Saturday, November 5, 2016
நிறம்மாறிய காம்ரேட்
அதிமுக கேட்டுக்கொண்டால் மூன்று தொகுதிகளிலும் மநகூ ஆதரிக்கும்..
காம்ரேட் முத்தரசன்..
முன்பெல்லாம் பொதுவுடமை கட்சி தேர்தலை ஜனநாயகத்தின் அளவுகோலாக கொண்டு நடந்தது.. சில ஆயிரங்கள் கூட வாக்குகள் இல்லாத தொகுதிகளில் கூட ஆளும்கட்சியை எதிர்த்து களம்கண்டிருக்கிறது.. அதெல்லாம் தோழர் ராமமூர்த்தி நல்லகண்ணு காலத்தோடு முடிந்துபோன கதையானது..
கம்யூனிஸ்ட் மீதான எனது மரியாதை தா.பாவின் வரவிற்கு பிறகு மங்கிப்போனது ஒரு சிலர் தோழர்கள் இன்றைக்கும் வட்டாரம் சார்ந்த விடயங்களில் ஒழுங்காக நேர்மையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்..ஆனால் அவர்களை கம்யூனிஸ்ட் பார்ட்டியே அங்கீகரிப்பதில்லை.. ஆனால் அவர்களின் பணி தொடர்ந்துக்கொண்டுதானிருக்கிறது..
..
மநகூ வின் நோக்கத்தை இப்போது முழுமையாக மக்கள் உணர்ந்துக்கொண்டிருப்பார்கள்.. இவர்கள் கட்சி நடத்தவரவில்லை மாறாக கம்பெனி நடத்துகிறார்கள்.. இவர்களை மக்கள் புறக்கணித்து நீண்ட நாட்களாகிவிட்டது.. தமிழகத்தின் இவர்களின் வளர்ச்சியில் குறிப்பிட்டளவு பங்கு கலைஞரையே சாரும் தேவைக்கதிகமாக தூக்கிவைத்து கொண்டாடியதும் அவர்களுக்கு அதிமுக்கியத்துவம் தந்ததும் சரியானதல்ல... இந்த விடயத்தில் ஜெயலலிதாதான் சரி.. மூக்கறுத்து அவர்களின் நிலையை உணரவைத்து கடைசியில் தரகர் அளவிற்கு கொண்டுவந்து சில கட்சிகளுக்கு சின்னமே கிடைக்கமுடியாமல் போக காரணமாக இருந்தார்.. அவர்களும் வளர்ப்பு நாயைப்போல வாலாட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..
கம்யூனிஸத்திலிருந்து காசு பார்க்க கற்றுகொடுத்த #குருவிற்கு விசுவாசமாக இவர்கள் வாலாட்டுகிறார்கள்.
..
தமிழகத்தில் ஒருசில தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி திருப்பூர் என சிலதொகுதிகளில் கொஞ்சம் செல்வாக்காக இருந்தவர்கள் இராமகிருஷ்ணன் தா.பா வரவிற்கு பிறகு முழுவதுமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறார்கள்..இவர்களின் எதிர்காலம் குறிப்பாக கம்யூனிஸத்தின் எதிர்காலம் தமிழகத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி..
வருத்தம் மேலிட்டாலும் அதுதான் உண்மை..
#பொத்தல்காசு_செல்லாமல்போய்காலம்குறையஆகிவிட்டது.
..
#காம்ரேட்டுகளில்_கருப்பாடுகள்..
The black sheep of the Communists..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment