Wednesday, March 21, 2018

காக்கும் வண்ணம் கருப்பு

பெரியார் படம் பொறித்த கருப்பு சட்டையில் தமீமுல் அன்சாரி.. .. ரத யாத்திரையை அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பை சட்டமன்றத்திலே பதிவு செய்த போது கொஞ்சம் மிகையாக தோணலை தந்தது ஆனாலும் அவரின் உணர்வை நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும் .. அரசியலில் சந்தர்ப்பவாதிகள் சிலர் உண்டு அந்த வகையை சேர்ந்த அன்சாரி .. இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாக தம்மை காட்டிக்கொள்கிற .. தமுமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி கண்டு உடனேயே ஜெயலலிதா தயவில் சட்டசபை உறுப்பினராகிய அவரின் நேர்மை..? நமக்கு வியப்பை தரும்.. உணர்ச்சிகரமான பேச்சாற்றால் சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரிந்த கொள்கை புடலங்காயெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாமென்று வாய்ப்பை பயன்படுத்துகிற ஒரு இளைஞர்.. நேற்றிலிருந்து பதிய வேசம் கட்டியிருக்கிறார்.. ஆனால் இந்த முறை கொஞ்சம் தெளிவு பிறந்திருக்கிறது யாரை துணைக்கழைக்க வேண்டும் யாரோடு பயணிக்கவேண்டும் யார் பெயரை சொன்னால் எதிரிகள் அஞ்சுவர் என்று அறிந்து கடைசியில் வந்து நிற்கிறார்.. இனியும் மாறலாம் அதுபற்றி கவலையில்லை.. அபயமென்று வரும் போது கரம் கொடுப்பது எமது பண்பு..,அதைதான் திமுகவும் செய்தது. .. தமிழக அரசியலில் சிலர் ..சில அமைப்புகள் மூர்ச்சர்சையாகி விழுகிறபோதெல்லாம் ஆக்சிஜனைப்போல திராவிடமும் பெரியாரும் தேவைபடுவார்கள் இங்கே மதம் கடந்து நம்மை காக்கும் பேராயுதமாய் திராவிடம் நிற்கிறது .. உண்மையில் இந்த மண்ணின் சாயம் வெளுக்காமல் இன்னமும் காத்துநிற்கும் பெரியாரெனும் பெரும் அரக்கர்.. அதனால் தான் ராமன் கூட வந்த சுவடு தெரியாமல் படுவேகமாக ஓடவேண்டியிருந்தது.. இங்கே யாருக்கும் ராம ராஜ்ஜியம் தேவையில்லை மாறாக ராமசாமி(பெரியார்) ராஜ்ஜியம் தான் தேவை.. எல்லா மதத்தவருக்கும் அவரவர் பின்பற்றும் கோட்பாடுகள் கொள்கைகள் எல்லாம் ஒரு வரையறைக்குள் நின்றுவிடும் அல்லது நிறுத்திவிடுவார்கள் மதம் சாதி சாயம் பூசப்பட்டு அதே மதத்தை சாதியை கொண்டு கல்லெறிந்து போவார்கள்.. ஆனால் இவை அனைத்தையும் எதிர்த்து நின்று ..ஏன் பகைவர்கள் நின்ற நிலையிலேயே மூத்திரம் போக செய்யும் ஒரு மந்திரசொல் உண்டு அதை நீங்கள் கையிலெடுத்தால் மட்டுமே எதிரிகள் அலறுவதை காணமுடியும் அந்த சொல் திராவிடம்.. நீங்கள் யாரை துணைக்கழைத்தாலும் இங்கே புதைக்குழியில் புதைத்துவிட்டு போய்விடுவார்கள்.. பகைவர்கள் அஞ்சும் ஒருவர் உண்டெனில்.. மறைந்தும் நம்மை எதிர்களால் களவாட முடியாமல் காத்துநிற்கிற ஒரே தலைவர் பேராசான் பெரியார்தான்.. அவரை கொண்டு நடந்தால் மட்டுமே இங்கே மரியாதையோடு வாழ முடியும்.. .. சில சாதிவெறியர்கள் உறுதி அனுமதி பெற்றுதானே யாத்திரை என்று பேச தொடங்கியிருக்கிறார்கள்.. எத்தனையோ மத ஊர்வலங்கள் .. பிரச்சாரங்கள்.. தேரோட்டம் உரூஸ் குருத்தோலை என்று அவரவர் மதத்தின் நிலைபாட்டில் உறுதியாய் அதனினும் அமைதியாய் நடத்துகிறார்கள் அதை யாரும் எதிர்ப்பதில்லை .. அதுபோல அல்ல இந்த ரதம் .. அது புரிவதற்கு சாதீய சிந்தனையிலிருந்து வெளியே வரவேண்டும் மதத்தில் சாதியில் நின்று பேசுவோருக்கு .. பாஜகவின் செயல்பாடுகள் விளங்க அது தரும் கேடுகள் உணர வெகுகாலமாகும் .. நெருப்பு அடுத்த வீட்டில் தானே எரிகிறதென்று நமக்கென்ன வந்ததென எண்ணி அமைதியாக இருந்தால் .. நெருப்பு நம் வீட்டையும் தின்றுவிடும்.. மத சாதி தீயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நமக்கு எப்போதும் தேவைபடுபவது ..பெரியாரும் திராவிடமும் தான்.. .. .. #காக்கும்_வண்ணம்_கருப்பு.. .. Aalanci Spm

No comments:

Post a Comment