Tuesday, November 22, 2016
தஞ்சையின் பாசமகள்..
செல்வி.அஞ்சுகம் பூபதி..
அரசியலில் தோல்விகள் ஒன்றும் பெரிய விடயமல்ல.. ஜனநாயக அமைப்பில் தேர்தல் அரசியலில் மாபெரும் தலைவர்கள் கூட தோற்றுப்போயிருக்கிறார்கள் ஆனால் சரித்திரம் அவர்களை எப்போதும் கொண்டாடியிருக்கிறது.. மீண்டும் வெற்றியை தந்தும் இருக்கிறார்கள்..
மிகவும் எதிர்பார்த்த ,
பொதுவான சிந்தனையுடையோர் அரசியல்சாராதவர் .. அதிகம் விரும்பிய வேட்பாளர் தாங்கள்.. மக்களின் மனமாற்றம் பணம் அதிகாரம் போன்றவற்றால் சிறிது திசைதிருப்பபட்டிருக்கிறது தங்களின் வெற்றி.. அவ்வளவுதான்..
..
தோல்விகள் தான் நம்மை சரியான பாதை திட்டமிட மீண்டும் தவறிவிடாமல் காக்க சிறந்த பயிற்சியை தரும்.. அரசியலை அறிந்துக்கொள்ள, உள் கட்சி அரசியலை எதிர்க்கொள்ள இந்த தோல்வி பயன்படும்.. தங்கள் தந்தை பூபதி அடிக்கடி சொல்லும் வாசகம்.. கலைஞருக்கு தெரியும் .. ஆம்
கட்சிக்காக கலைஞருக்காக உழைக்கிறவர்களுக்கு வெற்றி தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது ..
அவர்கள் கட்சி மற்றும் சமூகப்பணி தொய்வு ஏற்படாது..
..
ஒன்று தெரியுமா.. கட்சிகளை கடந்து அனைவரும் தங்களின் வெற்றியை எதிர்பார்த்தார்கள்..இந்தியளவில் பேசப்பட்டீர்கள்
இது மிகபெரிய வெற்றியை வருங்காலத்தில் தரும்..
இடைத்தேர்தலின் மக்களின் மனவோட்டம் அதிகார மையத்தின் அழுத்தம் அதிகளவில் பணபுழக்கம் அி்முகவிற்கு வெற்றியை தந்திருக்கிறது.. திரு.ஸ்டாலின் சொன்னதைப்போல இப்போது வென்றிருக்கலாம் மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்திக்கும்.. அப்போது மிகப்பெரியளவில் பேசபடுவீர்.. உயரத்தை தொடுவீர்..
..
கட்சிப்பணிகளிலும் தொடர்ந்து செய்துவந்த சமூகபணியிலும் அதிக கவனம் செலுத்துங்கள் ..
தந்தை பூபதியைபோல வெள்ளைமனத்தோடு
வலம் வருக.. வாழ்த்துக்கள் அஞ்சுகம்..
என்ன வாழ்த்து சொல்கிறானே என எண்ணுகிறீரா..
வரும் காலம் தங்களுக்கானது..தந்தை தொடாத உயரத்தை நிச்சயம் அடைவீர்..
தளபதி சொன்னதைப்போல மிகபெரிய வெற்றி திமுகவிற்கு காத்திருக்கிறது.. அந்த வெற்றியில் தாங்கள் நிச்சயம் இருப்பீர்..
..
#உதயசூரியனாய்_வலம்வருக...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment