Wednesday, November 16, 2016
ஜெயலலிதா...பாவம்
முதல்வர்.. நலம்
நீண்டநாட்கள் நிறைய கேள்விகளோடு சந்தேகங்களோடும் காத்திருந்தேன்.. மயக்கநிலையில் உள்ளவரிடம் கேட்டு என்ன பயன் என்பதால் மௌனமாய் கடந்து சென்றேன்..
திருமதி விசாலாட்சியின் மரணம் கேட்டு தொலைபேசியில் இரங்கலை தெரிவித்தவுடன் பூரண நலமென எண்ணி.. சிறிதாய் கதைக்கிறேன் .. களைத்துப்போயிருப்பீர்.. மேடம் ஜெயலலிதா
ஓய்வறியா ஓய்வே..
..
நாடு அல்லோல படுகிறது.. நீங்கள் அரைமயக்கத்திலிருந்தபோதே உதய் மின் திட்டத்தில்
தமிழகம் சேர்ந்துவிட்டது கட்டைவிரலை உருட்டி தேர்தல்படிவம் வரை மிக நேர்த்தியாக அரங்கேறிவிட்டது.. என்ன நடந்தாலும் பொம்மையாய் பன்னீர் பார்த்துக்கொள்வார்.. மருத்துவ நுழைவுதேர்வை எதிர்த்தீர் இனி இந்த வருடம் முதல் நுழைவுதேர்வாம்.. CBSE ல் படித்தவனும் நாட்டுப்புறத்தில் படித்தவனும் ஒரே நேர்கோட்டில்.. இனி ஏழைகளில் தகுதியிருந்தும் வாய்ப்பில்லை.. என்ற நிலை வரும்..
..
இத்தனை மயக்கத்திலும் இடைத்தேர்தலில் வாக்களிக்க சொல்லும் அரசியல் பிடித்திருக்கிறது..எவன் செத்தாலும் எனக்கு தேவை சோறு ..அவ்வளவுதான்.. உண்மையில் தாங்கள் ஆளவில்லை மாறாக மயக்கத்தில் ஆழ்த்தி யாரோ ஆள்கிறார்கள் என எங்களின் சிற்றறிவுக்கு படுகிறது..ஏனெனில் இதுவரை தாங்கள் வெளியிட்ட எந்த அறிக்கையிலும் கருணாநிதியை திட்டவே இல்லை இதிலிருந்தே யாரோ எழுதி உங்கள் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்..
..
ஐம்பது தினங்களில் அத்தனையும் மாறிபோய்விட்டது..
எதிரிகள் பலவீனபட்டிருக்கும் போது நாங்கள் போரிடுவதில்லை/எதிர்ப்பதில்லை.. இன்னும் நிறைய இருக்கிறது ஆனால் நீர்
களைத்துப்போய் இருப்பீர்.. கடைசியாக ..
மறுபிறவி எடுத்ததாக சொல்கிறீர்.. இந்துமதத்தின் மீது அதீதநம்பிக்கை கொண்டவர் நீங்கள்... #பாவம் செய்த ஆத்மாவிற்குதான் மறுபிறவி என்கிறது இந்து மதம்..
பாவங்கள் மன்னிக்கப்படட்டும்
விரைந்து வருக ..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment