Wednesday, November 23, 2016

ஓடியொளிகிறீர்..

ஏன் ஓடியொளிகிறார்.. இதுவரை எநித பிரதமரும் தாங்கள் அறிவித்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தபோதும் அதற்கு விளக்கம் தர அஞ்சி ஒளிந்தோடியதில்லை.. அவசரகதியில் ஒருதிட்டத்தை அறிவித்துவிட்டு அதை சரிச்செய்ய வக்கில்லாமல்.. இதுவரை சிலர் மட்டுமே மொத்தமாக கமிஷன் அடிப்படையில் கருப்புபண கையிருப்பை மாற்றிவிட்டதாக வரும் குற்றசாட்டிற்கு மறுக்கமுடியாமல்.. அமிர்ஷா 37% கமிஷனில் பணத்தை மாற்றி தந்தார் என அவரது கட்சியை சேர்ந்தவரே பிரதமருக்கு கடிதம் எழுதியும் தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக சொல்லியும் நடவடிக்கையில்லை.. இதற்கெல்லாம் பதில் இல்லை 80% பேர் ஆதரவு என்ற பச்சை பொய்யை சொல்லமுடிகிறது.. அதிகம் கூவினால் உண்மையாகிவிடாது.. .. நாடாளுமன்றத்தில் அதிமுக சிவசேனா,உட்பட எல்லாகட்சிகளும் எதிர்க்கின்றன ..இவர்கள் நாட்டை Cashless Economy பணமில்லா பொருளாதாரம் நோக்கி நகர்த்துவதாக தம்மட்டம் அடிக்கிறார்கள்.. எதையும் Debit card /credit card கடன் அட்டை / பற்று அட்டை யில் வாழ சொல்கிறார்கள்.. வளர்ந்த நாடுகள் கூட இன்னமும் முழுமையடையாத Cashless Economy இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை என்பதை மிகபிரபலமான பொருளாதார வல்லுநர்கள் சுட்டிகாட்டியும் அதற்கெல்லாம் பதில் இல்லை.. கடன் அட்டை கலாச்சாரத்தால் அமெரிக்கர்கள் கடன்காரர்கள் ஆனார்கள்.. அதிக வரிவசூல் செய்யபடும் 39% அமெரிக்காவில் கூட இன்னமும் முழுமையடையாத திட்டம் இது .. .. சிறு குறு தொழில் முனைவோர்.. சிறியளவில் வியாபாரம் செய்வோர் கடுமையாக பாதிக்கபடுகிறார்கள் வரும் காலங்களில் இவர்கள் பாடு திண்டாட்டம் ஆகும்.. மோடியை ஆதரிப்பவர்கள் சொல்லும் ஒரேயொரு விடயம் வரிஏய்ப்பை தடுக்கத்தான்.. வரியை ஏய்ப்பவன் சிறியளவில் கடை நடத்துபவன் அல்ல.. இதுவரை எந்த வட்டிக்கடைக்காரனும் வரி செலுத்தியதில்லை..ஏன் குறிப்பாக குஜராத்திகள் அதிகளவில் பணம் புழக்கத்தை செய்கிறார்கள் என சொல்லும் அரசு வரி செலுத்துவதில் பின்னில் இருப்பதை சொல்லமறுக்கிறது.. .. வெளிநாடுகளுக்கு வரும் இந்திய ரூபாய்கள் குறிப்பிட்ட அளவு மட்டும் முறையாகவும் ஒரு கணிசமான அளவு கருப்பாகவும் வருகிறது..அதை செய்கிற Exchange ஆசாமிகள்... மோடியின் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இதெல்லாம் கட்டுபடுத்த அல்லது ஒழிக்க மோடி என்றில்லை யாராலும் முடியாது ஏழைகளில் சுருக்குப்பையை வேண்டுமானால் சோதனையிடலாம்.. வங்கி ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வாடிக்கையாளர்களோடு தகாத வார்த்தை பிரயோகங்கள் நடக்கிறது இதுவரை 12 பேர் வங்கி ஊழியர்கள் மன அழுத்தத்தால் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவையெல்லாம் அறிவுகெட்ட அவசரத்தனத்தால் ஆழ்ந்து யோசிக்காமல் எடுத்த முடிவால் வந்தது .. .. வங்கிகளுக்கு அனுப்ப பணமில்லை ஆனால் பிக் பஜாரில் big bazaar ல் ₹2000 கிடைக்கும் கிஷோரிடமிருந்து ..Kishore Biyani நாங்கள் ஏன் வாங்க வேண்டும்.. இந்தியாவை குறிப்பிட்ட நான்கைந்து பேருக்கு எழுதி கொடுத்தாயிற்றா.. அம்பானி,அதானி, பியானி... பதில் வேண்டும் மோடி.. ஓடியொளியாதீர்.. .. ஒன்றுதிரள்வோம் மோடிக்கெதிரான மனிதசங்கிலியில்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment