Thursday, November 17, 2016

விவரகேடு

தந்தை தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்துவைக்கிறார் இதில் என்ன தவறு என்கிறார்கள்.. தவறில்லை முறையான கணக்கோடு கூடிய வருமானத்தில் அவர் செய்துவைத்தால்.. யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை.. திரு.ஜனார்த்தன ரெட்டி இல்லத்திருமணத்தில் ₹500 கோடிவரை செலவு செய்யபடுவதாக சொல்லபடுகிறது.. .. கருப்புபண ஒழிப்பு என்றபெயரில் மகளின் திருமணத்திற்கு சிறுகசிறுக சேர்த்து வைத்த பணத்தை நகைவாங்க போனால் எங்கிருந்து வருவாய் வந்தது பான் கார்ட் எங்கே என்று கேட்க சொல்லும் அரசு.. விருந்தில் நடனமாடும் நடனசகோதரிக்கு .. ₹1 கோடி ரூபாய் பணம் என்ற செய்தி .. இவையெல்லாம் எப்படி வந்தது.. பணம் தட்டுபாடோடு மக்கள் அவதியுறும் நிலையில் சிலர் கட்டுகட்டாய் பணத்தை வைத்திருக்கிறார்கள்..செலவுசெய்கிறார்கள் அதுவும் செல்பி எடுத்து சமூகதளங்களில் பதிவுவேறு.. .. ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறப்பினர் பவானி சிங் ₹500₹1000 செல்லாது என அறிவிக்கப்படுவதற்குமுன் அது அதானிக்கும் அம்பானிக்கும் தெரியுமென்கிறார்.. பாரத வங்கி வராத கடனென்று சிலருக்கு கடனை எழுதிதள்ளிவிட்டது..பாமர விவசாயி நதிநீருமின்றி மழையும் பொய்த்துப்போய் நிர்கதியாய் நிற்கும் போது விவசாய கடனை ரத்து செய்ய மனமில்ல.. துள்ளியமான தாக்குதல் என கூறி மக்கள் மீதான கொடூரதாக்குதலை நடத்திவிட்டு தேசநலன் பாதுகாப்புஜ தேசபற்று என வாய்வீச்சில் பேசிக்கொண்டு திரிவது நகைப்பிற்குரியது.. .. நாடாளுமன்றத்தில் இந்த நிலைக்கு காரணமான அரசின் நடவடிக்கையை சத்தமாக எதிர்க்கவேண்டும் எதிர்க்கட்சிகள்.. கருப்புபணம் சாதாரண மக்களிடம் இல்லை கள்ளபணமும் கருப்புபணமும் அதிகமாக புழங்குகிற இடமாக குஜராத் திகழ்கிறது மார்வாடிகளும் குஜராத்தை சேர்ந்த சில்லறை வணிகர்களிடமும் நிறையளவில் கருப்புபணம் வெள்ளையாக மாற்றபட்டிருப்பதாக பிஜேபி எம்எல்ஏ வே சொல்கிறார்.. நாடாளுமன்றத்தில் பிரதமரை காணோம்.. வாக்கெடுப்போடு கூடிய விவாதத்திற்கு அஞ்சிகிறது அரசு.. இரண்டாடுகளாக பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை.. மேடைபேச்சை தவிர விவரம் ஒன்றுமில்லை #விவரகேடு .. பிஜேபி ஆட்களால் ஆடம்பர திருமணம் நடத்த முடிகிறது..கட்டுகட்டாக பணபரிவத்தனை செய்யமுடிகிறது..சாதாரண பொதுஜனம் ₹2000 தான் மாற்றமுடியும் அதுவும் கரும்புள்ளியோடு.. எனது பணத்தை நான் எடுக்க யாரிடம் நான் கேட்கவேண்டும். அவுசரியங்கள் என்பது எல்லோரையும் போல் மதிக்கப்படவேண்டுமென்பதற்காக வரிசையாக சென்று பெறலாமே தவிர அவர் எவ்வளவு எடுக்கிறாரோ அவ்வளவுதான் நானும் எடுக்கவேண்டும் அவ்வளவு தான் செலவு செய்யவேண்டுமென்பது .. சர்வாதிகாரம்.. .. என்பணம் என்உரிமை.. முறையாக சம்பாதித்து சரியாக வரிசெலுத்தியவன் அதை செலவு செய்யவும் உரிமையுண்டு. . என் தனிஉரிமையில் தவையிட அரசிற்கென்றில்லை யாருக்கும் உரிமையில்லை.. மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும்.. நம்மிடம் கிரிடிட்கார்டு இருக்கிறது என்கிற மனபான்மை நாளை நம்மையும் சரிவில் கொண்டுபோய் நிறுத்தும்.. .. #ஆடதெரியாவன்_வாசலைகுறைச்சொல்கிறான்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment