Tuesday, November 29, 2016

ஸ்டாலின் தலைவராகிறார்

தற்போது அரசியலில் விலகி இருக்கிறேன் மு.க.அழகிரி.. காலம் கடந்த ஞானமெனினும் நன்று..இன்று மற்றொரு அறிவிப்பு வருகிறது மெல்ல கசிந்து கட்சியின் அடுத்த தலைவர் ஸ்டாலின் .. முதன்மை செயலர் துரைமுருகன் .. இரண்டுமே சரி.. கையிலுள்ள பிரம்பிற்கு வேலை கொடுக்காவிட்டால் மகன் கூட பகைவன் ஆவான் என்கிறது #பைபிள் ஆம்.. இரண்டுமுறை கலைஞரை சந்தித்ததின் விளைவு அழகிரியின் ஞானோதயம்.. இனியேனும் ஊடகங்கள் அழகிரியை பின்தொடராதிருந்தால் போதும்.. .. முன்பே திரு.ஸ்டாலினிடம் பொறுப்பை தந்திருக்கவேண்டும் இனியும் காலம் கடத்தாமல் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யலாம் அதை தலைவர் செய்தால் அதைவிட பேறு வேறில்லை.. துரைமுருகனின் பேச்சு கலைஞரின் எண்ணவோட்டத்தை பறைசாற்றுகிறதென்றே நினைக்கிறேன் உடல் ஒத்துழைக்காததும் முதுமையும் சுழன்று பணி செய்ய இயலாமல் ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வழிநடத்தலாம் .. திரு.ஸ்டாலின் தற்போது ஏறக்குறைய எல்லா பொறுப்புகளையும் சுமந்து அதைவிட உணர்ந்து செயல்படுகிறார் பக்குவப்பட்ட பேச்சும், அனைவரையும் அரவணைக்கும் செல்லும் பண்பும்,தந்தைப்போல ஓய்வில்லா உழைப்பு கொண்டிருக்கிறார்.. தமிழகம் நம்புகிற விரும்புகிற தலைவராக நிச்சயம் வலம் வருவார்.. ஸ்டாலினுக்கு இடைஞ்சல் உள்ளிருந்தே தவிர வெளியில் இல்லை இப்போது அதுவும் மெல்ல விலகுகிறது எதிர்த்துநின்று வெல்லமுடியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.. இது அழகிரிக்கு மட்டுமல்ல கலைஞரின் (பின்ஜாமின்கள்) வாரிசுகள் என்று வரிந்துகட்டும் எல்லோருக்கும் பொருந்தும்.. ஏனெனில் ஸ்டாலினை இயக்கமும் தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள தொடங்கிய கலைஞரின் மகன் என்பதால்மட்டும் அல்ல..தொடர்ந்து வெற்றி தோல்வி என எல்லாநேரமும் மக்களுக்காக உழைக்கிற இரண்டையும் ஒன்றாக கருதுகிற தொடர்ந்து 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் உழைத்த உழைப்பை மதித்து மக்கள் விரும்புகிற நிலையை அடைத்திருக்கிறார்.. மக்களின் விரும்பமில்லையென்கில் கலைஞரின் மகன் என்றாலும் உயரத்தை எட்டமுடியாதென்பதற்கு அழகிரியே போதும்.. இது #பிறருக்கும் பொருந்தும்.. .. வாருங்கள் வழிநடத்துங்கள் தளபதி அவர்களே.. #வைகறை_வெளுக்கிறது .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment