Wednesday, November 9, 2016

50வதுநாள்

#50வதுநாள்... .. ஐம்பது நாளாகிவிட்டது முதவ்வரை பார்த்து .. இருக்கிறார் கண்ணில் தென்படவில்லை..பார்த்ததாக பார்க்கபோனவர்கள் சொல்லவில்லை.. பூரணநலமென்றார் மறுநாள் வேறொரு சேதி சொல்கிறார்.. கண் விழித்து பார்த்தவர் நாட்டுமக்களை நலம் விசாரித்ததாக புரளி கிளம்புகிறார்கள் அப்படியெனில் இதுவரை மயக்கத்திலேயே இருந்திருக்கிறார் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள்.. நாட்டில் நடக்கும் விசயங்கள் முதல்வருக்கு தெரியாமல் .. நடக்கின்றன .. .. யார் ஆட்டுவைக்கிறார்கள் என ஊடகங்களோ அல்லது சம்பந்தபட்டவர்களோ சொல்வதில்லை .. ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகிறது திரு.ஸ்டாலின் சொன்னதைப்போல காணொளி ஆட்சி நடத்தியவர்கள் காணாமல் ஆட்சி நடத்துகிறார்கள்.. மருத்துமனையிலிருந்து தேர்தல் வியூகம் வகுக்கிறார் என்றெல்லாம் சொன்னது பொய் முதல்வர் அனுமதியோடு இலாக்காக்கள் பன்னீருக்கு கொடுக்கப்பட்டதென்பது பொய்.. தண்ணீர் கேட்டார் .. கதைசொன்னார் என்ற கதைவிட்டவர்கள் எங்கே கண் விழித்து தமிழக மக்கள் எப்படியிருக்கிறார்கள் என்றாராம்.. நெய்வடிகிறது கதையாக.. .. ஆட்சி நடக்கிறது ஆள்பவர் யாரென்றே தெரியவில்லை சில சக்திகள் பின்னின்று இயக்குவது ஆபத்தானது நாளை நடக்கும் சீரழிவுகளுக்கு பொறுப்பேற்காமல் தப்பித்துக்கொள்வார்கள்.. ஜெயலலிதா முகத்தை காட்டாமல் அல்லது அவர் பேசி ஏதேனும் செய்தியை நாட்டுமக்களுக்கு சொல்லாமல் இவர்களாக ஆளுக்கொரு கருத்தை பேசுவது கேலிகூத்து மட்டுமல்ல ஜனநாயக விரோதம்.. .. கண்விழித்து கட்டைவிரல் மசியைப்பற்றி கேட்டார் என்றால் கூட நியாயமிருக்கும் மக்களைப்பற்றி விசாரித்தாராம்.. வரவர காமெடி செய்ய தொடங்கிவிட்டார்கள்..முதலில் முதல்வரை காட்டுங்கள்.. மற்றதெல்லாம் பிறகு பார்ப்போம் .. #நடிகையின்நாடகம்எப்போதுமுடியும்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment