Wednesday, November 23, 2016
நடிகர்கள்...
₹500₹1000 திரும்ப பெற்றதற்கு ஆதரவாக திரையுலகினர்.. ஆச்சர்யமாக இருக்கிறது..
அதிகம் கருப்பு பணம் புழங்குகிற இடமாக சினிமா இருப்பதை அனைவரும் அறிவர்..காரணம் சினிமாவை தொழிலாக அங்கீகரிக்காமல் கேளிக்கையாகவே அரசு வைத்திருப்பதால் அது சார்ந்த பிற தொழில்களில் எவ்வளவு முதலீடு செய்யபடுகிறதென்றே தெரியாது.. நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்ற வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது முன்பு மார்ட்ன் தியேட்டர்ஸ் காலத்தில் நடிகர்களுக்கு தொழில்நுட்பவல்லுநர்களுக்கு அப்போது எக்ஸ்ட்ரா என்றழைக்கப்பட்டு இப்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போன்றவர்களுக்கு மாத சம்பளம் அல்லது தினக்கூலியை வரையறுத்து அதை பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கும் அதாவது ஒப்பந்த பத்திரம் வழக்கம் இருந்தது.. எம்ஜிஆர் கூட மந்திரிக்குமாரிக்கு மாதம் ₹150 சம்பளத்தில் ஆறுமாதம் நடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டார்.. அந்தபடத்தில் தாவகட்டையில் பள்ளம் இருப்பதால் மார்டன் முதலாளி சுந்தரம் அவர்கள் எம்ஜிஆரை அந்த வேடத்திற்கு நிராகரித்தார் கதைவசனம் எழுதிய கலைஞர்தான் சிறிதாக தாடி ஒட்டிக்கொள்ளலாம் எனச்சொல்லி முதலாளியை வற்புறுத்தி சேர்த்துவிட்டார் இதை எம்ஜிஆரே அன்றைக்கு கருணாநிதி மட்டும் பிடிவாதம் செய்யவில்லையென்று சொன்னால் நான் திரையுலகிற்கே வந்திருக்கமுடியாது என்றுசொன்னார்....
..
விசயத்திற்கு வருவோம்..
முறையான வரையறுக்கப்பட்ட வருவாய் இல்லை ஆனாலும் பெறுகிற சம்பளத்தை சரியாக கணக்கில் கொண்டுவருவதில்லையென்பதுதான்நிஜம்..
தமிழில் பேர்வைத்தால் வரிவிலக்கு என்ற ஒன்றைவைத்துக்கொண்டு இவர்கள் நடத்தும் வரிஏய்ப்பு எவ்வளவு தெரியுமா.. ₹60 அச்சிட்ட சினிமா டிக்கெட்டை முதல்நாளுக்கு ₹300 ₹400 என்று விற்கிறார்கள் இதையெல்லாம் யாரும் எந்த அரசும் கண்டுக்கொள்வதில்லை.. கேளிக்கைவரிதான் ரத்தே தவிர சினிமா தயாரிப்பாளர் வரும் வரிமானத்திற்கு வருமானவரி செலுத்தவேண்டும்.எல்லோரும் நஷ்ட கணக்கைாதான் காட்டுகிறார்கள்.. அல்லது குறைவாகதான் காட்டுகிறார்கள்..
ஏனெனில் ஒழுங்காக தொழில்முறையில் பணபரிவர்த்தனை நடப்பதில்லை.. அதனால் எவ்வளவு வசூல் என்றெல்லாம் வருமானவரித்துறையால் கணக்கிட முடியாது
சினிமா டிக்கட்டில் அச்சிடப்பட்ட ரூபாய்க்கு மட்டுமே
வரிசெலுத்தபடும். .. சினிமா சினிமா தியேட்டர்களில் சம்பந்தமே இல்லாமல் கள்ள டிக்கெட் கூட அச்சிடுகிறார்கள்.. கருப்பு பண நடமாட்டம் அதிகம் நடக்கும் துறையை சார்ந்தவர்கள் ஏதோ தங்களை தூய்மையானவர்களாக காட்டிக்கொள்ள போடும் வேடம் இது..
..
திரு.ரஜினி தொடங்கி மோகன்லால் வரை...ஒழுங்காக வரிகட்டுகிறவர்கள் என்று நம்புவோம் முறையாக எல்லா வருமானத்திற்குமா என்றால் இல்லை.. இவர்களின் சம்பளம் என்னவென்று இவர்களுக்கே தெரியாது பாவம்..
பாஜக காரர்கள் மோடிக்கு மல்லுகட்டுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம் காரணம் அது அரசியல்.. ஆனால் இந்த சினிமாகாரர்கள் முட்டுக்கொடுக்கிறார்கள் பாருங்கள் அதுதான் படுகேவலமாக இருக்கிறது..
நடிகர்களே...
#நடியுங்கள்_திரையில்மட்டும்...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment