Sunday, November 6, 2016

தமிழக அரசியல் ..

இருபெண்மணிகள்.. எம்ர்ஜென்ஸியை கொண்டுவந்த காங்கிரஸோடு கூட்டணி வைத்துக்கொண்டு பாஜகவை விமர்சிக்ககூடாது தமிழிசை.. நாளுக்கொரு பேச்சு பேசுபவர் வைகோ.. பிரேமலதா.. .. தமிழிசை கூற்று சற்று யோசிக்க வைக்கும்... அவசரநிலை பிரகடனத்தை ஏதோ திமுக ஆதரித்துபோல தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார் Maintenance of Internal Security Act மிசா கலைத்தில் மத்திய அரசை கடுமையாக எதிர்த்தவர் கலைஞர்.. திமுக அதற்காக ஆட்சியை கூட இழக்கவேண்டியிருந்தது .. காமராஜரை கைது செய்யவேண்டுமென்ற திருமதி இந்திராவின் கோரிக்கையை நிராகரித்தார்.. காமராஜரே கவைஞருக்கு ஆதரவளித்த காலமது.. இந்திரா மிசாவை கொண்டுவந்ததற்காக வருந்தி அதற்காக மக்களிடம் மன்னிப்பை கேட்டார் அதற்கு பிறகு திமுக அவரை பின்துணைத்தது.. அப்போது கருத்துசுதந்திரம் நசுக்கப்பட்டபோது ஜெயபிரகாஷ் நாராயணனோடு சேர்ந்து இந்திராவை எதிர்த்தவர் தான் கலைஞர்.. இந்திராவே ஆதரவென்றாலும் எதிர்பென்றாலும் அதை கடுமையாக செய்பவர் கருணாநிதி என்றார்.. இன்றைக்கு ndtv க்கெதிரான தடையை கருத்துச்சுதந்திரத்தின் மீதானதாக்குதலாக கருதவேண்டியிருக்கிறது.. இது எதிர் கருத்தை சொல்பவர்கள் மீது திரும்பும் /எச்சரிக்கும் செயலாக மாறும்.. ஆரம்பத்திலேயே கடும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும்.. அதைதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் கருத்துசுதந்திரத்தை எதிரான செயலாக கருதி எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.. .. தேமுதிகவின் பிரேமலதா வைகோவை பற்றி சொன்ன கருத்தில் உடன்படவேண்டியிருக்கிறது தினம் தினம் தன் கருத்தை கொள்கையை வேகமாக (பச்சோந்தியைவிட) மாற்றிக்கொண்டிருக்கும் வைகோ சிறுதும் நம்பகதன்மையற்றவராக அரசியலில் தரம்தாழ்ந்து போய்விட்டார்.. கருத்துக்களை மாற்றிச்சொல்வதொன்றும் அரசியலில் புதிதல்ல அது நடைமுறை அரசியலில் ஏற்படும் மாறும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில மாறுபட்ட கருத்துக்களை சொல்வதுண்டு.. ஆனால் சட்டென்று மாறும் தன்மையுடையவராகவே வலம்வருகிறார்.. எதிர்மறையான கருத்தைகொண்டவர்களை கூட சட்டென்று உயரத்தில் தூக்கிவைத்து கொண்டாடுவதும் திடீரென தூக்கி வீசி ஏசுவதும் அதிவேக கொள்கை/ கருத்து மாற்றத்தை மாறி மாறி பேசுகிறவர்களை தமிழகம் மட்டுமல்ல இந்திய அரசியலில் எங்கும் கண்டதில்லை.. மோடியின் உருவில் பெரியாரையே பார்த்தவர்.. கலைஞரை,ஜெயலலிதாவை, புகழ்ந்தும் இகழ்ந்தும் இவ்வளவு வேகமாக யாரும் கருத்துச்சொன்னதில்லை.. சேருமிடத்திற்கு தகுந்தாற்ப்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் #அரசியல்பச்சோந்தி.. .. #தகுதியில்லாத_கட்சிதலைமைகள்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment