Monday, November 21, 2016
நக்லி பாபா...
பாபா ராம் தேவ்
யோகா கலையை பயிற்றுவிக்குமே சிறியளவில் தொடங்கி இன்றைக்கு நூடூல்ஸ் வியாபாரம் செய்கிற தொழில் அதிபர்.. அரசு செலவில் Zபிரிவு பாதுகாப்பு பெறுகிற சாமியார்.. இவரது அறக்கட்டளைக்கு 2012 பிறகே அதிகளவில் பணபழக்கம் வந்தது முறையான கணக்கில்லாததால் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது .. அப்போதுதான் இவர் கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பித்தார்..
யோகா பள்ளி என்ற பெயரில் பெரியளவில் பணம் பரிவத்தனைகள் நடைபெறுமிடமாக இவரது அமைப்பு நடைபெற்றதும் அரசின் கவனம் இவர்மீது விழ தொடங்கியவுடன் .. அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் அழைப்பே இல்லாமல் ஆஜராகி .. ஊடகத்தின் பார்வையில் தன்னை தேசஅபிமானியாக காட்டிக்கொள்ள பயன்படுத்தினார்..
..
என்ன திடீரென்று யோகாவிலிருந்து நூடூல்ஸ் பக்கம் போனார் என்பதே சுவாரஸ்யமான விடயம்..
வருமானவரி வழக்கின் போது ஜெயலலிதா வெங்காயம் ஏற்றுமதி செய்து ஒரே மாதத்தில் ஒருகோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக நீதிமன்றத்தில் சொன்னாரே அதே போல பலகோடி பணத்தை வெள்ளையாக்க வியாபாரியாக தன்னை காட்டிக்கொண்டவர்..
இவர்தான் மக்கள் வரிசையில் நின்று செத்தால்தான் என்ன என்கிறார். வரிசை நின்று பணம் மாற்றுபவர்களை எதிர்கட்சிகள் அனுப்பியவர் என்கிறார்..
ராம்தேவை நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கலாம்..
..
இப்போது ராணுவவீரர்களை துணைக்கழைத்து மோடி ரசிகர்கள் கதைக்கிறார்கள்.. பாவம் தோன்றுகிறது.. ராணுவவீரன் ₹1000 திற்கு உடையணியும் போது மோடி ₹10லட்சத்திற்கு அணியலாமா என கேட்காத தேசப்பற்றாளர்கள்..
இவர்களுக்கு ஒரு விசயம் தெரியுமா..
சுதந்திர இந்தியாவில் இதுவரை தோக்கை தூக்கிக்கொண்டு எல்லையில் கடும்குளிரில் நின்ற நிற்கிற ராணுவ வீரர்களில் ஒருவர் கூட பிராமணனோ,குஜராத் மார்வாடி இருந்ததில்லை.. ஆனால் இவர்கள் தேசபக்தியை பற்றி வாய்கிழிய பேசுவார்கள்..
..
இப்போது புதிதாய் கஷ்மீரில் ₹30 லட்சத்தை கைப்பற்றியதாக அதுவும் சிபிஐ கைப்பற்றியதாக புரளியை கிளப்புகிறார்கள்.. பட்டவர்த்தமாக ₹200 கோடி செலவில் திருமணத்தை கேட்காத ஹரி .. கஷ்மீரில் கைப்பற்றியதாக சொல்லிமோடியை புகழ்கிறார்.. சிபிஐக்கு பணத்தை கைப்பற்றும் அதிகாரம் இல்லையென்பது கூட தெரியாத தேசபக்தர்கள்.. இவர்களின் தேசநலன் போலியானது மதவெறியும் உயர்பதவியில் தங்கள் ஆட்கள் மட்டுமே வரவேண்டுமென்கிற ஆசையும் தவிர வேறில்லை இதுதான் இவர்களின் தேசப்பற்றிக்கான அளவுகோல்..
..
பாபா ராம்தேவை சரியான முறையில் விசாரித்தால் அவருக்குள் ஒளிந்திருக்கும் பிரேமானந்தாக்களை வெளியே கொண்டுவரலாம் அதுமட்டுமல்ல கறுப்புபணம் புழக்கத்தின் மைய்யமாக செயல்படும் ஆசிரமங்களை .. கருப்பை வெள்ளையாக்கும் பணமுதலைகளை இனம் காணலாம்..
பாபா என்றால் சாமிகளை குறிக்கும் சொல். இவர் நக்லி ..#போலிசாமியார்..
..
#துறவிகள்_பேராசைகளின்_களஞ்சியம்
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment