Tuesday, March 27, 2018

இனி..

இனி.. நிறைய பணிகள் காத்துகிடக்கிறது தினம் தினம் அருகில் இருப்பவரிடம் அரசியல் பேசுங்கள் இந்த நாடு கயவர்களிடம் சிக்கி தவிப்பதை ..சுயநல கிருமிகளால் மாநில நலன் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை.. இந்தியாவிற்கே வழி சொன்ன தமிழகம் இன்று தலைகுனிவோடு நிற்பதை பேசுங்கள்.. உங்கள் வீட்டுப்பெண்களிடத்தில் நண்பர்களிடத்தில் தெரிந்தவர்களிடத்தில் .. ஏன் திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்பதை விளக்குங்கள்.. நாம் செய்த சின்ன சின்ன தவறுகளால் இன்று மாநிலம் எந்த நிலையில் நிறுத்தபட்டிருக்கிறது .. சில சொற்ப பணத்திற்காக மொத்த மாநிலத்தையும் கேலிபேச வைத்திருக்கிறோமே என்று வருந்துங்கள்.. திண்ணைப் பிரச்சாரங்கள் தெருமுனைப் பிரச்சாரங்களை .. ஏற்பாடு செய்யுங்கள் திமுக செய்துவிட்டு போன சாதனைகள் தான் காலம் கடந்து நிலைத்து பலன் தருகிறதென்பதை சொல்லுங்கள் .. கலைஞரின் தொலைநோக்கு .. இந்தியாவிற்கு வழிகாட்டுவதை சிறிய அளவிலேனும் கதையுங்கள்.. காலம் தந்த பரிசு தளபதியென பக்கத்திலுள்ளவரிடம் பேசுங்கள்.. .. ஆம்.. சரியான நேரத்தில் சரியானவரைப்பற்றி நாம் பேசாமல் போனால் நாளைய நம் தலைமுறைக்கு நாமே வினை செய்தவராகிவிடுவோம்.. இன்றைய இழிநிலைக்கு தெரிந்து நாமே காரணமானோம்..இனியும் தொடரவிடுவோமாயின்... ஒட்டுமொத்தமாய் அடகுவைத்த கதையாகிவிடும்.. திமுக மிக சரியான பாதையை தேர்வு செய்திருக்கிறது இடையில் பிறழானதை சரிசெய்து ஈரோட்டில் இருந்து புதிய பயணத்தை ..அந்த ஈரோட்டு கிழவனின் பாதைதான் தமிழினத்தை காக்குமென உணர்ந்து மீண்டும் தொடங்கியிருக்கிறது.. அதனால் தான் 97 பேரின் ஒற்றுமையின்மையின் பலனை 3 பேர் அனுபவிக்கிறானென்று அதிரடியாய் .. இந்த மண்ணுக்கு பெரியாரிஸம் தான் தேவையென்பதை செயல்தலைவர் பேசியிருக்கிறார்.. பழைமைவாதம் பேசி திரிவோர் மிக கவனமாக நாமெல்லாம் இந்து என்ற கசவத்தை அணிந்து.. பார்பனர் நலன் என்ற ஒற்றை லட்சியத்தோடு செயல்படுகிறார்கள்.. மூன்று வாழ தொண்ணூற்றை பலி கொடுக்கிறார்கள் .. மெல்ல மெல்ல எல்லோரும் சமம் திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பென உயர்க்கல்வியில் பிற்படுத்தப்பட்டவனின் ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறார்கள் இது தொடக்கம் தான் .. மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் அரங்கேற்றுவார்கள் .. இந்த பாழாய்போனவர்களை தயவில் அவாள்களின் முன்னேற்றம் வெகு ஜோராய் நடக்கிறது.. .. எல்லாவற்றையும் இழந்து நின்றவர்களுக்கு அடிமைகள் கிடைத்ததும் அத்தனை உயர்பதவிகளையும் அடைகிறார்கள் இடஒதுக்கீடென்றாலே குலைநடுங்கும் இவர்களை இனியும் அனுமதித்தால் நாம் மீண்டும் கைகட்டவேண்டிய சூழல் வரும் அதை தடுத்திட சுயமரியாதையோடு வாழ்ந்திட/விளித்திட .. நமது உரிமைகளை காத்திட நம் இனம் மொழி கலாச்சார பண்பாடுகளை சிதைத்திட நினைக்கும் பாசிசகாரர்களிடமிருந்து நம் பெருமைகளை நிலைத்திட செய்ய .. மொத்தத்தில் நல்லதொரு ஆட்சியை தந்திட.. தளபதியோடு கரம்கோர்க்க வேண்டுமென .. அனைவரிடமும் செப்பிடுவோம்.. .. இன்றே தொடங்குவோம்.. முதலில் நம் வீட்டிலிருந்து... .. Aalanci Spm

No comments:

Post a Comment