Wednesday, November 30, 2016
எச்சரிக்கை
டெபிட் கார்டை வைத்து டீக்கடை டீ குடிக்கலாம் எஸ்வி சேகர்.. அதிமேதாவிதனமாக எண்ணிக்கொள்ளும் காமெடியன்..
தொலைக்காட்சியில் வந்து மோடிக்கு வக்காலத்து வாங்கும் ராமசுப்ரமணியன் போன்றோர் ஒன்றை விளக்குவது நல்லது..எஸ்விசேகரின் நண்பரும் காமெடியனுமாகிய ஓய்ஜி மகேந்திரன் குடும்பம் நடத்தும் பாரதி வித்யாலயாவிலோ அல்லது ராம்சுப்ரமணியன் நடத்தும் பள்ளியிலோ கல்விக்கட்டணத்தை வரைவோலை demand draft மூலம் வாங்குகிறார்களா என்றால் இல்லை..
எனக்கு தெரிந்து சென்னையில் SBOA பள்ளியில் மட்டும்தான் வரைவோலையில் மூலமே பணம் செலுத்த முடியும்..எனது மகன் அங்குதான் படித்தார் அதனால் அறிவேன் ஒவ்வொருமுறையும் SBT பேங்கில் டிராப்ட் எடுத்து செலுத்த வேண்டும் எல்லாம் வெளிப்படைதன்மையாக இருந்தது..
ஆனால் பத்மாவில் தனியாக எந்த கணக்கிலும் வராமல் நன்கொடையாக பெரும் தொகையை கொடுக்கவேண்டிவரும் ..எனக்கே அந்த அனுபவம் வந்தது. சிபாரிசு கடிதத்தோடு சென்றபோதும் சிபாரிசு சீட்டிற்கு தானே தவிர நன்கொடை செலுத்த வேண்டும் என கட்டாயபடுத்தினார்கள்..
இது அங்கு பிள்ளைகளை படிக்கவைக்கும் அனைவரும் அறிந்தது...
இனி பத்மா ஷேசாத்ரி பள்ளியில் கல்வி கட்டணம் வெளிப்படையாக நடக்கும் என உறுதியளிப்பார்களா இந்த தேசபக்தர்கள்..
..
இன்று அரசுஊழியர்கள் சம்பளத்தை குறிப்பிட்டளவே எடுக்கவேண்டுமென உத்தரவு வழங்கியிருக்கிறார்கள்.. எத்தனைபேர் வாடகை வீடுகளிலே இருப்பார்கள் அவர்களை காலி செய்ய சொல்லி வீட்டுஓனர்கள் வலியுறுத்துவார்கள் அவர்கள் கணக்கில் பணம் போடுகிறேன் என சொல்லி பாருங்கள் போட்டு எடுக்கமுடியாம இருக்கவா என்பார்கள்.. சிறிய தொகையை கூட எடுக்கமுடியாமல் மக்கள் அவதியுறுகிறார்கள் ..
மேல்தட்டுமக்களின் சிந்தனையை மற்றவர்கள் மீது திணிக்கும் செயலை நீண்டகாலம் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.. கேரளாவில் மூன்று வங்கி கிளைகள் மக்களே பூட்டுபோட்டுவிட்டார்கள்.. இது தொடரும் ஆபத்து..
..
பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி மக்களை நகர்த்துவதற்குமுன் அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கவேண்டும் கருப்புபண ஒழிப்பு என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம் ஏற்கனவே கருப்பு வெள்ளையாகி தேசபக்தர்கள் கையில் சிரித்துக்கொண்டிருக்கிறது.. cashless பாசிலியை நோக்கி நகர்த்த இவர்கள் நடத்திய நாடகம் தான் கருப்புபணம் ஒழிப்பு என்பது தெரியவருகிறது.. மோடி மக்களுக்கு உரையாற்றியது கூட நேரலையில் இல்லையென்றும் அது முன்கூட்டியே பதிவு செய்யபட்டது recordred என்ற உண்மை வெளியே வந்து மோடியின் முகமூடியை கிழித்திருக்கிறது..
..
மனைவியின் பிணத்தோடு வங்கி வாசலில் பணமெடுக்க தவம் கிடக்கிறான் .. ஆனால் இவர்களுக்கு மட்டும் தடையின்றி பணம் வந்ததெப்படி என்று தெரியவில்லை .. குருமூர்த்தி நராமசுப்ரமணி, எஸ்விசேகர்,மகேந்திரன் வகையறாக்கள் மட்டும் ATM பக்கமே காணோமே..
இவர்களின் தேசபக்தி வாஜ்பாய் ரகம்..
எப்போதுவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும்/மாறிக்கொள்ளும் வகை..
இவர்கள் மிக மோசமான சந்தர்பவாதிகள் இவர்களுக்கென்கிற போது பொங்குவார்கள்.சுவாதி கொலையில் தான் பார்த்தோமே...மற்றவர்கள் பிரச்தனையெனில் தேசபக்தி என்றெல்லாம் பேசுவார்கள்..
..
#எச்சரிக்கை
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, November 29, 2016
ஸ்டாலின் தலைவராகிறார்
தற்போது அரசியலில் விலகி இருக்கிறேன்
மு.க.அழகிரி..
காலம் கடந்த ஞானமெனினும் நன்று..இன்று மற்றொரு அறிவிப்பு வருகிறது மெல்ல கசிந்து கட்சியின் அடுத்த தலைவர் ஸ்டாலின் .. முதன்மை செயலர் துரைமுருகன் ..
இரண்டுமே சரி..
கையிலுள்ள பிரம்பிற்கு வேலை கொடுக்காவிட்டால் மகன் கூட பகைவன் ஆவான் என்கிறது #பைபிள்
ஆம்.. இரண்டுமுறை கலைஞரை சந்தித்ததின் விளைவு அழகிரியின் ஞானோதயம்.. இனியேனும் ஊடகங்கள் அழகிரியை பின்தொடராதிருந்தால் போதும்..
..
முன்பே திரு.ஸ்டாலினிடம் பொறுப்பை தந்திருக்கவேண்டும் இனியும் காலம் கடத்தாமல் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யலாம் அதை தலைவர் செய்தால் அதைவிட பேறு வேறில்லை..
துரைமுருகனின் பேச்சு கலைஞரின் எண்ணவோட்டத்தை பறைசாற்றுகிறதென்றே நினைக்கிறேன் உடல் ஒத்துழைக்காததும் முதுமையும் சுழன்று பணி செய்ய இயலாமல் ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வழிநடத்தலாம்
..
திரு.ஸ்டாலின் தற்போது ஏறக்குறைய எல்லா பொறுப்புகளையும் சுமந்து அதைவிட உணர்ந்து செயல்படுகிறார் பக்குவப்பட்ட பேச்சும், அனைவரையும் அரவணைக்கும் செல்லும் பண்பும்,தந்தைப்போல ஓய்வில்லா உழைப்பு கொண்டிருக்கிறார்.. தமிழகம் நம்புகிற விரும்புகிற தலைவராக நிச்சயம் வலம் வருவார்.. ஸ்டாலினுக்கு இடைஞ்சல் உள்ளிருந்தே தவிர வெளியில் இல்லை இப்போது அதுவும் மெல்ல விலகுகிறது எதிர்த்துநின்று வெல்லமுடியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.. இது அழகிரிக்கு மட்டுமல்ல
கலைஞரின் (பின்ஜாமின்கள்) வாரிசுகள் என்று வரிந்துகட்டும் எல்லோருக்கும் பொருந்தும்.. ஏனெனில் ஸ்டாலினை இயக்கமும் தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள தொடங்கிய கலைஞரின் மகன் என்பதால்மட்டும் அல்ல..தொடர்ந்து வெற்றி தோல்வி என எல்லாநேரமும் மக்களுக்காக உழைக்கிற இரண்டையும் ஒன்றாக கருதுகிற தொடர்ந்து 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் உழைத்த உழைப்பை மதித்து மக்கள் விரும்புகிற நிலையை அடைத்திருக்கிறார்.. மக்களின் விரும்பமில்லையென்கில் கலைஞரின் மகன் என்றாலும் உயரத்தை எட்டமுடியாதென்பதற்கு அழகிரியே போதும்.. இது #பிறருக்கும் பொருந்தும்..
..
வாருங்கள் வழிநடத்துங்கள் தளபதி அவர்களே..
#வைகறை_வெளுக்கிறது
..
ஆலஞ்சி மன்சூர்
என் மாமன் கம்பீரம்
என் மாமன்..
என் இளம்வயதில் பிரம்பிப்பாகவும் கம்பீரமாகவும் வலம் வந்தவர்.. மிடுக்குநடை நேர்த்தியான ஆடை
அதிகம் பேசாத அன்பும் கண்டிப்பும் அளவிலா பிரியமும் கொண்டவர்.. mas மாஸ் தாஜூதீன் என்றழைக்கப்பட்ட #மாமாராவுத்தர்_தாஜூதீன்
..
மிகசிறந்த ஆன்மீகவாதி.. வருடந்தோறும் ஊரில் நடக்ரகும் முஹையத்தீன் ஆண்டவர்கள் கந்தூரிவிழாவிற்கு வந்துவிடுவார்.. ஊர் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்வார்.. மலேசியாவிலிருந்து திரும்பி ஊரோடு தங்கியபிறகு பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளராக இருந்தார் அவர் மரணம் வரை செயலாளராகவே இருந்து கடைசி நிமிடம் வரை பொதுவாழ்வில் தூய்மையோடும் நேர்மையோடு செயலாற்றிவிட்டு சென்றுவிட்டார்..
..
நிறைய விடயங்களில் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய ஆசான்.. மனதில்பட்டதை சரியோ தவறோ ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ தனக்கு சரியென நினைத்ததை தைரியமாக சொல்லிவிடுவார் ஒவ்வொருமுறையும் அவர் சொல்வதுதான் சரியாக இருக்கும்..
ஒருமுறை என் மூத்த சகோதரியை திட்டிவிட்டேன் சிறிதுநேரத்திற்கு மாமனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார்.. என்னமாமு என்பதற்குள் சும்மா பார்த்திட்டு போகலாமென்று வந்தேன் இவளும் வரேன்னு சொன்னா என்றார்.. அவ்வளவுதான் எதை எப்படி செய்யவேண்டும் சொல்லவேண்டும் என்ற நெளிவு தெரிந்தவர்.. அடுத்தவர் உரிமையில் தலையிடாமல் அதேவேளை நம் தவறை நாம் உணரசெய்துவிடுவார்..
..
எதையும் அளவோடு செய்யவேண்டும்.. அதைநேரம் சரியான நேரத்தில் சரியாதை சரியான அளவில் செய்யவேண்டும்.. அடுத்தவருக்கு ஈவதை யாரும் அறியாமல் செய்யவேண்டும் .. அடுத்தவரின் சொந்தவிடயங்களில் நாம் சம்பந்கமில்லாமல் தலையிட கூடாது என்ற நெறியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகாட்டிவிட்டு போன பெரியமனிதர்.. Straightforward யாரைக்கும் முகம் நோக்கி வளைந்தில்லை..
..
என் தாயாரின் குடும்பத்தில் எல்லோருமே பூ போல போய்விடுவார்கள் என் தாயாரும் சரி என்தாயாரின் சகோதரிகள் இதோ இப்போது மாமன்.. ஒருநொடியில் யாருக்கும் சிரமம் தராமல் .. போய்விட்டார்
போய் வா மாமனே..
..
நீ..
எனது கம்பீரம்
..
#you_are_my_Majestically_magnificence…
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, November 26, 2016
கணக்கில் பிழை
பிற பாடங்களில் சிறிய பிழைகள் வந்தால் மதிப்பெண்ணை குறைத்து வழங்குவார்கள் ஆனால் கணக்கு பாடத்தில் சிறிய தவறென்றால் கூட முழு மதிப்பெண்ணும் கிடைக்காது..
இந்திய ரிசர்வ் வங்கி அடித்த ₹500 ல் 9 தவறு இருக்கிறது.. என்று ரிசர்வ் வங்கியே சொல்கிறது அதுவும் அவசரத்தில் அடித்ததால் தவறுகள் நிகழ்ந்துவிட்டதாக வங்கியின் அறிக்கை சொல்கிறது..
..
எல்லாம் அள்ளிதெளித்த அவசரகோலம் எந்தயொரு திட்டமிடலும் நிறைய கருத்து பரிமாற்றம் ஆலோசனைகள்.. சம்பந்தபட்ட துறை வல்லுநர்களின் வழிகாட்டல் இதெல்லாம் இல்லாமல் யாரோ அதிமேதவியாக தன்னை காட்டிக்கொள்ள நடத்தப்பட்ட திட்டம்..
பணம் பதுக்குவோருக்கு பணத்தை நகர்த்த transit/ move மிக சுலபமாக்கிய ₹2000 நோட்டுக்கள்.. எளிமைபடுத்திய அதிபுத்திசாலித்தனம்.. பெரும் முதலாளிகளுக்கு முன்கூட்டியே தெரியபடுத்தி பலகோடிகள் கருப்பு வெள்ளையானது .. மீதியுள்ள பெரும் முதலைகள் 37% கமிஷனில் அமிர்ஷாவிடம் மாற்றியாகிவிட்டது.. பாவங்களும் நடுத்தரவர்க்கத்தினரும் கால்கடுக்க வரிசை நின்று பணமாற்றம் செய்யவேண்டும் அதுவும் சரியாக அச்சிடபடாத தவறுகளால் ஆன பணம்.. உண்மையில் இது தான் செல்லாத பணம்..
தவறுகள் நிறைந்தவைகள் எப்படி சரியாகும்..
..
cashless பாலிசியில் ஊழல் லஞ்சம் ஒழிந்துவிடுமா..
அரசு ஊழியர்கள்... காவல்அதிகாரிகள் நம்ம ஏட்டைய்யாக்கள் எல்லோரும் இனி கையூட்டை கார்டை தேய்த்தோ அல்லது மொபைல் வழியாகவோ பெறுவார்கள் என நம்புவோம்..
..
90% மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற பொய் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது.
மக்கள் கோவம் நீறுபூத்திருக்கிறது..என்பதைதான் பாஜக எம்பியை தாக்கியதை காட்டுகிறது.. இது மக்கள் விட்ட எச்சரிக்கை இதுசரியான முறையல்ல என்றாலும் எவ்வளவுதான் சகித்துக்.கொள்வான் .பொதுஜனம்....கஷ்டத்தை பொறுத்துக்கொண்டவனை ஆதரிக்கிறான் என்றதும் கோவம் கொண்டான்
..
அறிவிலா செயலால் அவதியுறும் குடிமக்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Friday, November 25, 2016
விவரங்கெட்ட..
நேற்றைய தினம் திரு.மன்மோகன்சிங் நாடாளுமன்ற உரையை தொடர்ந்து நாடெங்கும் மக்களிடம் மாற்றம் வர தொடங்கியிருக்கிறது..
முன்பு சரியென்று பேசியவர்கள் இப்போது தவறான செயலாக்கம் என பேச தொடங்கியிருக்கிறார்கள்..
இந்நிலையில் ஜெட்லி 2ஜி ஊழல் இல்லையா என கேட்டு திசை திருப்பபார்க்கிறார்..
முதலில் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும் ஜெட்லி இப்போது அதிகாரத்தில் இருக்கிற நீங்கள் ஏன் வழக்கை விரைந்து முடிக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறீர்.. சிபிஐ தொடர்ந்து காலஅவகாசம் கேட்கிறதே தவிர குற்றம் சாட்டபட்டவர்கள் தைரியமாக வழக்கை சந்திக்கிறார்கள்.. தாங்கள் நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடன் சிஏஜி அறிக்கையை அரசியலாக்கவேண்டாம் அது ஊழலல்ல இழப்பு என்று பாராளுமன்றத்திலேயே சொன்னீர்கள் ஆனால் அதே இழப்பை 2ஜியில் ஊழல் என்கிறீர்..
ஊழல் என்றே வைத்துக்கொள்வோம் ஏன் சரியான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்கமுடியவில்லை.. சமீபத்திய தங்களின் பேச்சு..
குண்டியை கழுவ சொன்னா அவன் குண்டியில ஒட்டியிருக்கு அதை கழுவசொல்லுங்கற மாதிரியிருக்கு..
..
நாடாளுமன்றத்தில் மோடி ஏன் பேசவேண்டுமென சிலர் பேசுகிறார்கள் மன்மோகன் பேசினாரா என துணை கேள்வி வேறு .. அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேட்டியளித்தார்.. நிதியமைச்சர் இறுதியில் பிரதமரும் விளக்கம் அளித்தார்.. மக்களை ஏற்றுக்கொள்ளாத போது ராசா பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்தித்தார்..
எந்தயொரு பாஜக அமைச்சரும் ஏன் ஜெயலலிதா கூட குற்றசாட்டிற்கு ஆளானபிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்க்கொள்ளவில்லை இதற்கு பின்னால் இருக்கிற ஜாதிய அரசியல் தெரியாமல் இல்லை..
..
கருப்புபணம் ஒழிப்பு என்ற பெயரில் இருக்கிற பணத்தையும் பிடிங்கிக்கொண்டு ஓட்டாண்டியா நிற்கவைத்துவிட்டு சமாதானம் சொல்கிறீர்.. அதுவும் சம்பந்தமே இல்லாத மொழியில்.. புண் புறையோடிபோயிருக்கிறது அதற்கு கீறி சீழ் அகற்றி மருந்திட வேண்டுமே தவிர விரலை அகற்றகூடாது..
வீக்கத்திற்கு விரலை வெட்டின கதையாயிருக்கு #விவரங்கெட்டவன்..
..
நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டும் இதன் பின்னில் உண்மையான அக்கறையிருக்கிறதா அல்லது அதானி அம்பானி.. பியானிகளின் கையிருக்கிறதா என்று... மக்கள் மாளாதுயரில்..அவதியில்
..
#சீரழவில்..
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, November 24, 2016
Dr மன்மோகன் சிங்... ஆணியடித்தார்
சிறந்த பொருளைதார மேதைகள் நிறைந்த நாட்டில்
நாம் அரைகுறையோடு அலைகிறோம்..
தெளிவின்மை மதம் சொல்லி மயக்கும் வித்தையறிந்ததால் நாமெல்லாம் குரங்காட்டியின் கையில் சிக்கிய குரங்கானோம்....
உலகமே பொருளாதார வீழ்ச்சி கண்டபோதும் நாம் மட்டும் நிலையானதொரு பணவீக்கத்தில் இருந்தோம். மேதையின் திட்டமிடல் சரியான கணிப்பும் நம்மை நம் பொருளாதாரத்தை வீழ்ந்துவிடாமல் காத்துநின்றது..
காசாப்புகடைக்காரனை நம்பிய ஆடுகள் போல நாம்
தெருவில் பனியில் கடும் குளிரில் ஏடிஎம் முன் உறங்கி கிடக்கிறோம்..
..
சிறு வணிகர்களை நசுக்கினால் மிகப்பெரிய சரிவைதான் தருமென்று திரு.எம்.எம்.எஸ் (மன்மோகன்சிங்) அவர்கள் நாடாளுமன்றத்திலே ஆணியடித்தார்..உண்மை. உலகளாவிய அளவில் வீழ்ச்சி கண்டபோதும் நாம் மட்டும் நிலையாக நின்றதன் பின்னணியில் கிராமபுற வியாபாரமே இருந்தது காய்கறிக்கடை மளிகைக்கடை சிறு தட்டுவியாபாரிகளிடம் பொருள்வாங்கும் சாமானியனால் தாக்குபிடிக்க முடிந்ததால் பொருளாதார சரிவை/வீழ்ச்சியை 69% தடுத்த நிறுத்த முடிந்ததாக அப்போதே திரு.மன்மோகன்சிங் சொன்னார்..
அந்த கிராமபுற வியாபாரத்தை தான் சிலரின் நன்மைக்காக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்..
..
சரியாக திட்டமிடாததும் நீண்டகாலத்திற்கு பின் பலன்தருமென்பதும் நிஜமல்ல என பொருளாதார வல்லுநர் நீண்டகால அனுபவம் கொண்டவர் நாடாளுமன்றத்திற்குவந்து தன் உடல்நிலை முடியாதபோதும் மிக சிறந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார். திட்டமிட்ட கொள்ளை சட்டபூர்வ திருட்டு நிர்வாக தோல்வி..என்று நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளும் என உண்மையை நாகரீகமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்..
..
திரு.மோடி அவர்களே சகதியில் கால்வைத்துவிட்டீர்.. தவறென்று தெரிந்தும் சகதியோடே அலைவேன் என பிடிவாதம் பிடித்தால் நாற்றமெடுத்துபோகும்.
..
நாட்டுமக்கள் தவறை உணர தொடங்கிவிட்டார்கள்..
மம்தா சொன்னதைப்போல Honest ஆக இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்கிக்கட்டும் மக்கள் கோவம் அப்போது தெரியும் Photoshop ல ஆட்சியை பிடித்தவர்களுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்..
Thank you Dr.Manmohan Singh ....shab
..
#Modi_Go_back…
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, November 23, 2016
நடிகர்கள்...
₹500₹1000 திரும்ப பெற்றதற்கு ஆதரவாக திரையுலகினர்.. ஆச்சர்யமாக இருக்கிறது..
அதிகம் கருப்பு பணம் புழங்குகிற இடமாக சினிமா இருப்பதை அனைவரும் அறிவர்..காரணம் சினிமாவை தொழிலாக அங்கீகரிக்காமல் கேளிக்கையாகவே அரசு வைத்திருப்பதால் அது சார்ந்த பிற தொழில்களில் எவ்வளவு முதலீடு செய்யபடுகிறதென்றே தெரியாது.. நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்ற வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது முன்பு மார்ட்ன் தியேட்டர்ஸ் காலத்தில் நடிகர்களுக்கு தொழில்நுட்பவல்லுநர்களுக்கு அப்போது எக்ஸ்ட்ரா என்றழைக்கப்பட்டு இப்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போன்றவர்களுக்கு மாத சம்பளம் அல்லது தினக்கூலியை வரையறுத்து அதை பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கும் அதாவது ஒப்பந்த பத்திரம் வழக்கம் இருந்தது.. எம்ஜிஆர் கூட மந்திரிக்குமாரிக்கு மாதம் ₹150 சம்பளத்தில் ஆறுமாதம் நடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டார்.. அந்தபடத்தில் தாவகட்டையில் பள்ளம் இருப்பதால் மார்டன் முதலாளி சுந்தரம் அவர்கள் எம்ஜிஆரை அந்த வேடத்திற்கு நிராகரித்தார் கதைவசனம் எழுதிய கலைஞர்தான் சிறிதாக தாடி ஒட்டிக்கொள்ளலாம் எனச்சொல்லி முதலாளியை வற்புறுத்தி சேர்த்துவிட்டார் இதை எம்ஜிஆரே அன்றைக்கு கருணாநிதி மட்டும் பிடிவாதம் செய்யவில்லையென்று சொன்னால் நான் திரையுலகிற்கே வந்திருக்கமுடியாது என்றுசொன்னார்....
..
விசயத்திற்கு வருவோம்..
முறையான வரையறுக்கப்பட்ட வருவாய் இல்லை ஆனாலும் பெறுகிற சம்பளத்தை சரியாக கணக்கில் கொண்டுவருவதில்லையென்பதுதான்நிஜம்..
தமிழில் பேர்வைத்தால் வரிவிலக்கு என்ற ஒன்றைவைத்துக்கொண்டு இவர்கள் நடத்தும் வரிஏய்ப்பு எவ்வளவு தெரியுமா.. ₹60 அச்சிட்ட சினிமா டிக்கெட்டை முதல்நாளுக்கு ₹300 ₹400 என்று விற்கிறார்கள் இதையெல்லாம் யாரும் எந்த அரசும் கண்டுக்கொள்வதில்லை.. கேளிக்கைவரிதான் ரத்தே தவிர சினிமா தயாரிப்பாளர் வரும் வரிமானத்திற்கு வருமானவரி செலுத்தவேண்டும்.எல்லோரும் நஷ்ட கணக்கைாதான் காட்டுகிறார்கள்.. அல்லது குறைவாகதான் காட்டுகிறார்கள்..
ஏனெனில் ஒழுங்காக தொழில்முறையில் பணபரிவர்த்தனை நடப்பதில்லை.. அதனால் எவ்வளவு வசூல் என்றெல்லாம் வருமானவரித்துறையால் கணக்கிட முடியாது
சினிமா டிக்கட்டில் அச்சிடப்பட்ட ரூபாய்க்கு மட்டுமே
வரிசெலுத்தபடும். .. சினிமா சினிமா தியேட்டர்களில் சம்பந்தமே இல்லாமல் கள்ள டிக்கெட் கூட அச்சிடுகிறார்கள்.. கருப்பு பண நடமாட்டம் அதிகம் நடக்கும் துறையை சார்ந்தவர்கள் ஏதோ தங்களை தூய்மையானவர்களாக காட்டிக்கொள்ள போடும் வேடம் இது..
..
திரு.ரஜினி தொடங்கி மோகன்லால் வரை...ஒழுங்காக வரிகட்டுகிறவர்கள் என்று நம்புவோம் முறையாக எல்லா வருமானத்திற்குமா என்றால் இல்லை.. இவர்களின் சம்பளம் என்னவென்று இவர்களுக்கே தெரியாது பாவம்..
பாஜக காரர்கள் மோடிக்கு மல்லுகட்டுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம் காரணம் அது அரசியல்.. ஆனால் இந்த சினிமாகாரர்கள் முட்டுக்கொடுக்கிறார்கள் பாருங்கள் அதுதான் படுகேவலமாக இருக்கிறது..
நடிகர்களே...
#நடியுங்கள்_திரையில்மட்டும்...
..
ஆலஞ்சி மன்சூர்
ஓடியொளிகிறீர்..
ஏன் ஓடியொளிகிறார்..
இதுவரை எநித பிரதமரும் தாங்கள் அறிவித்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தபோதும் அதற்கு விளக்கம் தர அஞ்சி ஒளிந்தோடியதில்லை..
அவசரகதியில் ஒருதிட்டத்தை அறிவித்துவிட்டு அதை சரிச்செய்ய வக்கில்லாமல்.. இதுவரை சிலர் மட்டுமே மொத்தமாக கமிஷன் அடிப்படையில் கருப்புபண கையிருப்பை மாற்றிவிட்டதாக வரும் குற்றசாட்டிற்கு மறுக்கமுடியாமல்.. அமிர்ஷா 37% கமிஷனில் பணத்தை மாற்றி தந்தார் என அவரது கட்சியை சேர்ந்தவரே பிரதமருக்கு கடிதம் எழுதியும் தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக சொல்லியும் நடவடிக்கையில்லை.. இதற்கெல்லாம் பதில் இல்லை 80% பேர் ஆதரவு என்ற பச்சை பொய்யை சொல்லமுடிகிறது.. அதிகம் கூவினால் உண்மையாகிவிடாது..
..
நாடாளுமன்றத்தில் அதிமுக சிவசேனா,உட்பட எல்லாகட்சிகளும் எதிர்க்கின்றன ..இவர்கள் நாட்டை
Cashless Economy பணமில்லா பொருளாதாரம் நோக்கி நகர்த்துவதாக தம்மட்டம் அடிக்கிறார்கள்.. எதையும் Debit card /credit card கடன் அட்டை / பற்று அட்டை யில் வாழ சொல்கிறார்கள்.. வளர்ந்த நாடுகள் கூட இன்னமும் முழுமையடையாத
Cashless Economy இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை என்பதை மிகபிரபலமான பொருளாதார வல்லுநர்கள் சுட்டிகாட்டியும் அதற்கெல்லாம் பதில் இல்லை.. கடன் அட்டை கலாச்சாரத்தால் அமெரிக்கர்கள் கடன்காரர்கள் ஆனார்கள்.. அதிக வரிவசூல் செய்யபடும் 39% அமெரிக்காவில் கூட இன்னமும் முழுமையடையாத திட்டம் இது ..
..
சிறு குறு தொழில் முனைவோர்.. சிறியளவில் வியாபாரம் செய்வோர் கடுமையாக பாதிக்கபடுகிறார்கள் வரும் காலங்களில் இவர்கள் பாடு திண்டாட்டம் ஆகும்.. மோடியை ஆதரிப்பவர்கள் சொல்லும் ஒரேயொரு விடயம் வரிஏய்ப்பை தடுக்கத்தான்.. வரியை ஏய்ப்பவன் சிறியளவில் கடை நடத்துபவன் அல்ல.. இதுவரை எந்த வட்டிக்கடைக்காரனும் வரி செலுத்தியதில்லை..ஏன் குறிப்பாக குஜராத்திகள் அதிகளவில் பணம் புழக்கத்தை செய்கிறார்கள் என சொல்லும் அரசு வரி செலுத்துவதில் பின்னில் இருப்பதை சொல்லமறுக்கிறது..
..
வெளிநாடுகளுக்கு வரும் இந்திய ரூபாய்கள் குறிப்பிட்ட அளவு மட்டும் முறையாகவும் ஒரு கணிசமான அளவு கருப்பாகவும் வருகிறது..அதை செய்கிற Exchange ஆசாமிகள்... மோடியின் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இதெல்லாம் கட்டுபடுத்த அல்லது ஒழிக்க மோடி என்றில்லை யாராலும் முடியாது ஏழைகளில் சுருக்குப்பையை வேண்டுமானால் சோதனையிடலாம்..
வங்கி ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வாடிக்கையாளர்களோடு தகாத வார்த்தை பிரயோகங்கள் நடக்கிறது இதுவரை 12 பேர் வங்கி ஊழியர்கள் மன அழுத்தத்தால் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவையெல்லாம் அறிவுகெட்ட அவசரத்தனத்தால் ஆழ்ந்து யோசிக்காமல் எடுத்த முடிவால் வந்தது ..
..
வங்கிகளுக்கு அனுப்ப பணமில்லை ஆனால் பிக் பஜாரில் big bazaar ல் ₹2000 கிடைக்கும் கிஷோரிடமிருந்து ..Kishore Biyani நாங்கள் ஏன் வாங்க வேண்டும்.. இந்தியாவை குறிப்பிட்ட நான்கைந்து பேருக்கு எழுதி கொடுத்தாயிற்றா.. அம்பானி,அதானி, பியானி...
பதில் வேண்டும் மோடி.. ஓடியொளியாதீர்..
..
ஒன்றுதிரள்வோம் மோடிக்கெதிரான மனிதசங்கிலியில்..
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, November 22, 2016
மாவீரன் வீரபாண்டி
இவன்...
சேலத்து சிங்கம்.
கலைஞரின் தேர்,
கலைஞரின் தோள்
சுமையை தாங்கியவன்
கலைஞரின் போர்வாள்,
எதிரிகளை பந்தாடியவன்
கழகத்தின் தூண்,
வீழாமல் பார்த்துக்கொண்டவன்
இவன் சூறாவளி,
கலைஞர் விரல் காட்டும்
திசைநோக்கியடிக்கும்
இவன் பொன்னாடை
கலைஞர் தோள் அலங்கரிக்கும்
இவன்..
சேலத்து சரித்திரம்
இவனே..சேலத்து மா
..
என்றும்
திராவிடர் நினைவில்.
#23_நவம்பர்..
..
ஆலஞ்சி மன்சூர்
தஞ்சையின் பாசமகள்..
செல்வி.அஞ்சுகம் பூபதி..
அரசியலில் தோல்விகள் ஒன்றும் பெரிய விடயமல்ல.. ஜனநாயக அமைப்பில் தேர்தல் அரசியலில் மாபெரும் தலைவர்கள் கூட தோற்றுப்போயிருக்கிறார்கள் ஆனால் சரித்திரம் அவர்களை எப்போதும் கொண்டாடியிருக்கிறது.. மீண்டும் வெற்றியை தந்தும் இருக்கிறார்கள்..
மிகவும் எதிர்பார்த்த ,
பொதுவான சிந்தனையுடையோர் அரசியல்சாராதவர் .. அதிகம் விரும்பிய வேட்பாளர் தாங்கள்.. மக்களின் மனமாற்றம் பணம் அதிகாரம் போன்றவற்றால் சிறிது திசைதிருப்பபட்டிருக்கிறது தங்களின் வெற்றி.. அவ்வளவுதான்..
..
தோல்விகள் தான் நம்மை சரியான பாதை திட்டமிட மீண்டும் தவறிவிடாமல் காக்க சிறந்த பயிற்சியை தரும்.. அரசியலை அறிந்துக்கொள்ள, உள் கட்சி அரசியலை எதிர்க்கொள்ள இந்த தோல்வி பயன்படும்.. தங்கள் தந்தை பூபதி அடிக்கடி சொல்லும் வாசகம்.. கலைஞருக்கு தெரியும் .. ஆம்
கட்சிக்காக கலைஞருக்காக உழைக்கிறவர்களுக்கு வெற்றி தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது ..
அவர்கள் கட்சி மற்றும் சமூகப்பணி தொய்வு ஏற்படாது..
..
ஒன்று தெரியுமா.. கட்சிகளை கடந்து அனைவரும் தங்களின் வெற்றியை எதிர்பார்த்தார்கள்..இந்தியளவில் பேசப்பட்டீர்கள்
இது மிகபெரிய வெற்றியை வருங்காலத்தில் தரும்..
இடைத்தேர்தலின் மக்களின் மனவோட்டம் அதிகார மையத்தின் அழுத்தம் அதிகளவில் பணபுழக்கம் அி்முகவிற்கு வெற்றியை தந்திருக்கிறது.. திரு.ஸ்டாலின் சொன்னதைப்போல இப்போது வென்றிருக்கலாம் மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்திக்கும்.. அப்போது மிகப்பெரியளவில் பேசபடுவீர்.. உயரத்தை தொடுவீர்..
..
கட்சிப்பணிகளிலும் தொடர்ந்து செய்துவந்த சமூகபணியிலும் அதிக கவனம் செலுத்துங்கள் ..
தந்தை பூபதியைபோல வெள்ளைமனத்தோடு
வலம் வருக.. வாழ்த்துக்கள் அஞ்சுகம்..
என்ன வாழ்த்து சொல்கிறானே என எண்ணுகிறீரா..
வரும் காலம் தங்களுக்கானது..தந்தை தொடாத உயரத்தை நிச்சயம் அடைவீர்..
தளபதி சொன்னதைப்போல மிகபெரிய வெற்றி திமுகவிற்கு காத்திருக்கிறது.. அந்த வெற்றியில் தாங்கள் நிச்சயம் இருப்பீர்..
..
#உதயசூரியனாய்_வலம்வருக...
..
ஆலஞ்சி மன்சூர்
நவம்பர் 26
திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள் நவம்பர் 26.. பெரியாரின் பிரதான கொள்கையான சாதி ஒழிப்பை வலியுறுத்தி 1957ல் நடத்திய சட்ட எரிப்பு போராட்டம் இந்திய அரசிலமைப்பில் சாதியநிலைப்பாட்டை எதிர்த்த மாபெரும் போராட்டம் அது இந்தியளவில் சாதிக்கெதிரான போராட்டமும் கூட.. இந்தியளவில் முதல்முறையாக சாதீய ஒழிப்பிற்காக பல்லாயிக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைச்சென்றனர்.. மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை தோழர்களுக்கு கிடைத்தது..
மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொல்லியும் .. வாஜ்பாய் போல மன்னிப்பு கடிதமெல்லாம் தந்து விடுதலையாகவில்லை
..
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சாதீய மறுப்பு திருமணம் என்ற எண்ணம் எழ காரணமாக அமைந்தது இந்த போராட்டம்..
..
மரணம் என்பது வீரன் தன் லட்சயத்திற்கு கொடுக்கும் விலை என்றார் பெரியார்
பெரியாரின் தன் வாழ்நாள் இலட்சியமான சாதி ஒழிப்பிற்காக 18 பேர் உயிரிழந்தனர்.. பட்டுக்கோட்டை இராம மடசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி சிறையிலேயே உயிரிழந்தனர்..
சிறையிலிருந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுக்கப்பட்டபோதும் போராடி அங்கேயே சிலநிமிடம் மரியாதை செலுத்தினர் ..
இன்றைக்கும் பீகார் உ.பியை போல சாதீய கோரதாண்டவம் தமிழகத்தில் இல்லாமல் இருக்கிறதென்றால் அதற்கு பெரியாரின் பெருந்தொண்டே காரணம்..
..
இந்த சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை வர்ணம் சொல்லி பிரித்தாளும் ஆரிய சூழ்ச்சிக்கெதிரே முதல்முறையாக ஆணியடித்த நாள்..திராவிட இயக்க வரலாற்றில் மறைக்கமுடியாத மறுக்கமுடியாத சரித்திரத்தை எழுதிய நாள்.. நவம்பர் 26/1957.
..
இன்றைக்கு சாதி நெருப்பை சிலர் தூண்டி குளிர்காய நினைத்தாலும் அது பெரியளவில் கண்டுக்கொள்ளாமல் தூண்டுதல் செய்வோரை
தனிமைப்படுத்தி கடைசியில் ஒன்றுமில்லாமல் செய்திட முடிகிறதென்றால் அதற்கு #பெரியாரெனும்_அருமருந்தே காரணம்..
..
#சட்டஎரிப்புநாள்_திராவிடர்திருநாள்..
#Historic_day
..
ஆலஞ்சி மன்சூர்
Monday, November 21, 2016
விவரக்கேடு
திமுகவின் தற்போதைய தலைவர் யார்
திமுக ஜனநாயக இயக்கமா... நடிகர் விஜயகாந்த் கேள்வி..
ஒற்றைவரியில் கூட இதற்கு பதில் இருக்கிறது..முதலில் கேள்வி கேட்பதற்கான தகுதியோடு நிற்கிறாரா என கேட்க வேண்டியிருக்கிறது..யார் வேண்டுமானாலும் கேள்வியை /சந்தேகங்களை எழுப்பலாம் ..
ஆனால் தன்னை அரசியல் தலைவராக முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் அறிமுகம் செய்துக்கொண்ட
திரு.விஜயகாந்திற்கு அரசியல் தலைவருக்கான தகுதிகளோடு செயல்படுகிறாரா.. அல்லது செயல்பட்டாரா என்ற கேள்வி எழும்..
..
முதலில்
திமுக ஜனநாயக இயக்கமா என கேள்வி எழுப்புகிறார் அதற்கு நாங்கள் பதில் சொல்வதைவிட தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய திரு.ஷேசன் .. இந்தியாவிலேயே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் முறைப்படி தேர்தல் நடத்தி ஜனநாயத்தோடு இயங்குகிற கட்சிகள் என்றால் அது இடது கம்யூனிஸ்ட் மற்றும் #திமுக தான் என்றார்.. முறைப்படி தேர்தல் நடத்காத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறதென்றார். எந்த கட்சியும் தேர்வு செய்து கொள்கிறார்களே தவிர ஓட்டளித்து தேர்தெடுக்கபடுவதில்லை..
..
கட்சித்தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவேண்டிய அவசியமில்லை..தகுதியானவர் கேட்டால் பதில் அளிக்கலாம்.. திடீர்திடீரென்று அரசியல் பேசுவதும் சிலகாலம் நான் சிங்கப்பூரில் இருந்ததால் நாட்டிநடப்பை பத்திரிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளாததால் கருத்து சொல்ல முடியவில்லை என்கிற அரைகுறைக்கெல்லாம் திமுக தலைவர் யாரென்று தெரியாது தான்..
திமுக தலைவரை ஒற்றை இரவில் நியமித்துவிட முடியாது அதெற்கெல்லாம் பொதுக்குழு அங்கீகாரம் வேண்டும்.. யார் தலைவர் என்பதைப்பற்றி விஜயகாந்த் கவலைபடவேண்டாம்..
..
அன்றாட அரசியல் கூட அறிந்துவைத்திராத அரைகுறையாய் முளைத்த விதைப்போல.. சற்றென்று தலைசாய்ந்து போய் விட்ட கட்சியின் தலைவர் .. சினிமாவில் கதாநாயகன் வேசம் கட்டினால் அரசியலிலும் நாயகனாகலாமென்ற பழைய வழியை பின்பற்றி சட்டென்று உயரத்தை அடையலாமென்ற அவசரகோலம் .. கடைசியில் #கட்டிவச்சகாசும் போய் கரைந்துக்கொண்டிருக்கிறார்.. அரசியலின் அரிச்சுவடியை கூட ஒழுங்காக படித்திடாத/அறிந்திடாத அரசியல் பல்கலைகலைகழகத்தை பார்த்து கேட்கிறார்..
..
#அரசியல்அறியாமை_விவரகேடு …
நக்லி பாபா...
பாபா ராம் தேவ்
யோகா கலையை பயிற்றுவிக்குமே சிறியளவில் தொடங்கி இன்றைக்கு நூடூல்ஸ் வியாபாரம் செய்கிற தொழில் அதிபர்.. அரசு செலவில் Zபிரிவு பாதுகாப்பு பெறுகிற சாமியார்.. இவரது அறக்கட்டளைக்கு 2012 பிறகே அதிகளவில் பணபழக்கம் வந்தது முறையான கணக்கில்லாததால் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது .. அப்போதுதான் இவர் கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பித்தார்..
யோகா பள்ளி என்ற பெயரில் பெரியளவில் பணம் பரிவத்தனைகள் நடைபெறுமிடமாக இவரது அமைப்பு நடைபெற்றதும் அரசின் கவனம் இவர்மீது விழ தொடங்கியவுடன் .. அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் அழைப்பே இல்லாமல் ஆஜராகி .. ஊடகத்தின் பார்வையில் தன்னை தேசஅபிமானியாக காட்டிக்கொள்ள பயன்படுத்தினார்..
..
என்ன திடீரென்று யோகாவிலிருந்து நூடூல்ஸ் பக்கம் போனார் என்பதே சுவாரஸ்யமான விடயம்..
வருமானவரி வழக்கின் போது ஜெயலலிதா வெங்காயம் ஏற்றுமதி செய்து ஒரே மாதத்தில் ஒருகோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக நீதிமன்றத்தில் சொன்னாரே அதே போல பலகோடி பணத்தை வெள்ளையாக்க வியாபாரியாக தன்னை காட்டிக்கொண்டவர்..
இவர்தான் மக்கள் வரிசையில் நின்று செத்தால்தான் என்ன என்கிறார். வரிசை நின்று பணம் மாற்றுபவர்களை எதிர்கட்சிகள் அனுப்பியவர் என்கிறார்..
ராம்தேவை நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கலாம்..
..
இப்போது ராணுவவீரர்களை துணைக்கழைத்து மோடி ரசிகர்கள் கதைக்கிறார்கள்.. பாவம் தோன்றுகிறது.. ராணுவவீரன் ₹1000 திற்கு உடையணியும் போது மோடி ₹10லட்சத்திற்கு அணியலாமா என கேட்காத தேசப்பற்றாளர்கள்..
இவர்களுக்கு ஒரு விசயம் தெரியுமா..
சுதந்திர இந்தியாவில் இதுவரை தோக்கை தூக்கிக்கொண்டு எல்லையில் கடும்குளிரில் நின்ற நிற்கிற ராணுவ வீரர்களில் ஒருவர் கூட பிராமணனோ,குஜராத் மார்வாடி இருந்ததில்லை.. ஆனால் இவர்கள் தேசபக்தியை பற்றி வாய்கிழிய பேசுவார்கள்..
..
இப்போது புதிதாய் கஷ்மீரில் ₹30 லட்சத்தை கைப்பற்றியதாக அதுவும் சிபிஐ கைப்பற்றியதாக புரளியை கிளப்புகிறார்கள்.. பட்டவர்த்தமாக ₹200 கோடி செலவில் திருமணத்தை கேட்காத ஹரி .. கஷ்மீரில் கைப்பற்றியதாக சொல்லிமோடியை புகழ்கிறார்.. சிபிஐக்கு பணத்தை கைப்பற்றும் அதிகாரம் இல்லையென்பது கூட தெரியாத தேசபக்தர்கள்.. இவர்களின் தேசநலன் போலியானது மதவெறியும் உயர்பதவியில் தங்கள் ஆட்கள் மட்டுமே வரவேண்டுமென்கிற ஆசையும் தவிர வேறில்லை இதுதான் இவர்களின் தேசப்பற்றிக்கான அளவுகோல்..
..
பாபா ராம்தேவை சரியான முறையில் விசாரித்தால் அவருக்குள் ஒளிந்திருக்கும் பிரேமானந்தாக்களை வெளியே கொண்டுவரலாம் அதுமட்டுமல்ல கறுப்புபணம் புழக்கத்தின் மைய்யமாக செயல்படும் ஆசிரமங்களை .. கருப்பை வெள்ளையாக்கும் பணமுதலைகளை இனம் காணலாம்..
பாபா என்றால் சாமிகளை குறிக்கும் சொல். இவர் நக்லி ..#போலிசாமியார்..
..
#துறவிகள்_பேராசைகளின்_களஞ்சியம்
..
ஆலஞ்சி மன்சூர்
Sunday, November 20, 2016
ஜன்னல்வழியே கள்ளநோட்டு
தாறுமாறாக போய்க்கொண்டிருக்கிறது
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை..
முட்டாள்களின் செயலால் அடிதளமக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினரின்
இயல்பும் பறிப்போனது.. சரியாக திட்டமிடாத எந்த ஒரு செயலும் மிகப்பெரிய விளைவுகளை தரும் என்பதற்கு இன்றைய இந்தியா சாட்சியாக நிற்கிறது..
..
மிகச்சிறந்த பொருளாதார நிபுணரை வேண்டாமென்று வைத்தது எவ்வளவு பெரிய தவறு ..உலக நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்டபோதும் இந்தியாவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தடுத்துநிறுத்தியவர் திரு.மன்மோகன் சிங்..
திரு.ப.சிதம்பரம் சில உண்மைகளை போட்டுடைத்திருக்கிறார்.. கருப்பு பண ஒழிப்பென்ற பெயரில் இவர்கள் திட்டமிடாது செய்த அவசர அறிவிப்பு எவ்வளவு பாதிக்கும் என்றும் புதிய நோட்டுக்கள் அச்சிடவே ஆறு மாதங்களுக்கு மேல் ஆகுமென்றும்.. நாட்டில் விவசாயம் சிறு குறு தொழில் முடங்கும் என்று விலாவாரியாக பட்டியலிட்டிருக்கிறார்.
.0028 % கருப்புபணத்தை ஒழிப்பதாக கூறி இன்றைக்கு மக்கள் கையில் செலவிற்கு வைத்திருந்த 20 லட்சம் கோடி வங்கிகள் வரவாகியிருக்கிறது அதற்கு மாற்றாக அதில் பகுதி பணம் கூட புதிதாக அச்சிடபடவில்லை அச்சிடப்பட்ட புதிய நோட்டுகளில் சில குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் மொத்தமாக கொண்டுபோய்விட்டார்கள்.. அதை பாஜக எம்எல்ஏவே, அதை வீடியோடு எடுத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்..
..
முதலில் ₹4000 என்று சொல்லிவிட்டு₹2000 என்றாக்கி திருமணத்திற்கு ₹2 லட்சம் என்று ஆசைவார்த்தையை பேசி பிறகு அதுவும் இல்லை கேட்டால் வங்கியில் பணமில்லை..
ஆனால் ஓட்டுக்கு ₹2000 கொடுக்க அதிமுககாரனிடம் புதிய நோட்டுக்கள் இருக்கிறது தஞ்சை முழுவதும் ₹2000 நோட்டு சர்வசாதாரணமாக புழங்குகிறது.. அதாவது ஒருசிலர் நோட்டை மாற்றிக்கொள்ள முடிகிறது.. போக்குவரத்தில் வந்த சில்லறைக்கு பதிலாக புதிய ₹1000 ₹500 செல்லாதென்று அறிவித்த நோட்டுக்கள்
வங்கியில் செலுத்தப்பட்டிருக்கிறது..
நாடுமுழுவதும் ஒரு சிலர் சர்வசாதாரணமாக எப்போதும் போல் பணத்தோடு வலம் வருகிறார்கள் சாமான்யன் கடனுக்கு பொருள் கிடைக்கிறதா மளிகைப்பொருள் வாங்கமுடியுமா என தவிக்கிறான்..
..
அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் தங்களுக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி #ஜன்னல்வழியே பணத்தை பெற முடிகிறது .. நடுத்தரவர்க்கத்தினரிடம் காய்கறி விற்பவரிடமும் பால்விற்பவரிடமும் கேனத்தனமாய் சிரித்து வைத்து கடன் சொல்லவேண்டியிருக்கு..
இன்னமும் சிலகாலமாகும்.. சகஜநிலை திரும்ப..
முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தவறான நடவடிக்கை என்கிறார்..
எமர்ஜென்சியின் போது காமராஜர் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது #தேசம்போச்சு..
காவிகளின் கையில் சிக்கி தவிக்கிறது நாடு..
#இதுதான்_புதியஇந்தியா..
..
#சின்னபுள்ளவெள்ளாமை
..
#மனிதசங்கிலி_அனைவரும்பங்கேற்போம்
Saturday, November 19, 2016
மனிதசங்கிலி
சரியான நேரத்தில் சரியான போராட்டம்..
மக்கள் படும் அவதிகண்டு ஆள்வோரை எதிர்த்து அறவழியில் போராட்டம்.. திமுக அரசியல் இயக்கமாக செயல்பட்டாலும் வாக்கு அரசியலை தாண்டி மக்களின் பிரச்சனைகளை மயப்படுத்தி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதொன்றும் புதிதல்ல..
..
எதிர்க்கட்சிதலைவர் மாண்பிமை தளபதி அவர்கள் பணத்தை மாற்ற தெருவில் நிற்கும் மக்களை சந்திக்கிறார்.. அதிகாரிகளோடு கலந்துரையாடுகிறார்.. திமுக தன் கடமையை சரியாக செய்துக்கொண்டிருக்கிறது.. அல்லல்படும் மக்களின் அவசரதேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் கலங்கி நிற்கும் பொதுஜனத்தை ஆளும் அதிமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை.. அவருக்கு ஏற்படும் இடையூறுகளையெல்லாம் பற்றி கவலைபடாமல் ஒரு அரசு இயங்குவது மகா கேவலம்..
..
8ந்தேதி திடீரென அறிவித்து கடந்த பத்துநாட்களாக மக்கள் தெருக்களில் வீதிகளில் காத்துகிடக்கும் அவலம் மூத்திரப்பையை சுமந்துக்கொண்டு வரிசை நிற்கும் முதியவர்.. சரியாக திட்டமிடாமல் அவசரகோலத்தில் அள்ளிதெளித்த அலங்கோலமாய் நாடு சந்திசிரிக்கிறது.. இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து உலக பார்வையில் கேவலமான பார்வையை கடந்து நிற்கிறது..
இரண்டாயிரம் தாள் கிடைத்தும் மாற்ற வழியில்லை
காய்கறிக்காரர் பால்காரர் என அனைவரிடமும் கடன்பட்டு நிற்கிற அவலம்..
..
சிறந்த பொருளாதார வல்லுநர்கள்/நிபுணர்கள் மோடியின் நடவடிக்கையை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள் பல்வேறு ஏடுகள் இப்போதுதான் கண்விழித்து தவறை சரிச்செய்ய காலஅவகாசம் தரவேண்டுமென சொல்ல தொடங்கியிருக்கிறது..இந்தியாவில் மக்களிடம் தான் கருப்புபணம் இருப்பதை போன்ற தோன்றத்தை இந்த நடவடிக்கை காட்டுகிறது..
உண்மையில் பணம்படைத்தவர்கள் எப்போதோ மாற்றிவிட்டார்கள்..
இந்தியளவில் குஜராத்தில் தான் அதிகளவு பணமாற்றம் நடந்திருப்பதாக செய்திகள் வரதொடங்கியிருக்கின்றன.. ஏழைகளிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் கணக்கில் வராத பணங்கள் மாற்றப்பட்டு வெள்ளையாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திவர தொடங்கியிருக்கிறது.. .
..
பிற மாநிலங்களில் அரசும் ஆள்வோரும் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்..கேரளா போன்ற மாநிலங்களில் முதல்வரே தெருவில் இறங்கி போராடுகிறார். தமிழகத்தில் நடக்கும் #கள்ளஆட்சியில் யார் ஆள்கிறார்கள் என்றே தெரியாத சூழலில் பிரதான மக்கள் இயக்கமான திமுக பிரச்சனையை கையிலெடுத்து போராட்டத்தை அறிவித்திருக்கிறது..
இதை அனைத்துமக்களும் இணைந்து ஆதரித்து பங்களித்து கடமையாற்ற முன்வரவேண்டும்..
..
உச்சநீதிமன்றமே இந்த நடவடிக்கையை கண்டித்தும் மக்கள் புரட்சி ஏற்படுமென்று முன்னறிவிப்பும் செய்திருக்கிறது.. சரியான நேரத்தில் திமுகவினர் நடத்தும் போராட்டத்தைஆதரிப்போம்..
..
இனி
#நமக்குநாமே..
..
ஆலஞ்சி மன்சூர்
Friday, November 18, 2016
பக்கீர்
#வாழ்வியல்..
பக்கீர்மார்களை பற்றி நீண்டநாட்களாக எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன்.. அவர்கள் வாழ்வியலை பற்றி நிறைய விடயங்களை அறிந்தும் சென்று கண்டு ஆய்ந்தும் நிறைய பக்கீர்களிடம் பேசியும் பழகியும்.. அவர்களின் வாழ்வியல் சார்ந்த விடயங்களை அவர்களின் நெறிமுறைகளை ,கொள்கை கோட்பாடுகளை
கவனித்துமிருக்கிறேன்..
படத்தில் இருப்பவர்கள் லியாகத் அலி மற்றும் அலி..
இவரின் தந்தை ஹபிபுல்லாசா தான் எனது சிலம்பாட்ட குருநாதர்..எங்களுரை சேர்ந்த பக்கீர்மார்களில் தலைமையானவராக இருந்தார் இவரிடம்தான் ஊரிலுள்ள இளந்தாரிகள் சிலம்பம் கற்றுக்கொண்டோம்..
..
ரிஃபாய் த்ரிக்காவில் இருப்பவர்கள் பக்கீர்கள் என்றால் தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாதவர்கள் ..அடுத்த வேளை சோற்றிக்கு யாசித்து தின்பவனே பிராமணன் என்கிறதே இந்து மதம் அதைபோல .. இவர்கள் அனைத்தின் மீதும் ஆசையை துறந்தவர்கள் என்ற நிலைப்பாட்டில் வாழவேண்டும்..
..
பக்கீராக ஆகவேண்டுமெனில் .. நிறைய சடங்குகள் உண்டு அவையாவும் இப்போதெல்லாம் செய்யபடுவதில்லை இமை முடியை கூட எடுத்துவிட்டு மௌத்தை கபனிடுவதுபோல குளிப்பாட்டி கபனிட்டு இறந்தவரைப்போல அடக்கம் செய்யவேண்டும்.. சில நிமிடங்களுக்கு பிறகு வெளியில் எடுப்பார்கள் அப்படி செய்யபடுபவரே அவர்களில் பீர் ஆகும் தகுதியை பெறுவார்..
ஹபில்லாஷா குடும்பத்தில் அப்துல் அலிக்கு மட்டும் காரைக்காலில் நடந்தது..
..
இன்றைக்கு பக்கீராக வேண்டி அதிகம் மெனக்கடுவதில்லை யாரும் அந்த நிலைக்கு வர விரும்புவதில்லை என நினைக்கிறேன்.. தவ வாழ்க்கையென ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் இப்போது அதில் பெரிய வருமானமோ அல்லது மரியாதையோ கிடைப்பதில்லை என நினைத்து ஒதுங்கிக்கொள்கிறார்கள்.. அதைவிட இஸ்லாமிய மார்க்க வழிமுறைகளில் இதெல்லாம் இல்லை என்கிற கருத்து பலமாக எழுப்பபட்டதும் அது பெரிய தாக்கத்தை இவர்களில் ஏற்படுத்தி இவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்தது...
காலபோக்கில் மெல்ல மெல்ல பக்கீர் முறையிலிருந்து மாற தொடங்கி.. பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள்.. இவர்களை அந்தந்த ஊர்ஜமாத்கள் சரியான முறையில் கவனிக்காததும் இவர்களின் உரிமைகள் குறித்து கவலைபடாததும் .. இவர்கள் இந்த "தொழிலை" விட காரணங்கள் ஆனது..
..
சிலம்பாட்டம் குஸ்தி,சுருள்கத்தி என எல்லா விளையாட்டுக்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்..
யாசித்து உண்ணும் நிலை என்ற ஒன்று இவர்களின் வாரிசுகள் பின்தொடர மறுத்ததும் காலபோக்கில் இவர்களின் எண்ணிக்கை குறைய காரணமானது.. நோன்புகாலங்களை தவிர்த்து பெரிய வருவாய் எதுவும் கிடைப்பதில்லை ..
..
ரிஃபாய் தரிக்கா வில் இப்போதெல்லாம் சூஃபிக்கள் நிறைய வருவதில்லை இவர்களின் வாழ்வியல் கலாச்சாரம் முற்றிலுமாக மாறி பிற தொழில்களை நோக்கிய இவர்களின் பார்வையும் வருங்காலங்களில் #பக்கீர்மார்கள்.. யார் என தேடும்நிலையை ஏற்படுத்தும்.
ராகத்தோடும் இசையோடும் பாடும் திறன்பெற்றவர்களாக வீரம் விளையாட்டு சேவை மனபான்மையென உலகவாழ்வின் மீதான ஆசையை அதிகம் விரும்பதாவர்களாக.. காதிரியாவின் பின்ஜாமீன்களாக அறியபட்டவர்கள்
இப்போதெல்லாம்.. வெவ்வேறு மார்க்கத்தில்(பாதையில்) சென்றுகொண்டிருக்கிறார்கள்..
..
வரும் தலைமுறைகளுக்கு இவர்களைப்பற்றி செய்திகள் பெரிய ஆவலை தூண்டலாம்.. காரணம்
அப்போதெல்லாம் பக்கீர்களை பாரப்பது அரிதாகிபோகும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, November 17, 2016
பெண் ஆளுமை
பெண் ஆளுமைகள்.
குறிப்பாக எதிர்கருத்தாக்கங்களை கொண்டவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. நிறைய பெண்கள் குறிப்பிட வரையறைக்குள் தங்களின் பணி அல்லது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.. அவர்களுக்கென்று நிறைய தடைகளை அவர்கள் குடும்ப மற்ற சமூக பின்னணியே தருவதை பார்க்கலாம்..
..
அரசியலில் பெண்கள் மிக சொற்ப எண்ணிக்கையில்தான் பங்கேற்க முடிகிறது அதிலும் சில கட்டாயத்தின் பெயரில் இடஒதுக்கீடு போன்ற நிர்பந்தங்களால் சிலர் மீது திணிக்கப்படுகிறது..
சுயமாக எழ வாய்ப்புக்கள் மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல் தடையிடவும் செய்கிறது இந்த சமூகம்..
என் உறவினர் கூட தன் துணைவியாரை உள்ளாட்சியில் நிர்வாகத்தில் சுயமாக பணி செய்ய விடவே இல்லை.. பெண்களின் சுயசிந்தனைகள் பங்களிப்புகள் திறமைகள் மறுக்கபட்டு/மறைக்கபடுகின்றன என்பதுதான் உண்மை.. கடைசிவரை அந்த சகோதரியை சேர்மன் என்று யாரும் அழைக்கவில்லை
அவரது கணவரைதான் சேர்மன் என்றழைத்தார்கள்..
..
பெரிய பதவிகளை வகிக்க அல்லது பகிர்ந்துக்கொள்ள கருத்தை கேட்க அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை..திராவிட சிந்தனை பேசும் பெரியாரியம் பேசும் கட்சிகளில் கூட மிக மிக குறைவான பங்களிப்பையே காணமுடிகிறது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.. பகுத்தறிவு சமநீதி சமஉரிமை பேசும் திராவிட இயக்கங்களில் கூட இன்னமும் சரியான பிரதித்துவம் கொடுக்கபடவில்லை.
..
அத்திபூத்ததைப்போல சிலர் மட்டுமே அரசியலில் பொதுவாழ்வில் பங்களிக்கிறார்கள் அதனாலேவோ என்னவோ மாற்று கருத்தை கொள்கை முரண் கொண்டவர்களை கூட அவர்களின் பங்களிப்பிற்காகவே பாராட்ட போற்றவேண்டியிருக்கிறது..
ஜெயலலிதா மாயவதி மம்தா தொடங்கி சுஷ்மா கூட ..
இவர்களின் அரசியலை,
படுமோசமான நிர்வாகத்தை
அதிகாரஆணவத்தை அடாவடித்தனத்தை வெறுத்து எதிர்த்தாலும்.. இவர்களை சிறு புன்னகையோடு ரசித்திருக்கிறேன்
இவையனைத்தும் ஆண்கள் செய்வதில்லையா என கேள்வி வரும் மறுப்பதற்கில்லை அதையும் கண்டித்து எதிர்த்திருக்கிறோம் பெண்கள் என்பதால் பார்வை அதிகமாகிறது
அப்படியொரு ஆளுமைதான் திருமதி சுஷ்மாசுவராஜ் ..
..
உமாபாரதி/மம்தாவை போல எடுத்து வீசிவிட்டு வராமல் காத்திருந்து கொத்திக்கொண்டு போகும் புத்திசாலித்தனம் நிறைந்தவர்..இப்போது கூட உடல்நலம் பாதிக்கபட்டிருக்கிற சூழலில் கூட கிருஷ்ணனின் கீதையை பாடமாக்கவேண்டுமென்று அவர் கோரிக்கை வைக்கிறார்.. அவரின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்துவிட்டு எழுதுகிறேன்..
தன் உடல்நலபாதிப்பை கூட மறைக்காத அதை மக்களோடு பகிர்ந்துக்கொள்கிற நேர்மை ஜெயலலிதா போன்றோரிடம் எதிர்பார்க்கமுடியாது..
அரசியலில் நிறைய தவறுகளை (லலித்மோடிக்கு பரிந்துரை செய்ததுபோன்ற) எடுத்திருந்தாலும் அதை நாமெல்லாம் எதிர்த்திருந்தாலும் இவரை போன்றவர்கள் எதிர்மறை சிந்தனையாளராயினும் நிச்சயம் தேவை..
..
அரசியலில் பொதுவாழ்வில் பெண்ஆளுமைகள் நிறைய வரவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
விவரகேடு
தந்தை தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்துவைக்கிறார் இதில் என்ன தவறு என்கிறார்கள்..
தவறில்லை முறையான கணக்கோடு கூடிய வருமானத்தில் அவர் செய்துவைத்தால்.. யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை..
திரு.ஜனார்த்தன ரெட்டி இல்லத்திருமணத்தில் ₹500 கோடிவரை செலவு செய்யபடுவதாக சொல்லபடுகிறது..
..
கருப்புபண ஒழிப்பு என்றபெயரில் மகளின் திருமணத்திற்கு சிறுகசிறுக சேர்த்து வைத்த பணத்தை நகைவாங்க போனால் எங்கிருந்து வருவாய் வந்தது பான் கார்ட் எங்கே என்று கேட்க சொல்லும் அரசு.. விருந்தில் நடனமாடும் நடனசகோதரிக்கு .. ₹1 கோடி ரூபாய் பணம் என்ற செய்தி .. இவையெல்லாம் எப்படி வந்தது.. பணம் தட்டுபாடோடு மக்கள் அவதியுறும் நிலையில் சிலர் கட்டுகட்டாய் பணத்தை வைத்திருக்கிறார்கள்..செலவுசெய்கிறார்கள் அதுவும் செல்பி எடுத்து சமூகதளங்களில் பதிவுவேறு..
..
ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறப்பினர் பவானி சிங் ₹500₹1000 செல்லாது என அறிவிக்கப்படுவதற்குமுன் அது அதானிக்கும் அம்பானிக்கும் தெரியுமென்கிறார்..
பாரத வங்கி வராத கடனென்று சிலருக்கு கடனை எழுதிதள்ளிவிட்டது..பாமர விவசாயி நதிநீருமின்றி மழையும் பொய்த்துப்போய் நிர்கதியாய் நிற்கும் போது விவசாய கடனை ரத்து செய்ய மனமில்ல..
துள்ளியமான தாக்குதல் என கூறி மக்கள் மீதான கொடூரதாக்குதலை நடத்திவிட்டு தேசநலன் பாதுகாப்புஜ தேசபற்று என வாய்வீச்சில் பேசிக்கொண்டு திரிவது நகைப்பிற்குரியது..
..
நாடாளுமன்றத்தில் இந்த நிலைக்கு காரணமான அரசின் நடவடிக்கையை சத்தமாக எதிர்க்கவேண்டும் எதிர்க்கட்சிகள்.. கருப்புபணம் சாதாரண மக்களிடம் இல்லை கள்ளபணமும் கருப்புபணமும் அதிகமாக புழங்குகிற இடமாக குஜராத் திகழ்கிறது மார்வாடிகளும் குஜராத்தை சேர்ந்த சில்லறை வணிகர்களிடமும் நிறையளவில் கருப்புபணம் வெள்ளையாக மாற்றபட்டிருப்பதாக பிஜேபி எம்எல்ஏ வே சொல்கிறார்..
நாடாளுமன்றத்தில் பிரதமரை காணோம்.. வாக்கெடுப்போடு கூடிய விவாதத்திற்கு அஞ்சிகிறது அரசு.. இரண்டாடுகளாக பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை..
மேடைபேச்சை தவிர விவரம் ஒன்றுமில்லை
#விவரகேடு
..
பிஜேபி ஆட்களால் ஆடம்பர திருமணம் நடத்த முடிகிறது..கட்டுகட்டாக பணபரிவத்தனை செய்யமுடிகிறது..சாதாரண பொதுஜனம் ₹2000 தான் மாற்றமுடியும் அதுவும் கரும்புள்ளியோடு.. எனது பணத்தை நான் எடுக்க யாரிடம் நான் கேட்கவேண்டும்.
அவுசரியங்கள் என்பது எல்லோரையும் போல் மதிக்கப்படவேண்டுமென்பதற்காக வரிசையாக சென்று பெறலாமே தவிர அவர் எவ்வளவு எடுக்கிறாரோ அவ்வளவுதான் நானும் எடுக்கவேண்டும் அவ்வளவு தான் செலவு செய்யவேண்டுமென்பது .. சர்வாதிகாரம்..
..
என்பணம் என்உரிமை.. முறையாக சம்பாதித்து சரியாக வரிசெலுத்தியவன் அதை செலவு செய்யவும் உரிமையுண்டு. . என் தனிஉரிமையில் தவையிட அரசிற்கென்றில்லை யாருக்கும் உரிமையில்லை..
மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும்.. நம்மிடம் கிரிடிட்கார்டு இருக்கிறது என்கிற மனபான்மை நாளை நம்மையும் சரிவில் கொண்டுபோய் நிறுத்தும்..
..
#ஆடதெரியாவன்_வாசலைகுறைச்சொல்கிறான்..
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, November 16, 2016
ஜெயலலிதா...பாவம்
முதல்வர்.. நலம்
நீண்டநாட்கள் நிறைய கேள்விகளோடு சந்தேகங்களோடும் காத்திருந்தேன்.. மயக்கநிலையில் உள்ளவரிடம் கேட்டு என்ன பயன் என்பதால் மௌனமாய் கடந்து சென்றேன்..
திருமதி விசாலாட்சியின் மரணம் கேட்டு தொலைபேசியில் இரங்கலை தெரிவித்தவுடன் பூரண நலமென எண்ணி.. சிறிதாய் கதைக்கிறேன் .. களைத்துப்போயிருப்பீர்.. மேடம் ஜெயலலிதா
ஓய்வறியா ஓய்வே..
..
நாடு அல்லோல படுகிறது.. நீங்கள் அரைமயக்கத்திலிருந்தபோதே உதய் மின் திட்டத்தில்
தமிழகம் சேர்ந்துவிட்டது கட்டைவிரலை உருட்டி தேர்தல்படிவம் வரை மிக நேர்த்தியாக அரங்கேறிவிட்டது.. என்ன நடந்தாலும் பொம்மையாய் பன்னீர் பார்த்துக்கொள்வார்.. மருத்துவ நுழைவுதேர்வை எதிர்த்தீர் இனி இந்த வருடம் முதல் நுழைவுதேர்வாம்.. CBSE ல் படித்தவனும் நாட்டுப்புறத்தில் படித்தவனும் ஒரே நேர்கோட்டில்.. இனி ஏழைகளில் தகுதியிருந்தும் வாய்ப்பில்லை.. என்ற நிலை வரும்..
..
இத்தனை மயக்கத்திலும் இடைத்தேர்தலில் வாக்களிக்க சொல்லும் அரசியல் பிடித்திருக்கிறது..எவன் செத்தாலும் எனக்கு தேவை சோறு ..அவ்வளவுதான்.. உண்மையில் தாங்கள் ஆளவில்லை மாறாக மயக்கத்தில் ஆழ்த்தி யாரோ ஆள்கிறார்கள் என எங்களின் சிற்றறிவுக்கு படுகிறது..ஏனெனில் இதுவரை தாங்கள் வெளியிட்ட எந்த அறிக்கையிலும் கருணாநிதியை திட்டவே இல்லை இதிலிருந்தே யாரோ எழுதி உங்கள் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்..
..
ஐம்பது தினங்களில் அத்தனையும் மாறிபோய்விட்டது..
எதிரிகள் பலவீனபட்டிருக்கும் போது நாங்கள் போரிடுவதில்லை/எதிர்ப்பதில்லை.. இன்னும் நிறைய இருக்கிறது ஆனால் நீர்
களைத்துப்போய் இருப்பீர்.. கடைசியாக ..
மறுபிறவி எடுத்ததாக சொல்கிறீர்.. இந்துமதத்தின் மீது அதீதநம்பிக்கை கொண்டவர் நீங்கள்... #பாவம் செய்த ஆத்மாவிற்குதான் மறுபிறவி என்கிறது இந்து மதம்..
பாவங்கள் மன்னிக்கப்படட்டும்
விரைந்து வருக ..
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, November 15, 2016
டீக்கடை.. கடுப்பத்தில் தேநீர்..
ஏழைகள் குடிக்கும் ஸ்டாரங் டீ...
பிரதமர் மோடி..
கடுப்பத்தில் தேநீர் ஏழைகளுக்கு கொடுத்தே பழக்கப்பட்டவர் அதனால் தான் ஏழைகளின் இன்னல்கள் தெரியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் எனறு அறிவித்துவிட்டு ..இப்போது சப்பை கட்டுகிறார்.. பிபிசி செய்தி நிறுவனம் இதுபோன்று எந்தகாலத்திலும் இந்திய மக்கள் அவதியுற்றதில்லை என செய்தி வெளியிடுகிறது..
உலகவங்கியின் முன்னாள் பொருளாதார முதன்மை ஆலோசகர் கௌசிக் பாஸூ Collateral damage (இணை சேதம்) என்கிறார்..move could hurt india's economy
நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தை காயபடுத்தும்.. என்கிறார்..
..
மோடிக்கு வாய்சவடால் புதிதல்ல.. ஆரம்பம் முதலே இதைதான் செய்துவருகிறார்.. பொய் மிக சாதாரணமாக வருகிறது..திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடாது.. தவறென்று தெரிந்த பிறகும் அதிலேயே நிற்பது சருக்கிவிடும்..
ஏழைகள் விரும்புகிறார்கள் என்கிறார்..
People are suffering from the poor and middle class. Are not rich.. அவதிபடுவது ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்தான் பணக்காரர்கள் அல்ல..
நேற்றைய தினம் தொலைகாட்சி ஒன்றில் பேசியவர் காய்கறி வாங்க முடியவில்லை என்ற குற்றசாட்டிற்கு ரிலையன்ஸ் ல்டோர்களில் வாங்க வேண்டியதுதானே என்கிறார் பிஜேபியை சேர்ந்த #சமூகஆர்வலர்..
இதுதான் இவர்களின் பார்வை..
சிறுதொழில்கள் .. அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் நிலைதான் மிகவும் பரிதாபகரமானது..இதையெல்லாம் சொன்னால் தேசத்தின் மீது அக்கறைய்ல்லை என்ற அலப்பறை வேறு .. மக்கள் வரிப்பணத்தில் வாழ்ந்துக்கொண்டு..சலுகைகளை அனுபவிக்கிறவர்கள் ஏன் இதை பொறுத்துக்கொள்ளகூடாதென்ற கேள்வி வேறு..
வெறும் ₹7000 வருட செலவில் IIT ல் படிச்சிட்டு அமெரிக்காவில செட்டில் ஆன கூட்டம் இந்த வந்து தேசபக்தியை மக்கள் வரிப்பணத்தில சலுகையை பற்றி பாடம் நடத்துகிறது..
..
மக்கள் பயத்தில் சேமித்த பணத்தையெல்லாம் வங்கியில் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.. இதெல்லாம் கள்ளநோட்டுக்கள் அல்ல.. நல்ல பணம் வைத்திருப்பவன் நேர்மையாக க்யூவில் நின்று பணத்தை செலுத்தி இந்த நெறிகெட்ட அரசை கையாலாகாத அரசை மனதிற்குள் திட்ட்க்கொண்டே செல்கிறான்.. கள்ளபணத்தையும் கருப்புபணத்தையும்தான் உண்டியல்களிலும், ஆற்றிலுமே கொண்டுபோய் கொட்டுகிறான்..
அல்லது மொத்தமாக மாற்றிக்கொண்டு போய்விட்டான்
..
மோடியை எதிர்க்கிறவர்கள் ஏதோ தேசநலனிலே அக்கறையில்லாதவர்கள் போல கட்டமைக்கபடுகிறது
பிஜேபியை தவிர பிற கட்சிகள் காங் உட்பட ஊழல்கட்சியைபோலவும் போலி மதசார்பு என குரல் ஒலிக்கிறது.. ஏதோ பிஜேபி ஊழலில் ஈடுபடாததைபோல .. வியாபம் ஒன்றே போதும் இவர்கள் முகத்திரையை கிழிக்க ஆனாலும் ஊடகங்கள் அமைதி காப்பது.. இந்த சந்தர்பத்தை விட்டால் குறிப்பாக
உயர்பதவிகளில் #இவர்களால் அமரமுடியாமல் போகும்
என்பதாலேயே மௌனம் காக்கிறார்கள்..
..
120 கோடி பேரில் 16 பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்கிறார் எஸ்வி.சேகர்.. அதில் யாரும் பார்பான் இல்லையே அதனால் அவர் கவலைக்கொள்ளவில்லை..
இது ஒன்றே போதும் மோடியை தூக்கி கொண்டாடுபவர்களின் எண்ணத்தை வெளிகாட்ட..
மோடி இப்போது ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை நடத்தட்டும்.. மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என தெரியும்.. அலங்கோல ஆட்சி..
..
மோடியின்_துக்ளக்தர்பார்..
..
ஆலஞ்சி மன்சூர்
Sunday, November 13, 2016
நேர்மை
மக்கள் நேர்மையாக நடந்துக்கொள்ளவேண்டும்.. அருண்ஜெட்லி..
நேர்மையை பற்றி யார் பேசுவது .. ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜாமீனில் வீ்ட்டில் இருந்தபோது மரியாதை நிமித்தம் என்ற பெயரில் குற்றவாளியை சந்தித்த நேர்மையாளர்..மக்களை பார்த்து சொல்கிறார் நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள்..
சிஏஜி அறிக்கை வைத்து 2ஜி ல் பாராளுமன்றத்தில் சிலம்பம் ஆடியவர் தான் நிதியமைச்சராக ஆனவுடன் மத்திய தணிக்கைத்துறை( சிஏஜி) அறிக்கை தந்த போது அதை அரசியலாக்காதீர்கள் என்றவர்தான்.. நேர்மையை பற்றி ஜெட்லி பேசுவது தான் காலக்கொடுமை..குற்றவாளியை வீட்டில் சந்தித்து அனைத்து மரபுகளைகளையும் மீறி நீதியை வளைத்கொடிக்க காரணமாக இருந்தவர்.. ஒரு மத்திய காபினெட் அமைச்சரே அதிலும் நிதியமைச்சரே சந்திப்பதின் முக்கியத்துவம் உணராமல்.. குற்றவாளியை அமைச்சர் சந்தித்தால் வழக்கின் நம்பகதன்மை போய்விடுமே என யோசிக்காமல் நடந்திக்கொண்டவர். ..
..
பதினெந்தாண்டுகாலம் நடந்த வருமான வரி வழக்கை ஒன்றுமே இல்லாமல் தண்டனையில்லாமல் அபராதம் கட்டினால் போதுமென்று ஜெயலலிதாவிற்காக கரிசனம் காட்டியவர் நேர்மைப்பற்றி்பேசுகிறார்..
எதற்கும் ஒரு தகுதி வேண்டும் .005% சதவிகித கருப்புபணத்தை காரணம்காட்டி 15 லட்சம் கோடியை செல்லாதாக்கி நாட்டு மக்கள் கொண்ட நம்பிக்கையை செல்லாதாக்கியவர்கள்.. வாராகடன் கோடிகள் லட்சங்களில் விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை.. அதை வசூலிக்க முடியாமல் வாங்கியவர்கள் பெயரை
கூட வெளியிட முடியாத நேர்மை.. நிர்வாக திறனற்று வீதிகளில் கோடிகணக்கான மக்களை நிறுத்திவிட்டு மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும் என சொல்லி இன்னும் ATM இயந்திரம் வடிவமைக்கபடவில்லை வாரங்கள் ஆகுமென மாற்றிபேசும் நேர்மை...
..
அரசின் தலைவர் நாடு அல்லோலபடும்போது வெளிநாட்டில் இருந்துக்கொண்டு.. மக்களின் இன்னலைபற்றி கண்டுக்கொள்ளாமல்.. மக்கள் கோவ மொழியில் பேசுவதை கூட புரிந்துக்கொள்ளாமல் மக்கள் ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி என பொய்பேசி திரியும் அவலநிலை..
நேர்மையை பற்றி ...யார் பேசுவதென்றே விவஸ்தை இல்லாமல் போய்விட்டது..
..
மக்கள்நேர்மையோடுதான் இருக்கிறார்கள் செய்த தவறை உணர்ந்து .. மௌனமாய்.. புரட்சி செய்யாமல்.
..
#சாத்தான்கையில்_வேதபுத்தகம்..
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, November 12, 2016
கள்ளநோட்டு கள்ள அரசியலும்
அவசரகோலம்..
மூன்று நாட்களுக்குள் ₹2000 நோட்டில் கள்ளநோட்டு வந்துவிட்டதாக தகவல்.. எவ்வளவு உண்மை என்பதைவிட ,சாத்திய கூறுகள் ஆராயபடவேண்டும்..
இந்தி உருது மொழிகளில் எழுத்துப்பிழை இருப்பதாக சொல்லபடுகிறது..
..
முதலில் நிர்வாக திறன் இல்லாத அரசு.. இவர்களின் ஒற்றை பலம் மதவாதம்..திட்டமிட்டு செய்யபடாத எதுவும் சரியான பலனை தராது.. ₹400 கோடி கள்ளபணத்தை ஒழிக்க ஒன்றரை லட்சம் கோடி பணத்தை செல்லாதென்று அறிவித்த கேடுகெட்ட அரசாங்கம்..
ஒரு நாட்டின் பணம் செல்லாதென்று அறிவிப்பது பிரதமரே அறிவிப்பது திவாலான அரசிற்கே பொருந்தும்.. திரும்ப பெறபடும் என அறிவித்து 1978 ல் திரு.மொராஜி தேசாய் செய்ததை போல செய்திருக்கவேண்டும்..
..
பணம் வெளியிட படுவதற்குமுன் கத்தை கத்தையாய் குஜராத் மார்வாடிகளின் சென்றதன் மாயம் விலகவில்லை அதற்குள் எழுத்துப்பிழையாய் ஒரு அரசாங்கம் கரண்சியை வெளியிடுவது எவ்வளவு பெரிய அவமானம்.. நோக்கம் கள்ளபணத்தை ஒழிப்பதாக இருந்தால் நடைமுறையில் திரும்ப பெறுதல் என்ற காலஅளவிற்குள் செய்து முடித்திருக்கமுடியும்..
ஒரே நாளில் ₹58 ஆயிரம் கோடி SBI மட்டும் டெபாசிட் செய்யபட்டிருக்கிறது..இந்த மூன்று நாட்களுக்குள் 1-1/2 லட்சம் கோடி மக்கள் டெபாசிட்டில் செலுத்தியிருக்கிறார்கள் இவ்வளவு யாருக்காக முதலீடு செய்ய உதவபோகிறது என்பது தான் இங்கே முக்கியம்..
..
ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த பணபரித்தனையை கேலிகூத்தாக்கிவிட்டு அள்ளிதெளித்த அவசரகோலத்தில் எழுத்துப்பிழையோடு கூடிய நோட்டுக்கள். இதோ இதில் கள்ளநோட்டே அச்சடிக்கமுடியாது நோட்டில் சிப் இருக்கு என்று ஓவர் அலப்பறைகள்.. இப்போது கள்ளநோட்டை அரசே அடிக்கிறதாஅல்லது அரசிற்கு வேண்டிய #பரிவார்கள் அடிக்கின்றனவா.. மூன்றே தினங்களுக்குள் மக்களிடம் இன்னமும் புதிய நோட்டுக்கள் சென்றடைவதற்கு முன் கள்ளசந்தையில் கருப்பு பணம்..
மோடி சர்க்கார்.. வார்த்தை ஜாலத்திலேயே அரசை நடத்திட முடியுமென நினைக்கிறார்..
..
ப.சிதம்பரம் சொன்னதை போல மோடியின் பொருளாதார அறிவு ஸ்டாம்பின் பின்புறத்தில் எழுதிவிடமுடியும்.. மிகசிறந்த நிர்வாகிகளை வேண்டாமென்று வைத்து அம்பானி குமாஸ்தாவை கவர்னராக்கினால் .. கார்ப்பரேட் அரசாங்கம் தான் நடக்கும்.. முன்கூட்டியே குஜராத்தி மார்வாடிகள் கையில் புதிய ரூபாய் நோட்டுக்கள் கள்ளபணத்திற்கு வழிவகுக்காதா..
..
#நாடுஎரிகிறது_பிடில்வாசிக்கிறான்மன்னன்…
ஆலஞ்சி மன்சூர்
Friday, November 11, 2016
நகை மோகம்
இரண்டு லட்சத்திற்குமேல் நகை வாங்கினால் பான்கார்ட் அவசியம்.. அப்படி இல்லாமல் விற்றால் நகை கடைமீது நடவடிக்கை...
பிரபல நகைக்கடை (கார்ப்ரேட் நிறுவனம்) ஊழியரிடம்(நண்பர்) பேசிக்கொண்டிருந்தேன் .. என் மகள் திருமணத்திற்கு நகை தேவைபடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் என்னிடம் பான்கார்ட் இல்லை வாங்கமுடியாதா... எப்படியோ கடன்வாங்கி சேமித்துவைத்ததையும் சேர்த்து 20 சவரன் வாங்கவேண்டுமெனில் எப்படி வாங்குவது என்றேன் .. சிரித்தார்..
..
இப்போது யார் வரியோடு நகைவாங்குகிறார்கள்.. நகைக்கு ரசீது வாங்குகிறவர்கள் மிகவும் குறைவு 6 சதவிகிதம் பேர் கூட வாங்குவதில்லை.. மொத்தமாக கடைசியில் விற்றதில் பகுதிக்கு பில் போட்டு கணக்கு காட்டுகிறார்கள் என்றார். இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு அரசாங்க புள்ளிவிவரத்தை விட மூன்று மடங்கு வியாபாரம் ஆகிறதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம் என்றார்..
இனி இதெல்லாம் முடியாதே என கேட்ட போது இன்னும் சுலபமாகுமென்றார்.. புரியவில்லையென்றேன்..
..
10 சவரன் நகைகளை(பெரிய நகைகள்) குறைத்து கணக்கில் கொண்டுவந்துவிடுவார்கள் கணக்கில் வராத தங்கங்கள் பெரிய நகைகளுக்கு பயன்படுத்தப்படும்..
அதிகளவில் சிறு நகைகள் கணக்கில் காட்டி வரிசெலுத்தப்படும்.. தங்கத்தின் மீதான மோகம் குறிப்பாக கீழைநாடுகளில் அதிகம் .. தங்கம் வாங்குவதைப்பற்றி அறியாமை இன்னும் தீர்த்தபாடில்லை சேதாரம் கணக்கு வாடிக்கையாளருக்கானது என்ற அறிவு கூட இல்லை..
சாதாரண நகைக்கடை வியாபாரிகள் கார்ப்பரேட்டுகளாக மாறிய பின் நகைக்கடை மீதான அரசாங்கத்தின் பார்வை கரிசனத்தோடு தான் இருக்கிறதென்றார்..
..
நகை கூலி நிர்யணம் அவர்களே முடிவெடுக்கிற நிலையை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை ஒரு பவுன்நகைக்கு ஒருகிராம் என்கிற ரீதியில் வாங்கிகிறார்கள் இவையெல்லாம் வருமானவரி கணக்குகளில் வருவதில்லை.. 12% பெற்றுக்கொண்டு வெறும் 5 அல்லது 6 சதவிகிதம் மட்டுமே விற்பனைவரியாக செலுத்துகிறார்கள்.. பகுதி நகையை கணக்கில் இல்லாமலும் பகுதி நகைக்கு குறைந்தளவு வரியாகவும் செலுத்துகிறார்கள். மூன்றுவிதமான வரிநிர்யணம் செய்யபடுகிறது .. குறைந்தளவு நகைகளுக்கு வரிகள் குறைவாக இருந்தும் அதை வாடிக்கையாளர்ரளுக்கு தருவதில்லை மாறாக செய்கூலி என 30% சதவிகிதம் வரை செலுத்தவேண்டியிருக்கிறது .. இவை செய்வதற்கான கூலியாக item based உருப்படி செய்கூலி என செலவினத்தை காட்டி வரியிலிருந்து விலக்கு பெற முடியுமென்றார்..
..
ஆம் இந்திய நகை வர்க்கத்தில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் தங்களுக்கு பில்வேண்டாமென்று சொல்லிதான் நகைவாங்குகிறார்கள்.. இதுகூட வரிஏய்ப்புதான் .. இது குறித்த விழிப்புணர்வெல்லாம் மக்களிடமில்லை...
சில கோமாளித்தனமான அரசின் நடவடிக்கைகளால் மக்கள் வேறு வழியின்றி தங்கத்தை நோக்கி ஓடுகிறார்கள்.. அதை கடைக்காரன் பயன்படுத்திக்கொள்கிறான்..
சாதாரண நகைவியாபாரிகளை கார்ப்பரேட்டுகளாக்கிய பெருமை நம்மையே சேரும்..
..
இந்த அரசின் முடிவால் ..மக்கள் நகைக்கடைகளை நோக்கி செல்கிறார்கள்
ரியல்எஸ்டேட்டில் நிறைய கெடுபிடிகள் மண்ணை காப்பதில் கூட நிறைய சிரமங்கள்
அதனால் மக்கள் பொன் மீதான ஈர்ப்பு அதிகமாகிறது
..
சும்மாவா சொன்னார்கள்.
#ஒன்னுமண்ணுலபோடு_இல்லேன்னாபொன்னுலபோடு.
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, November 10, 2016
செல்லாகாசு
1978 ல் திரு.மொராஜி தேசாய் 5000 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்றார்.. கள்ளபணத்தை ஒழிக்கமுடியவில்லையென காரணம் சொன்னார்..
78 களில் ₹5000 ₹1000 என்பதெல்லாம் பெரியதொகை சாதாரண மக்களிடம் இருக்காது அதனால் பெரியளவில் தாக்கத்தை /பாதிப்பை தரவில்லை
..
ஏறக்குறைய 38 ஆண்டுகள் பின்னிட்டும் கள்ளநோட்டுகளை கள்ளபணத்தை ஒழிக்கமுடியவில்லை..
திரு.மோடி உருக்கமாக பேசி நாட்டுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொள்ளவேண்டுமென்கிறார் நன்று
சிரமங்கள் சாதாரண இந்தியனுக்கு பழகியதுதான்..
ஏனெனில் அவன் மட்டுமே பாதிக்கபடுகிறான்.
பெருத்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரியகாரியமே அல்ல. இந்த நடவடிக்கையால்
கள்ளபண புழக்கத்தை இது சரிசெய்துவிடுமா என்றால் இல்லையென்றே பதில் வரும் .. காரணம் பணிவர்த்தனையை இலகுவாக்கியிருக்கிறார்.. ₹2000 நோட்டுகள் அதிகளவில் கடத்த மாற்ற வகை செய்யும் .. ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு பிறகு சர்வசாதாரணமாக மக்கள் கைகளில் வந்துவிடும்....
வரி ஏய்ப்பு செய்து கள்ளபணமாக வைத்திருப்பார்கள் என நம்புவது எவ்வளவு கிறுக்குத்தனம்.. எலேலோருமே பினாமிகள் பெயரில் சொத்துக்களாக #asset ஆக வைத்திருப்பதே சாத்தியம் அல்லது தங்கங்களாக..
பணமாக வைத்திருக்கமாட்டார்கள் .. நேற்றையதினம் ஏழையும் நடுத்தரமும் தான் தெருவில் நின்றது..
பெரும் முதலைகளை கிரிடிட்கார்டுகளில் காலம்தள்ளுபவர்கள் தெருவிற்கு வரவேண்டிய அவசியமில்லை..
..
இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு சிலருக்கு தெரியுமென்கிறார்கள் அந்த சிலர் யார் நிச்சயமாக நீங்களோ நானோ பக்கத்துவீட்டுபரமசிவனோ அல்ல..#அறியவேண்டியவர்கள்_அறிந்துக்கொண்டார்கள்
இந்த நடவடிக்கையால் அம்பானிகளும் அதானிகளும் பாதிக்கபட்டிருப்பார்கள் என நினைத்தால். நாம் தான்
கூறுகெட்டவர்கள் அம்பானி வேலைக்காரன் ரிசர்வ் பேங்க் ஆளுனராக இருக்கும் போது காத்து #கருப்புக்கள் அண்டாது..
நேர்மையாக வரிசெலுத்தாதவன் தானாக வந்து வாழ்த்துச்சொல்கிறான்..கருப்பு வெள்ளையும் கலந்து நிற்பவன் .. நம்முன் நடிக்கிறான்..
..
ஒரே நேரத்தில் பில்லியன் கணக்கில் பணம் வங்கியை தேடிவருகிறது இத்தனை பணத்தை யாருக்கெல்லாம் கடனாக தரபோகிறது என்பதை கொஞ்சம் கவனித்தால் இதன் நோக்கம் புரிந்துவிடும். . அம்பானிகளும் அதானிகளும் தொழில் தொடங்க இனி பணத்திற்கு பஞ்சமில்லை...ஜனநாயக நாட்டில் ஜனநாயக வழியில் ஒரு சர்வாதிகாரம்.. நினைத்ததும் முடிக்கலாம்.. ஒன்றுமட்டும் உண்மை..
ஏழைகளில் சேமிப்பு செல்லாகாசானது
..
#பெரும்தொழில்அதிபர்கள்_ஆட்சிசெலுத்துகிறார்கள்.
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, November 9, 2016
50வதுநாள்
#50வதுநாள்...
..
ஐம்பது நாளாகிவிட்டது முதவ்வரை பார்த்து ..
இருக்கிறார் கண்ணில் தென்படவில்லை..பார்த்ததாக பார்க்கபோனவர்கள் சொல்லவில்லை.. பூரணநலமென்றார் மறுநாள் வேறொரு சேதி சொல்கிறார்.. கண் விழித்து பார்த்தவர் நாட்டுமக்களை நலம் விசாரித்ததாக புரளி கிளம்புகிறார்கள் அப்படியெனில் இதுவரை மயக்கத்திலேயே இருந்திருக்கிறார் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள்.. நாட்டில் நடக்கும் விசயங்கள் முதல்வருக்கு தெரியாமல் .. நடக்கின்றன ..
..
யார் ஆட்டுவைக்கிறார்கள் என ஊடகங்களோ அல்லது சம்பந்தபட்டவர்களோ சொல்வதில்லை .. ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகிறது திரு.ஸ்டாலின் சொன்னதைப்போல காணொளி ஆட்சி நடத்தியவர்கள் காணாமல் ஆட்சி நடத்துகிறார்கள்..
மருத்துமனையிலிருந்து தேர்தல் வியூகம் வகுக்கிறார் என்றெல்லாம் சொன்னது பொய் முதல்வர் அனுமதியோடு இலாக்காக்கள் பன்னீருக்கு கொடுக்கப்பட்டதென்பது பொய்.. தண்ணீர் கேட்டார் .. கதைசொன்னார் என்ற கதைவிட்டவர்கள் எங்கே கண் விழித்து தமிழக மக்கள் எப்படியிருக்கிறார்கள் என்றாராம்.. நெய்வடிகிறது கதையாக..
..
ஆட்சி நடக்கிறது ஆள்பவர் யாரென்றே தெரியவில்லை
சில சக்திகள் பின்னின்று இயக்குவது ஆபத்தானது நாளை நடக்கும் சீரழிவுகளுக்கு பொறுப்பேற்காமல் தப்பித்துக்கொள்வார்கள்.. ஜெயலலிதா முகத்தை காட்டாமல் அல்லது அவர் பேசி ஏதேனும் செய்தியை நாட்டுமக்களுக்கு சொல்லாமல் இவர்களாக ஆளுக்கொரு கருத்தை பேசுவது கேலிகூத்து மட்டுமல்ல ஜனநாயக விரோதம்..
..
கண்விழித்து கட்டைவிரல் மசியைப்பற்றி கேட்டார் என்றால் கூட நியாயமிருக்கும் மக்களைப்பற்றி விசாரித்தாராம்..
வரவர காமெடி செய்ய தொடங்கிவிட்டார்கள்..முதலில் முதல்வரை காட்டுங்கள்.. மற்றதெல்லாம் பிறகு பார்ப்போம்
..
#நடிகையின்நாடகம்எப்போதுமுடியும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Monday, November 7, 2016
சாயம்வெளுத்த செஞ்சட்டை
அறிவியல் பூர்வமான சமூக விஞ்ஞானமான மார்க்சிய தத்துவமே, இந்தியா சந்திக்கும் சவால்களில் இருந்து விடுதலை அளிக்கும்.
இடது கம்யூ தமிழ்மாநில பொதுசெயலர் ஜி.ராமகிருஷ்ணன்..
இந்த பொதுவுடமைவாதி எங்கே நிற்கிறார் என்று பாருங்கள் இவர்களின் தத்துவத்திற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..
இந்தியாவில் மார்க்சியம் தோற்று வெகுநாட்களாகிவிட்டது இந்த தோழருக்கு தெரியவில்லைபோலும்.. ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் வங்கத்தை ஆண்ட இவர்களால் மனிதனை மனிதனே இழுக்கும் இழிவிலிருந்து மீட்க முடியவில்லை..
பொதுவுடமை சித்தாந்ததிலிருந்து வெகுவாக கரைந்து மறைந்து போனார்கள் ...
உலகெங்கும் கம்யூனிஸம் வெகுவாக மறைய தொடங்கும் வேளையில் ராமகிருஷ்ணனின் பேச்சு சற்று நகைச்சுவையாக தோன்றுகிறது உலகமயமாக்கல்/தாராளமயமாக்கல் நோக்கிய உலகநாடுகளில் அதிவேக பாய்ச்சல் தொழிலாள வர்க்கத்தை மிகவும் அடிமைத்தனத்திற்கு அல்லது மிருகத்தைவிட கேவலமாக நடத்தபடுகிற நிலைக்குதான் கார்ப்பரேட் நடந்துக்கொண்டிருக்கிறது/நடத்திக்கொண்டிருக்கிறது.. இதை கம்யூனிஸ நாடுகள் கூட பின்பற்ற தொடங்கிவிட்ட காலகட்டத்தில் ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்..
..
இந்திய வர்த்தக சந்தையை குறிவைத்து உலகின் பிரபல கார்பரேட்டுகள் வியாபார அரசியலை செய்துக்கொண்டிருக்கிறார்கள் .. விரும்பியோ விரும்பாமலோ மக்களும் அதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போது மார்கிசியம் பேசுகிறார்..கொள்கை அரசியலிருந்து பின்னோக்கி பயணிக்கும் ராமகிருஷ்ணனும் சகாக்களும்.. இந்தியாவிற்கு ஏற்றது மார்க்சியம் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது. கேரளாவில் இடதுசாரிகள் எல்லாம் கார்பரேடுகளோடு கைகுலுக்கி சந்தை செய்கிறார்கள் வங்கத்திலோ புறக்கணிக்கப்பட்டு.. அவர்களின் #தீதியோடு கைகோர்த்துவிட்டார்கள்..
..
இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் மதவாதம் ஆனால் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரிக்கும் சிலரோடு கைகோர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள் இந்திய சந்திக்கும் சவால்களுக்கும் அதுவும் அறிவியல்பூர்வமான சமூகவிஞ்ஞான பூர்வமான சவால்களுக்கு தங்களின் சித்தாந்தமே சரியென்கிறார்..
இந்தியாவில் தோல்விகண்ட கம்யூனிஸம்.. கம்யூனிஸ்ட் உச்சபட்ச அதிகார மையத்தில்/சபையில் (பொலீட்பீரோ)
இருப்பவர்களை /இருந்தவர்களைஒருமுறை கவனித்தாலே போதும் உயர்மட்டத்தில் உயர்வகுப்பினரே ஆட்சி செலுத்துவார்கள் .. பொலீட்பீரோவில் ஒரு பெண் வருவதற்கு கூட விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.. இவர்கள் பேசும் பொதுவுடமை என்பது #நோக்கு_கூலி ரகம்..
அதிலும் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பொதுவுடமையின் போலிகள்..
..
#சாயம்வெளுத்த_செஞ்சட்டை…
..
ஆலஞ்சி மன்சூர்
பாமக எனும் கட்சி
பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல
பதிவு செய்துக்கொண்ட கட்சி மட்டுமே தேர்தல்ஆணையம்..
..
இந்நிலைக்கு யார் காரணம் .. சமுதாய கட்சியாக தொடங்கப்பட்டு அது மக்கள் முன் எடுபடாமல் போக சாதீய நிழலிலிருந்து இறங்கி வருவதாக காட்டி விடுதலைச்சிறுத்தைகளோடெல்லாம் இணைந்து செயலாற்ற போவதாக சொல்லி ஏறக்குறைய தங்கள் சமுதாய மக்களிடமும் பிற சமுதாய மக்களிடமும் பிறகட்சி தலைவர்களிடமும் இணக்கத்தை காட்டி முகமூடியோடு வலம் வந்தபோது பாமக என்கிற கட்சி.
வடமாவட்டங்களில் மக்களிடையே கொஞ்சமேனும் செல்வாக்கை பெற்றிருந்தது சில தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கிற சக்தியாக திகழ்ந்தது..ஆனால் அந்த மயக்கம் பதவிஆசையை விதைத்தது..
..
மக்களிடையே ஜாதிய வெறியை ஊட்டி சிறிய ஒற்றைப்பட்ட சம்பவங்களை முன்னெடுத்து கொலை குடிசை எரிப்பென வளர்க்க முற்பட்டு அந்த சூட்டில் வெற்றிபெற்றவுடன் ஆசை கண்ணை மறைத்தது.. அதே வெறியாட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்திய பிற சமுதாயத்தையும் கூட்டுக்கழைத்தபோதே சொந்த சமுதாயமும் கைவிட்டது அறியாமல் போனார்.. வள்ளலாரும் படையாச்சியும் செய்த சமுதாய தொண்டுகள் குறுகிய சாதீய எல்லைக்குள் இல்லையென்பதை மறந்து போனார்கள்..
..
சிறிய வெற்றி மிகப்பெரிய தலைக்கனத்தை தந்தது தன்பலமறியாமல் ஆடுகிற ஆட்டம் புறந்தள்ளி குழித்தோண்டி புதைத்துவிடுமென அறியாமல் போன செயல் முற்றிலுமாய் கரைத்துக்கொண்டுபோனது..
ஆரம்பம் தொட்டே கொடுக்கும் வாக்கில் உண்மையில்லாதது மக்களிடம் செய்து கொடுத்த வாக்குறுதியை /சத்தியத்தை மறந்து தலைகால் புரியாமல் ஆடிய ஆட்டம் கடைசியில் உள்ளதும் போன கதையானது..
கட்சியின் அங்கீகாரம் போய் நிறைய இடங்களில் கட்டிவச்சகாசும்(டெபாசிட்) போய் லெட்டர்பேட் நிலைக்கு வந்திருக்கிறது பாமக..
..
விதைத்தது தானே முளைக்கும்.
..
ஆலஞ்சி மன்சூர்
Sunday, November 6, 2016
தமிழக அரசியல் ..
இருபெண்மணிகள்..
எம்ர்ஜென்ஸியை கொண்டுவந்த காங்கிரஸோடு கூட்டணி வைத்துக்கொண்டு பாஜகவை விமர்சிக்ககூடாது தமிழிசை..
நாளுக்கொரு பேச்சு பேசுபவர் வைகோ.. பிரேமலதா..
..
தமிழிசை கூற்று சற்று யோசிக்க வைக்கும்... அவசரநிலை பிரகடனத்தை ஏதோ திமுக ஆதரித்துபோல தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்
Maintenance of Internal Security Act
மிசா கலைத்தில் மத்திய அரசை கடுமையாக எதிர்த்தவர் கலைஞர்.. திமுக அதற்காக ஆட்சியை கூட இழக்கவேண்டியிருந்தது .. காமராஜரை கைது செய்யவேண்டுமென்ற திருமதி இந்திராவின் கோரிக்கையை நிராகரித்தார்.. காமராஜரே கவைஞருக்கு ஆதரவளித்த காலமது.. இந்திரா மிசாவை கொண்டுவந்ததற்காக வருந்தி அதற்காக மக்களிடம் மன்னிப்பை கேட்டார் அதற்கு பிறகு திமுக அவரை பின்துணைத்தது.. அப்போது கருத்துசுதந்திரம் நசுக்கப்பட்டபோது ஜெயபிரகாஷ் நாராயணனோடு சேர்ந்து இந்திராவை எதிர்த்தவர் தான் கலைஞர்.. இந்திராவே ஆதரவென்றாலும் எதிர்பென்றாலும் அதை கடுமையாக செய்பவர் கருணாநிதி என்றார்.. இன்றைக்கு ndtv க்கெதிரான தடையை கருத்துச்சுதந்திரத்தின் மீதானதாக்குதலாக கருதவேண்டியிருக்கிறது.. இது எதிர் கருத்தை சொல்பவர்கள் மீது திரும்பும் /எச்சரிக்கும் செயலாக மாறும்.. ஆரம்பத்திலேயே கடும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும்.. அதைதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் கருத்துசுதந்திரத்தை எதிரான செயலாக கருதி எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்..
..
தேமுதிகவின் பிரேமலதா வைகோவை பற்றி சொன்ன கருத்தில் உடன்படவேண்டியிருக்கிறது தினம் தினம் தன் கருத்தை கொள்கையை வேகமாக (பச்சோந்தியைவிட) மாற்றிக்கொண்டிருக்கும் வைகோ சிறுதும் நம்பகதன்மையற்றவராக அரசியலில் தரம்தாழ்ந்து போய்விட்டார்.. கருத்துக்களை மாற்றிச்சொல்வதொன்றும் அரசியலில் புதிதல்ல அது நடைமுறை அரசியலில் ஏற்படும் மாறும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில மாறுபட்ட கருத்துக்களை சொல்வதுண்டு.. ஆனால் சட்டென்று மாறும் தன்மையுடையவராகவே வலம்வருகிறார்.. எதிர்மறையான கருத்தைகொண்டவர்களை கூட சட்டென்று உயரத்தில் தூக்கிவைத்து கொண்டாடுவதும் திடீரென தூக்கி வீசி ஏசுவதும் அதிவேக கொள்கை/ கருத்து மாற்றத்தை மாறி மாறி பேசுகிறவர்களை தமிழகம் மட்டுமல்ல இந்திய அரசியலில் எங்கும் கண்டதில்லை.. மோடியின் உருவில் பெரியாரையே பார்த்தவர்.. கலைஞரை,ஜெயலலிதாவை, புகழ்ந்தும் இகழ்ந்தும் இவ்வளவு வேகமாக யாரும் கருத்துச்சொன்னதில்லை.. சேருமிடத்திற்கு தகுந்தாற்ப்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
#அரசியல்பச்சோந்தி..
..
#தகுதியில்லாத_கட்சிதலைமைகள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, November 5, 2016
நிறம்மாறிய காம்ரேட்
அதிமுக கேட்டுக்கொண்டால் மூன்று தொகுதிகளிலும் மநகூ ஆதரிக்கும்..
காம்ரேட் முத்தரசன்..
முன்பெல்லாம் பொதுவுடமை கட்சி தேர்தலை ஜனநாயகத்தின் அளவுகோலாக கொண்டு நடந்தது.. சில ஆயிரங்கள் கூட வாக்குகள் இல்லாத தொகுதிகளில் கூட ஆளும்கட்சியை எதிர்த்து களம்கண்டிருக்கிறது.. அதெல்லாம் தோழர் ராமமூர்த்தி நல்லகண்ணு காலத்தோடு முடிந்துபோன கதையானது..
கம்யூனிஸ்ட் மீதான எனது மரியாதை தா.பாவின் வரவிற்கு பிறகு மங்கிப்போனது ஒரு சிலர் தோழர்கள் இன்றைக்கும் வட்டாரம் சார்ந்த விடயங்களில் ஒழுங்காக நேர்மையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்..ஆனால் அவர்களை கம்யூனிஸ்ட் பார்ட்டியே அங்கீகரிப்பதில்லை.. ஆனால் அவர்களின் பணி தொடர்ந்துக்கொண்டுதானிருக்கிறது..
..
மநகூ வின் நோக்கத்தை இப்போது முழுமையாக மக்கள் உணர்ந்துக்கொண்டிருப்பார்கள்.. இவர்கள் கட்சி நடத்தவரவில்லை மாறாக கம்பெனி நடத்துகிறார்கள்.. இவர்களை மக்கள் புறக்கணித்து நீண்ட நாட்களாகிவிட்டது.. தமிழகத்தின் இவர்களின் வளர்ச்சியில் குறிப்பிட்டளவு பங்கு கலைஞரையே சாரும் தேவைக்கதிகமாக தூக்கிவைத்து கொண்டாடியதும் அவர்களுக்கு அதிமுக்கியத்துவம் தந்ததும் சரியானதல்ல... இந்த விடயத்தில் ஜெயலலிதாதான் சரி.. மூக்கறுத்து அவர்களின் நிலையை உணரவைத்து கடைசியில் தரகர் அளவிற்கு கொண்டுவந்து சில கட்சிகளுக்கு சின்னமே கிடைக்கமுடியாமல் போக காரணமாக இருந்தார்.. அவர்களும் வளர்ப்பு நாயைப்போல வாலாட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..
கம்யூனிஸத்திலிருந்து காசு பார்க்க கற்றுகொடுத்த #குருவிற்கு விசுவாசமாக இவர்கள் வாலாட்டுகிறார்கள்.
..
தமிழகத்தில் ஒருசில தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி திருப்பூர் என சிலதொகுதிகளில் கொஞ்சம் செல்வாக்காக இருந்தவர்கள் இராமகிருஷ்ணன் தா.பா வரவிற்கு பிறகு முழுவதுமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறார்கள்..இவர்களின் எதிர்காலம் குறிப்பாக கம்யூனிஸத்தின் எதிர்காலம் தமிழகத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி..
வருத்தம் மேலிட்டாலும் அதுதான் உண்மை..
#பொத்தல்காசு_செல்லாமல்போய்காலம்குறையஆகிவிட்டது.
..
#காம்ரேட்டுகளில்_கருப்பாடுகள்..
The black sheep of the Communists..
..
ஆலஞ்சி மன்சூர்
பெரியார் மானமுள்ளவர்களின் வழிகாட்டி
இனியும் பெரியாரை சுமக்க முடியாது சீமான்..
பெரியாரை யாரும் சுமக்க தேவையில்லை பெரியார் சுமந்தால்தான் இன்றைக்கு கொஞ்சமேனும் நரம்பு புடைக்க பேசிகிறாய்.. இல்லையெனில் கும்பிடுறேன் சாமி என்று குனிந்துக்கொண்டுதான் இருப்பாய்.. பீகாரை போல உ.பியை போல நடுத்தெருவில் நாயைவிட கேவலமாக அடித்து துரத்தப்பட்டிருப்பாய்..
..
பெரியார் எப்போது சொன்னார் என்னை பின்பற்றுங்கள் என்று என்னை தலையில் தூக்கி கொண்டாடுங்கள் என்று.. நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றுதான் சொன்னார்.. அவர் சொன்னதெல்லாம் கொஞ்சம் விவரம் உள்ளவனுக்கு அதெல்லாம் உன்னைப்போன்ற விவரகேடுகளுக்கு புரியாது..
..
பெரியார் மட்டும் தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லையென்றால்.. உன்னை உன் உரிமையை உனக்கானதை உன்னை கேட்காமலேயே சுரண்டுகிறான்..எல்லா உயர்விலும் அவன் அமர்ந்துக்கொண்டு உன்னை மாட்டைவிட கேவலமாக நடத்துகிறான் .. கடவுள், மதம்,ஜாதி,வர்ணம் எனச்சொல்லி அவன் மட்டுமே உடம்பு வளையாமல் வலிக்காமல் எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பறித்து அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.. எனச்சொல்லி சுயமரியாதையோடு வாழ சொன்னவன் இந்த பெருங்கிழவன்..
..
பெரியார் நினைத்திருந்தால் எல்லா உயர்பதவிகளையும் அடைந்திருக்கமுடியும்.. சமுதாய மாற்றத்தை சமூகநீதியை எல்லோருக்குமான சமநீதியை.. ஏற்றஇறக்கமில்லா சமஉரிமையை எல்லா மனிதனும் சமமாக நடத்தப்படவேண்டும் எல்லாருக்கும் பொதுவானதாக கடவுள் ,நீதி இருக்கவேண்டும் என விரும்பியவர்.. பெரியாரை போல ஒருவரை இந்தியா கண்டிருக்காவிட்டால் இன்னமும் அடிமைத்தனத்தில் ஊறி வளைந்த முதுகோடுதான் நின்றிருப்பாய்.
..
#பெரியார்_மானமுள்ளவர்களின்_வழிகாட்டி..
Periyar's guide for those who honor…
..
ஆலஞ்சி மன்சூர்
Friday, November 4, 2016
ஸ்டாலின் தவிர்க்கமுடியாத சக்தி
ஸ்டாலினுக்கு தமிழக அரசியலில் வாய்ப்பு வருவது கடினம் தமிழிசை ..
வார்டு கவுன்சிலருக்கு நின்று கூட வெல்லமுடியாதவர் எதிர்கட்சித்தலைவராக கம்பீரமாய் நிற்கும் தளபதியை பார்த்து சொல்கிறார்..
ஒன்றுமட்டும் புரிகிறது.. திமுகவை எதிர்க்கும் அரசியல் மட்டுமே தமிழகத்தில் தங்களின் நிலைநிறுப்பை கொஞ்சமேனும் காப்பாற்ற பயன்படும்..மற்றொன்று கலைஞரை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென்கிற நிலையிலிருந்து இப்போது தளபதியை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென்கிற உண்மையை உணர்த்துகிறது.. உதிரிகட்சிகளில் செயல்பாடு..
..
திரு.ஸ்டாலின் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக தனிஇடத்தை அடைந்திருக்கிறார்..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை தலைமையேற்க தகுதியானரென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் நம் எதிரிகள்..
..
பாமக தேமுதிக மதிமுக பாஜக என எல்லாமே திமுக எதிர்ப்பு அரசியலை கையிலெடுப்பதிலிருந்தே அவர்கள் நிற்க கூட பலமில்லாமல் பரிதவிப்பது தெளிவாகிறது..
இந்த இடைத்தேர்தலை இவர்கள் புறக்கணிக்க அல்லது வேறொரு கண்ணோடத்தில் அணுகுகிறார்கள்..அதாவது திமுகவின் வெற்றியை தடுத்திட வேண்டும் வாக்கை பிரித்து அல்லது தேர்தலை புறக்கணித்து..
ஆனால் இவர்கள் எண்ணம் ஈடேறாது..
..
முதல்வர் வேட்பாளரென்று தங்களை கூறிக்கொண்ட அன்புமணியோ, விஜயகாந்தோ, சீமானோ, ஏன் இடைத்தேர்தவில் போட்டியிட்டு வெற்றிபெற கூடாது.. குறிப்பாக முதல் நாள் முதல் கையெழுத்து புகழ் அன்புமணி ஏன் நிற்கவில்லை அல்லது கிங் மேக்கரில்லை கிங் என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்ட கேட்பன் நின்றியிருக்கலாமே..
ஆள் கிடைக்காமல் கிடைத்தவன் தலையில் மிளகாய் அரைக்காமல் களம்கண்டிருக்கலாமே.. தமிழிசை கூட கச்சேரி செய்திருக்கலாம் .. போட்டி பலமாக புரபரப்பாக ரசிக்கும்படியாக பொழுதுபோகியிருக்குமே மக்கள் கவலைகளை மறந்து இவர்களின் கூத்தை ரசித்திருக்கலாம்..
..
மதம்,ஜாதி,குறுகிய சிந்தனை இவையெல்லாம் நீண்டநாள் நிலைக்காது அதுவும் தமிழகத்தில்.. இன்றைய சூழல் மிக ஆபத்தான பாசிசத்திற்கு தமிழகத்தில் மறைமுகமாக வழிஅமைத்துதர முயற்சிக்கும் அதிமுகவின் ஆட்சியாளர்கள் பொம்மையை போல நடத்தபடுகிறார்கள்.. ஜெயலலிதா எதிர்த்த மத்தியரசின் திட்டங்களையெல்லாம் சத்தமேயில்லாமல் நிறைவேற்றபடுகிறது.. மறைமுக ஆட்சியை பாஜக நடத்துகிறதோ என சில ஊடகவியலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.. பொம்மையை போல நடத்தபடுவதாக சொல்லபடுகிறது ..
இப்போது திமுகவின் வெற்றியும் வளர்ச்சியும் அதன் பங்கும் அவசியமாகிறது.. காலம் சரியான நபரை தான் தேர்வுசெய்து நம் முன் நிறுத்தியிருக்கிறது தமிழகமக்களின் நம்பிக்கையாய் வருங்கால வழிகாட்டியாய் வழிநடத்துபவராய் திரு.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார்.. இதனை பொறுக்கமுடியாமல் சிலர் ஏதேதோ உளறி ஊளையிடுகிறார்கள்.. இது கோவத்தின்/இயலாமையின் வெளிப்பாடு
இந்த உதிரிகளின் உளறல்களை புறந்தள்ளுவோம்..
..
#காய்த்துகனிந்தமரம்கல்லடிபடதான்செய்யும்
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, November 3, 2016
பேதைகளின் கூப்பாடு..
#நன்று..
தேமுதிகவை ஆதரிக்கபோவதில்லை திமுகவை தோற்க்கடிப்பதே நோக்கம்.. வைகோ
வாக்கை பிரித்து திமுகவை தோற்கடிப்பதே எங்கள் வேலை பிரேமலதா..
நன்று இப்போதுதான் சரியான பாதைக்கு வந்திருக்கிறார்கள்.. ஊசலாடிக்கொண்டிருக்கும் கட்சியை புதைப்பதென்று முடிவு செய்திருக்கிறார்கள்.. மக்கள் மிகதெளிவாக அறிந்துதான் இவர்களை கட்டிவச்சகாசை (டெபாசிட்) கூட கிடைக்காத தோல்வியை பரிசாக தந்தார்கள்..
..
இவர்கள் பேச்சு திமுகவின் வெற்றியை உறுதிசெய்கிறது களம் திமுகவிற்கு சாதமாக இருப்பதை காட்டிகிறது.. ஆளும்கட்சிக்கெதிராக அரசியல் செய்யாமல் இருப்பதலிருந்தே இவர்கள் அரசியல் கட்சி நடத்தவரவில்லை மாறாக வியாபாரம் செய்யவந்திருப்பது தெளிவாக தெரிகிறது..இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிராகதான் பிற கட்சிகள் தேர்தலை சந்திக்கும் இங்கே எதிர்கட்சிக்கெதிராக இவர்கள் முழங்குவதிலிருந்தே இவர்கள் காசிற்காக கட்சிநடத்துவது அம்பலமாகிறது..
..
வைகோவின் மதிமுக ஏறக்குறைய பிணமாக தெரிகிறது இனி உயிருட்டமுடியாது.. தேர்தல் அரசியல் என்பது இனி எக்காலத்திற்கும் வைகோவால் செய்திட முடியாதென்பது அவரின் பேச்சே நமக்கு உணர்த்துகிறது.. தேமுதிக என்ற கட்சி எதிர்காலத்தில் இருந்த இடமே தெரியாமல் போய்விடுமென நினைக்கிறேன் .. மதிமுக மற்றும் தேமுதிக தொடங்கப்பட்டபோது தமிழகமே இவர்கள் பின்னால் என்பதை போன்றத்தை ஊடகங்கள் கட்டமைத்தது ஆனால் மக்கள் சரியாக புரிந்து இவர்களை முழுவதும் ஒதுக்கிவிட்டார்கள்.. கட்டிவச்சகாசை கூட திரும்பபெற முடியாதவாறு மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்.. இதோ நாங்களும் இருக்கிறோம் என்ற கூச்சல்தானே தவிர வேறில்லை இவர்களிடத்தில்..
..
இவர்களின் கூப்பாடு ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறது.. திரு.ஸ்டாலின் என்கிற நபரின் வளர்ச்சியை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. இவர்களை அறியாமலே இனி ஸ்டாலினை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென நினைக்கிறார்கள்.. தவிர்க்கமுடியாத எதிர்க்கமுடியாத,பெருவளர்ச்சியை #தளபதி_ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது..மற்றொன்று இடைதேர்தல் திமுகவிற்கு சாதகமாக இருப்பதைதான் இவர்களின் பதைபதைப்பு சொல்கிறது. காட்டாற்று வெள்ளத்தை கை கொண்டு தடுத்திடவா முடியும்..
..
இவர்களின் கூப்பாடு..
#பேதைகளின்_வெற்று_கூச்சல்…
#Screamed_the_fatuous_and_ignorant..
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, November 2, 2016
கமல்....?
தனி நபரின் சொந்தவிடயங்களில் நாம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும். . எந்தயொரு செயலும் இந்த சமூகத்தில் மாற்றத்தை/ கேடை விளைவிக்காது என்கிற போது நாம் ஏன் தலையிடவேண்டும்.. ஒரு தனிநபர் என்வீட்டில் அழைப்புமணி calling bell வைத்திருக்கிறேன் என்கிற நாம் ஏன் எட்டிபார்க்கவேண்டும்.. திரு.கமல் கௌதமி இருவரும் give and take policy ல் கொடுக்கல் வாங்கல் கொள்கையில் வாழ்ந்து வந்தார்கள் இருவரும் பிரிகிறார்கள்.. இது முழுக்கமுழுக்க இருவரின் தனிப்பட்ட விடயம் இதில் கருத்துச்சொல்வது நையாண்டி செய்வது விமர்ச்சனம் செய்வது தேவையில்லாதது..
..
திருமணம் என்ற சடங்கின் மீது நம்பிக்கையற்ற ஒருவரின் வாழ்வில் அவர்களுக்கான பாதையை அவர்களே தேர்வு செய்து கொள்ளும் உரிமை அவர்களுக்குண்டு.. இரு கலைஞர்களின் கலைசார்ந்த விடயங்களை ,நடிப்பை, அவர்கள் சமூகத்திற்கு செய்த செய்கிற காரியங்களை, அவர்களின் இந்த சமூகம் மீதான பார்வையை நாம் விமர்ச்சிப்போம் விவாதிப்போம்.. முடிந்தால் கடும் கண்டனத்தை கூட பதிவு செய்வோம். அதுவரை தான் நமது எல்லை.. அவர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க யோசனை சொல்ல கருத்திட நமக்கு எந்த உரிமையும் அருகதையம் இல்லை..
..
ஆணுக்கென்று இங்கே வரையறை ஏதும் வகுக்கப்படவில்லை ஆனால் பெண்ணின் எல்லைகள் வகுக்க அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறது.. என்பதை தான் திருமதி கௌதமியின் கருத்து நமக்கு சொல்கிறது..
தன் மகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பிரிவதாக சொல்கிறார்..
ஆம் இப்போதும் இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஆணாதிக்க திமிரின் சாயல் இருக்கதான் செய்கிறது..
..
இருபது நூற்றாண்டை பின்னிட்டும் இந்த சமூகத்தின் பெண்கள் மீதான பார்வை நையாண்டியும் கேலியும் ஆனதாகவே இருக்கிறது..அவர்களின் உரிமைகள் நியாயங்கள் விருப்புவெறுப்புக்கள் பரிசீலிக்கவோ/ கேட்கவோ படுவதில்லை.. give and take policy இந்திய கலாச்சாரத்தோடு எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறது.. இங்கே திருட்டுத்தனத்தை /கள்ளத்தனத்தை கூட கௌரவமாக பார்க்கிற சமூக பின்னணியே இதற்கு காரணம்..
இது தவறா சரியா என்பதைவிட நிறைய மறைமுக தவறுகளுக்கு வழிவகுக்கின்றன..
..
தனிநரின் விருப்பு வெறுப்புகளை இந்த சமூகம் காட்டும் ஆர்வம் நல்ல பலவிடயங்களில் சமூகத்தின் மீதான அக்கறையில் காட்டினால் நல்ல சமுதாயத்தை கட்டமைக்கலாம்.. கமலின் நடிப்பை, அரசியலை, அவரின் சித்தாந்த கருத்துக்களை, நாம் கடுமையாக விமர்சிப்போம்.. கருத்திடுவோம் கண்டனத்தை பதிவு செய்வோம்.. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அல்ல..
..
#தனிநபர்உரிமைகளில்_தலையிடுவது_அநாகரீகம்…
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, November 1, 2016
லூசு...
#லூசு.
கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி குறித்து மாண்பிமை ஜெயலலிதா 1987 ல் கூறியது
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகியை ஆதரித்தார்
அப்போது ஜானகியோடு மல்லுக்கட்டிய ஜெயலலிதா சரோஜாதேவியை பார்த்து சொன்ன வாசகம் தான் மேலே உள்ளது
இந்த நேரத்தில் மற்றொன்றையும் கூற வேண்டும்..
ஜெயலலிதாவிடமிருந்து பிரிந்து வந்த அறந்தாங்கி திருநாவுகரசு... இப்போது ...கரசர் தமிழககாங்கிரஸ் தலைவர் ..
எம்ஜிஆர் அழைத்தபோது சரோஜாதேவி வந்திருந்தால் இன்றைக்கு ஜெயலலிதாவே கிடையாது..என்றார்
..
என்ன கொடுமை.. மகோரா மக்களை சினிமா மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிறார்..காரணம் தெளிவு பெற்றவர்கள் யாரும் அவரோடு இல்லை.. சிலர் இருந்தார்கள் என்றால் கலைஞர் மீதான கோபம் அல்லது பதவி மீதான மோகம் ..அதனால்தான் இருந்தார்கள்.. மகோரா சிறந்த தலைவர்களை உருவாக்கவில்லை காரணம் கவர்ச்சி என்ற மூலத்தனமே மட்டுமே கொண்டு அரசியலுக்கு வம்தவர்.. திமுகவை முக்கியமாக திராவிடகொள்கைகளை சிதைக்கவேண்டுமென்ற பாசிச ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளுக்கு ஒரு ஆள் தேவைபட்டால் அதனால் அவரை ஊடகங்கள் தலையில் தூக்கி கொண்டாடின..
..
திருமதி.சரோஜாதேவி அவர்கள் சொன்ன கருத்தின் மீது பெரிய யோசிப்பில்லை ஆனால் அவர் சொல்கிற போது சரியான விவரத்தையாவது சொல்லணும் அமெரிக்க மருத்துவரிடம் பேசினேன் என்கிறார் ஒருவேளை அப்போலோவில் அமெரிக்கர் பணி செய்கிறாரா என தெரியவில்லை.. அதைவிட கண்திருஷ்டி என்கிறார்.. நமக்கு நம்பிக்கையில்லாத விடயம் ஆனால் அதற்கு எதிர்வினை வந்தால் .. ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட சாலைதொழிலாளர்களின் சாபம் என்று சொன்னால் எவ்வளவு மடமையோ அதே மடமையை மூடத்தை சொல்கிறார்.. தன்னை லூசு என்றவர் உடல்நலிவுற்று இருப்பதுகண்டு வருந்துகிறாரே அந்த பெருந்தன்மை ஜெயலலிதா அறியாதது..
..
நல்ல வேளை எம்ஜிஆர் அழைத்து சரோஜாதேவி வராமல் இருந்தாரே இல்லையெனில் மும்முனைப்போட்டி மகோரா (எம்ஜிஆர்) வாரிசு யாரென்பதில் வந்திருக்கும்..
#காலக்கொடுமை..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Posts (Atom)