Saturday, March 31, 2018

காவிரி எமது உரிமை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் தேவை.. மத்திய அரசு.. சொல்லும் காரணம் தேர்தல் நடக்க இருப்பதால் அங்கே கலவரம் வரலாம் .. தேர்தல் நடைமுறைக்காக அல்லது ஒரு கட்சி பயன்பெறும்/பெறாதென்பதற்காக தீர்ப்பை நடைமுறைப் படுத்த மறுப்பது ..காலஅவகாசம் கேட்பது நீதிமன்றத்தை நீதியை கேலிகூத்தாக்கும் செயல் .. யார் வரவேண்டுமென்பதை அந்த மக்கள் முடிவுசெய்வார்கள் .. அதற்காக இருமாநில மக்களையும் ஏமாற்றும் மோசக்கார செயலை மத்திய அரசே செய்வது கவலையளிக்கிறது இந்திய ஒன்றியத்தை சிதைக்க மக்களுக்குள் பகையை வளர்க்க அரசு உதவுகிறதோ என்கிற அச்சம் எழுகிறது.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகம் கொந்தளிக்குமாம்.. அப்படியெனில் தமிழகம் வறண்டு சுடுகாடாய் போனால் பரவாயில்லையென பாஜக நினைக்கிறதா .. நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த எந்த மாநில அரசையும் கேட்கவேண்டிய அவசியமில்லை.. காரணம் நதியை எந்த மாநில அரசும் உரிமை கொண்டாட முடியாதென்று தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது.. கர்நாடகாவையோ அல்லது தமிழகத்தையோ கேட்க வேண்டியதென்ற கேள்வியே எழாத போது வாக்குவங்கி அரசியலை அப்பட்டமாக செய்கிறது பாஜக.. சிலர் ராகுல் தலையிட வேன்டும் ஸ்டாலின் தலையிடவேண்டுமென்றெல்லாம் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் அவர்களை கவனியுங்கள் யாரென்று தெரியும்.. .. முன்பெல்லாம் காவிரி தீரத்தில், கரையோரங்களில், பார்பனர்கள் அதிகளவில் குடியிருந்தார்கள் அக்ரஹாரங்கள் காவிரி கரையில் தானே அதிகம் இருந்தது.. காவிரியில் அதன் கிளை நதிகளில்தான் பார்பன குடியிருப்புகள் இருந்தன .. அதிகாலை குளித்துவிட்டு ஈரத்துணியோடு வலம்வருவார்கள் அப்போதெல்லாம் காவிரி பிரச்சனை வந்ததா.. இல்லையே.. தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரங்களில் பிற சாதியினர் குடியேற தொடங்கியதும் பார்பனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்துவிட்டு சென்றார்கள் .. அதற்கு பிறகுதான் காவிரி பிரச்சனை உருவானது இதன் பின்னணி குறித்து யாருமே எழுதுவதில்லை.. .. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாரியம் அமைப்பதை எதிர்க்கவில்லை என்னும் போது .. ஒரு தேர்தலுக்காக ஒரு ஜீவாதார உயிர்நாடி பிரச்சனையை நிறுத்தி வைப்பதென்பது அயோக்கியத்தனமான செயல் .. நண்பர் பிரசன்னா சொன்ன வார்த்தை பிரயோகம் எவ்வளவு சரியென்பதும் தமிழ் மக்களின் மீதான வன்மம் .. வஞ்சம் எப்படியெல்லாம் பழிவாங்க துடிக்கிறதென்பதும் தெரிகிறது.. தமிழ் மீதும் தமிழர் மீதும் நடத்தப்படும் தாக்குதல் ..இங்கே இருக்கிற மானங்கெட்ட அரசை வைத்துக்கொண்டு எதையும் செய்யலாமென்ற நினைப்பு .. இனி எந்தகாலத்திலும் பாஜக தமிழகத்தில் காலூன்றவே முடியாது .. அதை ஆதரிக்கும் அயோக்கியர்களும் இந்த மண்ணைவிட்டே துடைத்தெறிய படுவார்கள்.. .. எந்தவொரு நதியின் உரிமையும் .. வெள்ளப்பெருக்கில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கானதென்ற அடிப்படை உரிமை கூட தெரியாத மத்திய அரசு ..நயவஞ்ச நரித்தனத்தை நம் மீது காட்டுகிறது.. இனியும் பொறுப்பதிற்கில்லை.. காவிரி எமதுஉரிமை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment