Wednesday, March 7, 2018

பெரியாரெனும் பெருந்..தீ

பெரியார்.. இந்த மண்ணில் .. சாதீய ஒழிப்பை முன்னெடுத்து அதற்கு தடையாக இருக்கிற மதம் கடவுள்.. அதிகாரவர்க்கம் ...எல்லாவற்றையும் போட்டுடைத்தவர்... இந்த மண்ணில் பெண்களின் மீது திணிக்கபட்ட கொடுமைகளை அநீதிகளை களைய வேண்டி அவர்களும் ஆண்களைப்போல எல்லா உரிமைகளையும் பெறவேண்டுமென ..குறிப்பாக பெண்கள் கல்வி கற்று யாரையும் சாராது தன்னம்பிக்கையோடு நிற்கவேண்டுமென விருப்பியவர்.. அதற்காக போராடியவர் .. அவரே சொல்கிறார் உங்கள் ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்களுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலைபார்த்தாவது படிக்கவையுங்கள் என்றார் அந்தளவிற்கு ஆண்களைவிட பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்பதிலே கறாராக இருந்தார்.. அதனால் தான் இன்று பெரியாரின் சிலையை உடைப்பேனென சொன்னவுடன் அதிகளவில் பெண்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள்.. .. அவர்தான் வருத்தம் தெரிவித்துவிட்டாரே என சப்பை கட்டுகிறார்கள்.. முதலில் அவர் தான் அதை செய்யவில்லை எனது அட்மின் செய்தாரென சொல்ல கூட நாடோட வேண்டியிருக்கிறது ..பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் மதிப்பிட்டு பாஜக களமிறங்க அவரின் பன்முகம் இப்போது அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.. பெண்ணடிமைக்கு எதிரான களமாடியவர்.. சாதி ஒழிப்பு.. சமூக விடுதலை சமூக நீதி...அனைவருக்கும் சமமான உரிமை.. விளிம்பு நிலை மக்களுக்காக.. பிற்படுத்தபட்டோரின் உரிமைகளை பாப்பான் சுரண்டுவதற்கு எதிராக..சுயமரியாதையோடு வாழ சொல்லி தந்ததென பல்வேறு முகங்கள்/களங்கள்..அவரின் தொலைநோக்கு காலங்கடந்தும் பேசிக்கொண்டே இருக்கிறது.. .. இப்போது கூட வருத்கம் தெரிவிக்கும் போது தேவரை துணைக்கழைத்து வருகிறார்.. அவருக்கே தெரியும் அவர் இனத்தில் துணைக்கு வர எவனும் இல்லையென்று உண்மையிலேயே அவருக்கு தேவர் மீது அக்கறை இருக்குமானால் உயர்க்கல்வியில் OBC க்கு வழங்கபட்ட 27% இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு கண்டனத்தை ஏன் பதிவு செய்யவில்லை போராடவில்லை.. அந்த OBC தானே தேவரினமும் வருகிறது.. எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது அவர் எடுக்கும் தற்காப்பு தானே தவிர வேறொன்றும் அக்கறையில்லை.. எப்போதெல்லாம் தங்களுக்கு ஆபத்து வருகிறதோ.. தங்கள் சித்தாந்ததிற்கு ஆபத்தோ அப்போதெல்லாம் அவர்கள் துணைக்கழைப்பது சாதீயம் தான் .. இப்போது வருத்தம் தெரிவித்தது கூட தெரியாமல் நடந்ததற்காக அல்ல.. மக்கள் வெகுண்டெழுந்ததும்.. குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டுமென்ற குரல் ஓங்க தொடங்கியதும் மடைமாற்று செய்ய தேர்ந்தெடுத்த வழி.. ஓடியொளிதல்.. .. இறுதியாக எந்த வடிவில் வந்தாலும் இங்கே பெரியாரின் தந்து விட்டு சென்ற நெருப்பு கனல்.. அணையாமல் தனத்துக்கொண்டே தான் இருக்கும்.. தீ.. பிடித்தெறிய தொடங்கினால் சாம்பல் கூட மிஞ்சாது.. பெரியாரின் பெருந்தீ..ஆம் தீ..தின்றுவிடும்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment