Tuesday, November 29, 2016

என் மாமன் கம்பீரம்

என் மாமன்.. என் இளம்வயதில் பிரம்பிப்பாகவும் கம்பீரமாகவும் வலம் வந்தவர்.. மிடுக்குநடை நேர்த்தியான ஆடை அதிகம் பேசாத அன்பும் கண்டிப்பும் அளவிலா பிரியமும் கொண்டவர்.. mas மாஸ் தாஜூதீன் என்றழைக்கப்பட்ட #மாமாராவுத்தர்_தாஜூதீன் .. மிகசிறந்த ஆன்மீகவாதி.. வருடந்தோறும் ஊரில் நடக்ரகும் முஹையத்தீன் ஆண்டவர்கள் கந்தூரிவிழாவிற்கு வந்துவிடுவார்.. ஊர் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்வார்.. மலேசியாவிலிருந்து திரும்பி ஊரோடு தங்கியபிறகு பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளராக இருந்தார் அவர் மரணம் வரை செயலாளராகவே இருந்து கடைசி நிமிடம் வரை பொதுவாழ்வில் தூய்மையோடும் நேர்மையோடு செயலாற்றிவிட்டு சென்றுவிட்டார்.. .. நிறைய விடயங்களில் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய ஆசான்.. மனதில்பட்டதை சரியோ தவறோ ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ தனக்கு சரியென நினைத்ததை தைரியமாக சொல்லிவிடுவார் ஒவ்வொருமுறையும் அவர் சொல்வதுதான் சரியாக இருக்கும்.. ஒருமுறை என் மூத்த சகோதரியை திட்டிவிட்டேன் சிறிதுநேரத்திற்கு மாமனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார்.. என்னமாமு என்பதற்குள் சும்மா பார்த்திட்டு போகலாமென்று வந்தேன் இவளும் வரேன்னு சொன்னா என்றார்.. அவ்வளவுதான் எதை எப்படி செய்யவேண்டும் சொல்லவேண்டும் என்ற நெளிவு தெரிந்தவர்.. அடுத்தவர் உரிமையில் தலையிடாமல் அதேவேளை நம் தவறை நாம் உணரசெய்துவிடுவார்.. .. எதையும் அளவோடு செய்யவேண்டும்.. அதைநேரம் சரியான நேரத்தில் சரியாதை சரியான அளவில் செய்யவேண்டும்.. அடுத்தவருக்கு ஈவதை யாரும் அறியாமல் செய்யவேண்டும் .. அடுத்தவரின் சொந்தவிடயங்களில் நாம் சம்பந்கமில்லாமல் தலையிட கூடாது என்ற நெறியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகாட்டிவிட்டு போன பெரியமனிதர்.. Straightforward யாரைக்கும் முகம் நோக்கி வளைந்தில்லை.. .. என் தாயாரின் குடும்பத்தில் எல்லோருமே பூ போல போய்விடுவார்கள் என் தாயாரும் சரி என்தாயாரின் சகோதரிகள் இதோ இப்போது மாமன்.. ஒருநொடியில் யாருக்கும் சிரமம் தராமல் .. போய்விட்டார் போய் வா மாமனே.. .. நீ.. எனது கம்பீரம் .. #you_are_my_Majestically_magnificence… .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment