Thursday, March 1, 2018

ஸ்ரீதேவி எனும் தேவதை

ஸ்ரீதேவி.. மரணம் நிறைய பேசபடுகிறது.. ஆரம்பத்தில் அய்யகோ என்றவர்கள் அவர் இரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது அறிந்து நிறைய பொங்கிவிட்டார்கள்.. அவரது உடலுக்கு தேசியகொடியா என கேள்வியில் முடிந்தது ஸ்ரீதேவியெனும் கலைஞியின் பயணம்.. .. முதலில் ஒரு தனிமனுஷியின்.. வாழ்வில் நடந்தேறிய விடயங்களை நாம் கேள்வி கேட்க முடியாது அவரின் அன்றாட பழக்கவழக்கங்கள் நம்மை சமூகத்தை பாதிக்காதவரையில் நாம் யார் அவரின் சொந்த விடயங்களைப் பற்றி பேச கருத்திட .. ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு சாதாரண கிராம பின்னணியில் பிறந்து .. பார்பனர்கள் ஆதிக்க நிறைந்த சினிமாலில் நுழைந்து தன் மழலை மொழியில் நம்மை கட்டி போட்டு .. தனித்துவத்தோடு நிலைநின்று .. கன்னியாய் அறிமுகமாகிய போது கவர்ந்திழுக்கும் அழகும் அதோடு சிறந்த நடிப்பு திறனும் ..அன்றைய முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றிக்கு பெரிதும் உதவியது.. ஸ்ரீதேவி என்ற நடிகையின் உழைப்பும் திறமையும் மட்டுமே சில நடிகர்களை சூப்பர் அந்தஸ்திற்கு உயர்த்தியதென்றால் அது மிகையில்லை.. .. ஒரு பெண் ..சாதாரண குடும்பத்திலிருந்து மிகப்பெரிய சினிமா தொடர்பில்லாத சூழலில் திரை உலகில் நுழைந்து அசாத்திய திறமையால் வென்ற கதை.. நிறைய வெற்றி படங்களுக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தியென.. முக்கிய காரணிய திகழ்ந்தவர்.. கதாநாயனுக்கு இணையாக கட்அவுட் வைக்கப்பட்டதெல்லாம் ஸ்ரீதேவிக்குதான்.. அவரின் திறமையை சரியாக அங்கீகரிக்காத அரசு.. அவரோடு இணைந்து நடித்தவர்களை உயர்த்திப்பிடித்ததெல்லாம் நாடறிந்த கதை.. ஸ்ரீதேவியின் இந்தி நுழைவு அதுவரை தென்னகத்திலிருந்து சென்ற சில நடிகைகளைப்போல அல்லாமல் மிகப்பெரிய திருப்பத்தை தாக்கத்தை ஏற்படுத்தியது.. வசூலில் புதிய உச்சத்தை தொட்டதெல்லாம் அப்போது பேசபட்டது.. .. நம்மை மகிழ்வித்த கலைஞர்.. அசாதாரண சூழலில் இருந்து உச்சத்தை தொட்ட பெண்.. அழகும் கவர்ச்சியும் மட்டுமே உயரத்திற்கு கொண்டுபோகாது மாறாக அசாத்திய திறமை மிக முக்கியம்.. அந்த திறமையாளருக்கு அரசு செய்கிற மரியாதை.. சில அரசியல் தலைவர்களை போல ..பொய்பேசி திரியவில்லை மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை நியாயபடுத்தவில்லை.. எத்தனையோ தலைவர்கள் மது அருந்திவிட்டு.. கவர்னர் மாளிகையிலேயே கூத்தடித்திருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் அரசு மரியாதை செய்திருக்கிறது.. ஆனால் ஸ்ரீதேவிக்கு செய்வதை மட்டும் நாம் விமர்சிப்போம்.. .. காலம் கடந்தும் சினிமா உலகம் பேசும் பெண்மணி ஸ்ரீதேவி.. .. Aalanci Spm

No comments:

Post a Comment