Thursday, November 17, 2016
பெண் ஆளுமை
பெண் ஆளுமைகள்.
குறிப்பாக எதிர்கருத்தாக்கங்களை கொண்டவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. நிறைய பெண்கள் குறிப்பிட வரையறைக்குள் தங்களின் பணி அல்லது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.. அவர்களுக்கென்று நிறைய தடைகளை அவர்கள் குடும்ப மற்ற சமூக பின்னணியே தருவதை பார்க்கலாம்..
..
அரசியலில் பெண்கள் மிக சொற்ப எண்ணிக்கையில்தான் பங்கேற்க முடிகிறது அதிலும் சில கட்டாயத்தின் பெயரில் இடஒதுக்கீடு போன்ற நிர்பந்தங்களால் சிலர் மீது திணிக்கப்படுகிறது..
சுயமாக எழ வாய்ப்புக்கள் மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல் தடையிடவும் செய்கிறது இந்த சமூகம்..
என் உறவினர் கூட தன் துணைவியாரை உள்ளாட்சியில் நிர்வாகத்தில் சுயமாக பணி செய்ய விடவே இல்லை.. பெண்களின் சுயசிந்தனைகள் பங்களிப்புகள் திறமைகள் மறுக்கபட்டு/மறைக்கபடுகின்றன என்பதுதான் உண்மை.. கடைசிவரை அந்த சகோதரியை சேர்மன் என்று யாரும் அழைக்கவில்லை
அவரது கணவரைதான் சேர்மன் என்றழைத்தார்கள்..
..
பெரிய பதவிகளை வகிக்க அல்லது பகிர்ந்துக்கொள்ள கருத்தை கேட்க அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை..திராவிட சிந்தனை பேசும் பெரியாரியம் பேசும் கட்சிகளில் கூட மிக மிக குறைவான பங்களிப்பையே காணமுடிகிறது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.. பகுத்தறிவு சமநீதி சமஉரிமை பேசும் திராவிட இயக்கங்களில் கூட இன்னமும் சரியான பிரதித்துவம் கொடுக்கபடவில்லை.
..
அத்திபூத்ததைப்போல சிலர் மட்டுமே அரசியலில் பொதுவாழ்வில் பங்களிக்கிறார்கள் அதனாலேவோ என்னவோ மாற்று கருத்தை கொள்கை முரண் கொண்டவர்களை கூட அவர்களின் பங்களிப்பிற்காகவே பாராட்ட போற்றவேண்டியிருக்கிறது..
ஜெயலலிதா மாயவதி மம்தா தொடங்கி சுஷ்மா கூட ..
இவர்களின் அரசியலை,
படுமோசமான நிர்வாகத்தை
அதிகாரஆணவத்தை அடாவடித்தனத்தை வெறுத்து எதிர்த்தாலும்.. இவர்களை சிறு புன்னகையோடு ரசித்திருக்கிறேன்
இவையனைத்தும் ஆண்கள் செய்வதில்லையா என கேள்வி வரும் மறுப்பதற்கில்லை அதையும் கண்டித்து எதிர்த்திருக்கிறோம் பெண்கள் என்பதால் பார்வை அதிகமாகிறது
அப்படியொரு ஆளுமைதான் திருமதி சுஷ்மாசுவராஜ் ..
..
உமாபாரதி/மம்தாவை போல எடுத்து வீசிவிட்டு வராமல் காத்திருந்து கொத்திக்கொண்டு போகும் புத்திசாலித்தனம் நிறைந்தவர்..இப்போது கூட உடல்நலம் பாதிக்கபட்டிருக்கிற சூழலில் கூட கிருஷ்ணனின் கீதையை பாடமாக்கவேண்டுமென்று அவர் கோரிக்கை வைக்கிறார்.. அவரின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்துவிட்டு எழுதுகிறேன்..
தன் உடல்நலபாதிப்பை கூட மறைக்காத அதை மக்களோடு பகிர்ந்துக்கொள்கிற நேர்மை ஜெயலலிதா போன்றோரிடம் எதிர்பார்க்கமுடியாது..
அரசியலில் நிறைய தவறுகளை (லலித்மோடிக்கு பரிந்துரை செய்ததுபோன்ற) எடுத்திருந்தாலும் அதை நாமெல்லாம் எதிர்த்திருந்தாலும் இவரை போன்றவர்கள் எதிர்மறை சிந்தனையாளராயினும் நிச்சயம் தேவை..
..
அரசியலில் பொதுவாழ்வில் பெண்ஆளுமைகள் நிறைய வரவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment