Tuesday, November 15, 2016
டீக்கடை.. கடுப்பத்தில் தேநீர்..
ஏழைகள் குடிக்கும் ஸ்டாரங் டீ...
பிரதமர் மோடி..
கடுப்பத்தில் தேநீர் ஏழைகளுக்கு கொடுத்தே பழக்கப்பட்டவர் அதனால் தான் ஏழைகளின் இன்னல்கள் தெரியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் எனறு அறிவித்துவிட்டு ..இப்போது சப்பை கட்டுகிறார்.. பிபிசி செய்தி நிறுவனம் இதுபோன்று எந்தகாலத்திலும் இந்திய மக்கள் அவதியுற்றதில்லை என செய்தி வெளியிடுகிறது..
உலகவங்கியின் முன்னாள் பொருளாதார முதன்மை ஆலோசகர் கௌசிக் பாஸூ Collateral damage (இணை சேதம்) என்கிறார்..move could hurt india's economy
நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தை காயபடுத்தும்.. என்கிறார்..
..
மோடிக்கு வாய்சவடால் புதிதல்ல.. ஆரம்பம் முதலே இதைதான் செய்துவருகிறார்.. பொய் மிக சாதாரணமாக வருகிறது..திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடாது.. தவறென்று தெரிந்த பிறகும் அதிலேயே நிற்பது சருக்கிவிடும்..
ஏழைகள் விரும்புகிறார்கள் என்கிறார்..
People are suffering from the poor and middle class. Are not rich.. அவதிபடுவது ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்தான் பணக்காரர்கள் அல்ல..
நேற்றைய தினம் தொலைகாட்சி ஒன்றில் பேசியவர் காய்கறி வாங்க முடியவில்லை என்ற குற்றசாட்டிற்கு ரிலையன்ஸ் ல்டோர்களில் வாங்க வேண்டியதுதானே என்கிறார் பிஜேபியை சேர்ந்த #சமூகஆர்வலர்..
இதுதான் இவர்களின் பார்வை..
சிறுதொழில்கள் .. அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் நிலைதான் மிகவும் பரிதாபகரமானது..இதையெல்லாம் சொன்னால் தேசத்தின் மீது அக்கறைய்ல்லை என்ற அலப்பறை வேறு .. மக்கள் வரிப்பணத்தில் வாழ்ந்துக்கொண்டு..சலுகைகளை அனுபவிக்கிறவர்கள் ஏன் இதை பொறுத்துக்கொள்ளகூடாதென்ற கேள்வி வேறு..
வெறும் ₹7000 வருட செலவில் IIT ல் படிச்சிட்டு அமெரிக்காவில செட்டில் ஆன கூட்டம் இந்த வந்து தேசபக்தியை மக்கள் வரிப்பணத்தில சலுகையை பற்றி பாடம் நடத்துகிறது..
..
மக்கள் பயத்தில் சேமித்த பணத்தையெல்லாம் வங்கியில் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.. இதெல்லாம் கள்ளநோட்டுக்கள் அல்ல.. நல்ல பணம் வைத்திருப்பவன் நேர்மையாக க்யூவில் நின்று பணத்தை செலுத்தி இந்த நெறிகெட்ட அரசை கையாலாகாத அரசை மனதிற்குள் திட்ட்க்கொண்டே செல்கிறான்.. கள்ளபணத்தையும் கருப்புபணத்தையும்தான் உண்டியல்களிலும், ஆற்றிலுமே கொண்டுபோய் கொட்டுகிறான்..
அல்லது மொத்தமாக மாற்றிக்கொண்டு போய்விட்டான்
..
மோடியை எதிர்க்கிறவர்கள் ஏதோ தேசநலனிலே அக்கறையில்லாதவர்கள் போல கட்டமைக்கபடுகிறது
பிஜேபியை தவிர பிற கட்சிகள் காங் உட்பட ஊழல்கட்சியைபோலவும் போலி மதசார்பு என குரல் ஒலிக்கிறது.. ஏதோ பிஜேபி ஊழலில் ஈடுபடாததைபோல .. வியாபம் ஒன்றே போதும் இவர்கள் முகத்திரையை கிழிக்க ஆனாலும் ஊடகங்கள் அமைதி காப்பது.. இந்த சந்தர்பத்தை விட்டால் குறிப்பாக
உயர்பதவிகளில் #இவர்களால் அமரமுடியாமல் போகும்
என்பதாலேயே மௌனம் காக்கிறார்கள்..
..
120 கோடி பேரில் 16 பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்கிறார் எஸ்வி.சேகர்.. அதில் யாரும் பார்பான் இல்லையே அதனால் அவர் கவலைக்கொள்ளவில்லை..
இது ஒன்றே போதும் மோடியை தூக்கி கொண்டாடுபவர்களின் எண்ணத்தை வெளிகாட்ட..
மோடி இப்போது ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை நடத்தட்டும்.. மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என தெரியும்.. அலங்கோல ஆட்சி..
..
மோடியின்_துக்ளக்தர்பார்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment