Tuesday, November 22, 2016

நவம்பர் 26

திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள் நவம்பர் 26.. பெரியாரின் பிரதான கொள்கையான சாதி ஒழிப்பை வலியுறுத்தி 1957ல் நடத்திய சட்ட எரிப்பு போராட்டம் இந்திய அரசிலமைப்பில் சாதியநிலைப்பாட்டை எதிர்த்த மாபெரும் போராட்டம் அது இந்தியளவில் சாதிக்கெதிரான போராட்டமும் கூட.. இந்தியளவில் முதல்முறையாக சாதீய ஒழிப்பிற்காக பல்லாயிக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைச்சென்றனர்.. மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை தோழர்களுக்கு கிடைத்தது.. மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொல்லியும் .. வாஜ்பாய் போல மன்னிப்பு கடிதமெல்லாம் தந்து விடுதலையாகவில்லை .. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சாதீய மறுப்பு திருமணம் என்ற எண்ணம் எழ காரணமாக அமைந்தது இந்த போராட்டம்.. .. மரணம் என்பது வீரன் தன் லட்சயத்திற்கு கொடுக்கும் விலை என்றார் பெரியார் பெரியாரின் தன் வாழ்நாள் இலட்சியமான சாதி ஒழிப்பிற்காக 18 பேர் உயிரிழந்தனர்.. பட்டுக்கோட்டை இராம மடசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி சிறையிலேயே உயிரிழந்தனர்.. சிறையிலிருந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுக்கப்பட்டபோதும் போராடி அங்கேயே சிலநிமிடம் மரியாதை செலுத்தினர் .. இன்றைக்கும் பீகார் உ.பியை போல சாதீய கோரதாண்டவம் தமிழகத்தில் இல்லாமல் இருக்கிறதென்றால் அதற்கு பெரியாரின் பெருந்தொண்டே காரணம்.. .. இந்த சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை வர்ணம் சொல்லி பிரித்தாளும் ஆரிய சூழ்ச்சிக்கெதிரே முதல்முறையாக ஆணியடித்த நாள்..திராவிட இயக்க வரலாற்றில் மறைக்கமுடியாத மறுக்கமுடியாத சரித்திரத்தை எழுதிய நாள்.. நவம்பர் 26/1957. .. இன்றைக்கு சாதி நெருப்பை சிலர் தூண்டி குளிர்காய நினைத்தாலும் அது பெரியளவில் கண்டுக்கொள்ளாமல் தூண்டுதல் செய்வோரை தனிமைப்படுத்தி கடைசியில் ஒன்றுமில்லாமல் செய்திட முடிகிறதென்றால் அதற்கு #பெரியாரெனும்_அருமருந்தே காரணம்.. .. #சட்டஎரிப்புநாள்_திராவிடர்திருநாள்.. #Historic_day .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment