Friday, November 11, 2016
நகை மோகம்
இரண்டு லட்சத்திற்குமேல் நகை வாங்கினால் பான்கார்ட் அவசியம்.. அப்படி இல்லாமல் விற்றால் நகை கடைமீது நடவடிக்கை...
பிரபல நகைக்கடை (கார்ப்ரேட் நிறுவனம்) ஊழியரிடம்(நண்பர்) பேசிக்கொண்டிருந்தேன் .. என் மகள் திருமணத்திற்கு நகை தேவைபடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் என்னிடம் பான்கார்ட் இல்லை வாங்கமுடியாதா... எப்படியோ கடன்வாங்கி சேமித்துவைத்ததையும் சேர்த்து 20 சவரன் வாங்கவேண்டுமெனில் எப்படி வாங்குவது என்றேன் .. சிரித்தார்..
..
இப்போது யார் வரியோடு நகைவாங்குகிறார்கள்.. நகைக்கு ரசீது வாங்குகிறவர்கள் மிகவும் குறைவு 6 சதவிகிதம் பேர் கூட வாங்குவதில்லை.. மொத்தமாக கடைசியில் விற்றதில் பகுதிக்கு பில் போட்டு கணக்கு காட்டுகிறார்கள் என்றார். இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு அரசாங்க புள்ளிவிவரத்தை விட மூன்று மடங்கு வியாபாரம் ஆகிறதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம் என்றார்..
இனி இதெல்லாம் முடியாதே என கேட்ட போது இன்னும் சுலபமாகுமென்றார்.. புரியவில்லையென்றேன்..
..
10 சவரன் நகைகளை(பெரிய நகைகள்) குறைத்து கணக்கில் கொண்டுவந்துவிடுவார்கள் கணக்கில் வராத தங்கங்கள் பெரிய நகைகளுக்கு பயன்படுத்தப்படும்..
அதிகளவில் சிறு நகைகள் கணக்கில் காட்டி வரிசெலுத்தப்படும்.. தங்கத்தின் மீதான மோகம் குறிப்பாக கீழைநாடுகளில் அதிகம் .. தங்கம் வாங்குவதைப்பற்றி அறியாமை இன்னும் தீர்த்தபாடில்லை சேதாரம் கணக்கு வாடிக்கையாளருக்கானது என்ற அறிவு கூட இல்லை..
சாதாரண நகைக்கடை வியாபாரிகள் கார்ப்பரேட்டுகளாக மாறிய பின் நகைக்கடை மீதான அரசாங்கத்தின் பார்வை கரிசனத்தோடு தான் இருக்கிறதென்றார்..
..
நகை கூலி நிர்யணம் அவர்களே முடிவெடுக்கிற நிலையை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை ஒரு பவுன்நகைக்கு ஒருகிராம் என்கிற ரீதியில் வாங்கிகிறார்கள் இவையெல்லாம் வருமானவரி கணக்குகளில் வருவதில்லை.. 12% பெற்றுக்கொண்டு வெறும் 5 அல்லது 6 சதவிகிதம் மட்டுமே விற்பனைவரியாக செலுத்துகிறார்கள்.. பகுதி நகையை கணக்கில் இல்லாமலும் பகுதி நகைக்கு குறைந்தளவு வரியாகவும் செலுத்துகிறார்கள். மூன்றுவிதமான வரிநிர்யணம் செய்யபடுகிறது .. குறைந்தளவு நகைகளுக்கு வரிகள் குறைவாக இருந்தும் அதை வாடிக்கையாளர்ரளுக்கு தருவதில்லை மாறாக செய்கூலி என 30% சதவிகிதம் வரை செலுத்தவேண்டியிருக்கிறது .. இவை செய்வதற்கான கூலியாக item based உருப்படி செய்கூலி என செலவினத்தை காட்டி வரியிலிருந்து விலக்கு பெற முடியுமென்றார்..
..
ஆம் இந்திய நகை வர்க்கத்தில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் தங்களுக்கு பில்வேண்டாமென்று சொல்லிதான் நகைவாங்குகிறார்கள்.. இதுகூட வரிஏய்ப்புதான் .. இது குறித்த விழிப்புணர்வெல்லாம் மக்களிடமில்லை...
சில கோமாளித்தனமான அரசின் நடவடிக்கைகளால் மக்கள் வேறு வழியின்றி தங்கத்தை நோக்கி ஓடுகிறார்கள்.. அதை கடைக்காரன் பயன்படுத்திக்கொள்கிறான்..
சாதாரண நகைவியாபாரிகளை கார்ப்பரேட்டுகளாக்கிய பெருமை நம்மையே சேரும்..
..
இந்த அரசின் முடிவால் ..மக்கள் நகைக்கடைகளை நோக்கி செல்கிறார்கள்
ரியல்எஸ்டேட்டில் நிறைய கெடுபிடிகள் மண்ணை காப்பதில் கூட நிறைய சிரமங்கள்
அதனால் மக்கள் பொன் மீதான ஈர்ப்பு அதிகமாகிறது
..
சும்மாவா சொன்னார்கள்.
#ஒன்னுமண்ணுலபோடு_இல்லேன்னாபொன்னுலபோடு.
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment