Sunday, November 20, 2016

ஜன்னல்வழியே கள்ளநோட்டு

தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறது இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை.. முட்டாள்களின் செயலால் அடிதளமக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினரின் இயல்பும் பறிப்போனது.. சரியாக திட்டமிடாத எந்த ஒரு செயலும் மிகப்பெரிய விளைவுகளை தரும் என்பதற்கு இன்றைய இந்தியா சாட்சியாக நிற்கிறது.. .. மிகச்சிறந்த பொருளாதார நிபுணரை வேண்டாமென்று வைத்தது எவ்வளவு பெரிய தவறு ..உலக நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்டபோதும் இந்தியாவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தடுத்துநிறுத்தியவர் திரு.மன்மோகன் சிங்.. திரு.ப.சிதம்பரம் சில உண்மைகளை போட்டுடைத்திருக்கிறார்.. கருப்பு பண ஒழிப்பென்ற பெயரில் இவர்கள் திட்டமிடாது செய்த அவசர அறிவிப்பு எவ்வளவு பாதிக்கும் என்றும் புதிய நோட்டுக்கள் அச்சிடவே ஆறு மாதங்களுக்கு மேல் ஆகுமென்றும்.. நாட்டில் விவசாயம் சிறு குறு தொழில் முடங்கும் என்று விலாவாரியாக பட்டியலிட்டிருக்கிறார். .0028 % கருப்புபணத்தை ஒழிப்பதாக கூறி இன்றைக்கு மக்கள் கையில் செலவிற்கு வைத்திருந்த 20 லட்சம் கோடி வங்கிகள் வரவாகியிருக்கிறது அதற்கு மாற்றாக அதில் பகுதி பணம் கூட புதிதாக அச்சிடபடவில்லை அச்சிடப்பட்ட புதிய நோட்டுகளில் சில குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் மொத்தமாக கொண்டுபோய்விட்டார்கள்.. அதை பாஜக எம்எல்ஏவே, அதை வீடியோடு எடுத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.. .. முதலில் ₹4000 என்று சொல்லிவிட்டு₹2000 என்றாக்கி திருமணத்திற்கு ₹2 லட்சம் என்று ஆசைவார்த்தையை பேசி பிறகு அதுவும் இல்லை கேட்டால் வங்கியில் பணமில்லை.. ஆனால் ஓட்டுக்கு ₹2000 கொடுக்க அதிமுககாரனிடம் புதிய நோட்டுக்கள் இருக்கிறது தஞ்சை முழுவதும் ₹2000 நோட்டு சர்வசாதாரணமாக புழங்குகிறது.. அதாவது ஒருசிலர் நோட்டை மாற்றிக்கொள்ள முடிகிறது.. போக்குவரத்தில் வந்த சில்லறைக்கு பதிலாக புதிய ₹1000 ₹500 செல்லாதென்று அறிவித்த நோட்டுக்கள் வங்கியில் செலுத்தப்பட்டிருக்கிறது.. நாடுமுழுவதும் ஒரு சிலர் சர்வசாதாரணமாக எப்போதும் போல் பணத்தோடு வலம் வருகிறார்கள் சாமான்யன் கடனுக்கு பொருள் கிடைக்கிறதா மளிகைப்பொருள் வாங்கமுடியுமா என தவிக்கிறான்.. .. அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் தங்களுக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி #ஜன்னல்வழியே பணத்தை பெற முடிகிறது .. நடுத்தரவர்க்கத்தினரிடம் காய்கறி விற்பவரிடமும் பால்விற்பவரிடமும் கேனத்தனமாய் சிரித்து வைத்து கடன் சொல்லவேண்டியிருக்கு.. இன்னமும் சிலகாலமாகும்.. சகஜநிலை திரும்ப.. முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தவறான நடவடிக்கை என்கிறார்.. எமர்ஜென்சியின் போது காமராஜர் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது #தேசம்போச்சு.. காவிகளின் கையில் சிக்கி தவிக்கிறது நாடு.. #இதுதான்_புதியஇந்தியா.. .. #சின்னபுள்ளவெள்ளாமை .. #மனிதசங்கிலி_அனைவரும்பங்கேற்போம்

No comments:

Post a Comment