Saturday, November 26, 2016

கணக்கில் பிழை

பிற பாடங்களில் சிறிய பிழைகள் வந்தால் மதிப்பெண்ணை குறைத்து வழங்குவார்கள் ஆனால் கணக்கு பாடத்தில் சிறிய தவறென்றால் கூட முழு மதிப்பெண்ணும் கிடைக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி அடித்த ₹500 ல் 9 தவறு இருக்கிறது.. என்று ரிசர்வ் வங்கியே சொல்கிறது அதுவும் அவசரத்தில் அடித்ததால் தவறுகள் நிகழ்ந்துவிட்டதாக வங்கியின் அறிக்கை சொல்கிறது.. .. எல்லாம் அள்ளிதெளித்த அவசரகோலம் எந்தயொரு திட்டமிடலும் நிறைய கருத்து பரிமாற்றம் ஆலோசனைகள்.. சம்பந்தபட்ட துறை வல்லுநர்களின் வழிகாட்டல் இதெல்லாம் இல்லாமல் யாரோ அதிமேதவியாக தன்னை காட்டிக்கொள்ள நடத்தப்பட்ட திட்டம்.. பணம் பதுக்குவோருக்கு பணத்தை நகர்த்த transit/ move மிக சுலபமாக்கிய ₹2000 நோட்டுக்கள்.. எளிமைபடுத்திய அதிபுத்திசாலித்தனம்.. பெரும் முதலாளிகளுக்கு முன்கூட்டியே தெரியபடுத்தி பலகோடிகள் கருப்பு வெள்ளையானது .. மீதியுள்ள பெரும் முதலைகள் 37% கமிஷனில் அமிர்ஷாவிடம் மாற்றியாகிவிட்டது.. பாவங்களும் நடுத்தரவர்க்கத்தினரும் கால்கடுக்க வரிசை நின்று பணமாற்றம் செய்யவேண்டும் அதுவும் சரியாக அச்சிடபடாத தவறுகளால் ஆன பணம்.. உண்மையில் இது தான் செல்லாத பணம்.. தவறுகள் நிறைந்தவைகள் எப்படி சரியாகும்.. .. cashless பாலிசியில் ஊழல் லஞ்சம் ஒழிந்துவிடுமா.. அரசு ஊழியர்கள்... காவல்அதிகாரிகள் நம்ம ஏட்டைய்யாக்கள் எல்லோரும் இனி கையூட்டை கார்டை தேய்த்தோ அல்லது மொபைல் வழியாகவோ பெறுவார்கள் என நம்புவோம்.. .. 90% மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற பொய் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது. மக்கள் கோவம் நீறுபூத்திருக்கிறது..என்பதைதான் பாஜக எம்பியை தாக்கியதை காட்டுகிறது.. இது மக்கள் விட்ட எச்சரிக்கை இதுசரியான முறையல்ல என்றாலும் எவ்வளவுதான் சகித்துக்.கொள்வான் .பொதுஜனம்....கஷ்டத்தை பொறுத்துக்கொண்டவனை ஆதரிக்கிறான் என்றதும் கோவம் கொண்டான் .. அறிவிலா செயலால் அவதியுறும் குடிமக்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment