Tuesday, March 20, 2018

இராவண லீலா

இனி.. இராவண லீலா .. ரத யாத்திரை என்ற பெயரில் ஒருவித பதட்டத்தை இந்த தமிழ் மண்ணில் நிறுவ முயற்சிக்கும் வேலை இது ஏன் ஊர்வலத்தை தடுக்கவேண்டுமென்றும் மற்ற மாநிலங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லையா என்றெல்லாம் கேள்வி எழுகிறது .. யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் இந்துக்களின் விரோதி என்கிறார் எச்சை ராசா.. முதலில் அவருக்கு நம் பதில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல லிங்காயத்துகள் போல தமிழர்களும் வெளியேறும் காலம் வெகுதூரத்தில் இல்லை சமணத்தையும் பௌத்தத்தையும் கூட அவன் இரவல் வாங்கியவன் பின்புதான் இந்து என்ற சொல் வந்து ஒட்டிக்கொண்டது.. பெருவாரியான மக்கள் எதிர்ப்பதால் அனைவருமே இந்துக்கள் அல்ல என்று ராசா பேச்சே உண்மையை சொல்கிறது .. பிற மாநிலங்களில் இதுபோன்று தினம் தினம் திட்டமிட்டு விசம கருத்துகளை பரப்பபடவில்லை இங்கே பலதரபட்ட மக்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கும் செயலை அனுமதிக்கமுடியாது.. ஏதோ இந்துக்கள் என்று தங்களை நம்புகிற மக்களின் உணர்வுகளை சிதைப்பதல்ல .. ஓடாத திருவாரூர் தேரையை ஓடவைத்தவர்கள் நாங்கள் அவர்களின் நம்பிக்கையை தகர்ப்பதல்ல நோக்கம் மாறாக அதையே காரணம் காட்டி மததுவேசத்தை பரப்ப அனுமதிக்க கூடாது .. முன்பெல்லாம் மத நல்லிணக்கம் பேணபட்டது அங்காளி பங்காளியா உறவுமுறைச்சொல்லி வாழ்ந்த மண் இது இங்கே மதவெறிக்கு இடமில்லை எப்போது பாஜக மதவெறியை மக்களிடத்திலே விதைத்ததோ.. அதற்கு பிற மதத்தவரை பயங்கரவாதிகளைப்போல .. மதமாற்றம் செய்யவந்தவர்கள் போல சித்தரித்து சூழ்ச்சி வலை பிண்ணியதோ அதிலிருந்து பாஜக சங்பரிவார் நோக்கம் என்னவென்று புரியும்.. .. நெல்லை மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார் .. 144 என்றாலே நான்கு பேர்களுக்கு மேல் சேர்ந்து செல்லவோ கதைக்கவோ கூடாது ஆனால் ஊர்வலமென்ற பெயரில் எப்படி காவிகள் ஊர்வலம் நடத்தலாம் அதுவும் சட்டப்படி குற்றம்தானே.. 144 தடை உத்தரவின் போது பிண ஊர்வலம் மட்டுமே அமைதியாக செல்லலாம்.. ஒருவேளை ரத யாத்திரையை #பிண_ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் கருதியிருப்பாரோ..? .. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை மீறி ஏன் புதிதாக கட்சி தொடங்கியிருக்க கமல் .. தொடங்க போகிற ரஜினி கூட இலைமறையாக எதிர்த்தாகிவிட்டது .. சாதிவெறியர்களை தவிர.. ஆனால் இந்த அடிமை அரசு எது செய்தாலும் கள்ள மௌனத்தோடு கடந்துவிடலாமென்று நினைக்கிறது இனி எந்தகாலத்திலும் பொதுவாழ்விற்கு வர முடியாதென்று தெரிந்திருந்தும் மக்கள் தூக்கியெறிவார்கள் அதுவரை இருப்பதை சுருட்டிக்கொள்ள எஜமானின் கருணை பார்வைக்காக.. ஏதேனும் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிவிடுவார்களோ .. ஆட்சியை கலைத்து விரட்டிவிடுவார்களோ என அஞ்சி தொடைநடுங்கி இந்த அரசு கேவலமான ஆட்சியை நடத்துகிறது.. .. பெரியார் சிலையை இரவில் வந்து தகர்த்திருக்கிறார்கள் ..கள்ளத்தனத்திற்கு பிறந்தவர்கள்.. முடிந்தால் பகலில் வந்து சிலை மீது கை வைக்கட்டும்.. வைப்பவன் கை மட்டுமல்ல .. முண்டமாக விழ நேரிடும்.. இனி இந்த கேடுகெட்ட அடிமைகளை நம்பி பயனில்லை நாமே பாதுகாப்பில் இறங்க வேண்டுமென தளபதி அறிவித்திருப்பது தான் சரி. சிலையை உடைத்தவனை அறிந்து கைது செய்யவேண்டும் அப்போதுதான் அவன் உயிருக்கு பாதுகாப்பு.. இந்த அரசின் நாட்கள் எண்ணபடுகின்றன.. இருந்த இடமே தெரியாமல் அதிமுகவை அழியும் காலம் கண்ணில் தெரிகிறது... .. ஆட்டம் முடியும் நேரம் வந்துவிட்டது.. .. Aalanci Spm

No comments:

Post a Comment