Sunday, March 4, 2018
ரௌத்திரம் பழகுவோம்
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரைக்கான வாய்ப்பு வரும்போது எத்தனைக் கூச்சல்கள் இடை மறித்தாலும் ‘தம்’ கட்டி, பேச நினைத்ததை முடித்துவிட்டுத்தான் உட்காரும் மோடியை பார்த்திருக்கிறோம். அதேசமயம் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் புகார்களுக்கும் பதில் சொல்லும் சவாலை இதுவரை ஏற்றுக் கொண்டவர் இல்லை மோடி..
காவிரி மேலாண்மை வாரியம் : மவுனமே மோடியின் ஆயுதம் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்..
..
விவாதங்களுக்கு பயந்த ஒரு பிரதமர் மோடி மட்டும் தான் .. பொதுமேடைகளில் 56 இன்ச் மார்பை விரித்து .. உரத்தகுரலில் கதைக்கிறவர் நாடாளுமன்றத்தில் விவாதித்தால் ஓடி ஒளிந்துக்கொளிகிறாரே ஏன்.. நாடாளுமன்றத்தில் கூட யாரையும் எதிர்கேள்வி கேட்கவிடாமல் பேசி முடித்துவிட்டு அமர்ந்ததைதான் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டு சொல்கிறது.. மேடைபேச்சிற்கு நாம் என்ன பேசவேண்டுமென தயாரித்து வந்துவிடலாம். ஆனால் விவாதங்களில் எதிர்கேள்வி கேட்பானே குறிக்கிட்டு தவறை சுட்டிகாட்டுவானே .. இதெல்லாம் கைதட்டி ரசிக்கும் மேடை பார்வையாளனான மக்களிடம் இருக்காது .. அப்படி அவன் கேள்வி கேட்டால் கலாட்டா செய்ததாக அவன் மீது குண்டர் சட்டமே பாயும்..
..
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் மௌனம் வாக்கு அரசியலை மையமாக கொண்டது ஏப்ரல் மே மாதங்களில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தடுத்திட நினைக்கிறார்.. உச்சநீதிமன்ற தீர்ப்பையெல்லாம் மாநில அரசு மீறினால் அதன் மீது நீதிமன்ற அவமதிப்போடு மட்டுமல்லாமல் .. அரசை கலைக்ககூட அதிகாரம் இருக்கிறது அதாவது செயலிழக்க செய்து .. அதிகாரிகளை கொண்டு தீர்ப்பை நடைமுறை படுத்தலாம்.. ஆனால் இங்கே உச்சநீதி மன்றத்தின் மௌனத்தில் கள்ளம் உள்ளது.. இப்போது அறிவித்தால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கபடுவார்களென சிலர் பதிவிடுகிறார்கள். தேர்தல் முடிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் போராட்டங்கள் நடக்கதான் செய்யும் .. அதை சட்டத்தை கொண்டு அடக்கலாம்.. தமிழகத்தில் பந்த் General strike பொது வேலை நிறுத்தம் செய்தால் சட்டப்படி குற்றமென உயர்நீதிமன்றம் சொல்லிம் போது கர்நாடகாவில் கேரளாவில் நடக்கும் போது இந்த வார்த்தை பிரயோகங்களை நீதிமன்றங்கள் பயன்படுத்துவதில்லை..
எதிர்க்கட்சி தலைவர் சொன்னதைப்போல ஒட்டுமொத்த எம்பிக்களும் பதவி விலகலாம்.. ஒட்டுமொத்தமாக தமிழகமே ஸ்தம்பிக்க உறைந்துப்போக Paralyzed செய்யலாம்..
இப்போதைய நிலையில் யாரும் எந்த கட்சியும் பாஜகவை தவிர்த்து அதை எதிர்க்க முடியாது ..
பாஜகவை தனிமைப்படுத்த இது உதவும் ..
மோடியை இனியும் நம்புவதென்பது தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது.. அதிமுக அரசும் மோடியை பகைத்து கொள்ள மனமில்லாமல் தான் .. சந்திக்க மறுத்ததை கூட .. மறுக்கவில்லை துறை அமைச்சரை பார்க்க சொன்னார் என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.. ஏற்கனவே முடியாதென்வரிடமே பேச சொல்லும் திமிர் .. இந்த அடிமைகளால் எதுவும் செய்துவிட முடியாதென்கிற நிலையை உணர்ந்திருக்கிறார்கள்.. பிரச்சனையை பிரதான எதிர்க்கட்சி கையிலெடுக்கவேண்டும் அப்போதுதான் அது இந்தியளவில் பேசபடும்..
..
உச்சநீதிமன்றம் நதி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை யாரும் உரிமை கோர முடியாதென்ற பிறகு கர்நாடகவையோ தமிழகத்தையோ கேரளாவையோ பாண்டியையோ கேட்க வேண்டியதில்லை மத்திய அரசே நியமிக்கவேண்டும் அது சட்டபூர்வமாக அட்டவணையில் வரவேண்டும் அப்போதுதான் மீதமுள்ள காவிரி படுகையை.. நிலங்களை வயல்களை காப்பாற்ற முடியும்... இனியும் அமைதி காப்பதென்பது .. டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு செய்யும் அநீதி
விரைந்து கொஞ்சம் கடுமையான போராட்ட வழிமுறைகளை கையிலெடுப்போம்..
ரௌத்திரம் பழகுவோம்..
..
அரசியல் செய்வோம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment