Wednesday, November 2, 2016
கமல்....?
தனி நபரின் சொந்தவிடயங்களில் நாம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும். . எந்தயொரு செயலும் இந்த சமூகத்தில் மாற்றத்தை/ கேடை விளைவிக்காது என்கிற போது நாம் ஏன் தலையிடவேண்டும்.. ஒரு தனிநபர் என்வீட்டில் அழைப்புமணி calling bell வைத்திருக்கிறேன் என்கிற நாம் ஏன் எட்டிபார்க்கவேண்டும்.. திரு.கமல் கௌதமி இருவரும் give and take policy ல் கொடுக்கல் வாங்கல் கொள்கையில் வாழ்ந்து வந்தார்கள் இருவரும் பிரிகிறார்கள்.. இது முழுக்கமுழுக்க இருவரின் தனிப்பட்ட விடயம் இதில் கருத்துச்சொல்வது நையாண்டி செய்வது விமர்ச்சனம் செய்வது தேவையில்லாதது..
..
திருமணம் என்ற சடங்கின் மீது நம்பிக்கையற்ற ஒருவரின் வாழ்வில் அவர்களுக்கான பாதையை அவர்களே தேர்வு செய்து கொள்ளும் உரிமை அவர்களுக்குண்டு.. இரு கலைஞர்களின் கலைசார்ந்த விடயங்களை ,நடிப்பை, அவர்கள் சமூகத்திற்கு செய்த செய்கிற காரியங்களை, அவர்களின் இந்த சமூகம் மீதான பார்வையை நாம் விமர்ச்சிப்போம் விவாதிப்போம்.. முடிந்தால் கடும் கண்டனத்தை கூட பதிவு செய்வோம். அதுவரை தான் நமது எல்லை.. அவர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க யோசனை சொல்ல கருத்திட நமக்கு எந்த உரிமையும் அருகதையம் இல்லை..
..
ஆணுக்கென்று இங்கே வரையறை ஏதும் வகுக்கப்படவில்லை ஆனால் பெண்ணின் எல்லைகள் வகுக்க அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறது.. என்பதை தான் திருமதி கௌதமியின் கருத்து நமக்கு சொல்கிறது..
தன் மகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பிரிவதாக சொல்கிறார்..
ஆம் இப்போதும் இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஆணாதிக்க திமிரின் சாயல் இருக்கதான் செய்கிறது..
..
இருபது நூற்றாண்டை பின்னிட்டும் இந்த சமூகத்தின் பெண்கள் மீதான பார்வை நையாண்டியும் கேலியும் ஆனதாகவே இருக்கிறது..அவர்களின் உரிமைகள் நியாயங்கள் விருப்புவெறுப்புக்கள் பரிசீலிக்கவோ/ கேட்கவோ படுவதில்லை.. give and take policy இந்திய கலாச்சாரத்தோடு எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறது.. இங்கே திருட்டுத்தனத்தை /கள்ளத்தனத்தை கூட கௌரவமாக பார்க்கிற சமூக பின்னணியே இதற்கு காரணம்..
இது தவறா சரியா என்பதைவிட நிறைய மறைமுக தவறுகளுக்கு வழிவகுக்கின்றன..
..
தனிநரின் விருப்பு வெறுப்புகளை இந்த சமூகம் காட்டும் ஆர்வம் நல்ல பலவிடயங்களில் சமூகத்தின் மீதான அக்கறையில் காட்டினால் நல்ல சமுதாயத்தை கட்டமைக்கலாம்.. கமலின் நடிப்பை, அரசியலை, அவரின் சித்தாந்த கருத்துக்களை, நாம் கடுமையாக விமர்சிப்போம்.. கருத்திடுவோம் கண்டனத்தை பதிவு செய்வோம்.. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அல்ல..
..
#தனிநபர்உரிமைகளில்_தலையிடுவது_அநாகரீகம்…
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment