Monday, November 7, 2016

பாமக எனும் கட்சி

பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல பதிவு செய்துக்கொண்ட கட்சி மட்டுமே தேர்தல்ஆணையம்.. .. இந்நிலைக்கு யார் காரணம் .. சமுதாய கட்சியாக தொடங்கப்பட்டு அது மக்கள் முன் எடுபடாமல் போக சாதீய நிழலிலிருந்து இறங்கி வருவதாக காட்டி விடுதலைச்சிறுத்தைகளோடெல்லாம் இணைந்து செயலாற்ற போவதாக சொல்லி ஏறக்குறைய தங்கள் சமுதாய மக்களிடமும் பிற சமுதாய மக்களிடமும் பிறகட்சி தலைவர்களிடமும் இணக்கத்தை காட்டி முகமூடியோடு வலம் வந்தபோது பாமக என்கிற கட்சி. வடமாவட்டங்களில் மக்களிடையே கொஞ்சமேனும் செல்வாக்கை பெற்றிருந்தது சில தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கிற சக்தியாக திகழ்ந்தது..ஆனால் அந்த மயக்கம் பதவிஆசையை விதைத்தது.. .. மக்களிடையே ஜாதிய வெறியை ஊட்டி சிறிய ஒற்றைப்பட்ட சம்பவங்களை முன்னெடுத்து கொலை குடிசை எரிப்பென வளர்க்க முற்பட்டு அந்த சூட்டில் வெற்றிபெற்றவுடன் ஆசை கண்ணை மறைத்தது.. அதே வெறியாட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்திய பிற சமுதாயத்தையும் கூட்டுக்கழைத்தபோதே சொந்த சமுதாயமும் கைவிட்டது அறியாமல் போனார்.. வள்ளலாரும் படையாச்சியும் செய்த சமுதாய தொண்டுகள் குறுகிய சாதீய எல்லைக்குள் இல்லையென்பதை மறந்து போனார்கள்.. .. சிறிய வெற்றி மிகப்பெரிய தலைக்கனத்தை தந்தது தன்பலமறியாமல் ஆடுகிற ஆட்டம் புறந்தள்ளி குழித்தோண்டி புதைத்துவிடுமென அறியாமல் போன செயல் முற்றிலுமாய் கரைத்துக்கொண்டுபோனது.. ஆரம்பம் தொட்டே கொடுக்கும் வாக்கில் உண்மையில்லாதது மக்களிடம் செய்து கொடுத்த வாக்குறுதியை /சத்தியத்தை மறந்து தலைகால் புரியாமல் ஆடிய ஆட்டம் கடைசியில் உள்ளதும் போன கதையானது.. கட்சியின் அங்கீகாரம் போய் நிறைய இடங்களில் கட்டிவச்சகாசும்(டெபாசிட்) போய் லெட்டர்பேட் நிலைக்கு வந்திருக்கிறது பாமக.. .. விதைத்தது தானே முளைக்கும். .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment