Wednesday, March 28, 2018
நான் யார்
நான் யார்..
இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் சமூதாய சிற்பி.. சிந்திக்க தெரிந்தவர்கள் வந்ததுண்டு .. செயல்படுவோரையும் நாம் கண்டதுண்டு.. சமரசமற்ற பகுத்தறிவு பாதையில் சிந்தித்தும் வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் செய்தும் காட்டிய திராவிடப் பெருவுடையான் .. பேராசான் பெரியார் சிந்தித்ததை சொல்லியதை செய்துகாட்டிய பெரியாரின் நேரடி சீடர்.. வாய்ப்பை வேண்டாமென்று மறுத்தவர் பெரியார்.. காலம் வாய்ப்பை தராமல் போனது அண்ணாவிற்கு.. காலம் தந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தியவர்..
இன்று மத்திய அரசால் இந்தியாவிற்கே செயல்படுத்த நினைக்கும் திட்டங்களை 30 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றவர்..
..
முற்போக்கு பேசிய பொதுவுடைமைவாதிகள் ஆட்சிநடந்த கொல்கத்தாவில் கூட மனிதனை மனிதனே இழுக்கும் கைரிக்சாவை... 45 ஆண்டுகளுக்கு முன்பே ஒழித்தவர்.. பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கென்றதை .. சொத்தை கொடுத்தால் ஆம்பளையாண்டானுக்கு அடங்கமாட்டா என்ற பெரியவா.. எல்லாம் தடுத்தார்கள் .. இந்த பெருமகன் தான் இந்தியாவிற்க்கே வழிகாட்டியாக சொத்தில் சம பங்கென சட்டம் இயற்றியவர்.. சுயவேலைவாய்ப்பு, பெண்கள் கல்வி பயில இலவசம்...
முதல்பட்டதாரிக்கு இலவச உயர்கல்வி.. இந்தியாவிற்கு வழிகாட்டுதலாய் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ..
உரிமைக்குரல் கொடுத்தவர் .. மிசாவை ரத்து செய்யாவிடில் .. இங்கே வர விசா எடுக்கவேண்டிவருமென்று எச்சரித்தது யார் ..
அடிக்கிக்கொண்டே போகலாம்..
..
தலைவர்கள் வருவார்கள்.. ஒரு சிலரே காலம் கடந்தும் பேசபடுவார்கள்... சிலர் மட்டும் வரலாறாய் நிலைத்து நிற்பர்.. இவர் வரலாறு .. புதிய வரலாற்றை உருவாக்கும் வரலாறு..
எதிர்ப்பிலேயே வளர்ந்து ..எதிர்த்தால் தான் இனி எதிரிக்கே வாழ்வென்ற நிலை உருவாக்கியவர் ..பேசும்போதும் ஊர் கவனிக்கும் .. பேசாதபோதும் இவரின் அசவைகூட உற்றுநோக்கும்.. ஒவ்வொரு சமிக்ஞையும் ஒவ்வொரு கதை சொல்லும்..
பகைவனும் வணங்கும் பண்பாளர்.. துரோகிகளையும் மன்னிக்கும் பெரிய மனசுக்காரர்.. தடுமாற்றமில்லா நேர்மை தோல்வியில் துவளாத நெஞ்சுரம்.. வெற்றி பணிசெய்ய வந்த வாய்ப்பென்ற தெளிவு..
நாளைய நலன் கருதி செயல்படும் தொலைநோக்கு.. சாதியற்ற சமுதாயம் காண சமுத்துவம் சொன்ன பேரறிவு.. குற்றம் சொன்னவர்களை அரைநூற்றாண்டாய் நிருபிக்கமுடியாமல் திணறவைத்து வாய்மை வெல்லும் ..அறம் வெல்லும் என்ற துணிவு..
துவண்டுவிடாத தொடர்பணிகள்.. ஓய்வறியாத உழைப்பு .. எங்கும் எதிலும் திடமான முடிவோடு இந்தியாவிற்கே அரசியல் சொல்லும் திராவிடத்தலைவர்.. தமிழ் பேசினால் தேன் கொட்டும்..எழுதினால் திகட்டாது ..இனிக்கும்.. இனிக்கும் பேரின்ப தேன்மழை.. உண்மையில்
இந்தியா கண்ட உண்மையான #இரும்பு_மனிதர்..
..
நான் யார்.. இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment