Saturday, November 5, 2016

பெரியார் மானமுள்ளவர்களின் வழிகாட்டி

இனியும் பெரியாரை சுமக்க முடியாது சீமான்.. பெரியாரை யாரும் சுமக்க தேவையில்லை பெரியார் சுமந்தால்தான் இன்றைக்கு கொஞ்சமேனும் நரம்பு புடைக்க பேசிகிறாய்.. இல்லையெனில் கும்பிடுறேன் சாமி என்று குனிந்துக்கொண்டுதான் இருப்பாய்.. பீகாரை போல உ.பியை போல நடுத்தெருவில் நாயைவிட கேவலமாக அடித்து துரத்தப்பட்டிருப்பாய்.. .. பெரியார் எப்போது சொன்னார் என்னை பின்பற்றுங்கள் என்று என்னை தலையில் தூக்கி கொண்டாடுங்கள் என்று.. நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றுதான் சொன்னார்.. அவர் சொன்னதெல்லாம் கொஞ்சம் விவரம் உள்ளவனுக்கு அதெல்லாம் உன்னைப்போன்ற விவரகேடுகளுக்கு புரியாது.. .. பெரியார் மட்டும் தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லையென்றால்.. உன்னை உன் உரிமையை உனக்கானதை உன்னை கேட்காமலேயே சுரண்டுகிறான்..எல்லா உயர்விலும் அவன் அமர்ந்துக்கொண்டு உன்னை மாட்டைவிட கேவலமாக நடத்துகிறான் .. கடவுள், மதம்,ஜாதி,வர்ணம் எனச்சொல்லி அவன் மட்டுமே உடம்பு வளையாமல் வலிக்காமல் எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பறித்து அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.. எனச்சொல்லி சுயமரியாதையோடு வாழ சொன்னவன் இந்த பெருங்கிழவன்.. .. பெரியார் நினைத்திருந்தால் எல்லா உயர்பதவிகளையும் அடைந்திருக்கமுடியும்.. சமுதாய மாற்றத்தை சமூகநீதியை எல்லோருக்குமான சமநீதியை.. ஏற்றஇறக்கமில்லா சமஉரிமையை எல்லா மனிதனும் சமமாக நடத்தப்படவேண்டும் எல்லாருக்கும் பொதுவானதாக கடவுள் ,நீதி இருக்கவேண்டும் என விரும்பியவர்.. பெரியாரை போல ஒருவரை இந்தியா கண்டிருக்காவிட்டால் இன்னமும் அடிமைத்தனத்தில் ஊறி வளைந்த முதுகோடுதான் நின்றிருப்பாய். .. #பெரியார்_மானமுள்ளவர்களின்_வழிகாட்டி.. Periyar's guide for those who honor… .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment