Saturday, March 24, 2018
நான்காம் தலைமுறை மிளிர்கிறது
ஈரோடு..
எம்மை செப்பனிட்ட மண்.. அந்த மண்ணிலிருந்து ஒரு பெரும் முழக்கம்.. தளபதியை இனி.. முதல்வரென அழைப்போம்.. அடுத்த விடுதலைநாளில் கோட்டையில் கொடியேற்ற வைப்போம்.. நண்பர் சிவா அதிரவைத்து சொன்னார்..
..
இன்றைய தமிழகத்தின் நம்பிக்கையாக .. தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய துணைக்கண்டமே காத்திருக்க ஒரு செய்தி உண்டெனில் அது தளபதி தமிழக முதல்வராக வேண்டுமென்பதுதான் இன்றைக்கு தமிழகத்தில் நடக்கிற கூத்துக்களை காணும் போது விரைந்து விடியல் வராதா என மக்கள் எண்ணுகிறார்கள்.. மண்டியிட்டு கும்பிட்டு காலில் விழுந்து முதல்வரானவனெல்லாம் உயர்ப்பால் உயர்ந்தவன் என்கிற போது... நாற்பத்தைந்து கால அரசியலில் படிபடியாக உயர்ந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் நாடாள வருவதுதானே நியாயம்..
..
நிறைய மாநாடுகளை திமுக நடத்தியிருக்கிறது
இந்த மாநாடு செயல்தலைவராக ஸ்டாலின் பொறப்பேற்றபிறகு நடத்தபடும் மாநாடு திடல் நிறைய இளைஞர் பட்டாளம் .. பேசுகிறவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் .. அடுத்த தலைமுறை நகர்வை இந்த மாநாட்டில் உணர்கிறேன் .. புதிய வரலாற்று எழுதுகிறது பழையதை நினைவுகூர்ந்து வண்ணம்..
திருச்சி சிவா சொன்னதைப்போல
//பாசிச கட்சிகள் எங்களை வரலாறு பேசாதே என்கிறார்கள்.. ஏன் தெரியுமா
பேசினால் இவர்களின் வரலாறு தெரிந்து விடும். வரலாறு தெரிந்தால் இவர்கள் வந்தது தெரிந்து விடும். வந்தது தெரிந்தால் இவர்கள் வாழ்ந்தது தெரிந்து விடும். வாழ்ந்தது தெரிந்தால் இவர்கள் இருந்தது தெரிந்து விடும்.. இருந்தது தெரிந்தால் நாங்கள் இழந்தது புரிந்து விடும்... ஆம் நம் முன்னோடிகள் விதைகளை நெடுக தூவி சென்றிருக்கிறார்கள் இன்று அது படர்ந்து வளர்ந்த பெரும்கடாய் நமக்கு பலன் தருகிறது..
..
இன்னமும் சற்று வீரியத்தோடு .. இந்த மாநிலத்தை மீட்கும் கடமை நமக்கு இருக்கிறது புதர்மண்டி கிடக்கிற நிலத்தை .. சமன்படுத்தி செம்மையாக்கும் பெரும் கடமை நமக்கு இருக்கிறது பழைமைவாதிகள் அதிகார திமிரில்
ஆடும் கள்ளாட்டத்தை தடுத்துநிறுத்தி விரட்ட..
#நூலுக்கு தகுந்தாய் போல் ஆடும் பொம்மலாட்டத்தை நடத்தும் நாடே காரி உமிழும் கேடுகெட்ட அடிமைகளை விரட்டிட.. பறிபோகும் தமிழர்களின் உரிமைகளை தடுத்து நிறுத்தி மீண்டும் பெற்றிட இனமான உணர்வோடு .. சுயமரியாதையோடு வாழ .. இந்த மாநாடு நம்மை இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
..
நாளை நம் கையில் என்ற பூரிப்பு தெரிகிறது..
வரும் காலங்களில் இளைஞர்கள் வழிநடத்திட ஒரு பயிற்சி பாசறையாக இந்த மாநாடு திகழுமென்ற நம்பிக்கை இருக்கிறது .. பெரும் மகிழ்வோடுதான்... ஆனாலும்
பெருங்கிழவனை காணோம் என்ற கவலை கண்ணில் நீர்கோர்க்கிறது
..
நான்காம் தலைமுறை மிளிர்கிறது..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment