Friday, November 25, 2016

விவரங்கெட்ட..

நேற்றைய தினம் திரு.மன்மோகன்சிங் நாடாளுமன்ற உரையை தொடர்ந்து நாடெங்கும் மக்களிடம் மாற்றம் வர தொடங்கியிருக்கிறது.. முன்பு சரியென்று பேசியவர்கள் இப்போது தவறான செயலாக்கம் என பேச தொடங்கியிருக்கிறார்கள்.. இந்நிலையில் ஜெட்லி 2ஜி ஊழல் இல்லையா என கேட்டு திசை திருப்பபார்க்கிறார்.. முதலில் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும் ஜெட்லி இப்போது அதிகாரத்தில் இருக்கிற நீங்கள் ஏன் வழக்கை விரைந்து முடிக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறீர்.. சிபிஐ தொடர்ந்து காலஅவகாசம் கேட்கிறதே தவிர குற்றம் சாட்டபட்டவர்கள் தைரியமாக வழக்கை சந்திக்கிறார்கள்.. தாங்கள் நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடன் சிஏஜி அறிக்கையை அரசியலாக்கவேண்டாம் அது ஊழலல்ல இழப்பு என்று பாராளுமன்றத்திலேயே சொன்னீர்கள் ஆனால் அதே இழப்பை 2ஜியில் ஊழல் என்கிறீர்.. ஊழல் என்றே வைத்துக்கொள்வோம் ஏன் சரியான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்கமுடியவில்லை.. சமீபத்திய தங்களின் பேச்சு.. குண்டியை கழுவ சொன்னா அவன் குண்டியில ஒட்டியிருக்கு அதை கழுவசொல்லுங்கற மாதிரியிருக்கு.. .. நாடாளுமன்றத்தில் மோடி ஏன் பேசவேண்டுமென சிலர் பேசுகிறார்கள் மன்மோகன் பேசினாரா என துணை கேள்வி வேறு .. அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேட்டியளித்தார்.. நிதியமைச்சர் இறுதியில் பிரதமரும் விளக்கம் அளித்தார்.. மக்களை ஏற்றுக்கொள்ளாத போது ராசா பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்தித்தார்.. எந்தயொரு பாஜக அமைச்சரும் ஏன் ஜெயலலிதா கூட குற்றசாட்டிற்கு ஆளானபிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்க்கொள்ளவில்லை இதற்கு பின்னால் இருக்கிற ஜாதிய அரசியல் தெரியாமல் இல்லை.. .. கருப்புபணம் ஒழிப்பு என்ற பெயரில் இருக்கிற பணத்தையும் பிடிங்கிக்கொண்டு ஓட்டாண்டியா நிற்கவைத்துவிட்டு சமாதானம் சொல்கிறீர்.. அதுவும் சம்பந்தமே இல்லாத மொழியில்.. புண் புறையோடிபோயிருக்கிறது அதற்கு கீறி சீழ் அகற்றி மருந்திட வேண்டுமே தவிர விரலை அகற்றகூடாது.. வீக்கத்திற்கு விரலை வெட்டின கதையாயிருக்கு #விவரங்கெட்டவன்.. .. நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டும் இதன் பின்னில் உண்மையான அக்கறையிருக்கிறதா அல்லது அதானி அம்பானி.. பியானிகளின் கையிருக்கிறதா என்று... மக்கள் மாளாதுயரில்..அவதியில் .. #சீரழவில்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment