Monday, March 12, 2018
வெற்றிடம்..
வெற்றிடம் வெற்றிக்கு இடம் என்று கல்கி முகப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது அதாவது பிராமணர்கள் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் வளர தொடங்கியது முதல் அவர்களின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் நின்று கடைசியில் ஒருவித பவ்யத்தோடு நடந்துக்கொண்டார்கள்.. குலக்கல்வியை கொண்டுவந்த ராஜாஜியை கீழிறக்கியவுடன் இனி தமிழக தலைமைக்கு பார்ப்பனரை வரவிடாமல் செய்யவேண்டுமென்ற அய்யாவின் திட்டத்தில் கர்மவீரர் காமராஜரை முதல்வராக்க முடிவு செய்த போது கட்சிக்குள்ளும் வெளியேயும் எதிர்ப்பு வருமென காமராஜர் சொன்னபோது.. எதிர்த்தால் நான்தானே எதிர்க்கணும் .. எப்படி ஜெயிக்கவைக்கணுமென்று எனக்கு தெரியுமென்றார் பேராசான் பெரியார்..
அதை தொடர்ந்து .. காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் .. பார்பனர்கள் மெல்ல தனது சூழ்ச்சியை எம்ஜிஆரை வைத்து ஆரம்பித்து குறிப்பிட்டளவு தங்கள் நினைத்ததை சாதித்தாலும் திராவிடத்தை தாண்டிய சிந்தனையை விதைக்கமுடியவில்லை...தொடர்ந்து பார்பன ஜெயலலிதாவை கொண்டுவந்தும் ஓரளவு பயனடைந்தார்கள்...ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட வெற்றிடம் அதை எங்கே சசிகலா &கோ களீபரம் செய்துவிடுமோ என அஞ்சி வழக்கும் தீர்ப்பும் விரைநிது நடத்தி சிறையாக்கி அடிமைகளை கொண்டு ஆட்சி நடத்திட்டாலும் .. அது நீண்டநாள் நிலைக்காதென்றறிந்து .. ரஜினியை களமிறக்க திடிடம் வகுக்கிறார்கள்.. குருமூர்த்தி கூட ஒருஓரத்தில் ரஜினி மறு ஓரத்தில் மோடி போட்டா போட்டா போதும் வெற்றி கிடைத்துவிடுமென பேசுகிறார்.. இப்போது கல்கி அதை தொடர்ந்து செய்தியை கசியவிடுகிறது ..
..
இது ஒருவகை தந்திரம் .. ரஜினி வந்தால் வெற்றி கிடைத்துவிடுமென அடிக்கடி சொல்லி வந்தால் வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய ஏதுவாக இருக்கும் என்று திட்டம் தீட்டலாம் ..ஆனால் இங்கே ரஜினியை காமெடியாக்கி கொண்டிருக்கிறான் மிஸ்டர் பொதுஜனம்..
காவேரி தண்ணீர் பிரச்சினை குறித்து ரஜினி காந்த் கருத்து கூறவில்லை. பல விஷயங்களில் ரஜினி காந்த் எந்த கருத்தும் கூறாமல் நழுவி வருகிறார் என்கிறார் கமல் ஹாசன் தமிழ்நாட்டில் முறையாக கட்சி ஆரம்பித்து அரசியல் செய்ய வந்தவராக அறியமுடியவில்லை. வேறு யாருடைய மறைமுக உத்தரவை அமல்படுத்த வந்தவர் போன்று தான் ரஜினி தெரிகிறார்...இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான் .. ஆர்எஸ்எஸ் சொல்படி வாலாட்டுகிறவர்
..
இவர்கள் நோக்கம் இதுதான் வெற்றியல்ல மாறாக எக்காரணம் கொண்டும் உண்மையான திராவிட ஆட்சி வந்துவிட கூடாது திமுகவின் வெற்றியை தடுத்து மீண்டும் அடிமைகளின் ஆட்சியை தொடர வழிவகை செய்வது அவர்களுக்கே தெரியும் .. நீண்ட திட்டமிடல் நடத்தியும் பெரியாரின் சிலையை தகர்ப்போம் என்றதற்கே ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்தது .. எந்தநிலையிலும் நேரடியாக அதிகாரமென்பது பகல்கனவு தான்.. அதனால் வாக்குகளை பிரிக்க இப்போதிலிருந்தே திட்டமிடல் தான் .. வெற்றிடம் வெற்றிக்கான இடம் என்ற பினாத்தல்.. கவனமாக இவர்களை களைகளை போல பிடிங்கியெறியவேண்டும் இல்லையேல்.. பயிர் வீணாகும்..
சிறிய இடைவெளி போதும் .. இன்னும் பத்தாண்டுகளுக்கு உயர்பதவிகளில் அவாள்களே நிரம்பிவிடுவார்கள்.. உனது உரிமை பறிபோய்விடும்.. இப்போதே அடிமைகளை வைத்து அபாரமாக இடத்தை நிரம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. நாம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்..
விழித்துக்கொள் ..
..
#எச்சரிக்கை
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment