Tuesday, March 13, 2018

இமயமலை ரகசியம்

வைகோ பிறக்கும் போதே லவுட்ஸ்பீக்கருடன் பிறந்தவர்... ஜெயக்குமார் கிண்டல்.. //தி.க.திமுக கம்யூனிஸ்ட்களை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் எச்சை.. மய்யத்தில் தமிழுசை சேர்ப்பு.. //இமயமலையில் ஆர்எஸ்எஸ் வினரோடு ரஜினி.. .. வைகோ யாரென்று இந்த அரைவேக்காட்டிற்கு தெரியுமா நிறைய கருத்துவேற்றுமை இருந்தாலும் அவரின் அரசியல் பயணத்தில் ஒருவகை நேர்மை.. கொஞ்சம் அவசரபடுதல் தவிர்த்து களப்பணி என்று வந்துவிட்டால் மிகவும் சுறுசுறுப்பாக ஏற்றுக்கொண்ட விடயத்தில் உறுதியாக செயலாற்றுபவர் ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு தமது தகுதியென்ன என்று அறிந்திருக்கவேண்டும்.. கருத்து வேறுபாட்டால் திமுகவிலிருந்து பிரிந்து சென்றாலும் உணர்வோடுதான் இருந்தார்.. சில வரலாற்று தவறுகள் அரசியலில் நிகழ்ந்தது ஆனால் அடிமைத்தனம் அவரிடமில்லை ..மாறாக உளஉறுதியோடு இருந்தார்.. ஜெயகுமார் பதவி பறிக்கப்பட்ட போது கயிறுக்கு அப்பால் நின்று ஜெயலலிதா வாகனத்தை எதிர்பார்த்து கும்பிட்டு நின்ற நிகழ்வொன்றே போதும் அவரின் தகுதிக்கு .. இன்றைக்கு வாய்கிழிய பேசுகிறவர் அன்று மறந்தும் வாய்திறக்கவில்லை.. .. திமுகவையும் திகவையும் கம்யூனிஸ்ட்களையும் தமிழகத்தைவிட்டே விரட்டவேண்டுமென்கிற எச்.ராசா சர்மா முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் இங்கே திராவிடத்தை சொல்லிதான் அரசியல் செய்யமுடியுமே தவிர தேசியம் எல்லாம் சொன்னால் நோட்டாவை மிஞ்சவே முடியாது அதனால் தான் ஜெயலலிதா அந்த வரம்பை மீறாமல் .. அரசியல் செய்தார் வரம்பிற்குள் நின்று ஆரியர்களுக்கு சேவகம் செய்தார் எப்போது கழட்டிவிட வேண்டுமென்று அறிந்து செயல்பட்டார்..,அதாவது நடித்தால் கூட திராவிட வேடம் கட்டவேண்டும் இல்லையேல் நசுக்கிவிடுவார்கள்.. என்ன தான் கத்தினாலும் இங்கே ஒன்றும் ஆக போவதில்லை இருக்கிற கொஞ்ச ஓட்டும் எச்சை பேச்சால் போய்விடும் .. மய்யத்தில் தமிழிசையை சேர்தது போல வேறெங்காவது சேர்ந்து பலனடையலாம்... பாவம் தமிழிசை .. மிஸ்டு கால் கொடுத்து பாஜகவிற்கு ஆள் சேர்த்தா தலைமையையே மய்யத்தில சேர்த்து கலாய்க்கிறாய்ங்க.. பாஜக மய்யம் ரஜினி மன்றம் இவையெல்லாம் இணையத்தை நம்பி வந்தவர்கள் .. மக்களின் உணர்வோடு கலந்து அரசியலில் பயணிக்க வந்தவர்கள் இல்லை... இந்த மூன்று மரைகழட்டதையும் வைத்து காமெடி பண்ணலாம் அவ்வளவுதான் .. ரஜினியின் ஆன்மீக பயணம் .. இதற்கு முன்பும் ஒரு பரதேசியைப்போல இமயமலை அடிவாரத்தில் சுற்றிதிரிந்தவர்தான் அப்போதெல்லாம் எந்த அரசியல் தலைவரையும் சந்தித்ததில்லை அப்போது அவர் மீதோ அவரின் ஆன்மீக பயணம் மீதோ யாருமே குறைச் சொன்னதில்லை.. அது அவரின் தனிப்பட்ட விருப்பமென்று கடந்து சென்றிருக்கிறோம்.. அரசியலுக்கு வருவதாக சொன்ன பிறகு .. இப்போது கூட அவரின் தனிப்பட்ட தனிமைத்தேடிய ஆன்மீக பயணமெனில் கேள்வி எழ வாய்ப்பில்லை ஆனால் தமிழகத்தில் வாய்திறந்து கருத்துகூற மறுத்து .. இது அரசியல்பயணமல்ல என விளக்கமளித்துவிட்டு தனிப்பட்ட பயணமென சொல்லிவிட்டு ஆர்எஸ்எஸ்காரர்களை மட்டும் சந்திப்பதென்பது ஏன்.. வெளிப்படையாகவே பாஜகவையோ அல்லது தம்மை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு களம் காணட்டும் அதில் ஒரு நேர்மை இருக்கிறது அதை விடுத்து இந்த ஆன்மீக முகமூடியில் ஆர்எஸ்எஸ் பரிவார் கொள்கையை சுமந்து வந்தால் திராவிடம் கிழித்தெறிந்துவிடும் .. இந்துத்துவவாதியாக தம்மை காட்டிக்கொண்டு மோடி ஆதரிப்பதாக சொல்லி தமிழகத்தில் வந்தால் பாஜகவைவிட கேவலமாக நிலையையே மக்கள் தருவார்கள்.. எழுபதுகளில் எம்ஜிஆர் செய்தபோதெல்லாம் இதுபோன்ற விழிப்புணர்வோடு கூடிய சமூகவலைத்தளங்கள் இல்லாததால் அவரின் இயல்பை மக்கள் அறிந்திருக்கவில்லை மதிமயக்கும் மாய தோற்றம் அவருக்கு துணைவந்தது இப்போது அப்படியில்லை 24 மணிநேரமும் கண்காணித்து கொண்டே இருக்கிறது இந்த சமூகம் .. விவரகேடுகளை.. விரட்டியடிக்கும்.. இங்கே பாசிசம் பேசுவோருக்கும்.. பிராமணீய அடிவருடிகளுக்கும்.. வேலையில்லை.. .. #எச்சரிக்கை .. Aalanci Spm

No comments:

Post a Comment