை இந்தியா என்கிறீரா.... இதோ ரயில்வே டிராக்குகளில் மலம் அள்ளிக்கொண்டிருக்கிறாரே என் தாய் அவள் கையிலிருக்கும் வெளக்காமாறை குறைந்தபட்சம் பிடிங்கியிருக்கவேண்டாமா..
நவீன தொழில்நுட்ப செயல்பாடு நடைமுறைப்படுத்தபடுமென அறிவிப்பாவது வந்திருக்க வேண்டாமா.. மலக்குழிகளில் விசவாயு தாக்கி செத்து தொலைகிறானே என் சகோதரன் அவனை இறங்க வேண்டாமென சொல்லி நவீன இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்திருக்கவேண்டாமா..
காட்சிக்கு புகைப்படமெடுப்பதும் அதை விளம்பரபடுத்துவதும் தான் தூய்மை இந்தியா திட்டமா.. உங்களுக்கு முன்னால் மூத்த நடிகர் எம்ஜிஆர் நடித்து ஏமாற்றிவிட்டு போய்விட்டார் .. தெருதெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு .. ஊரார் படம்பிடிக்க
..
Demonetisation
தலைச்சிறந்த பொருளாதார மேதை மன்மோகன்சிங் நாடாளுமன்றத்திற்கே வந்து இதன் கொடூரத்தை விளக்கிவிட்டு போனாரே .. ரிசர்வ்வங்கி கவர்னர் ரகுராம் முட்டாள்த்தனமானதென்றாரே இன்னும் நிறைய பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தார்களே
அவர்களையெல்லாம் விட கமல் சொல்வது சரியென்கிறீர்களா .. ஏற்கனவே ஒருமுறை எனக்கு நடிக்கமட்டும் தான் வருமென்றீர் .. ஆம் கமல் நீங்கள் நடிக்கமட்டும்தான் செய்கிறீர்.. ஆனால் அது திரையில் இல்லையென்பதால் ரசிக்கமுடியவில்லை..
எழுதிக்கொடுப்பதை மட்டுமே பேசி நடிக்துவந்தவர் இப்போது சுயமாக பேச முற்படும் போது எதிர்வினையையும் கருத்தில் கொள்ளவேண்டும் .. ஆனால் ஒன்று நடிகர்கள் நாடாள ஆசைப்படும் போது அவர்கள் அறிவோடு எப்போதும் கதைப்பதில்லை.. அறிவுடையோரென நம்பபடுகிறவர்கூட அரிதாரத்தோடு வீரநடைப்போட்டு வருகிறார்கள் கடைசியில் கட் என்கிற போது வசனம் மறந்துவிடுகிறது..
..
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அதை வரவேற்கிறோம் அதேவேளை அது நேர்மையான வரவாக இருக்கவேண்டும்..
தமிழக அரசை விமர்சிக்கிறவர் மத்தியரசை விமர்சிக்க மறுப்பதிலிருந்தே நாடகத்தின் திரைக்கதை எப்போது எங்கே எழுதப்பட்டதென்று புரிகிறது..
..
நேரம் வெளுக்க அரிதாரம் கலைகிறது..
..
தோழர். ஆலஞ்சி
தொலி இருந்தால் வரலாமென்ற நிலை
இன்று வந்தால் நாளை முதல்வராகிவிடலாமென்ற கனவோடு வருகிறார்கள் யதார்த்தம் என்னவென்றியாமல்
எம்ஜிஆர் வந்தாரே உடனே ஆட்சி அதிகாரத்தில் வந்துவிடவில்லையா என கேட்போருக்காகவும் இந்த பதிவு..
..
முதலில் அரசியல் கட்சிக்கு கட்டமைப்பு கிராமங்கள் தோறும் வேண்டும் அதாவது சிற்றூர்களில் கூட செயல்படுவதற்கான அமைப்புரீதியாக செயல்பட ஆட்கள் தேவை மற்றொன்று இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பொருட்செலவு செய்ய வேண்டி வரும் ..செயல்படும் ஆட்கள் எந்த நோக்கக்தில் பணிபுரிகிறார்களென்று அறிந்திருத்தல் வேண்டும்..
எம்ஜிஆர் தனிக்கட்சி கண்டபோது திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லா ஊர்களில் குறிப்பிட்டளவு அவரோடு சென்றார்கள் அதோடு அவரது கவர்ச்சி அரசியலும் .. அந்த நேரத்தில் திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவும் பலம் சேர்த்தது.. அதிலிருந்து மக்கள் தெளிய தொடங்கியபோது மக்களவை தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை எம்ஜிஆருக்கு தந்தார்கள் .. உடனே எம்ஜிஆர் காங்கிரஸோடு கைகோர்த்தார் கடைசிவரை அதைவிடவில்லை என்பதும்.. அடுத்தடுத்த தேர்தல்களில் இந்திரா சாவும் எம்ஜிஆரின் நோவும் ..சாவும் நோவும் அவருக்கு கைக்கொடுத்தது.. அதோடு எழுபதுகளில் இருந்த நிலை இப்போதில்லை அப்போது கண்மூடிக்கொண்டு ஆதரித்த மடத்தனமெல்லாம் இப்போது கரைசேர்காது.. காரணம் மக்களுக்கு அன்றாட அரசியல் செய்திகளை உன்னிப்பாக கவனிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் தெளிவும் பெற்றிருக்கிறார்கள் அறியாமை ஒரளவு விலகியிருக்கிறது..
..
திரு.விஜயகாந்த் போன்றவர்கள் வெற்றிப்பெற முடியாமைக்கு போதுமான கட்டமைப்பு இல்லையென்பது மிக முக்கிய காரணம் சினிமாவை மட்டுமே நம்பி வருகிற ரசிகர்கள் நீண்டகாலம் கூடவே இருக்கமாட்டார்கள் தெளிவற்ற கொள்கை செல்லரித்துபோன வேரை போன்றது.. சிறிய காற்று போதும் வேரோடு சாய்த்துவிடும்.. அதீத மேதாவித்தனமும் அல்லது அதீதமான முட்டாள்த்தனமும் அரசியலுக்கு லாயக்கற்றது ..
எதை எப்போது செய்யவேண்டுமென்ற அரசியல் அறிந்திருக்கவேண்டும்.. அதிமுக சிதைந்து வருகிற வேளையில் ஆசை அதிகம் வருகிறது வெற்றிடம் இருப்பதை போன்ற தோற்றம் அது ஒருவகை பொய்யான தோணல்.. அதிமுகவிற்கு மாற்றாக திமுகவை முன்னெடுப்பார்கள் திமுகவின் எதிராக வரவேண்டுமென்ற நிலையில் அதிமுகவை அறவே புறக்கணித்து தேமுதிகவைப்போல துடைந்தெறிவார்களென சொல்லமுடியாது சில காலம் தோல்வியை தொடர்ந்து தரலாமே தவிர கிராமபுறத்திலும் செல்வாக்கோடு அல்லது கட்சிரீதியான அமைப்பாக இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் வேராடு சாய்த்துவிட முடியாது சரியான தலைமையில்லாததால் தடுமாறுகிறதே தவிர அது வெற்றிடமல்ல....
..
தொண்டு செய்து வந்ததெல்லாம் போய் தொலி இருந்தால் வரலாமென்ற நிலை வந்ததற்கு வருத்தபடவேண்டும்.
..
புதியதாய் கனவு காண்பவர்களுக்கு ஒரு செய்தி விஜயகாந்த், அன்புமணி,சீமான் போன்றவர்கள் வரிசை காத்திருக்கிறது அவ்வளவுதான்..
..
தோழர். ஆலஞ்சி
Thursday, September 21, 2017
கேடுக்கெட்டவர்கள்
எங்களைப்போல..
ஆசிரியர்கள் எங்களைப்போல நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கவேண்டும்..
நம்பிக்கை துரோகி பன்னீர்..
..
பன்னீரின் ஆசிரியருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. தங்களை குற்றம் சொல்லவரவில்லை.. விதைகளை விதைக்கிறோம் அதில் சில சொத்தைகளும் வந்து விடும் அதுகூட மண்ணில் புதைந்து எருவாகும்..ஆனால் சில விதைகள் நச்சென்று தெரிந்து வளர்ந்து வரும் போதே பிடிங்கி குப்பையில் எறியாமல் விட்டுவிட்டீர்கள் அது வளர்ந்து சொரணையற்று கூட இருப்பதையும் அழித்து காட்டிக்கொடுத்து மொத்த நிலத்தையும் பாழாக்கியிருக்கிறது..
..
நல்ல அரசியல்வாதிக்கான லட்சணங்கள் ஒன்று கூட இல்லையே .. தமிழனுக்கே உரிய சுயமரியாதை இழந்து காலில் விழுந்து .. கார் டயரையெல்லாம் கும்பிட்டு.. அழைத்துவந்து அமரவைத்து அழகு பார்த்தவரை புறமிருந்து குத்தி கிழித்து .. தன்னை வளர்த்து விட்டவர்களையே குறிபார்த்து சாய்த்து.. அதைவிட பச்சோந்தி கூட நிறமாற சிறுது நேரமெடுக்கும் ஆனால் பட்டென்று நிறமாறி ..
தமிழினத்தை எப்போது சாய்க்கலாமென கங்கனம் கட்டுவோவரிடம் நிபந்தனையற்ற சரணடைந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைக்குனிவு ஏற்படுத்தியவர்கள் நல்ல அரசியல்வாதிகளாம் .. கடைசியில் இருந்த எடப்பாடியை முதல்வராக்கியவரை குத்தி குதறுகிற செயலை வெறிபிடித்தவைகள் கூட செய்யாது..
..
ஏதேனும் ஒரு நல்லகுணம் கண்டால் யாராவது சொல்லுங்கள்.. நேற்று ஊழல் ஆட்சியென்று சொல்லி திடீரென அழைத்து மந்திரி பதவி கொடுத்தவுடன் ஊழலற்ற ஆட்சியென்பவரை எதில் சேரிப்பீர்கள்.. அம்மா மரணத்தில் சநிதேகமென்றவர் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லி திரிந்து மந்திரிபதவி வந்தவுடன் ஆளில்லா விசாரணை கமிஷன் அமைத்து தர்மயுத்தம் நடத்துவது உலகிலே இவர்தான்..
அரசியலில் பொய் சொல்வார்கள் பாத்திருப்போம்.. நேற்றுவரை வராதுவந்த தெய்வமென பேசிவிட்டு காலில் விழுந்து கிடந்தவர் தன் பதவி பறிக்கப்பட்டவுடன்
உத்தமன் வேடம் கட்டி அதையும் ஊடகமும் நடுநிலைகளும் வரிந்து கட்டி புகழ்ந்து கடைசியில் காரி உமிழ்கிற நிலை ...
இதெல்லாம் வருங்கால அரசியல்வாதிகள் அறிந்து .. தவிர்க்கவேண்டிய பாடமாக .. இவரைப்போல யாரும் வந்துவிடாதீர்களென அறிவுரை சொல்லலாம்..
..
நல்லவர்களைப்பற்றி நல்லவைகளை மட்டும் போதிப்பல்ல ஆசிரியர் பணி.. கெட்டவர்களைகளும் மாணவமணிகளுக்கு எடுத்துச்சொல்லி தீயவர்கள் சமூக தீமைகள் இவர்களால் ஆபத்தென எடுத்துச்சொல்வதுவும் கூட அறப்பணித்தான்..
..
வரலாறு கெட்டவர்கள் ஏன் கேடுக்கெட்டவர்களை கூட இப்படிதான் பதிவு செய்யும்
#பின்பற்றாதீர்..
..
தோழர். ஆலஞ்சி
புரிதல் வேண்டும்
புரிதல் இல்லாமை..
புரிதல் இல்லையெனில்..நம்பிக்கையின்மை வரும்..
இல்லறமென்பது இணைந்து வாழ்தல்.. நம் இணையர் நமக்குள்ள உரிமைகள் அவருக்குமுண்டென அறிதல் மிக முக்கியம்..
//என் மதிப்பிற்குரிய ஆசிரியை
தோழி Uma Ram அவர்களின்
கணவன் விரும்பாத
நட்பு மனைவிக்கும்
மனைவி விரும்பாத
நட்பு கணவனுக்கும்
தேவையா???.. என்ற பதிவிற்கு நானிட்ட பின்னோட்டம்..
..
புரிதல் என்பதென்ன என்பதில் நாம் குழம்பி நிற்கிறோமென எண்ணுகிறேன் விட்டுக்கொடுத்தலோ அல்லது நம் கருத்தை ஏற்று கொள்வதில் சமரசம் செய்வதோ அல்ல புரிதல் தன் இணையரின் (இருசாராருக்கும்) எண்ணம் செயல் இரண்டிலும் வேறுப்பட்ட சிந்தனை இருக்கும் அவர்களின் கருத்தோடு முற்றுலுமாக மாறுபடலாம் அதை மீறிய அன்புதான் நம்மை இணைத்திருக்கிறதென்பதில் உறுதியோடு இருத்தல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சில தனியுரிமைகளில் தலையிடுவதும் என் கருத்தோடு ஒத்துபோகவேண்டுமென்பது கூட ஒருவகை அடிமைத்தனம்.. நல்லதை எடுத்துச்சொல்வதென்பது வேறு தவறான பாதையிது என சுட்டிக்காட்டுவதும் தவறில்லை ஆனால் ஒருவகை ஆதிக்க செயல்பாடோடு நடந்துக்கொள்வது .. இணையர் இருவருக்குமே சரியானதல்ல..
..
நாம் துணைவியர் மனைவியர் என்றே அழைத்து பழகி... நமக்கு இணையானவரென்பதை மறந்துவிடுகிறோம் அதே போல் நாம் துணையாக வந்தோம் என்ற அடிமை சிந்தனையிலேயே வார்த்தெடுக்க படுவதால் தமது தனி விரும்பங்கள் கூட மறக்கடிக்கபடுவதோடு ஆழ புதைத்து விடுகிறோம் சின்ன சின்ன விடயங்களில் கூட கருத்துக்கூறவோ அல்லது எதிர்த்து பேசவோ முடியாமல் வாழ்கிறவர்களை நிறைய கண்டிருக்கிறேன்.. கணவரை சார்ந்து நிற்கவேண்டிருப்பதால் விரும்பி ஏற்கிற அடிமைத்தனத்தில் ஊறிப்போனதால் நட்பை கூட ஒருவித கசப்போடு அணுகவேண்டியிருக்கிறது..
..
நிற்க..
இணையர் என்று உணர்ந்தால் அவருக்கும் அவரின் செயல்பாடுகளில் முடிவெடுக்கு உரிமை உண்டெனறிந்து சமமானவராக நடத்தினால் .. யார் வந்தாலும் நம்மை பிரித்திட முடியாதென நம்பிக்கை பிறக்கும்.. நட்பென்பது உயர்ந்ததென உணர்த்தும் .. நல்லறமாய் அமையும்..
..
புரிதல் நம் இணையர் நமக்கு சரிசமமானவர் என்கிற உண்மையை உணர்ந்து அவரின் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால்..
இல்லறம் நல்லறமாய் இருக்கும்..
..
தோழர். ஆலஞ்சி
Wednesday, September 20, 2017
எப்போதும் கவலையில்லை எமக்கு
நீதிமன்றம்..
இன்றைய தினம் அதிகம் பேசபடுகிற விடயங்களாக இருந்தது.. சென்னை உயர்நீதிமன்றமும் டெல்லி விசாரணை நீதிமன்றமும் கவனத்தை ஈர்த்தது ..
முன்னதில் எடப்பாடிக்கு தனபாலுக்கும் மூச்சுவிட அவகாசமளித்து.. அதேவேளை காலியாக அறிவித்த இடங்களில் தேர்தல் நடத்த கூடாதென்றும் .. மறு அறிவிப்பு வரும் வரை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கூடாதென்றும் உத்தரவிட்டிருக்கிறது..
அவகாசமளித்து அதை அனுபவிக்க முடியாமல் செய்திருக்கிறது.. அதைவிட தனபால் அவகாசம் கேட்பது தான் இதில் சுவாரஸ்யம்..
நீண்டநாட்கள் தள்ளிப்போட முடியாதென்பதையும் விரைந்து முடிக்கவேண்டுமென்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை..
..
2ஜி வழக்கில் அடுத்தமாதம் 25ல் தொடங்கி மூன்று தினங்களுக்குள் தீர்ப்பை தந்துவிடுவதாக சொல்லியிருக்கிறார்.. நீதிபதி ஷைனி அவர்கள்.. நன்று..
உடனே சிலர் திமுகவிற்கு தண்டனை தந்துவிட்டதைப்போல குதூகலிக்கிறார்கள்..
2G வழக்கை அனுமானங்களின் அடிப்படையில் புனையப்பட்டு உச்சநீதிமன்றம் அதீத கவனம் செலுத்தியதும் .. ஊடகங்கள் அதை ஊதி பெரிதாக்கியதும் கடைசியில் புலனாய்வுத்துறை வாய்தா வாங்கி வாங்கி கடைசியில் அதிர்ஷ்டமிருந்தால் வெற்றிப்பெறட்டுமென ஜோசியம் சொன்னதும் தான் நடந்தது..எல்லா வாதங்களையும் சட்டரீதியாக முறியடித்திருக்கிறார் திரு.ராசா ..
..
கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்திற்கு திரும்ப வங்கி பரிவர்த்தனை மூலம் நடைப்பெற்றது.. 2007 ல் இறுதியில் அலைக்கற்றை ஒதிக்கீடு நடைப்பெற்றது 2008 ஜனவரியில் முடிவுற்றது ஆனால் கலைஞர் டிவிக்கு 2008 அக்டோபரில் தான் சினியூக் நிறுவனம் கடன் வழங்குகிறது அதுவும் காசோலையாக .. கையூட்டு எல்லாம் காசோலைகளாக வழங்கப்படுவதில்லை வங்கிபரிவர்த்தனைகள் சட்டத்திற்குட்பட்டவை அதில் தவறு இருந்தால் அபதாரம் விதிக்கலாம் அல்லது முறைகேடாக செலவிடப்பட்டதாக அறிந்தால் தண்டிக்கலாம் ஆனால் இங்கே எல்லாம் வெளிப்படையாகவே நடந்தது..
ஆனால் அது நியாயமான முறையில் எங்கிருந்து பெறப்பட்டதென்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது..
இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அது திமுகவை எந்தவகையிலும் பாதிக்காது .. காரணம் தனிநபரின் செயல்களுக்கு கட்சியை குற்றம் சுமத்தென்றால் பாஜக உட்பட இந்திய அரசியல்கட்சிகளின் வருவாய்கள் எப்படி வந்ததென கேள்வி எழும் இப்போது கூட பாஜக கணக்கில் காட்டாத பணம் வந்திருப்பதாக தேர்தல் ஆணையமே அறிக்கை வெளியிட்டிருக்கிறது..
..
திமுக ஒரு ஜனநாயக இயக்கம் அது கட்சியல்ல
யாருடைய தோல்விகளோ வெற்றிகளோ அதன் பாதிப்பு சிறிது வந்தாலும் இயக்கத்தின் கட்டமைப்பும் அதன் கொள்கைகளும் ஆழ ஊடுறுவி மண்ணில் புதைந்திருப்பதால் சிறிய சலசலப்புகளுக்கு விழுந்துவிடாது .. சிலரின் கனவுகள் பலிக்காது சட்டபடியான தீர்ப்பு வருமெனில் திமுக வென்றிருக்கும்.. தமிழிசை சொன்னதைப்போல எழுதப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும் மேல்முறையீட்டில் நியாயம் கிடைக்கும் இதற்கெல்லாம் திமுக அஞ்சாது..
தொடர் சூழ்ச்சிகளையும்,அடுக்கடுக்கான குற்றசாட்டுக்களை சொன்னபோதும் சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறது.. குற்றவாளிகளையே கொண்டாடுகிற கூட்டத்திற்கு.. இதெல்லாம் புரியாது..
தைரியமாக எந்த வாய்தாவும் வாங்காமல் விரைந்து முடிக்கவேண்டுமன்று செயல்பட்டதும் விசாரணை எப்போதுமில்லாத அளவிற்கு ஊடகங்களில் விசாரணைநீதிமன்ற விவாதங்கள் வெளியானதும் .. குற்றம் சாட்டப்பட்ட அரசு தரப்பு தடுமாறியதும் மக்கள் நன்கறிவர்..
2G வழக்கில் இறுதி வாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களே வெற்றி பெறட்டும் என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சொன்னபோது, நான் அதிர்ஷ்டத்தை நம்புகிறவனல்ல, கோப்புகளையும், ஆதாரங்களையும், சட்டத்தையும் மட்டுமே நம்புகிறவன் என்ற முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர்
மானமிகு ராசா நிச்சயம்
அவர்கள் விடுதலையாவார்....
..
#எப்போதும்_கவலையில்லை_நமக்கு…
..
தோழர். ஆலஞ்சி
Tuesday, September 19, 2017
திமுக அரசியல் பல்கலைக்கழகம்
பாவம் நிறைய எதிர்ப்பார்த்தார்கள் அதிலும் பாஜக அனுதாபிகள் சப்பென்று முடிந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமென தினமலர் செய்தியெல்லாம் வெளியிடுகிற அளவிற்கு பெரும் ஆவலாக இருந்தார்கள்...
நீங்கள் அரசியலை பயிலுகிறீர்.. நாங்கள் அரசியலை வடிவமைக்கிறவர்கள் என்பதை அந்த கூட்டம் அடிக்கடி மறந்து போகிறது..
..
திமுக ஒட்டுமொத்த ராஜினாமாவை அதிமுகவை விட மத்தியில் ஆளுகிறவர்கள் ஆர்வமாக இருந்தார்கள் இந்த அடிமை அரசை தொடர்ந்து ஆட்டுவிக்கலாம் என நினைத்தார்கள் ஆட்களை குறைத்தால் பெரும்பான்மை பெறுவதில் சிரமமில்லாமல் போகுமென்ற சில குருக்கள் சொல்லி தந்ததை யோசனை இல்லாமல் செய்து இப்போது விழிபிதுங்கி நிற்கிறார். சொல்லப்பட்ட காரணம் கட்சிக்கு மாறாக நடந்தாரெனில் அது கட்சிதான் முடிவெடுக்கவேண்டும் சட்டமன்றத்தில் அவர்களின் நடவடிக்கையை மட்டும்தான் விமர்சிக்க நடவடிக்கை எடுக்க சபாவிற்கு அதிகாரம் உள்ளதே தவிர வெளியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அவர் பொறுப்பில்லை .. அதிமுக கட்சியே முடக்கப்பட்ட நிலையில் இரு அணிகளாக செயல்படும் போது அதில் எந்த அணியில் இருந்தால் இவருக்கென்ன .. ஏற்கனவே கொறடா உத்தரவை மீறி சட்டமன்றத்தில் அதாவது தனக்கு வானளாவிய அதிகாரமிருக்கும் சபைக்குள் பன்னீர் கோஷ்டியை தகுதி நீக்கம் செய்யாதது ஏனென்ற கேள்வியும்.. தன் விருப்பத்திற்கு செயல்படும் உரிமை இருப்பதாக எண்ணினால் அது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு சட்டம் வழங்கியிருக்கிற அதிகார வரம்பிற்குள் இருக்கவேண்டுமென அறியாமல் செய்த செயல் இதை தான் நீதிமன்றம் சொல்லும்.. அதைவிட தினகரன் ஆட்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டால் எடப்பாடியின் பதவி போகும் ..
மொத்ததில் இந்த ஆட்சியை முட்டாள்களே துடைந்தெறிந்து விடுவார்கள்..
என்பதெல்லாம் அறிந்ததால் தான் சில விவரகேடுகளின் ஆசைகளை கண்டு புன்முறுவல் பூத்தோம் ..
..
முதல்வரை சந்திக்க மறுக்கிற அல்லது தவிர்க்கிற கேவலம் தமிழகம் இப்போதுதான் காண்கிறது.. தமிழக அரசியலை மக்கள் கவனமாக பார்க்கிறார்கள்.. தகுதி நீக்கம் செய்யபட்ட இடங்களுக்கு ஒருவேளை நீதிமன்றம் ஏற்றால் கூட தேர்தலை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டியிருக்கும் அப்போது திமுகவின் பலம் கூடும் என்பதை அறியாதவர்கள் அல்ல நாங்கள் எப்படி பார்த்தாலும் திமுகவை நோக்கி அதிகாரம் வருவதை எந்த சக்தியாலும் தடைபோட்டுவிட முடியாது.. காலதாமதம் செய்யலாமே தவிர அது கூட காலம் கடந்துவிட்டபடியால் திமுக அறியணை ஏறும் நாளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் .. சட்டபடியும் நியாயபடியும் திமுகவின் நடவடிக்கைகள் சரியானது..
..
நீங்களெல்லாம் அரசியலில் அரிச்சுவடிகள்.. திமுக... அரசியல் பல்கலைகழகம்..
..
தோழர். ஆலஞ்சி
Monday, September 18, 2017
தேர்தலை நோக்கி..
தமிழகம்..
கேடுக்கெட்டவர்களின் கையில் சிக்கி மூச்சுதிணறுகிறது.. சரியான காரணம் தேவையில்லை சட்டவிதிகளைப்பற்றி காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்ட விதிகள் மரபுகளை பற்றியோ கவலையில்லை இந்த நேர அற்பசுகம் போதுமென்கிற மனநிலை அரசியலில் தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது..
..
எந்தகட்சிக்கு மாறினார்கள் அதிமுகவே இப்போதில்லாத போது அணிகளுக்குள் ஏற்பட்டிருக்கிற கருத்துமோதல் எப்படி கட்சிதாவல் ஆகும்.. நிறைய கேள்விகளை நீதிமன்றம் கேட்கலாம் அதற்கு நிறைய காலம் பிடிக்கும் அதுவரை மூச்சுவிட்டுக்கொள்ளலாம் ஆட்சியாளர்கள்.. சபாநாயகரின் வானாளாவிய அதிகாரம் என்பது சட்டவிதிகளுக்குட்பட்டதென புரியாமல் பேசிகிறாரா சபாநாயகர்.. பன்னீர் கோஷ்டி அதிமுக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தபோது என்ன செய்தாரென சாதாரணமாக அரசியல் பேசாதவர்கூட கேட்கிறார்கள் அப்போதைய மௌனத்தின் பின்னில் யார் இருந்தார்களோ அவர்களே இன்றைய 18 பேரின் தகுதிநீக்கத்திலும் என்று என் அப்பன் குதிருக்குள் இல்லையென்ற தமிழிசையின் பேச்சு காட்டிக்கொடுத்திருக்கிறது.....
..
ஒரு வகையில் 19 இடங்களை காலியாக அறிவித்த செயல் தேர்தல் ஆணையத்தை இடைத்தேர்தலை நோக்கி நகர்த்தியிருக்கிறது.. ஏதேதோ காரணம் சொல்லி காலம்தாழ்த்தும் செயல் இனியும் எடுபடாது .. நீதிமன்றம் தகுதி நீக்கத்தை ரத்து செய்தாலேயொழிய இடைத்தேர்தல் வந்தே தீரவேண்டும் அது விரைந்து வர நடவடிக்கையெடுத்தால் நல்லது.. திமுகவின் பலம் இன்னும் கூடும்.. எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பி வைக்க ஏதுவாகும்..
..
இப்போது இரண்டே வழிகள் தான்.. நீதிமன்ற தடை அல்லது இடைத்தேர்தல் திமுக இடைத்தேர்தலை சந்திக்க தயாராவதே நல்லது ..
சில விவரகேடுகள் திமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்யலாமென்கிறார்கள் அது அபத்தமான முடிவாகிப்போகும் .. இந்த சூழலில் மத்தியரசு என்ன நிலைப்பாட்டை எடுக்க போகிறென்பது முக்கியத்துவம் வாய்ந்தது.. இப்போது சட்டமன்றத்தை முடக்கி வைத்தால் மட்டுமே ஆளும் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் நடுநிலையோடு இருப்பதை போன்ற தோற்றத்தையாவது தரும் ..
..
சட்டமன்றத்தை முடக்கி வைக்கலாம் அல்லது புதிய தேர்தலை நோக்கி நகர்த்தலாம் அதுதான் சரியான நடைமுறை ஆனால் அதை மோடி இடம் எதிர்ப்பார்ப்பது வீண்..
..
தோழர். ஆலஞ்சி
பெரியாரெனும் பெரிய மனிதர்
#பெரியார்..
தந்தை பெரியார் பொதுவாழ்வில் மிக தூய்மையானவராக இருந்தார்.. தன் பூர்வீக சொத்திலிருந்து வரும் வருவாயைதான் தன் செலவுக்கு எடுத்துக்கொண்டார் தனக்கு தருகிற பணம் மற்றும் பொருளை டிரஸ்ட்டுக்கே தந்தார் ..
அதிலிருந்து நயாபைசாகூட செலவிற்கு எடுத்துக்கொள்ளாதவர்..
பதவி தன்னை தேடிவந்த போது கூட அதை மறுத்தார் 1940 மற்றும் 42 கவர்னர்ஜெனரல் வீடுதேடி வந்து சென்னை மகான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற போது மறுத்தவர் பெரியார்..
நெருப்பு குச்சிகூட குளிர்ச்சிதரலாம்
வேப்பெண்ணை கூட தேன் ஆகலாம்... பதவிக்கு வந்தவன் யோக்கியனாக இருக்கமுடியாது /இருக்கவிடாது இந்த சமூக கட்டமைப்பு என்றார் ..
..
மற்றவர்களை மரியாதை செய்ய தவறியதில்லை வயதில் சிறியவர்களை கூட வாங்க என்றுதான் அழைப்பார்.. இன்றைக்கு சிலர் மிக மோசமாக விமர்சிக்கிறார்கள்..நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடினால் எழுந்துநிற்பார் குங்குமம் திருநீறு கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளும் பழக்கம் உடையவர்.. மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. நான் எதிர்ப்பது அவரது கொள்கையே தவிர அவர்களை அல்ல என்றவர்..
..
கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல ஜாதிய ஒழிப்பே எனது பிரதான கொள்கை ..ஜாதிய ஒழிக்க வழிதேடியபோது அது மதத்திற்கு உட்பட்டதை கண்டேன் மதத்தை ஒழிக்கலாமென்றால் அது வேதத்திற்கு உட்பட்தென்றார் வேதம் கடவுளுக்கானதென்றார் அதனால் தான் கடவுளை எதிர்த்தேன்.. ஜாதி மரக்கிளையை போன்றது அதைவெட்டி பிரயோசனமில்லை மரத்தின் ஆணிவேரான கடவுளை எதிர்த்தேன் எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறேதும் பகையில்லை என்றார்.. கடவுள் பெயரைச்சொல்லி உன்னையும் என்னையும் பிரிக்கும் ஆரியத்தை எதிர்க்கிறேன்..
ஜாதியை ஒழிக்க எவையெல்லாம் தடையோ அதையெல்லாம் எதிர்ப்பேன் மனிதனை சமமாக நடத்திட வேண்டும் மானமுள்ள அறிவுள்ளவனாக மாற்றவேண்டுமென்பதே எனது நோக்கம்/கொள்கையென்றார்..
..
தன்னை பற்றி நானொன்றும் யோக்கியனில்லை
மைனர் வாழ்வு வாழ்ந்தவன் தான் .. மதுஅருந்ததில்லை பிறருக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன் .. வியாபாரியாக இருந்தபோது பொய் பேசியிருக்கிறேன் ஆனால் பொதுவாழ்விற்கு வந்தபிறகு #பொய்பேசியதில்லை என்று வெளிப்படையாகவே பேசியவர்..
..
பெரியார் திறந்த புத்தகம்..
அறிவுச்சோலை .. இன்றைக்கு கொஞ்சமேனும் மரியாதையோடு இந்த தமிழ்சமூகமும் நாடும் இருக்கிறதென்றால் அதற்கு பெரியார் மட்டுமே காரணம்.. இல்லையெனில் பீகாரைப்போல உ.பி.யை போல ஆரியர்களுக்கு அடிமையாகளாகதான் வாழவேண்டியிருக்கும்..
..
#பெரியார்_மாபெரும்மனிதர்..
..
தோழர். ஆலஞ்சி
Sunday, September 17, 2017
தினகரன்
தினகரன் ..
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு சிறந்ததாய் இருந்தது.. மிக எளிமையான கேள்வி கேட்டார் சசிகலாவால் தரப்பட்ட முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முதல்வராக எம்எல்ஏக்களை கூட்டத்தை கூட்டி வேண்டுமானால் என்னிடமிருக்கும் 19 பேரையும் அனுப்பி வைக்கிறேன் மீண்டும் முதல்வராக தேர்வாகி வரட்டும் நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் ..
..
எடப்பாடி நினைத்திருந்தால் முதல்வராகி விட முடியுமா சசிகலா கூவத்தூரில் அடைத்து வைத்திருக்காவிடில் அதிமுகவே இல்லாமல் போயிருக்கும் இன்றைக்கும் சசிகலாவை வேலைக்காரி கொலைக்காரி என்றெல்லாம் பேசுகிறவர்கள் முன்பு எப்படியெல்லாம் விழுந்து கிடந்தார்கள்.. மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் .. தந்தை பெரியாருக்கு வணக்கம் செலுத்தாமல் மோடிக்கு விழுந்து விழுந்து வாழ்த்துச்சொல்லும் இவர்கள் காரியம் நடக்குவரை காலைப்பிடிக்கிற கேடுக்கெட்டவர்கள்.. இன்று சசிகலாவை குறைப்பேசி திரிபவர்கள் நாளை மோடியையும் பேசுவார்கள் ஆனால் அப்போது முகவரி இல்லாதவர்களாக போய்விடுவார்கள்..
..
இந்த கேடுக்கெட்ட ஜென்மங்களை விட தினகரன் மேலானவராக தெரிகிறார் அதுமுக கட்சியினரிடம் இவர்கள் (எடப்பாடி,பன்னீர்) செயலால் நல்லவராக தெரிய ஆரம்பித்திருக்கிறார் .. கெட்டவர்கள் சில கேடுக்கெட்டவர்களால் நல்லவராக தெரிவதைப்போல தினகரனின் அரசியல் முதிர்ச்சியாய் தெரிகிறது .. எல்லாம் கைவிட்டு போன பின்னும் கூலாக எடுத்துக்கொண்டிருப்பதை அவரின் பேச்சு உணர்த்தியது..
..
சசிகலாவை வேலைக்காரி என்கிறார்கள் அந்த வேலைக்காரி எஜமானியின் காலில் எப்போதாவது விழுந்திருக்கிறாரா.. ஆனால் இந்த வேலைக்காரியின் காலில் விழாதவன் யாரேனும் உண்டா.. சொந்த பிள்ளையின் மீது சத்தியம் செய்தவர் இப்போது கொலைக்காரி என்கிறாரே.. பதவி படுத்தும் பாடு பதவிக்காக சொந்த குடும்பத்தையே .......கொடுப்பார்கள் போலும் .. எச்சைகள்
இந்த கேடுக்கெட்ட அயோக்கியர்கள் அரசியலில் இருந்த அகற்றபடவேண்டும் ..அதற்காகவேணும்
தினகரன் அதிமுகவை கைப்பற்றவேண்டும்..
எங்கள் எதிரியை நாங்கள் தான் தீர்மானிப்போம்..
..
தோழர். ஆலஞ்சி
Saturday, September 16, 2017
பெரியாரும் பெண்ணீயமும்
#பெரியாரும்_பெண்ணீயமும்..
பெரியார் என்றவுடனேயே கடவுள் மறுப்புமட்டும் நினைவிற்கு வந்தால் இன்னும் அறிவு வளரவில்லை அல்லது பெரியாரை அறியவில்லை என்று பொருள்..
சமகாலத்தில் இந்த நூற்றாண்டின் மாபெரும் சமூகசிற்பி .. ஒரு இனத்திற்கானவராக மட்டுமே பார்க்க முடியாது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கானவர்.
..
பெரியாரை சிறிய கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது.. மனிதனை சுயமரியாதையோடு வாழவேண்டுமென்று வலியுறுத்தியவர்.. நமஸ்காரம் என்ற ஆதிக்க சொல்லையும் கும்பிடறேன் சாமி என்ற அடிமைத்தனத்தையும் அகற்றி #வணக்கம் சொல் என சொன்னவர்..
கல்வியை அனைவரும் கற்கவேண்டும் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதல்ல என சொல்லி அதற்கான கட்டமைப்பை உருவாக்கியவர்..
எந்தயொரு சமூகமும் பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் வளர்ச்சியடைய முடியாதென்றவர்.. பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தியவர்..
உங்கள் ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள்.. உங்களூரில் அதற்கான வசதியில்லாவிட்டாலும் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்கள் கல்வி பெற்றால் தான் இந்த சமூகம் மூடபழக்கங்கள் அறியாமையிலிருந்து விடுபடும் என நம்பினார்..
வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரிகள் என்ற சங்கராச்சாரியாருக்கு
பெண்கள் வேலைக்கு சென்று சொந்தகாலில் நிற்கவேண்டுமென்றார்..
பெண்களை பொட்டுகட்டி தெய்வதொண்டு செய்யவேண்டுமென்றவருக்கு உங்கள் வீட்டுபெண்களை தெய்வதொண்டை செய்ய சொல்லுங்கள் என பதிலடி தந்தவர்.
..
எழுத்தாளர் சிவசங்கரி நான் கணவரை இழந்த பிறகு எனது சமூகத்தால் குடும்பத்தாரால் ஏறக்குறைய ஒதுக்கிவைக்கப்பட்டேன் என் வாழ்வே முடிந்தது போல்தான் இருந்தது .. பெரியாரின் எழுத்தும் சிந்தனையும் தான் இந்த சமூகத்தில் என்னால் வாழ்ந்துகாட்டமுடியுமென்ற நம்பிக்கையை அளித்தது என்றார் அதை அவர் #பெரியார்திடலுக்கே வந்து சொன்னார்..
..
இன்றைக்கு பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என சட்டம் வந்திருக்கிறதென்றால்.. அதை இந்தியாவிற்கே வழிகாட்டியாக கலைஞர் தமிழகத்தில் கொண்டுவந்து அதை பிற மாநிலங்களும் ஏற்று நடைமுறை படுத்தியதென்றால் அது பெரியாரின் விதைத்து.
ஆம் பெரியாரின் சிந்தனைக்கு சட்டவடிவம் தந்தார் கலைஞர்..
இன்றைக்கு பெண்கள் எல்லாதுறையிலும் மிளிர முடிகிறதென்றால் பெரியார் ஊட்டிய உத்வேகம்..
எல்லா மத, ஜாதியிலும், பெண்களை அடிமைப்படுத்திருந்தார்கள் சம்பளமில்லாத வேலைக்காரி பிள்ளை பெறும் இயந்திரம் அவ்வளவுதான்.. ஏறக்குறைய அடிமைசங்கிலியால் பிணைத்திருந்தார்கள்.. சாஸ்திரம் சம்பிரதாயம் மதகோட்பாடு, என கட்டுபாடுகள்.. தீட்டுவந்த பெண்கள் வெளியே வருவதால்தான் லோகம் கஷ்டபடுகிறது என்றெல்லாம் சொன்னார்கள் இப்படிதான் உடுத்தவேண்டுமென்று மதநெறிகள் .
எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விருப்பமானதை சௌகரியமானதை அணிந்துக்கொள் ..என்ற நம்பிக்கையை விதைத்தவர்..
..
பெரியார்..இந்த நூற்றாண்டின்..
மிகசிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்..
..
இன்றைக்கு சிலர் ஈ.வே.ரா என்றெல்லாம் அழைக்கிறார்கள்.. என்னை மசிரு என்று கூட அழைத்துக்கொள் கவலையில்லை என்றவர்தான் பெரியார் .. இவர்களுக்கு தெரியுமா..
முதன்முதலில் பெண்கள் தான் #பெரியார் என்று அழைத்தார்கள்..
..
தோழர். ஆலஞ்சி
சாரணர்...தேர்தல்..
என் உயரம் எனக்கு தெரியுமென்றார் கலைஞர்..
ஏன் நீங்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாதென்ற கேள்விக்கு தான் இப்படி பதில் சொன்னார்..
..
சாரணர் தேர்தலில் எச்.ராசா போட்டியிட முடிவாகியதின் பின்னில் உள்ள அரசியல் புரிந்தவர்களுக்கு இது ஆபத்தான போக்கு என தெரியும்.. முதல்வரை சந்திக்கிறார் ராசா அடுத்த சிலநாட்களில் சாரண சாரணியர் தேர்தலில் போட்டியென அறிவிப்பு வெளியாகிறது .. அமைச்சர்கள் அதிகாரிகளென வேகமாக காய்நகர்த்துகிறார்கள் அடிமை அமைச்சர்கள் தங்களுக்கு தெரிந்த வகையிலெல்லாம் மிரட்ட தொடங்குகிறார்கள் யாருமே போட்டியிடாமல் வெற்றிப்பெற்றிட வேண்டுமென நினைத்து அதற்காக அனைத்து வேலைகளும் நடந்தது எடப்பாடி அரசு ..
மணியை மிரட்டியதும் அவர் பின்வாங்க மறுத்தவுடன் கல்வித்துறையின் சார்பில் வேண்டுகோள் மிரட்டல் என தொடர்ந்தது .. உடனே ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டதோடு இல்லாமல் தளபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்..
..
உடனே தளபதியார் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்..
தளபதியாரின் அறிக்கை திசையை மாற்றியது எச்.ராசா போன்றவர்கள் வெற்றிபெற்றால் இளம் தளிர்கள் நெஞ்சில் ஆர்எஸ்எஸ் சித்தாந்த விசம் ஏற்றபடுமென எச்சரிக்கிறார்.. தகுதியுள்ளவர்கள் போட்டியிடவேண்டுமென்ற அறிக்கை நல்ல பலனை தந்தது திரு.மணி தேர்தலில் மனுதாக்கல் செய்த போதே வெற்றி உறுதியாகிவிட்டது.. இதில் அரசியல் வேண்டாமென்ற நிலைபாட்டை திமுக எடுத்தது ஆனால் எச்.ராசா போன்ற காவிகளின் கையில் போக கூடாதென்ற உறுதியில் இருந்தார் தளபதி..
..
எச்.ராசாவின் அதிகார பின்னணி மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும் தமிழகத்தில் தங்களின் சொற்படி ஆடுகிற கோமாளிகள் இருப்பதால் போட்டியின்றி வெற்றி பெற்றிடலாம் என்றிருந்தார்.. அமைச்சர்கள் சிலர் நேரடியாகவே சிலரை தொடர்பு கொண்டு ராசாவை பின்துணைக்கவேண்டுமென்று கேட்டும் அமைச்சர்களின் மிரட்டலையெல்லாம் காதோர்க்காமல் .. நாளை அமைச்சராக இருப்பாயா என்றே தெரியவில்லை மிரட்டுகிறாயா என்று எதிர்வினையாற்றிருக்கிறார்கள் ..
..
இது ராசா வகையறாக்களுக்கு எச்சரிக்கை வாய்க்கு வந்தபடி நாகரீகமில்லாமல் மிரட்டும் தொனியில் பேசி திரியும் தமிழிசை நிர்மலா போன்றோர்க்கும் கொடுக்கபட்ட எச்சரிக்கை மணி.. முதலில் உங்கள் உயரம் /தகுதி என்னவென்று தெரியவேண்டும். தமிழகத்தில் வேரோடு பிடிங்கியெறியபடுவீர்கள்..
அதற்கான முன்னெச்சரிக்கை தான் இந்த தோல்வி..
..
யாருடைய தோல்வியையும் நாங்கள் கொண்டாடுவதில்லை..
ஆனால் தமிழகமே கொண்டாடுகிற தோல்வியாகிப் போனது ..
எவ்வளவு பேசினாலும் தமிழ் மண் பாசிச காவிகளுக்கு தோல்வியை தான் பரிசாக தருவார்கள்.. ராசாவிற்கு விழுந்த வாக்குகள் பற்றியும் எமக்கு தெரியும்.. எப்போதுமே வாக்களிக்க வராத பிராமணர்கள் வந்து வாக்களித்தார்கள்.. இன்னமும் இருக்கிறது ராசா.. வேரோடு வீழ்த்துவரை..
..
#திராவிடம்
..
தோழர். ஆலஞ்சி
Friday, September 15, 2017
உதயசூரியனாய் தளபதி
திமுக முப்பெரும்விழா.. அய்யாவின் அண்ணாவின் திமுகவின் பிறந்தநாள்விழா..
..
அய்யாவின் அடிச்சுவட்டை பின்பற்றிதான் அண்ணாவும் அருமைதலைவர் கலைஞரும் தமிழகத்தில் ..இன்றைக்கும் நிலைத்து பேசகூடிய திட்டங்களை செயல்படுத்தினார்கள் அய்யாவின் கருத்துக்களை சொல்லை செயல்படுத்த ஆட்சி அதிகாரமிருந்தால் தான் முடியுமென்று எண்ணி.. திமுகவை தொடங்கினார்.. பார்பனர்களிடமிருந்து (ராஜாஜியிடமிருந்து) அதிகாரத்தை பறிக்கவேண்டுமென அய்யா காமராஜரை நிறுத்தினாரோ அதைப்போல .. பாசிச சக்திகள் பின்னின்று இயக்கும் செயலை வேரறுக்கவே அதிகாரம் திராவிட சிந்தனையாளர்கள் கையில் வேண்டுமென்றெண்ணி திமுகவை தொடங்கினார் அண்ணா.. அன்று தொடங்கியது ஆரியத்தை இந்த மண்ணில் அடித்தமர்த்தும் பணி.. அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் பொறுப்பேற்றவுடன் ஆரிய சதியை [மகோரா] எம்ஜிஆர் மூலம் செய்து திமுகவை உடைத்தது .. ஆம் அன்றே அண்ணா சொன்னார்..திமுக அறுதிப் பெருமான்மை பெற்றபோது தம்பிமார்கள் மகிழ்ச்சியில் அண்ணாவிடம் வந்தபோது சொன்னார் ஆட்சி வந்துவிட்டது கட்சி என்னாகுமோ என்றார்.. அவர் ஆரியத்தின் சூழிச்சியை அறிந்திருந்தார்.. ஆனால் எத்தனை சூழ்ச்சிகள் துரோகங்கள் அனைத்தையும் மீறி கட்சியை கட்டிக்காத்தவர் கலைஞர்..
..
ஆம்
நூற்றாண்டாய் கடும் முயற்சியெடுத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. டி.எம்.நாயர் தியாகராய செட்டி பனகல் அரசர் ..நடேசமுதலியார் காலம் தொட்டே அழித்தே தீருவோமென கங்கணம் கட்டிக்கொண்டுதானியிருக்கிறார்கள்.. திராவிட இயக்கமாய் உருப்பெற்று.. பெரியாரின் பெருந்தொண்டால் நெருங்கமுடியாமல் போய்.. கலைஞர் பெருமகனின் சாதூர்யத்தால் துரோகிகளை இனம்கண்டு களைந்ததால் பெரும் இயக்கமாய்.. தி.மு.கழகம்.. ..
..
இன்றைய காலக்கட்டத்தில் அய்யாவும்,அண்ணாவும் கலைஞர் பெருமகனும் கட்டி காத்த தமிழகத்தை சூழ்ச்சி வலைப்பின்னி அருவருக்கதக்க செயல்கள் மூலம் ஆசைகாட்டி அடிமைகளை வைத்து தமிழகத்தை முடிந்தளவு கூறுபோட நினைக்கிறார்கள் .. அவர்கள் ஆசைகள் சிலகாலம் தான் நிற்கும் .. மக்களின் செல்வாக்கில்லாத யாரும் நிலைக்க முடியாது ஆட்சி அதிகாரம் சூழ்ச்சி எதுவாகினும் மக்களின் எழுச்சி முன் இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்.. மக்கள் விரும்புகிற நேசிக்கிற சிறந்த தலைவராக தளபதி இருக்கிறார்
..
#தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்; ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில் உயர்கின்றான்; உதயசூரியன் வாழ்க நன்றே! ... என்றார் எங்கள் #புரட்சிக்கவிஞர்_பாவேந்தர். ..
ஆம்..
#உதயசூரியனாய்_தளபதி..
..
தோழர். ஆலஞ்சி
Thursday, September 14, 2017
அழிவின் விழும்பில் அதிமுக
ஜனநாயக மரபுகள் மீறப்படும் போது மட்டுமே,நீதிமன்றம் தலையிடவேண்டும் ஆனால் நீதிமன்றங்கள் தான் வழிநடத்துமென்கிற நிலை சரியான ஜனநாயக வழிமுறையாகாது..
..
நீதிமன்றத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வென்கிற நிலை ஏற்பட்டால் பிறகெதற்கு சட்டமன்ற ஜனநாயகம்.. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசெதற்கு மக்களாட்சியின் தத்துவமே சிதைக்கபடுகிறது ..நீதிமன்ற தலையீடென்பது ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அதிகமானது எந்தவொரு முடிவையும் எதிர்ப்பதும் கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு குட்டு வாங்கி செயல்படுத்துவதும்.. அரசை ..
அரசின் தலைவரின் பதவியை பறித்து கேவலப்படுத்துவதும் சர்வசாதாரணமானது ..
எல்லா எல்லை மீறல்களையும் ஜெயலலிதா செய்தார் எதிர்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிவந்தது .. அது தொடர்ந்து இப்போது அரசை செயல்படுத்த கூட நீதிமன்றம் தலையிட வேண்டிய பரிதாபகரமான நிலை..
..
சட்டமன்றத்தில் தனியாக ஒருவர் கட்சி மாறினால் அல்லது கொறடா உத்தரவை மீறினால் நீக்கலாம் ஆனால் தனி அணியாக செயல்பட்டால் அவர்களை அங்கரீப்பதுதான் ஜனநாயக மரபு ..இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் இருக்கிறது.. தேமுதிக வினர் அணி மாறி செயல்பட்டபோது ஜெயலலிதா கண்ணசைவை ஏற்று சபாநாயகர் அனுமதிக்கவில்லையா..
அதை செய்ய தவறுகிற போதுதான் நீதிமன்றம் தலையிடவேண்டிய நிலை ஏற்படுகிறது..
..
தமிழகம் இதுவரை கண்டிராத கேவலங்கள் அரங்கேறுகிறது.. ஜெயலலிதா என்ற தனிநபரின் கையாலாகாதத்தனம் ..
தான் செய்வதை சரியென நம்பவைக்கிற சர்வாதிகாரத்தனம்.. முட்டாள்களை வைத்து பொம்மலாட்டம் காட்டி கயிறு நழுவியபோது ஆட்டம் மவுசிழந்ததைப்போல அதிமுக நகைப்பிற்கு இடமாகி நிற்கிறது.. எந்தவொரு கொள்கையுமில்லாமல் திமுக எதிர்ப்பையும் எம்ஜிஆரின் கவர்ச்சியையும் நீண்டநாட்கள் கொண்டுசெல்ல முடியாதென்கிற யதார்த்தம் தெரியாமல் போனதால் சிக்கி சின்னாபின்னமாகியது அதிமுக..
..
ஆளுமை இல்லாத தலைமையால் தனிநபர் துதிபாடலை, கேட்டு கேட்டு இதுதான் சிறந்தொரு தலைமைத்துவமென நம்பி சில அறிவிலிகளின் துதிபாடல்கள்..ஒரு கட்சியை ஆழ புதைத்திருக்கிறது.. ஜனநாயக கட்டமைப்பில்லாத இயக்கம் சரிந்துவிடுமென்பதற்கு அதிமுக எடுத்துக்காட்டாய் விழங்குகிறது.. திமுகவின் ஜனநாயக நடவடிக்கைகளை உட்கட்சி தேர்தலில் நடைபெறும் கைகலப்புகள் சலசலப்புகளை கேலி செய்தவர்கள்..அது ஜனநாயக உயிர்ப்பென்பதை அறியாமல் போனார்கள் ..
திரு.சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த போது இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி (கிளை அமைப்புகளுக்குகூட) இயங்குகிற கட்சி திமுக மட்டும்தான் என்றார்.. தேர்தல் ஆணைய விதிகளின்படி திமுக மட்டுமே கட்சியாக அங்கரீக்கவேண்டுமென்றார் ..
..
ஜனநாயகத்தின் வேர் உட்கட்சி ஜனநாயகத்தில் இருக்கிறது ..
கட்சியின் பொதுக்குழுவில் யார் வேண்டுமானாலும் பேசலாம் மாற்றுகருத்தை சொல்லலாம்.. வீரபாண்டி, கோ.சி.மணி..
நெல்லிக்குப்பம், ..என எல்லோருமே மாற்று கருத்தை சொல்லியிருக்கிறார்கள்..தலைமை அதற்கு விளக்கம் தந்திருக்கிறது சில யோசனைகளை ஏற்று தீர்மானத்தில் திருத்தம் செய்திருக்கிறது.. வெறுமனே வடை பொங்கல் சாப்பிட்டு தலையாட்டி வருவதல்ல பொது செயற்க்குழு கூட்டங்கள்.. உட்கட்சி ஜனநாயகமே கட்சியின் வேரில் நீர்பாய்ச்சும்..
தழைத்தோங்கும்..
இதெல்லாம் அதிமுகவில் இல்லாததால் தான்
என்னவென்றே அறியாததால்தான் இன்று அழிவின் விழும்பில் நிற்கிறது..
..
தோழர். ஆலஞ்சி
Wednesday, September 13, 2017
தலித் அரசியல்
ரஞ்சித் சின்னபையன் சினிமாக்காரன் அவரைப்பற்றி என்னிடம் கேட்கிறீர்களென சீறுகிறார்..சீமான்
ரஞ்சித்தின் அன்றைய நடவடிக்கையில் சிறுதும் உடன்பாடில்லை அதற்காக அவரின் கருத்தோடு உடன்பாடில்லையென்றல்ல பொருள்..
எங்கே எதை கதைக்கவேண்டுமென்று அறியாததே விமர்சனத்திற்குரியதாகிறது..
..
நிச்சயமாக தலித் சமூகத்தை புறக்கணிக்கிற தமிழ் தேசியமென்பதே பொய்யான கட்டமைப்பு என்பதில் இருவேறு கருத்தில்லை.. அது குறித்து பேசுவதற்கு முன் ரஞ்சித் மிக சுலமாக நீட் தேர்விற்கெதிராக உயிர்நீத்த அனிதாவின் மரணத்தை குறுகிய வட்டத்திற்கு அடைத்திட முயற்சித்ததை ஏற்கமுடியாது இந்த செயலுக்கும் எச்.ராசா நாராயணன் போன்றோரின் செயலுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. அவர்களும் அதை தலித் என்ற வட்டத்திற்குள் அடைத்து தலித்க்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைத்தார்கள் அதைவிட மற்றவர்கள் ஏன் தற்கொலை செய்துக்கொள்ளவில்லையென்ற மடைமாற்றை செய்து வந்த வேளையில் தான் ரஞ்சித்தின் பிரவேசம் அதை எளிமையாக்கியது.. ரஞ்சித் கருத்துக்கூற முழு உரிமையும் உடையவர் அவரின் கோபம் கூட நியாயமானது ஆனால் அதை சொல்லவேண்டிய நேரம் இதுவல்ல.. அதைவிட அவர் யாரை எதிர்த்து களமாடி இருக்கவேண்டும் என்பதும் இங்கே பேசபடவேண்டும்..
..
சீமானின் தமிழ் தேசியமென்பது சாதிய சிந்தனையில் வளர்வது அவரின் ஆரம்பகாலந்தொட்ட நடவடிக்கைகள் திராவிட எதிர்ப்பென்ற பெயரில் பாசிச சிந்தனையாளர்களுக்கு சித்தாந்தத்திற்கு வழி ஏற்படுத்தி தரும் ஒர் ஏற்பாடு அவ்வளவுதான் அவரது அரசியல்.. ஆனால் ரஞ்சித் பன்றவர்களின் உள்ளகுமறல் இந்த சாதீய கட்டமைப்புக்கு எதிரான கருத்தியல்.. ரஞ்சித் பேசிய இடம் தவறே தவிர கருத்து மிக சரி..
அம்பேத்கரை மட்டுமே முன்னெடுத்தால் போதுமென்கிற குறுகிய சிந்தனை தமிழகத்தில் என்றில்லை இந்தியாவில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்திட முடியாது.. கொள்கையில் சற்று மாறுப்பட்டிருந்தாலும் களம் பொதுவானதாக இருக்காதவரை நிச்சயமாக தீர்வென்பதே இல்லை..
ரஞ்சித்தின் கருத்து பார்பனர்களுக்கு கோபம் வரவேண்டுமே தவிர சீமானுக்கில்லை.. இந்த சாதீய கொடுஞ்செயலுக்கு எதிராக தான் பேசினார்.. ஆதிக்க மனப்பான்மை இடைசாதிக்காரனிடம் குடியேறி இருப்பததைதான் அவர் சொன்னார் அதை உண்மையென்று சீமான் போன்ற அரைவேக்காடுகள் கூவி திரிகிறது..
..
எந்தளவிற்கு மதத்தை சாதியை வேரறுக்க வேண்டுமோ அதே,அளவு இன்னும் சொல்லபோனால் பாசிசத்தை எதிர்க்கும் அதே வீரியத்தோடு இடைசாதி வெறியர்களையும் எதிர்க்கவேண்டும்..
..
#விவரகேடுகள்..
..
தோழர். ஆலஞ்சி
Tuesday, September 12, 2017
No way...
காலதாமதமாகும் எந்த செயலும் பயனற்று போகும் என்பதற்கு மிக சமீபத்திய உதாரணம் தினகரன்.. எந்தவொரு முடிவையும் ஆய்ந்து செயல்படுத்தாமல் போனால் ..இதுதான் கதி..
கையில் வைத்திருந்த கடைசி ஆயுதமும் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாய் நிற்கிறது சசிகலா வகையறா..
..
அதிமுகவினர் கொள்கை அடிப்படையிலோ அல்லது விசுவாசத்திலோ அங்கே யாரும் இல்லை.. எப்படியாவது சம்பாதிக்கலாம் என்ற ஒற்றை குறிக்கோளில் இணைந்தவர்கள் மகோரா காலத்திலேயே கவர்ச்சியை மூலதனமாக்கி ஒருவகை மாயதோற்றத்தை மனதில் விதைத்து வந்தவர்கள் காலபோக்கில் தெளிய தொடங்கியபோது பணம் சம்பாதிக்கும் வழியாக அரசியலை முன்னெடுத்தார்கள்.. அதில் ருசிகண்டவர்கள் .. விசுவாசம் நம்பிக்கை.. கொள்கை இவையெல்லாம் எதற்கும் உதவாதென்று முடிவெடுத்ததால் யார் பக்கம் வேண்டுமானாலும் தாவுகிறார்கள் ..
..
கட்சியா ஆட்சியா என்கிற நிலை வந்த போது கட்சியை காப்பாற்றியிருக்கவேண்டும்.. 1987ல் ஜானகி ஜெயா மோதிக்கொண்டபோது கட்சி வந்தால் ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் வந்துக்கொள்ளலாமென்ற சோவின் யோசனையை ஏற்றதால் தான் ஜெயலலிதாவால் சிலகாலம் நிற்க முடிந்தது.. ஆட்சியை கைப்பற்ற நினைத்திருந்தால் கட்சி காலாவதியாகி இருக்கும்..
..
சசிகலா தினகரன் செய்ய தவறியது இதுதான்.. எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் கோஷ்டியை கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி பதவி நீக்கம் செய்திருந்தால் கட்சி கட்டுபாட்டில் இருந்திருக்கும்.. இரண்டாவதாக சசிகலாவையும் தினகரனையும் விலகி வைத்தால் இணையலாமென்ற பன்னீரின் கோரிக்கை ஏற்ற போதே ஆட்சியை ஆட்டம் காண வைத்திருக்கவேண்டும்.. ஆட்சியை காப்பாற்ற நினைத்து கடைசியில் கைபிடி நழுவுகிற நிலைக்கு வந்து நிற்கிறது..
..
அதிமுககாரர்களை பணம் பதவியை காட்டி விலைக்கு வாங்கிவிடலாமென்ற அடிப்படை கூட தெரியாமல் அரசியல் செய்தது ஏற்கனவே பதவியை,பணத்தை,காட்டி வழிநடத்தியது மறந்து போய்விட்டதோ என்னவோ.. இப்போது சசி&தினகரனிடம் இருக்கும் கடைசி துருப்புசீட்டு ஆட்சியை கலைக்க பயன்படவேண்டுமே தவிர இன்னமும் காலம் தாழ்த்துவதென்பது ஆழ புதைக்குழியில் அமர்ந்து தானே மண்ணை அள்ளி போட்டு மூடி கொள்வதற்கு சமம்..
காரணம் இப்போது உடனிருப்பவர்கள் நீண்டநாட்கள் நம்பிக்கையோடிருப்பார்களென நம்ப முடியாது காரணம் இவர்கள் யாருக்கும் கட்சி கொள்கை விசுவாசம் நம்பிக்கை இவையெல்லாம் என்னவென்றே தெரியாது..
விரைந்து முடிவெடுக்க வேண்டும்.. தனி அணியாக செயல்படுவதாக சபாநாயகருக்கு அறிவித்துவிட்டால் அவரால் தகுதிநீக்கம் செய்ய முடியாது.. பின் சட்டசபையில் பார்த்துக்கொள்ளலாம்....
..
#No_other_way_to_Breath...
..
தோழர். ஆலஞ்சி
மௌனம்
சொல்லடி
சுகம்தரும் சேதியென்றேன்.
..
சொல்வதால் சுகமெனில்
சொல்லின் சுவைகூடும்
சொல் மட்டுமே சுவையாகும்
சொல் ..
வார்த்தையின் சதிராட்டம்
வளைந்து நெளிந்து
சலங்கைகட்டி ஆடும்..
சொல் வார்த்தையை
வளைத்தொடித்து
வண்ணம் தீட்டி
சொல்லவந்தை
தின்றே தீர்க்கும்.
சொல்லவா நானென்றாள்..
மௌனமாய் நகர்ந்தேன்..
இழுத்தணைத்து..
கண்களால்..
கவிதைமொழி சொன்னாள்.
..
உள்ளம்
உண்மைபேசும்
உன்னதமாய்..
உள்ளதை சொல்லும்
மனம் பேசும்
மொழிக்கெதற்கு வார்த்தை
விழிகளை உருட்டி
உள்ளத்தை குடைந்தெடுக்க
வார்த்தையெதற்கு.
எண்ணத்தில் உள்ளதை
உள்ளத்தில் வரைந்திட
எதற்கு மொழி..
எழுத்தை விட
இதமாய் .. இன்பம் சேர்த்து
மௌனமாய்..
கருவிழி சொல்லிவிடும்
மௌனமாய் ஊடுறுவி
ஆழ ..பதிந்துவிடும்..
ரணமாய். அதுவே மருந்தாய்..
..
#மௌனம்_சிறந்தகாதல்மொழி.
..
தோழர்.ஆலஞ்சி
Monday, September 11, 2017
மூளைச்சலவை
ரஷ்யாவின் ஜெனரல் கொன்ட்ராசோவ் the next என்ற குறிப்பில் சொல்வார்.. முதலில் மனிதனின் மூளையோடும் பிறகு அவனின் மனதோடும் (இதயத்தோடு) மட்டுமே பேசவேண்டும்
மறந்துகூட அவன் மூளையை கிளறிவிட கூடாது.. அதை மந்த நிலையில் வைத்திருக்கவேண்டும்.. மூளைச்சலவை குறித்து கொன்ட்ராசோவ் ..
..
நேற்றைய தினம் நண்பர் தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பி.ஜே வின் மறுப்பை பதவி செய்திருந்தார் அதில் மிக சாதூர்யமாக அறிவுபூர்வமாக பேசுவதாக எண்ணி மூளைச்சலவை செய்தார்..எதிர்முனையில் பதிவாகி இருந்தால் ரிங்டோன் எப்படி கேட்கும் நான் பதிவு செய்திருந்தால் தான் அது சாத்தியம் என்றார்.. நான் போனாலும் தவ்ஹீதில் அல்லாவிற்காக இருப்பர் எனக்காக கூடிய கூட்டமல்ல..என்று கதைத்தார்..
..
ஆரம்பத்தில் பாசிடீவ் Positive
மட்டுமே தரவேண்டும் பிறகு வரும் நெகட்டீவ் Negative
எல்லாம் பாசிடீவாகவே கணக்கில் கொள்ளப்படும்... அவரின் கூற்றை மறுப்பதல்ல நமது நோக்கம்.. அவர் யோக்கியனாகவே இருக்கட்டும் ஆனால் நான் மட்டுமே யோக்கியன் என்று கதைப்பதைதான் நாம் பேசவேண்டியிருக்கிறது.. எதிர்முனையில் பேசியவர்களை தன் கட்டுக்குள் வைக்க திரும்ப திரும்ப மிரட்ட ஏன் இவரே அதை பதிவு செய்திருக்க கூடாது அது வேறொரு ஆள் மூலம் வெளிவந்திருக்க கூடாதென்கிற சாரசரி சிந்தனை கூட இல்லாமல் பேசினார் ..
..
பி.ஜே வேண்டப்பட்டவர் பணமும் வீடும் வாங்கிக்கொண்டு பதிவானதை திரும்ப தந்துவிட்டதாகவும் இடையில் யாரோ அதை வெளியிட்டிருக்கலாமென்ற கருத்தை மறுக்கவில்லை போலிஸ் தரப்பு இதில் உண்மை இருக்கூடுமென்பதாக குமுதம் ரிப்போர்டர் வெளியிட்ட செய்தியை மறுத்து நஷ்ட ஈடு வழக்கு தொடரலாம்.. அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கோர செய்யலாம்..
இதையெல்லாம் விட சாமானியனின் கேள்வி இவர் ஏன் காவல்துறையையோ நீதிமன்றத்தையோ அணுகி என் பெயருக்கு களங்கம் விளைவிக்க பொய்யான ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் விசாரித்து நீதி வழங்கவேண்டுமென சொல்லவில்லை..
..
நான் தூய்மையானவனென நான் உருவாக்கி அமைப்பு சொன்னால் போதும் என்பது ..என் அப்பன் சொந்தகாரன் இருக்கும் பஞ்சாயத்தில் விசாரிக்க சொன்னால் என்ன தீர்ப்பு வருமென தெரியாதா.. நானே விசாரித்து நானே தீர்ப்பு சொல்லி நான் நிரபராதி ஆவேன் என்பதை போல..
..
திருடுன ஆட்டுக்குட்டியில பிரியாணியை போட்டிட்டு தீர்ப்பு சொல்லுங்கிற மாதிரி.. பயமில்லையெனில் நேரடியாக கமிஷனரை சந்தித்து விசாரிக்க சொல்லியிருக்கவேண்டும் காலதாமதம் செய்து ஆற போட்டுவிட்டு இப்ப பேசுவது அயோக்கியத்தனம்..
இப்போதும் அவரின் தனிநபர் விடயத்தில் கருத்து சொல்லவோ, அல்லது அவரின் சொந்த விடயங்களில் தலையிடவோ வரவில்லை ஆனால் தான் மட்டும் யோக்கியன் என்பதை தான் விமர்சிக்கவேண்டியிருக்கிறது..
..
#மூளைச்சலவை…
..
தோழர். ஆலஞ்சி
Sunday, September 10, 2017
தமிழ்
தமிழை ஆன்மீகத்தோடும் சமஸ்கிரத்தோடும் கலக்காமல் பேசமுடியாதென்கிறார் குருமூர்த்தி..
நீண்ட விளக்கம் அளிக்கவேண்டும்.. ஒரு புத்தகமே எழுதலாம்..
அதற்கு முன் பெரியார் சொன்னதை சொல்லவேண்டும்..
சாமியார்கள் கையில் தமிழ் வந்ததால் பொருந்தாததையெல்லாம் பேசி எழுதி அதுதான் தமிழ் என்று விட்டார்கள்..
..
ஆம்.. அகத்தியர் தொடங்கி சமீபகால தமிழறிஞர்கள் அல்லது திருத்தொண்டு செய்தவர்கள் பரிமேலழகர் வள்ளலார் குன்றக்குடி வாரியார் என எல்லோருமே ஆன்மீகத்தை அதிகமளவில் எழுதியும் பேசியும் வந்தார்கள்.. அபூர்வமாக சிலர் தனித்தமிழில் பாடல் எழுதினாலும் குன்னங்குடி போன்றவர்களை மதம்சார்ந்த இஸ்லாமிய தமிழ் இலக்கியமென வரிசைபடுத்தினார்கள்.. நிறைய தமிழ்சொற்களை இப்போது கையாள்வது அவர்கள்தான் ஆனம் பசியார நோன்பு தொழுகை பசியார..
நிறைய தமிழ்ச்சொற்களை பயன்பாட்டில் வைத்திருப்பதும் கூட அவர்கள்தான்..
..
சமணர்களை வீழ்த்திய பிறகு தான் இடைச்சொற்கள் வந்ததாக சில ஆய்வுகளை மேற்கோள்காட்டி அ.மா.சாமி எழுதியிருக்கிறார்.. ஆரம்பகால அச்சக தமிழில் 1852 ல் தனித்தமிழ்தான் அச்சிடப்பட்டதாக 19ம் நூற்றாண்டின் தமிழிதழ்கள் என்ற நூலில் சொல்லியிருக்கிறார்.. குறிப்பாக பிராமணர்கள் அதிகளவில் எழுத தொடங்கிய போதுதான் உத்தமநாதபுரம் (எங்கள் ஊருக்கருகில்) உ.வே.சாமிநாதய்யர் போன்றவர்களின் வரவிற்கு பிறகுதான் சமஸ்கிருத தமிழ் அதிகளவில் புழக்கத்திற்குவந்தது.. ஆன்மீக சார்ந்த தமிழையும் சமஸ்கிருத கலப்பையும் அதிவேகமாக முன்னெடுத்தார்கள் .. குறிப்பாக வார தினசரி பத்திரிக்கைகளில் பிராமணர்களின் வழக்குச்சொற்கள் பயன்படுத்தபட்டதும் இந்த நூற்றாண்டு துவக்கத்தில் தான் என ஆய்வாளர் இலங்கையை சேர்ந்த சிவபாலகிருஷ்ணன் ஒருமுறை குறிப்பிட்டு பேசினார்..
..
தமிழில் பெருமளவில் கலப்பட சொற்கள் சமீபத்தியதாக.. அதாவது மன்னர்கள் திருத்தொண்டு செய்த காலகட்டத்தில் அவர்கள் ராஜகுருமார்கள் செப்பிய மொழிகள் தமிழில் கலந்ததென்றும் சங்கத்தமிழுக்கு பொருள் எழுதிய சான்றோர்கள் அதை மதத்தோடு இணைத்ததும்.. ஆன்மீகவாதிகளாக தங்களை முன்னிருத்திய தமிழறிஞர்களின் செயலும் குறிப்பிட்ட மதத்திற்கானதைப்போல தோற்றத்தை உருவாக்கியது.. தமிழர் வாழ்வும் வழிமுறைகளும் மதத்தை அடிப்படையாக கொண்டதில்லையென கீழடி ஆய்வு நமக்குணர்த்தும் வேளையில்தான் சுவாமிநாதன் குருமூர்த்தி போன்றவர்கள் மதத்தை சொல்லி இனி பயனில்லையென்று ஆன்மீகத்தை துணைக்கழைக்கிறார்கள்..
..
தமிழ் தமிழர் பண்பாட்டு கலாச்சார வாழ்வியல் மதம் ஆன்மீகம் இரண்டிற்கும் சம்பந்தமில்லாதது.. அவன் வாழ்வியல் இயற்கையையோட்டியே இருந்தது.. தமிழுக்கும் மதத்திற்கும் தொடர்பில்லை தமிழனுக்கு இடையில் வந்த சொருகலே மதம். எல்லா மதங்களும் தமிழனின் வாழ்வில் வந்த சொருகலே..
..
மதமில்லை தமிழுக்கு.. அது குடி..தமிழ்க்குடி
..
தோழர். ஆலஞ்சி
Saturday, September 9, 2017
தமிழிசை..சுரமில்லை
அண்ணன் ஸ்டாலின்..
தமிழிசை பேச்சை விட அவரின் உடல்மொழி எனக்கு வியப்பை தந்தது.. பார்பனர்களின் மேலாதிக்க திமிர் அதில் தெரிந்து ..அதெல்லாம் இவருக்கு சேரவில்லையென்பது மிகப்பெரிய நகைச்சுவையாகிப்போனது தான் பாவம்..
இந்த திமிர் பேச்சு சமீபகாலமாக பாஜகவினருக்கு வந்திருக்கிறது.. காரணம் மத்தியில் ஆளும்கட்சி என்பதால் மட்டுமல்ல தமிழகத்தில் அடிமைகளின் ஆட்சி நடப்பதும்
எது செய்தாலும் காத்துக்கொள்வார்கள் என்ற ஆணவபோக்கும் காரணம்..
..
ஆனாலும் தமிழிசை தன்னை மறந்து நிற்கிறார்.. அவரின் கோவம் இயலாமையில் வந்ததென அவரின் மொழி காட்டிக்கொடுத்தது..
உண்மையில் இவர் போன்றவர்களுக்கு தங்கள் தலைமை மீதுதான் கோபம் வரவேண்டும் என்னதான் குளித்து கும்பிட்டு திருநீறு பூசி சென்றாலும் வாசலுக்கு வெளியேதான் வைப்பார்கள் நுழைய விடமாட்டார்கள் இவருக்கு பிறகு வந்து மக்கள் செல்வாக்கில்லாத நிர்மலாவை மதிக்கிற அளவிற்கு கூட இவருக்கு மரியாதை கிடைக்காதென்ற உண்மை விளங்காமல் நிற்கிறார்..
..
திமுகவை விமர்சிப்பாதாக எண்ணி புதைந்துப்போன குற்றசாட்டுகளை சொன்னார் அதெல்லாம் பதில் சொல்லியாகிவிட்டது.. ஆனால் 2ஜி பற்றி சொன்னதற்கு.. 20 தேதிக்குமேல் திகார் மு.க வா என்று பார்ப்போம் என்பதலிருந்தே பாஜக தற்காலிக தீர்ப்பை தர முயற்சிக்கிறது நீதிமன்றத்தை வளைத்தொடிக்க பார்க்கிறதென்று அறியமுடிகிறது.. இவர் மீது நீதிமன்றத்தை திசை திருப்ப அல்லது மீறிய செயலை செய்கிறார் தவறான வழிகாட்டுதலை செய்கிறாரென வழக்கு பதியலாம்..
..
தமிழிசை தன் தலைவரின் பெயரை விட தளபதியை பெயரை அதிகமாக உச்சரித்ததும்..
அவர்களின் பயம் பட்டவர்த்தனமாக தெரிந்தது..உச்சசுருதியில் பேசினார் அது தமிழிசைக்கு சேரவில்லை வேறு மாதிரி மேடை பேச்சை கையாளலாம்.. வீம்புக்கு கூட்டம் போட்டு விழிபிதுங்கி நின்றிருக்க வேண்டியதில்லை..
எந்தவொரு கட்சியும் அதன் தலைமையும் மக்களின் உணர்வுகளுக்கெதிராக செயல்பட்டால் காணாமல் போகும்/காணாமல் போவார்கள்.. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் அவரின் கருத்தை கொள்கையை செயலை கடுமையாக விமர்சனம் செய்யலாம் ஆனால் அவரை அல்ல கீழ்த்தரமான விமர்சனங்கள் அழகல்ல அதை யார் செய்தாலும் அவன் திமுக காரன் என்றாலும் எதிர்க்கவேண்டும்.. அவரோடு தனிப்பட்ட முறையில் நமக்கென்ன பகை ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்.. எம்மை எதிர்த்து நின்றாலும் அவரின் கொள்கை எதிர்ப்போம் விவரகெட்டவரின் செயலை கண்டிப்போம்.. ஏதேதோ உளறி வைக்கும் அவரது அறிவிலித்தனத்தை புரியவைப்போம்.. அதுதான் நமது பணி..
..
#சுரமில்லா_இசை..
..
தோழர். ஆலஞ்சி
..
ராயல் சல்யூட்
சோதர பாவம் நம்மில்
தோன்றாவிடில் தேசத்தில்
தீதினி
நீங்காதடி சகியே
தீதினி நீங்காதடி!
எங்கள் புரட்சிகவிஞர் பாவேந்தர்.
..
நுங்கம்பாக்கம் மாணவிகள் போராட்டம்..
நான்கு மாணவிகள்.. சாலையில் அமர்கிறார்கள்..இதை பார்த்த மற்ற மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் தந்துவிட்டு வந்து அவர்களும் அமர்கிறார்கள் தகவலறிந்த பெற்றோர் வந்து கேட்டு அவர்கள் சேர்ந்து முழக்கமிடுகிறார்கள்..
காவல்துறை ஆணையர் வந்து இது போன்ற போராட்டத்தை அனுமதிக்கமுடியாதென்கிறார்.. நீங்கள் நீட் தேர்வெழுதியா எஸ்ஐ வந்தீங்க..என்று பதிலடி தருகிறார்..
ஏய்... எந்திரிடீ... எந்திரிச்சி போ என்ற பெண் காவலரை
இன்னா ஏய் ங்கற? சும்மா அந்தாண்ட போ நீ.. அதே மாதிரியான பதிலடி தருகிறார் மாணவி..
தலைமையாசிரியர் வந்து டிசி கொடுக்கவேண்டிவரும் என்ற போது உங்களுக்கு சம்பளம் பத்தலைன்னு ரோட்டுல இறங்கி போராடுறீங்க முடிஞ்ச ஆதரவு தா.. இல்லையென்னா கிளம்பு..
நெஞ்சுரம் காண்கிறேன்.. தெளிவாய் திடமாய் மாணவ கண்மணிகள்..
இனி..பயமில்லை..
..
ஆம் சரியாக பயணிக்கிறது மாணவர்கள் பெருங்கனவோடு பயிலும் போது.. எம் பாட்டன் அப்பன் நிலம் தந்து வரி தந்து எம் அரசு கட்டிய கல்லூரியில் எமக்கிடமில்லாயா.. எங்கிருந்தோ வந்தவன் படிக்க நாங்க என்ன குலத்தொழிலை செய்வதா.. 12 வருடம் படித்த பாடத்தை எடுத்த பயிற்சியை கண்ட கனவை .. நீட் என்று சொல்லி எல்லோருக்கும் சமமான கேள்விதாளை தராமல்.. ஏற்றதாழ்வை விதைக்கும் கொடுஞ்செயலை சதிகாரர்கள் நீதிமன்ற துணையோடு செய்கிறார்கள்..
விடுவதாயில்லை எம் கண்மணிகள்..
..
அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் கொஞ்சமேனும் அரசியல் லாபகணக்கு தெரியும் ஆனால் மாணவர்கள் கையிலெடுத்தால் அது அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு எந்தவித சமரசமுமோ இல்லாமல் மாணவர்களின் எதிர்கால நலன் மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் .. இந்த கேடுகெட்ட மாநில அரசையோ.. பாப்பானுக்காக மட்டுமே செயல்படும் மத்தியரசையோ நீதிமன்றத்தையோ நம்புவதில் எந்த பிரயோசனமும் இல்லை ..இனி.. போராட்டம் ஒன்றே தீர்வென்றெண்ணி.. வீதிக்கு வந்திருக்கிறார்கள்..
..
சேதாரம் பாவம் நம்மில் தோன்றாவிடில் தேசத்தில் தீதினி நீங்காதடி சகியே..
#Royal_salute..
..
தோழர். ஆலஞ்சி
Friday, September 8, 2017
காத்திருப்போம்
ஆளுநரை சந்திக்கும் 10 ம் தேதி அன்று ஆட்சியின் பெருபான்மையே நிருபிக்க #திமுக சார்பில் கெடு கொடுக்கப்படும் அதற்கும் ஆளுநர் மறுத்தால் அதன் பிறகு சட்டபோராட்டம் மட்டும் அல்ல பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடக்கும் அந்த போராட்டம் இந்த கேடுகெட்ட ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை ஓயாமல் நடக்கும் ..
கவர்னர் செயல்படவில்லை என்றால் செய்ய வேண்டியதை திமுக நிச்சயம் செய்து இந்த அரசை நொடியினில் கவிழ்த்து முடிப்போம்.
இதை விளையாட்டாகவோ.. ஏதோ பதவிக்கு வர வேண்டும் என்று நோக்கத்தில் சொல்லவில்லை..
#தளபதி ..
..
தஞ்சை எப்போது கலைஞர் வந்தாலும் புதிய செய்தியை கொண்டுவருவார்.. அதே இக்கட்டான காலக்கட்டத்தில் எல்லாம் தஞ்சையில் கூடி புதிய வியூகத்திற்கு வழி சொல்லிவிட்டுபோவார்.. திமுகவை வீழ்த்த நினைத்து வைகோ கட்சியை உரிமை கொண்டாடிய போது கூட தஞ்சையில்தான் பொதுக்குழு கூடியது.. அதேபோல் தஞ்சை அஞ்சுகம் திருமணவிழாவில் நல்ல செய்தியை சொல்லிவிட்டு போயிருக்கிறார்.. ஏதோ பதவி ஆசையில் சொல்லவில்லை நாங்கள் பார்க்காத பதவியா ..இந்த அரசு நிச்சயம் தூக்கியெறியபட வேண்டியதென்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை அவ்வளவு மோசமாக மாறி மாறி மோடிக்கும் பாஜகவிற்கு பாப்பானுக்கும் காவடி தூக்குகிறது.. இவர்களை வைத்துக்கொண்டு பார்பனர்கள் ஆடும் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.. தமிழக மக்களின் நலன்களை தாரை வார்க்கிற கொடுஞ்செயலை இந்த அரசு கொஞ்சமும் கூட வருத்தமின்றி செய்கிறது.. தமிழர்களின் உரிமைகளை வெளிப்படையாகவே பறிக்கிறார்கள்.. அரசாள்வோருக்கு பதவி சுகம் வேறொன்றும் வேண்டாம்.. எதில் கையெழுத்தை கேட்டாலும் போட தயார்.. இந்த அரசு இனியும் நீடிப்பதில் யாருக்கும் எந்த பலனுமில்லை பார்பனர்களை தவிர..
..
சரியான நேரமும் கூட ..இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாமென நினைக்கவோ மக்கள் எண்ணவோ மாட்டார்கள் இந்த ஆட்சியை கலைத்தால் விட்டது சனியன் என்றே பாமரர் கூட சொல்வார்கள்..
அந்தளவு இந்த அரசின் மக்கள் வெறுப்போடிருக்கிறார்கள்.. காலம் கனிகிறது.. இனி நல்லதே நடக்கும்
..
#தமிழர்களின்_எதிர்பார்ப்பு..
#தளபதிபடை_தரணிஆளவேண்டுமென்பதே.
..
தோழர். ஆலஞ்சி
Thursday, September 7, 2017
கிட்டு சாமி..
நக்கித்தான் குடிப்பேன் என்கிறார்.. வாழையிலையில் சாப்பாடு போடுகிறேன் என்றால்.. இல்லை வேண்டாம் மாட்டு தொழுவத்தொட்டில் ஊற்றுங்கள் குடித்துவிட்டு போகிறேன் என்கிறார்.. அருந்ததி தாய்க்கு பிறந்த நவீன கிருஷ்ணன்..
..
பெரியாரும் அம்பேத்கரும் இக்காலத்திற்கு தேவையில்லாதவர் என்கிறார்.. பாவம் யாரோ பேசவேண்டிய வசனத்தை இவர் பேசி குட்டுபடுகிறார்.. பெரியாரும் அம்பேத்கரும் இந்த நவீன உலகின் படைத்தவர்கள் ஏன் என கேட்க சொல்லி உன் அறிவோடு கதைத்தவர்கள்.. மூடமும் சடங்கும் மதமும் பிரிவினையும் சொல்லி வளர்ந்த சூழலை மாற்றி .. புதிய பாதையை அது உனக்கானதென்று எவனிடமும் யாசிக்காது எவனும் உனக்கு பிச்சை போட தேவையில்லை அது உனது உரிமை என செவிட்டில் அறைந்தாற்ப்போல் சொல்லி சென்றவர்கள்.. எவனுக்கு நீ அடிமையில்லை எவனும் உனக்கடிமையில்லை என்று சொல்லி சமூகத்தில் உயர்ந்து நிற்கும் நவீன சிற்பிகள்..
எவன் சொன்னாலும் எதைப்பற்றிச் சொன்னாலும் ஏன் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றவர்கள்.. உன் இடத்திற்கே வந்து உன்னிடமே நக்கி பிழைப்பவன் உன் உரிமையை மதம் சாதி சடங்கு என சொல்லி பறித்துக்கொள்கிறானென உன் உச்சந்தலையில் அடித்து உணர்ந்திவிட்டு போனவர்கள்..
..
பாவம் கிருஷ்ணசாமி.. நாயாய் பாப்பானுக்காக உழைக்கிறார் பழைய பாசம் கைக்கட்டி சேவகம் செய்கிறார்.. எத்தனை முறை குளித்தாலும் பாப்பான் வீட்டில் பெண்ணெடுத்தாலும்.. நீ.. அய்யராக அய்யங்காராக முடியாது.. சங்கராச்சாரியரை கண்டால் தீட்டு படுமென விரட்டிவிடுவார்.. அருகில் அமர்ந்தெல்லாம் பேசமுடியாது.. நீ.டாக்டராகவில்லையென்றால் பாப்பான் வீட்டு பெண் கிடைத்திருப்பாரா.. உன்னை படிக்க சொன்னவர்கள் .. நீ படிக்க ஏதுவாக இட உரிமையை பெற்று தந்தவர்களை தான் இக்காலத்திற்கு தேவை இல்லையென்கிறார்..
தான் உயர வந்தவுடன் தன் குடும்பம் பொருளாதாரத்தில் மெச்சபட்டவுடன் தன் இனத்தவர்கள் முன்னேற விடாமல் செய்கிற இழிச்செயலை செய்கிறார்..
..
தமிழகத்தில் இவரை (ஊடகங்கள் தவிர) யாரும் மசிருக்கு கூட மதிப்பதில்லை இவரை யாரும் ஆதரிக்கவோ சேர்த்துக்கொள்ளவோ இனி தயாரில்லை விரைவில் இருக்குமிடம் தெரியாமல் போவார்.. ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு கறிவேப்பிலை தான் இவர் தேவை முடிந்தவுடன் தூக்கியெறிந்துவிடுவர்..அப்போது கதியற்று கேட்பாரற்று கிடப்பார் ..
..
நக்கித்தான் குடிப்பேன் என்கிறாய் அதை நல்லதென்கிறாய் என்றார் பாரதிதாசன்..
இடையிடையே கிருஷ்ணசாமிகளை வந்து பாசிசம் பேசும்.. கிருஷ்ணசாமி என்றில்லை யார்வந்தாலும் தமிழகத்தில் பெரியாரை முன்னெடுக்காமல் போனால் புதைமணலில் சிக்கிவர் போல் ஆவார்கள்..
..
ஒன்றை மட்டும் சொல்லி முடிப்போம்..
பெரியாரும் அண்ணலும் போராடி உரிமையை பெற சொன்னார்கள்.. சுயமரியாதை இழந்து நிற்க சொல்லவில்லை
#திறக்கப்படாத கதவிற்குள் .. மடிக்காத விரிப்புகளை பயன்படுத்தி கரைசேர ..பயனடைய சொல்லவில்லை..
..
#கிட்டு_புதைமணலில் …
..
தோழர். ஆலஞ்சி
Wednesday, September 6, 2017
கிழவனின் பேனா
ஒரு பேனா களைத்துப்போய் சற்று இளப்பாறுகிறது.. அதற்குள் எத்தனை சீற்றத்தோடு பார்பன கூட்டம் நம் மீது பாய்ந்து வருகிறது பாருங்கள்.. யாரென்றே தெரியாதவன் விளையாட்டு சேதி சொன்னவன் எல்லாம் நமக்கு வகுப்பெடுக்கிறான்.. சிரிப்பு நடிகன் சீரியஸாய் கதைக்கிறான்.. அதுக்கென்ன இப்போ என அக்ரஹாரத்து அச்சார் (உறுகாய்)போட்ட மாமியெல்லாம் பேசுகிறது..
அதைவிட கொடுமையாய் மாராப்பு சேலைக்கு போடகூடாதென வரிகட்டியவனின் பேரன் பாவிகளை தூக்கி சுமக்கிறான்.. பீ அள்ளிய கைகளில் புத்தகம் தந்தவரை மறந்து .. பாசிசத்தின் பீ.. திங்க போகிறேன்.. சில குலத்தைக் கெடுக்கும் கோடாரிகள்..
இவையாவும்.. ஒற்றை பேனா சிந்திய துளிகள் கண்டு அஞ்சிய பேடிகள் இளைப்பாற கொஞ்சம் மௌனமாய் இருக்கையில் துள்ளி குதிக்கின்றன..
..
இந்த கிழவன்.. ஆயிரங்கணக்கில் வழிகளை சொல்லியிருக்கிறான் கொஞ்சம் கூர்ந்து படித்தால் அதனோடு பயணித்தால் இன்று கொக்கரிக்கும் பாசிசத்தின் பற்களை பிடிங்கியெறிந்து விடலாம்.. எந்தவொரு போராட்டத்தையும் அதன் முனை மழுங்காமல் எடுத்து செல்லும் பயிற்சியை .. பெருங்கிழவன் பெரியாரும்..எதை எப்படி எதனோடு எங்ஙனம் தீர்ப்பதென்று அறிவாலயத்து கிழவனும் முரசொலித்து சொல்லியது இன்னமும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி இடைக்கால வெற்றியை பெறலாம் ஆனால் இனமானம் என்கிறபோது அனைத்தையும் உடைத்தெறிந்து ஒன்றாகி நிற்போம் என ஆரிய கூட்டம் உணரத்தான் போகிறது..
..
நான்காம் தலைமுறை தலைவனாய் தளபதியாய் திரு.ஸ்டாலின் தமிழர்களின் தமிழினத்தின் நம்பிக்கையாய் வருவது கண்டு மக்களின் தன்னெழுச்சியாய் ஆதரவு கண்டு பகைவர் கூட்டம் தடுமாறுகிறது.. அதனால் ஏதேனும் சொல்லி இனத்தானேயே புறம் பேசச்சொல்லி நம் கை கொண்டே கண் குத்தும் வேலையை செய்கிறது.. எந்தவொரு உணர்வுபூர்வமான விடயங்களிலும் உணர்ச்சியை தூண்டி சாதிமதத்தை சொல்லி பிரிக்கும் வேளையை நம்மவரை கொண்டே செய்கிறது வேலூர் cmc விடயத்தில் கூட மதத்தை முன்னிருத்தும் அயோக்கியத்தனத்தை செய்கிறது.. இதெல்லாம் பலிக்காது..
..
கிழவன் செய்துகாட்டிய பொருள் பொதிந்த எண்ணற்ற வழிகளும் செயல்களும் அவர்கண் அசைவில் நடந்தேறும் அப்போது பார்பனீயம் மீண்டும் புதைக்குழிக்கு அனுப்பப்படும்
..
#திராவிடருக்கு_வீழிச்சியில்லை..
..
தோழர். ஆலஞ்சி
முரசொலியில் வைகோ
முரசொலி..
முரசொலி பவளவிழாவில் திரு.வைகோ பேச்சை கேட்டிருப்பீர்கள்.. இன்னமும் தெளிவு பெறாதவராகதான் அவரின் பேச்சு இருந்தது.. மேடைப்பேச்சில் கடைப்பிடிக்கவேண்டிய சில விடயங்கள் குறித்து கலைஞர் சொல்ல கேட்டிருக்கிறேன்.. ஆளுமை என்பது சபையை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்துவது மட்டுமல்ல எந்த விடயத்திற்காக நிற்கிறோம் என்பதில் கவனம் தேவை.. எல்லாவற்றையும் போட்டு குழைப்பிக்கொள்வதை விட எதை தவிர்க்கவேண்டுமென அறிந்திருந்தல் வேண்டும் அதைவிட நிகழ்கால நிகழ்வுகளை கோர்த்து பேசவேண்டுமென்பார்..அது நேற்றைய உரையில் என்றில்லை வைகோவிடம் எப்போதும் இருப்பதில்லை.. உலக அரசியலை படித்தவர் உள்ளுர் அரசியலின் நம்பகதன்மையை மறந்துவிட்டார்..
..
திமுகவிலிருந்து பிரிந்து வந்து 25 ஆண்டுகளை கடந்தும் தெளிவான முடிவை இதுவரை எடுக்கவில்லையென்பதும்.. சரியான பாதையில் இதுவரை பயணிக்கவில்லையென்பதும் இவர் ஆதரித்தவர்கள் இவர் படித்து வளர்ந்த திராவிட சித்தாந்தத்தை சிதைக்க வந்தவர்கள் என்கிற யதார்த்ததை கூட உணராதவராகவே காலம் தள்ளிவிட்டார்..
..
மதிமுக தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்த போது நண்பர்களிடத்தில் சொன்னேன் வைகோ கூட வெற்றிபெற முடியாது இது அவருக்கே தெரியுமென்றேன் திமுக தேர்தல் பணிக்குழு செயலாராக இருந்தவர் அடிமட்ட தொண்டர்களின் அரவணைப்பில்லாமல் கிராமங்கள் தோறும் கட்சியை கொண்டு சேர்க்க முடியாதென்கிற உண்மை அறியாமல் போனார்..
நிஜத்திற்கும் நிழலுக்கும் பேச்சிற்கும் செயலுக்கும்,உள்ள வேறுபாட்டை உணராதவராகவே இப்போதுமிருக்கிறார்..
மதுராந்தகம் ஆறுமுகம் மதிமுகவிற்கு வந்தபோது லட்சம் தொண்டர்கள் வந்ததைப்போல உணர்கிறேன் என்றார்.. இதுதான் வைகோ..தினகரன் கந்தசாமி வந்தபோது திராவிட இயக்கத்தின் ஊடகப்பிரிவே வந்ததைப்போல பேசினார் ..
உண்மை நிலை அறியாதவராகவே இப்போதுமிருக்கிறார்.. ஜெயாவை மோடியை விஜயகாந்தை பின்துணைக்கிற போது ஒன்றை மறந்தார் தன் கால் நழுவுகிறதென்பதை..
..
திராவிட இயக்கத்தின் பின்ணணியில் வளர்ந்தவர் அதன் சித்தாத்தத்தோடே போட்டியிட்டார்.. தெரிந்தே தவறுகளை கொஞ்சமும் கூச்சமின்றி செய்தார்.. சற்றென்று நம்பிவிடும் அவரது இயல்பு அவசரகதியில் ஆனது.. இப்போதுகூட வலுகட்டாயமாக தளபதியைப்பற்றி பேசுவதை தவிர்த்து மீண்டும் தவறின் கோட்டில் நிற்கிறார்..
இவரால் திமுகவிற்கு பலமென்ற நிலை இல்லை மாறாக வைகோவின் அரசியல் இனி தளபதியின் அடியொற்றி இருக்கிறதென்பது தான் உண்மை.. காலம் அவருக்கு உணர்த்து போது வைகோ அரசியலிலிருந்தே கரைந்துப்போயிருப்பார் ..
..
தோழர். ஆலஞ்சி
Tuesday, September 5, 2017
ஆசான்..
#ஆசான்..
நிறைய பேரை எழுதவேண்டிவரும்.. என்னுள் அகரத்தை எழுதிய பூலாபாய் தொடங்கி..
..
ஒரு குழந்தையின் முதல் ஆசான் தாய்..
தாயிடமிருந்து 3000 சொற்களை பள்ளிக்கு செல்வதற்கு முன்பே கற்றுக்கொள்கிறது குழந்தை..
அறத்தை அன்பை அர்ப்பணிப்பை அக்கறையோடு நம்மில் விதைக்கிற தாயே நம் முதல் ஆசான்..
பள்ளிகளில் போதிக்காத நிறைய விடயங்களை தாய் தன் செய்கையில் போதித்துவிடுவாள்.
அன்பின் மிகுதியால் நம்மை வழிநடத்தி சரிசெய்ய மறந்து போவாள்..
..
#பள்ளி..
ஆரம்பத்தில் பயத்தையும் பின் அக்கறையும் அறிவுசுடர் கொண்டு நம்மில் விதைக்கிற.. இல்லையில்லை நடுகிற இடம்.. நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடுவதைப்போல பாத்திக்கட்டி பயிரை காப்பது போல வீணான களைகளை களைந்து .. நம்முள் நம்மை அறியாமல் வந்துவிழும் கொல்லிகளை.. கெட்டவிடயங்களை கொன்று நம்மை செழிப்போடும் சிறப்போடும் வளர்த்தியெடுக்கும் நெடுவயல்..
..
#ஆசான்.
நம்முள் அறிவெனும் விதையை விதைக்கிறவர்கள்.. அது சரியாக விளைகிறதா என நம்மை கவனித்து அடுத்த நிலைக்கு கொண்டுபோகும் அறம் செய்பவர்கள்.. ஆசிரியர்பணி அறப்பணி.. கற்பித்தல் எனும் அரிய சேவையாற்றுகிறவர்கள்..
..
என் ஆசான்கள் அறிவில் சிறந்த சான்றோர்கள்..
அன்பை அறிவை பகுத்தாயும் திறனை சுயமரியாதையை..சோர்ந்துவிடாமல் இயங்கும் ஆற்றலை எனக்கு கற்றுதந்தவர்கள்..
மிகசிறந்த நல்லாசிரியர்களோடு நட்போடுபழகும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.. அன்பிற்குரிய அறிவாசான்கள்..
..
இந்த ஆசிரியர் தினத்தில் என்னை செம்மைப்படுத்தி வாழும் வழிமுறையை அறத்தோடும் அன்போடும் ஈகை குணத்தோடும் கற்றுதந்த..
என் முதல் ஆசான்
எங்கள் தாயாரின் நினைவோடு..
..
தோழர். ஆலஞ்சி
Monday, September 4, 2017
சங்கத்தமிழ்..
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
..
எங்க கிழவிக்கு எப்பவுமே குசும்புதான்..
தனக்கு தெரிந்த விசயம் அடுத்தவனுக்கு தெரியலேன்னு வையி வஞ்சியிலே தான் பாடுவா..
..
அதியமான் படையெடுக்க தயாரான போது இரு நான் போய் பாத்துட்டுவரேன்னு சொல்லி அங்கபோய் அதியமான் தளவாடங்களெல்லாம் கொல்லன் பட்டறையில இருக்கு உங்க கிட்ட உள்ளதெல்லாம் பளபளன்னு இருக்கேன்னு சொல்லி அவனுக்கு பேதி வரவழைச்சவ..
..
கணபதிபாபா கிட்ட போயி சங்கத்தமிழை கேட்டான்னா பாத்துக்கோயேன்..
..
#வஞ்சி..
..
விளக்கம்..
இப்பாடலை இன்னும் சிறிது நோக்கினால், "கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே" என்பது யாரை அல்லது எதனைக் குறித்தென்று ஒரு கேள்வி எழுகிறது. இதன் பரவலான விளக்கம் பிள்ளையார் என்பது. ஆனால் மணி என்பதைப் பலரும் பலவிதமாகப் பொருள் கொள்கின்றனர். மணி என்பதை நம் உள்ளத்தே உறைகின்ற ஞானத்தின் குவிய இடத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஞான மணியே, நன்மணியே, பொன்மணியே, நடராஜ மணியே என்பார் வள்ளலார். இந்த ஞானத்தையே "தூமணி" என்பதாகக் கொள்ள இடமிருக்கிறது. துங்கக் கரிமுகம், கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியைப் பார்த்தால் தோன்றும் கோலம். தோன்றி மறைந்து விளையாடும் ஒரு காட்சி. ஒளியும் இருளுமாய்க் கலந்து காட்டும் கோலம். அதுவே ஞானத்தின் இருப்பிடமாகப் பலராலும் காட்டப்படுவது. திருமூலரிலிருந்து பல சித்தர்களும் சிந்தையைச் செலுத்துவது இவ்விடத்துக்கே. இக்காலத்து யோகாசன வியாபாரிகளுக்கும், மத வியாபாரிகளுக்கும்கூடப் புரிந்தோ புரியாமலோ இவ்விடத்தின்மீது ஒரு மயக்கமுண்டு. ஆக, அங்கே இருக்கின்ற ஞானத்தால் பலவற்றையும் உணர முடியும். மெய்யுணர்தல். மெய்யறிவு. மெய்ஞானம். இது ஓதாமலேயே வாய்க்கக்கூடியது என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தூமணியிடமே ஔவையார் முச்சங்கத் தமிழையும் தரச்சொல்லி வேண்டுகிறார். சரி, முதல் வரியில் வரும் சாப்பாட்டுச் சரக்குகள் என்னத்துக்கு? "பால், தெளிதேன், பாகு, பருப்பு" என்ற நான்கும் மனிதர்கள் உயிரைக் கட்டிக் காத்துக்கொள்ளப் போதுமான அத்தனைச் சத்துக்களையும் கொண்டுள்ளன. இவற்றை மட்டுமே உண்டுகொண்டு வேறு உண்டியைத் தேடாது உயிர்வாழ்ந்துவிட முடியும். சாதகருக்கும் உண்டி தேவை. காற்றைக் குடித்து உயிர்வாழ எல்லோருக்கும் முடிந்துவிடுவதில்லை. அதே நேரத்தில் ஆடம்பரமான பெருவுணவுக்கும் நேரம் கூடுவதில்லை. எனவேதான் இந்த அடிப்படை உணவுப்பொருட்களை மட்டுமே கொண்டு உன்னைப் பேணிக்கொண்டிருக்கிறேன், எனக்கு வேண்டியதைக் கொடு என்கிறார்.
..
நிறைய ஔவையார் இருந்ததாக ஆய்வுகள் சொல்கிறது .. பாலும் தேனும் எனும் பாடலை பாடியவர் பிற்காலத்தை சேர்ந்தவர் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்
..
தோழர்.ஆலஞ்சி..
தமிழிசை
நிர்மலா சீதாராமனை ஏன் விமர்சனம் செய்கிறீர் தமிழகத்திலிருந்து ஒருவர் அதுவும் ஒரு பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராகியிருக்கிறார் பாராட்டவேண்டாமா என்கிறார்.. தமிழிசை கூடவே மோடியை விமர்சித்தால் பொறுத்துக்கொள்ள முடியாதென்கிறார்.
விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவரென்று யாரும் இல்லை..
..
நிர்மலா தமிழக மக்களின் பேராதரவை பெற்றவரா ..மக்களின் பிரச்சனைக்காக போராடியிருக்கிறாரா.. தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு பிராமணர் ஒருவர் தேவைபட்டார் அதனால் தான் ஆந்திராவிலிருந்து அழைத்துவந்தார்கள்.. மக்கள் செல்வாக்கோடு தன் தொகுதியில் யாருடைய ஆதரவுமில்லாமல் குறிப்பிட்டளவு வாக்குகளை பெற முடியுமென்கிற பொன்.ராதாவிற்கு இணை அமைச்சர் பதவி.. சமீபகாலம் வரை யாரென்றே தெரியாத நிர்மலாவிற்கு கேபினட் பதவி.. இதை ரோசமுள்ள நாடார் சமுதாயத்தை சார்ந்த தமிழிசை போன்றோர் எதிர்த்திருக்கவேண்டாமா.. அதை செய்யாமல் ஏன் எதிர்க்கிறீர் என்கிறீர்.. ஆம் எதிர்க்கப்படவேண்டியவர்தான்.. நேரடியாக கேள்வி கேட்டால் சிங்கப்பூரில் உங்களால் கேள்வி கேட்கமுடியுமா என திமிரோடு பதில் சொல்கிறவரை.. தமிழர் நலனுக்கு எதிராக செயல்படுபவரை.. கடைசி வரை நம்பவைத்து கழுத்தறுப்பவரை விமர்சிக்காமல் எப்படி.. இவர்களுக்கெல்லாம் ராஜகுருவான ராஜாஜியையே கேள்வி கேட்டவர்கள்.. நாங்கள்..
எந்தவொரு கேள்வியை எதிர்க்கொண்டாலும் பார்பன திமிரோடு பதில் சொல்லும் நிர்மலாவை விமர்சிப்பது எப்படி தவறாகும்..
..
திரு.மோடி.. இதுவரை பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறாரா.. 64 நாடுகளுக்கு சென்று வந்தவர் அதுகுறித்து நாடாளுமன்ற சபைக்கு தகவல் சொன்னாரா.. என்னென்ன நல்ல திட்டங்களை நாடோடி.. நாடோடி கொண்டுவந்திருக்கிறேனென சொல்லவேண்டாமா..பாஜக எம்பிக்கள் கூட்டத்திலேயே எதிர்கேள்வி கேட்ட எம்பியை கேள்வியெல்லாம் கேட்ககூடாது பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை படித்துவிட்டு வாருங்கள் என்கிறாரே .. ஆனால் மக்கள் மன்றத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் .. சொல்லாதவரை விமர்சனங்களை எதிர்க்கொள்ளதான் வேண்டும்..
..
இதில் அனிதாவை ஏன் சுயநிதி கல்லூரியில் சேர திமுக உதவலாமே என தமிழிசை சொல்கிறார்.. அனிதா கேட்டது சலுகையல்ல உரிமை.. அதெல்லாம் கிட்டுக்களின் வேலை.. எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று தமிழிசைக்கு உரிமை வழங்கியிருக்கிற அரசியல்சாசனம் ..அதை விமர்சனம் செஸ்யும் உரிமையும் வழங்கியிருக்கிறது..
..
இது ஜனநாயகநாடு
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Posts (Atom)