Friday, November 4, 2016
ஸ்டாலின் தவிர்க்கமுடியாத சக்தி
ஸ்டாலினுக்கு தமிழக அரசியலில் வாய்ப்பு வருவது கடினம் தமிழிசை ..
வார்டு கவுன்சிலருக்கு நின்று கூட வெல்லமுடியாதவர் எதிர்கட்சித்தலைவராக கம்பீரமாய் நிற்கும் தளபதியை பார்த்து சொல்கிறார்..
ஒன்றுமட்டும் புரிகிறது.. திமுகவை எதிர்க்கும் அரசியல் மட்டுமே தமிழகத்தில் தங்களின் நிலைநிறுப்பை கொஞ்சமேனும் காப்பாற்ற பயன்படும்..மற்றொன்று கலைஞரை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென்கிற நிலையிலிருந்து இப்போது தளபதியை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென்கிற உண்மையை உணர்த்துகிறது.. உதிரிகட்சிகளில் செயல்பாடு..
..
திரு.ஸ்டாலின் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக தனிஇடத்தை அடைந்திருக்கிறார்..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை தலைமையேற்க தகுதியானரென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் நம் எதிரிகள்..
..
பாமக தேமுதிக மதிமுக பாஜக என எல்லாமே திமுக எதிர்ப்பு அரசியலை கையிலெடுப்பதிலிருந்தே அவர்கள் நிற்க கூட பலமில்லாமல் பரிதவிப்பது தெளிவாகிறது..
இந்த இடைத்தேர்தலை இவர்கள் புறக்கணிக்க அல்லது வேறொரு கண்ணோடத்தில் அணுகுகிறார்கள்..அதாவது திமுகவின் வெற்றியை தடுத்திட வேண்டும் வாக்கை பிரித்து அல்லது தேர்தலை புறக்கணித்து..
ஆனால் இவர்கள் எண்ணம் ஈடேறாது..
..
முதல்வர் வேட்பாளரென்று தங்களை கூறிக்கொண்ட அன்புமணியோ, விஜயகாந்தோ, சீமானோ, ஏன் இடைத்தேர்தவில் போட்டியிட்டு வெற்றிபெற கூடாது.. குறிப்பாக முதல் நாள் முதல் கையெழுத்து புகழ் அன்புமணி ஏன் நிற்கவில்லை அல்லது கிங் மேக்கரில்லை கிங் என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்ட கேட்பன் நின்றியிருக்கலாமே..
ஆள் கிடைக்காமல் கிடைத்தவன் தலையில் மிளகாய் அரைக்காமல் களம்கண்டிருக்கலாமே.. தமிழிசை கூட கச்சேரி செய்திருக்கலாம் .. போட்டி பலமாக புரபரப்பாக ரசிக்கும்படியாக பொழுதுபோகியிருக்குமே மக்கள் கவலைகளை மறந்து இவர்களின் கூத்தை ரசித்திருக்கலாம்..
..
மதம்,ஜாதி,குறுகிய சிந்தனை இவையெல்லாம் நீண்டநாள் நிலைக்காது அதுவும் தமிழகத்தில்.. இன்றைய சூழல் மிக ஆபத்தான பாசிசத்திற்கு தமிழகத்தில் மறைமுகமாக வழிஅமைத்துதர முயற்சிக்கும் அதிமுகவின் ஆட்சியாளர்கள் பொம்மையை போல நடத்தபடுகிறார்கள்.. ஜெயலலிதா எதிர்த்த மத்தியரசின் திட்டங்களையெல்லாம் சத்தமேயில்லாமல் நிறைவேற்றபடுகிறது.. மறைமுக ஆட்சியை பாஜக நடத்துகிறதோ என சில ஊடகவியலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.. பொம்மையை போல நடத்தபடுவதாக சொல்லபடுகிறது ..
இப்போது திமுகவின் வெற்றியும் வளர்ச்சியும் அதன் பங்கும் அவசியமாகிறது.. காலம் சரியான நபரை தான் தேர்வுசெய்து நம் முன் நிறுத்தியிருக்கிறது தமிழகமக்களின் நம்பிக்கையாய் வருங்கால வழிகாட்டியாய் வழிநடத்துபவராய் திரு.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார்.. இதனை பொறுக்கமுடியாமல் சிலர் ஏதேதோ உளறி ஊளையிடுகிறார்கள்.. இது கோவத்தின்/இயலாமையின் வெளிப்பாடு
இந்த உதிரிகளின் உளறல்களை புறந்தள்ளுவோம்..
..
#காய்த்துகனிந்தமரம்கல்லடிபடதான்செய்யும்
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment