Friday, March 2, 2018

சர்வாதிகாரம்.. தளபதிக்கு வழங்கவேண்டும்

“கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை சர்வாதிகாரமாக செயல்பட அனுமதி கொடுக்க வேண்டும்...மு.க.ஸ்டாலின் .. இது சரியா என வினவும் போது பட்டென்று ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தில்.. அதிக அதிகாரம் கொண்ட தலைவருக்கு இணையான செயல்தலைவர் பதவியில் இருந்தாலும் தலைவரின் கடந்தகால ஜனநாயக போக்கை அவர் கட்சியை நடத்திட்ட வழிமுறைகளை ..கொஞ்சம் சரி செய்யவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்பது அது ஒருவித சர்வாதிகார திமிரில் கொண்டுபோய் விடுமோ என்கிற அச்சம் ஏற்படதான் செய்யும்.. ஆனால் நீண்டநாட்களாக களையெடுக்காமல் போன பயிர் விளைந்தாலும் பயனற்று போகுமென்ற யதார்த்தம் நாம் உணரவேண்டும்.. .. திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே ஜனநாயகநெறிமுறைகளோடு பயனிக்க இயக்கம் கொஞ்சம் மேலோட்டமாக பார்த்தால் ஒருவரின் கீழ் இயங்கும் கட்சியைப்போல தோன்றினாலும் எந்தவொரு முடிவும்.. செயற்குழு மற்றும் பொதுக்குழு அங்கீகாரம் பெற்றே தீரவேண்டும்.. அப்போதுதான் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கும்.. எனவேதான் தொடர்ந்து ஏற்படும் தொய்வுகளுக்கு காரணமாகிறது... .. தெளிவான புரிதலோடு கூடிய பாதையை வகுக்கும் போது சில முட்புதர்களை அகற்றி சமன் செய்திடவேண்டும் அதற்கான அதிகாரத்தை தான் திரு.ஸ்டாலின் கேட்கிறார் எதுவும் எல்லை மீறாதவரை.. ஜனநாயக வரம்புகளுக்குட்பட்ட அதிகார குவியலை.. அது இந்த இயக்கத்திற்கு சமூதாயத்திற்கு நல்லதை தருமென்கிற போது .. குறிப்பிட்ட வரையறைக்குள்ள சர்வாதிகாரம் சிறந்தது.. மக்களுக்கான இயக்கம் இது இந்த இனத்தின் ..இன மக்களின் மொழியின் அதன் மேம்பாட்டிற்காக.. இந்த சமூகத்தின் ஏற்றதாழ்விற்கெதிராக பின்னப்படும் வலைகளை அறுத்தெறிய.. தொடர்ந்து ஒரு இயக்கத்தின் சுணக்கம் அது இந்த சமுதாய மக்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய அநீதியை நம் இன பகையால்... இன துரோகிகளைக் கொண்டு சூழ்ச்சி வலைப் பின்னப்படும் காலக்கட்டத்தில் .. எழுச்சியோடு கூடிய புதியதொரு தாக்குதலுக்கு இயக்கத்தை தயார் செய்ய... நான்காம் தலைமுறையின் நவீனபடுத்தபட்ட செயல்திட்டங்களுக்கேற்ப .. செயல்படும் அதிகாரத்தை தளபதி அவர்களுக்கு வழங்க வேண்டும்.. அப்போதுதான்.. இன்னமும் வேகம் கூடிய விவேகத்தின் சரியான பாய்ச்சலில் இயக்கத்தை செலுத்தமுடியும்.. .. நாகரீகமாக செயல்படும் தளபதியாரின் மிக சாதூர்யமான செயல் திட்டங்கள் புதிய அரசியல் உக்தியை .. அது இந்த மக்களுக்கான உரிமைகளுக்காக .. பயன்படும் வகையில் இருத்தல் அவசியம்.. இதோ இப்போது கூட காவிரி பிரச்சனையில் முதல்வர் நம் தளபதியோடு ஆலோசிக்க முடிவெடுத்திருப்பது.. காலத்தின் கட்டாயம்.. திமுக மட்டுமே மிக சிறந்த வழிகாட்டுதலை இந்த தமிழக மக்களுக்கு காட்டமுடியுமென மக்கள் நம்ப தொடங்கியிருக்கும் தருணமிது.. இக்காலகட்டத்தின் அவசியம் கருதி தளபதி அவர்கள் விரைந்து செயல்பட .. எல்லைக்குட்பட்ட சர்வாதிகார செயல் நல்லது.. விளங்கும்படி சொல்லவேண்டுமெனில்.. பொம்மலாட்டமாக இல்லாமல் கட்டத்திற்குள் நின்றாடும் பாண்டியாட்டமாக விளங்கிட வேண்டும்.. .. வாழ்த்துக்களோடு .. அதிகார வரம்பை உயர்த்தி வழங்கி செயல்பட செய்வோம்.. நம்புங்கள் தளபதியை நல்லதே செய்வார்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment