Friday, March 9, 2018

கடவுள் ...

கடவுள் இல்லையென்கிற வீரமணியை கைது செய்ய வேண்டும்.. கே.டி.ராகவன்.. இல்லையென்கிறவரை அல்ல இருக்கிறாரென்கிறவரை .. அதை நிரூபிக்க முடியாமல் அதை வைத்து பிழைப்பு நடத்துகிறவனை.. கடவுள் பெயரை சொல்லி பார்ப்பு வேலை செய்கிறவனை ..கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுகிறவனை.. கடவுளின் அவதாரமென்கிறவனை.. அல்லது இது தான் இவர் தான் கடவுள் அவதாரமென கதை கட்டி காலந்தள்ளுகிறவனை.. கடைசியில் நான் தான் கடவுள் என்கிறவனை தான் கைது செய்யவேண்டும்.. .. இல்லாத ஒன்றை வைத்து இருப்பதாக சொல்லி அதற்கு யாரோ ஒரு மாடலை வைத்து வைரந்து வடிவம் தந்து அதை கடவுளென சொல்லி அந்த கடவுளை பார்த்து பார்த்து வடித்தவன் கூட அருகில் சென்று அர்ச்சனை செய்யவிடாமல் தாங்கள் மட்டுமே,செல்லமுடியுமென .. நீங்கள் தொட்டால் கடவுள் தீட்டாகி விடுவாரென கதைகட்டி காலம் காலமாய் கடவுள் காட்டி பிச்சை யெடுத்து தின்போரை அல்லவா கேள்வி கேட்டிருக்கவேண்டும்.. உலகில் எத்தனை கடவுள் எங்கிருந்து வந்தது யாரை கண்டெல்லாம் நமக்கு பயம் வந்ததோ அவனை/அதை கடவுளாக்கி வழிபட தொடங்கியது பின்னால் அதையே பிடித்துக்கொண்டு கொண்டாட .. அதை தூரத்தில் வைத்து பூஜை செய்ய ஒரு இடைதரகனை கொண்டுவந்ததும்.. அவன் தன்னை ..நம்மிலும் உயர்ந்தவனாய் காட்டிக்கொண்டதும் கடைசியில் நாமே அவனை சாமி என்றழைத்ததும்.. கடைசியில் கொண்டாடியவின் தெருவில் நிற்க.. இடையில் வந்தவன் நம்மை அடிமைபடுத்தியதுதான் கடவுளால் நமக்கு கிடைத்தது.. .. கடவுள் யார் நல்லது செய்பவர் ..பிறகேன் நம்மை தீமைகள் சூழ்ந்தன .. எதுவும் இயல்பானது இயற்கையின் ஏற்றம் இறக்கம் போல இருவகை செயல்பாடுகள் நன்மையும் தீமையும்.. நல்லதும் கெட்டதும் மாறி மாறிவரும் இருசூழல்கள் அது நம்மை வலிமைபடுத்த உதவும் அவ்வளவுதான்.. எதுவும் நாமாக தேடிக்கொள்ளுதலும்.. நம் செயல்பாட்டின் தவறுமே நம்மை திருப்பி தாக்கும்.. எல்லாமே நல்லவைகளாக இருந்துவிட்டால் தீமைகள் எதுவென நம் பின் வரும் தலைமுறைக்கு எப்படி படிப்பினையை தந்துவிட்டு போவது.. இரு பக்க நிலைதானே தவிர இதில் இறைவனென்றோ ..இல்லை புனிதனமென்றோ ஏதுமில்லை.. இயற்கை தரும் மாற்றம் அதை மீறும்போது வரும் சங்கடம் .. அந்த சங்கடம் வரும்போது வரும் பயம் .. அந்த பயம் தரும் பீதி அதற்கு நிவாரணம் தரும் என்ற தன்னம்பிம்பிக்கையின்மை.. கடவுள் பக்தி பலி .. சடங்கு சம்பிரதாயமென நம்மை சிந்தித்து தெளிவு பெற விடாமல் .. ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி.. கடவுள் மதம் பிரிவினை ..என் கடவுள் பெரியது ..என காழ்ப்புணர்ச்சியை தந்து நம்மை பிரித்து கலகமூட்டி நம்மை எப்போதும் கலவரத்தோடே வைத்திருப்பதை தவிர.. கடவுளின் பெயரின் சொல்லி பிழைப்போரின் வேலை வேறெதுமில்லை.. கடவுளால் மதங்கள் தானே தோன்றியதே தவிர மனிதம் வளரவில்லை.. .. கடவுள் மறுப்பாளர்களைப் பற்றி மனநல மருத்துவர்கள் சொல்வது இதுதான்.. அவர்கள் சிறந்த மனிதநேயமுள்ளவர்கள்.. ஞானிகள் சூபிகள்.. அடுத்தவரின் வலி உணர்ந்தவர்கள்.. அன்பை அறத்தை மட்டுமே சொல்பவர்கள் எல்லோரையும் சமமென மதிப்பவர்கள் அடுத்தவரின் உரிமையை பறிக்காதவர்கள் இன்னும் சொல்லப்போனால் அடுத்தவர் உரிமைக்காக போராடுபவர்கள்.. ‍.. இப்போது சொல்லுங்கள் யாரை கைது செய்யவேண்டும் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றி பிழைக்கிற கூட்டத்தையா.. கடவுள் மறுப்பை முன்னெடுத்து.. எல்லோருக்கு சமமான அந்தஸ்தை உரிமை பெற்று தர வேண்டி போராடுகிற அனைவரும் சமமென மதித்து செயல்படுவோரையா.. .. கடவுளின் பெயரைச்சொல்லி ஏமாற்றுவதை விட வேறெதும் அயோக்கியத்தனம் உண்டா என்ன..? .. மதம் தவிர்ப்போம் மனிதம் வளர்ப்போம்.. எல்லா ஜீவனையும் நேசிப்போம்.. வாழ்வது ஒருமுறை அதை அறத்தோடு வாழ்ந்துவிட்டு போ.. அன்பை போதி.. அமைதியாய் வாழ்.. அமுதம் வேறேதும் இல்லை.. வாழும் வாழ்க்கை அழகானது அதில் அழுக்கை சேர்க்காதே.. உள தூய்மையே உன்னதம் தரும்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment