Saturday, November 19, 2016

மனிதசங்கிலி

சரியான நேரத்தில் சரியான போராட்டம்.. மக்கள் படும் அவதிகண்டு ஆள்வோரை எதிர்த்து அறவழியில் போராட்டம்.. திமுக அரசியல் இயக்கமாக செயல்பட்டாலும் வாக்கு அரசியலை தாண்டி மக்களின் பிரச்சனைகளை மயப்படுத்தி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதொன்றும் புதிதல்ல.. .. எதிர்க்கட்சிதலைவர் மாண்பிமை தளபதி அவர்கள் பணத்தை மாற்ற தெருவில் நிற்கும் மக்களை சந்திக்கிறார்.. அதிகாரிகளோடு கலந்துரையாடுகிறார்.. திமுக தன் கடமையை சரியாக செய்துக்கொண்டிருக்கிறது.. அல்லல்படும் மக்களின் அவசரதேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் கலங்கி நிற்கும் பொதுஜனத்தை ஆளும் அதிமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை.. அவருக்கு ஏற்படும் இடையூறுகளையெல்லாம் பற்றி கவலைபடாமல் ஒரு அரசு இயங்குவது மகா கேவலம்.. .. 8ந்தேதி திடீரென அறிவித்து கடந்த பத்துநாட்களாக மக்கள் தெருக்களில் வீதிகளில் காத்துகிடக்கும் அவலம் மூத்திரப்பையை சுமந்துக்கொண்டு வரிசை நிற்கும் முதியவர்.. சரியாக திட்டமிடாமல் அவசரகோலத்தில் அள்ளிதெளித்த அலங்கோலமாய் நாடு சந்திசிரிக்கிறது.. இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து உலக பார்வையில் கேவலமான பார்வையை கடந்து நிற்கிறது.. இரண்டாயிரம் தாள் கிடைத்தும் மாற்ற வழியில்லை காய்கறிக்காரர் பால்காரர் என அனைவரிடமும் கடன்பட்டு நிற்கிற அவலம்.. .. சிறந்த பொருளாதார வல்லுநர்கள்/நிபுணர்கள் மோடியின் நடவடிக்கையை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள் பல்வேறு ஏடுகள் இப்போதுதான் கண்விழித்து தவறை சரிச்செய்ய காலஅவகாசம் தரவேண்டுமென சொல்ல தொடங்கியிருக்கிறது..இந்தியாவில் மக்களிடம் தான் கருப்புபணம் இருப்பதை போன்ற தோன்றத்தை இந்த நடவடிக்கை காட்டுகிறது.. உண்மையில் பணம்படைத்தவர்கள் எப்போதோ மாற்றிவிட்டார்கள்.. இந்தியளவில் குஜராத்தில் தான் அதிகளவு பணமாற்றம் நடந்திருப்பதாக செய்திகள் வரதொடங்கியிருக்கின்றன.. ஏழைகளிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் கணக்கில் வராத பணங்கள் மாற்றப்பட்டு வெள்ளையாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திவர தொடங்கியிருக்கிறது.. . .. பிற மாநிலங்களில் அரசும் ஆள்வோரும் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்..கேரளா போன்ற மாநிலங்களில் முதல்வரே தெருவில் இறங்கி போராடுகிறார். தமிழகத்தில் நடக்கும் #கள்ளஆட்சியில் யார் ஆள்கிறார்கள் என்றே தெரியாத சூழலில் பிரதான மக்கள் இயக்கமான திமுக பிரச்சனையை கையிலெடுத்து போராட்டத்தை அறிவித்திருக்கிறது.. இதை அனைத்துமக்களும் இணைந்து ஆதரித்து பங்களித்து கடமையாற்ற முன்வரவேண்டும்.. .. உச்சநீதிமன்றமே இந்த நடவடிக்கையை கண்டித்தும் மக்கள் புரட்சி ஏற்படுமென்று முன்னறிவிப்பும் செய்திருக்கிறது.. சரியான நேரத்தில் திமுகவினர் நடத்தும் போராட்டத்தைஆதரிப்போம்.. .. இனி #நமக்குநாமே.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment