Sunday, March 11, 2018
பெரியார் சிலை ஏன்
பெரியார் இப்போது இருந்திருந்தால் ஏன் சிலை வைத்தீர்களென கேட்பார் என்கிறார்..கமல்
முதலில் அரசியல் வரலாற்றை அறிந்துக் கொண்டு களமாட வரவேண்டும் ..
கடலூரில் பெரியார் பேசிக்கொண்டிருந்த போது சில விசமிகள் செருப்பு வீசினார்கள்.. செருப்பிற்கு ஒரு சிலை முளைக்குமென்றார் கவிஞர் கருணானந்தம்.. கலைஞர் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு அதே இடத்தில் பெரியார் முன்னிலையிலே திறந்து வைத்தார்..
எதற்கு பெரியார் சிலையென கேட்போருக்கு
இதோ பிராமணீயத்திற்கெதிராக .. வர்ணாசிரமத்திற்கெதிராக இந்த கிழவன் வாழ்நாளெல்லாம் போராடினான் என வரும் தலைமுறை தெரிந்துக்கொள்ளவேண்டுமென்பதற்காகவே தவிர.. கும்பிட அல்ல.. கலைஞர் முதல்வராக இருந்தபோது . பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கலைஞர் சிலையை நிறுவினார் ..பிறகு எம்ஜிஆர் மறைவையொட்டி சிலை உடைக்கபட்டது..
செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னதம்பி முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அதுவரை நிம்மதியெனக்கு .. என்று கலைஞரால் கவிதைபாட முடிந்தது....
..
ராகுல் காந்தி.. தன் தந்தையை கொன்றவர்களை நானும் பிரியங்காவும் மன்னித்துவிட்டோம் .. முதலில் அவர்கள் மீது கோபம் இருந்தது .. இப்போது இல்லை பிரபாகரன் கொல்லபட்ட புகைப்படத்தை பார்த்த இவ்வளவு கொடூரமாக இலங்கை ராணுவம் நடந்துக்கொண்டிருக்கிறதே என்ற எண்ணம் வந்தது என்றார்..
உண்மையில் நீண்டநாட்கள் சிறையில் கழித்துவிட்டார்கள்.. பாதிக்கபட்டவர்களும் முழுமையாக மன்னித்துவிட்டதாக சொன்னபிறகு.. எழுவரையும் விடுதலை செய்யலாம் .. வருத்தியவர்களை மன்னிப்பது கூட சிறந்த தர்மம்தான்.. நியாமும் கூட.. நீண்டநாள் சிறைவாசம் தவறை உணர வைத்திருக்கும் சரியா தவறா என்ற ஆராய்ச்சியை விடுத்து அவர்கள் விடுவிக்கபட வேண்டும் ..
..
ரஜினி.. இமயமலையில் ஆன்மீக தேடலுக்காக செல்லவில்லை..மாறாக ஆர்எஸ்எஸ் காரர்களை சந்தித்து எப்படி நடந்துக்கொள்ளவேண்டுமென்று கேட்டு தெரிந்துக்கொள்ள போயிருக்கிறார்.. யாரால் இயக்கபடுகிறாரென்று தமிழக மக்கள் புரிந்து தெளிந்திருக்கிறார்கள்.. இரு பெண்கள் மரணம் குறித்து கேள்வி கேட்ட நிருபர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றுவிட்டதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.. அவர் சுயமாக சிந்தித்து பேசுபவரில்லை யாராவது அவரை இயக்கவேண்டும் எழுதி தரவேண்டும்
சிஸ்டத்தில் update செய்தால் தான் கேட்கும் போது பதில் கிடைக்கும் இல்லையென்றால்
சிஸ்டத்திற்கு பதில் சொல்ல தெரியாது தலைசுத்தும்.. அப்படிதான் திடீரென்று கேட்டால் ஓடியொளிகிறார்.. எங்கிருந்து தயாரிக்கபட்ட இயந்திரமென்பதை தமிழர்கள் அறிவார்கள்.. இமயமலை அடிவாரத்தில் கடைசிவரை ஆண்டியைப்போல கழிக்கவேண்டிவரும்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment