Sunday, November 13, 2016

நேர்மை

மக்கள் நேர்மையாக நடந்துக்கொள்ளவேண்டும்.. அருண்ஜெட்லி.. நேர்மையை பற்றி யார் பேசுவது .. ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜாமீனில் வீ்ட்டில் இருந்தபோது மரியாதை நிமித்தம் என்ற பெயரில் குற்றவாளியை சந்தித்த நேர்மையாளர்..மக்களை பார்த்து சொல்கிறார் நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள்.. சிஏஜி அறிக்கை வைத்து 2ஜி ல் பாராளுமன்றத்தில் சிலம்பம் ஆடியவர் தான் நிதியமைச்சராக ஆனவுடன் மத்திய தணிக்கைத்துறை( சிஏஜி) அறிக்கை தந்த போது அதை அரசியலாக்காதீர்கள் என்றவர்தான்.. நேர்மையை பற்றி ஜெட்லி பேசுவது தான் காலக்கொடுமை..குற்றவாளியை வீட்டில் சந்தித்து அனைத்து மரபுகளைகளையும் மீறி நீதியை வளைத்கொடிக்க காரணமாக இருந்தவர்.. ஒரு மத்திய காபினெட் அமைச்சரே அதிலும் நிதியமைச்சரே சந்திப்பதின் முக்கியத்துவம் உணராமல்.. குற்றவாளியை அமைச்சர் சந்தித்தால் வழக்கின் நம்பகதன்மை போய்விடுமே என யோசிக்காமல் நடந்திக்கொண்டவர். .. .. பதினெந்தாண்டுகாலம் நடந்த வருமான வரி வழக்கை ஒன்றுமே இல்லாமல் தண்டனையில்லாமல் அபராதம் கட்டினால் போதுமென்று ஜெயலலிதாவிற்காக கரிசனம் காட்டியவர் நேர்மைப்பற்றி்பேசுகிறார்.. எதற்கும் ஒரு தகுதி வேண்டும் .005% சதவிகித கருப்புபணத்தை காரணம்காட்டி 15 லட்சம் கோடியை செல்லாதாக்கி நாட்டு மக்கள் கொண்ட நம்பிக்கையை செல்லாதாக்கியவர்கள்.. வாராகடன் கோடிகள் லட்சங்களில் விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை.. அதை வசூலிக்க முடியாமல் வாங்கியவர்கள் பெயரை கூட வெளியிட முடியாத நேர்மை.. நிர்வாக திறனற்று வீதிகளில் கோடிகணக்கான மக்களை நிறுத்திவிட்டு மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும் என சொல்லி இன்னும் ATM இயந்திரம் வடிவமைக்கபடவில்லை வாரங்கள் ஆகுமென மாற்றிபேசும் நேர்மை... .. அரசின் தலைவர் நாடு அல்லோலபடும்போது வெளிநாட்டில் இருந்துக்கொண்டு.. மக்களின் இன்னலைபற்றி கண்டுக்கொள்ளாமல்.. மக்கள் கோவ மொழியில் பேசுவதை கூட புரிந்துக்கொள்ளாமல் மக்கள் ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி என பொய்பேசி திரியும் அவலநிலை.. நேர்மையை பற்றி ...யார் பேசுவதென்றே விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.. .. மக்கள்நேர்மையோடுதான் இருக்கிறார்கள் செய்த தவறை உணர்ந்து .. மௌனமாய்.. புரட்சி செய்யாமல். .. #சாத்தான்கையில்_வேதபுத்தகம்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment