Thursday, November 24, 2016

Dr மன்மோகன் சிங்... ஆணியடித்தார்

சிறந்த பொருளைதார மேதைகள் நிறைந்த நாட்டில் நாம் அரைகுறையோடு அலைகிறோம்.. தெளிவின்மை மதம் சொல்லி மயக்கும் வித்தையறிந்ததால் நாமெல்லாம் குரங்காட்டியின் கையில் சிக்கிய குரங்கானோம்.... உலகமே பொருளாதார வீழ்ச்சி கண்டபோதும் நாம் மட்டும் நிலையானதொரு பணவீக்கத்தில் இருந்தோம். மேதையின் திட்டமிடல் சரியான கணிப்பும் நம்மை நம் பொருளாதாரத்தை வீழ்ந்துவிடாமல் காத்துநின்றது.. காசாப்புகடைக்காரனை நம்பிய ஆடுகள் போல நாம் தெருவில் பனியில் கடும் குளிரில் ஏடிஎம் முன் உறங்கி கிடக்கிறோம்.. .. சிறு வணிகர்களை நசுக்கினால் மிகப்பெரிய சரிவைதான் தருமென்று திரு.எம்.எம்.எஸ் (மன்மோகன்சிங்) அவர்கள் நாடாளுமன்றத்திலே ஆணியடித்தார்..உண்மை. உலகளாவிய அளவில் வீழ்ச்சி கண்டபோதும் நாம் மட்டும் நிலையாக நின்றதன் பின்னணியில் கிராமபுற வியாபாரமே இருந்தது காய்கறிக்கடை மளிகைக்கடை சிறு தட்டுவியாபாரிகளிடம் பொருள்வாங்கும் சாமானியனால் தாக்குபிடிக்க முடிந்ததால் பொருளாதார சரிவை/வீழ்ச்சியை 69% தடுத்த நிறுத்த முடிந்ததாக அப்போதே திரு.மன்மோகன்சிங் சொன்னார்.. அந்த கிராமபுற வியாபாரத்தை தான் சிலரின் நன்மைக்காக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.. .. சரியாக திட்டமிடாததும் நீண்டகாலத்திற்கு பின் பலன்தருமென்பதும் நிஜமல்ல என பொருளாதார வல்லுநர் நீண்டகால அனுபவம் கொண்டவர் நாடாளுமன்றத்திற்குவந்து தன் உடல்நிலை முடியாதபோதும் மிக சிறந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார். திட்டமிட்ட கொள்ளை சட்டபூர்வ திருட்டு நிர்வாக தோல்வி..என்று நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளும் என உண்மையை நாகரீகமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.. .. திரு.மோடி அவர்களே சகதியில் கால்வைத்துவிட்டீர்.. தவறென்று தெரிந்தும் சகதியோடே அலைவேன் என பிடிவாதம் பிடித்தால் நாற்றமெடுத்துபோகும். .. நாட்டுமக்கள் தவறை உணர தொடங்கிவிட்டார்கள்.. மம்தா சொன்னதைப்போல Honest ஆக இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்கிக்கட்டும் மக்கள் கோவம் அப்போது தெரியும் Photoshop ல ஆட்சியை பிடித்தவர்களுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்.. Thank you Dr.Manmohan Singh ....shab .. #Modi_Go_back… .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment