Friday, March 16, 2018

இன்ப திராவிடம்

அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருக்கிறதென்றார் எம் அண்ணா.. இத்தனை காலம் கடந்தும் திராவிட நாடு கோரிக்கை மெல்ல துளிர்விடுகிறது தென்னகத்தை இணைத்த திராவிட நாடு கோரிக்கை வந்தால் திமுக ஆதரிக்கும் தளபதி.. தென்னகத்தில் இருந்து வரும் அதிகப்படியான வருவாயை கொண்டு வடமாநிலங்களுக்கு அதிகம் செலவிடபடுவதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்திருக்கிறார் .. நீண்டநாள்கள் கழித்து காதில் இன்பத்தேன் வந்து பாயுது கர்நாடகாவும் கேரளமும் ஏற்கனவே திராவிட சிந்தனையை நோக்கி வர தொடங்கியிருக்கும் வேளையில் ஆந்திரமும் கைகோர்ப்பது கண்டு மத்தியில் ஆளும் பாசிச அரசு அதிர்ச்சியடைந்திருக்கிறது .. நீண்டநாள்கள் ஒருசாரார் மட்டுமே தொடர்ந்து புறக்கணிக்கபடுவதோ அல்லது ஒருசாரார் தொடர்ந்து மற்றவர்களின் உரிமைகளை அபகரிப்பதோ நடந்தால் அது எதிர்வினையாற்றும் .. .. நாடாளுமன்றத்தில் பெருபான்மையை இழந்திருக்கிற நேரத்தில் .. YSR ரெட்டி கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொன்டுவர போவதாக அறிவிக்க நாயுடுவும் அதை ஆதரிக்க போவதாக சொல்கிறார் இரண்டு பேர் ஆதரவிருந்தாலே போதும் என்கிற சூழலில் அடிமை திமுக நிச்சயமாக ஆதரிக்கும் இல்லையெனில் மிரட்டபடுவார்கள்.. ஐம்பது எம்பிக்கள் இருந்தால் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும் இன்னும் சில கட்சிகள் சேர்ந்து கொண்டுவந்தாலும் அடிமைகளை கொண்டு தப்பிக்கலாம் ஆனால் இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவு.. பெருபான்மையாக இருந்த கட்சி தேய்ந்து வருவது நல்ல செய்தி.. .. "கலைஞர் திமுகவிற்கு மட்டுமல்ல, எனக்கும் அவர் தலைவர் தான் !" ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு.. ஆம் திராவிட பெருந்தலைவர் கலைஞர்தான்.. தென்னிந்தியாவில் கலைஞரைப்போல ஒரு தலைமையை இதுவரை கண்டதில்லை ஆளும் போதெல்லாம் தனக்கு வழங்கபட்ட எல்லைக்குள் நின்று அவர் ஆற்றிய அரும்பணிகள் காலம் கடந்தும் பேசபடுவதோடு .. பிறமாநிலங்களில் பின்பற்றபடுவதே.. ஏன் மத்தியஅரசே எல்லாமாநிலத்திற்குமான திட்டமாக கலைஞரின் ஏற்கனவே நடைமுறைபடுத்தியதை நிறைவேற்ற முடிவெடுத்திருப்பதே சிறந்த சாட்சியாகும் .. தென்னிந்தியாவின் தலைவராக திராவிட நாட்டின் பெருந்தலைவராக கலைஞர் இருக்கிறாரென்பது எவ்வளவு மகிழ்ச்சி.. இன்றைக்கு பேசாமலும் தன்னைப்பற்றி பேச வைத்திருக்கிற அரசியல் மாமணி.. காலங்கடந்தும் பேசபடுவார்.. .. திராவிட நாடு தவிர்க்க முடியாத கோஷமாக.. நாளை நடைமுறையில் வர அத்தனை சாத்தியகூறுகளும் தென்படுகிறது எல்லாவளமும் உள்ள நாட்டின் தென்பகுதி தொடர்ந்து புறக்கணிக்கபடுவதும் ..அதன் மீது மொழிரீதியாக கலாச்சார ரீதியாக .. பிற கலை பண்பாடுகள் திணிக்கபடுவதும்.. தமிழனின் தொன்மையை சிதைத்து வடவரின் வரலாற்றை நம்மீது திணித்து .. மதம் வேதம் சடங்கு விழா என எல்லா விடயங்களிலும் நம் மீது திணித்து கொண்டாட வைத்து (தீபாவளி சதூர்த்தி)ஒருவகை கலாச்சார போரை உருவாக்கி ஆரியத்தின் கொண்டாட்டங்களை நமதாக உருவகபடுத்தி .. திராவிடத்தின் அதன் கிளைகளின் தொன்மையை வரலாற்றை புறக்கணித்து .. அழித்து ஒருவகை கலாச்சார படையெடுப்பை தொடர்ந்து நிகழ்த்துவதும் .. அழுத்தி வைக்கபட்ட எதுவும் வெளியே வரும் அல்லது வெடித்து சிதறும்.. அதைப்போல இன்றைக்கு திராவிட நாடு கோரிக்கை உயிர்பெறுகிறது.. இன்னும் சிலகாலம் ஆகலாம்.. ஆனால் திராவிட நாடு தேவை இன்னும் அப்படியே இருக்கிறதென்பது உண்மை ஒருநாள் விடியும்.. திராவிடர்கள் இணைவர் திராவிடம் தழைத்தோங்கும்.. அண்ணாவின் சொல் ஒரு நாள் வென்றே தீரும்.. #திராவிடநாடு குறித்து .. அண்ணா 62 ல் சொன்னது.. திராவிட நாடு கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு முற்றிலும் இழந்திருக்க வேண்டும். அல்லது திராவிட நாடு கிடைக்கவே வாய்ப்பு இல்லை என்று இருக்கவேண்டும். அல்லது அதைவிட பெரிய லட்சியம் ஒன்று தோன்ற வேண்டும். இம்மூன்றும் இல்லாதபோது, திராவிடநாடு கோரிக்கை கைவிடுவதற்கு காரணமில்லை.” என்றார்.. .. ஆம் .. இதில் எதுவுமே நிகழாத போது திராவிட நாடு கோரிக்கை உயிர்ப்போடு இருப்பது நமக்கு விளங்கும் அதை தான் தென்னிந்தியாவை இணைக்கும் united states of south india (திராவிட நாடு) நமக்கு உணர்த்துகிறது/ சொல்கிறது.. .. இன்பத்தேன் வந்து பாயுது.. .. Aalanci Spm

No comments:

Post a Comment