Monday, March 26, 2018

மனிதனை நினை

இயேசு உண்மையில் உயிர்த்தெழவில்லை.. நான் பார்த்த ஏராளமான டாக்குமெண்டரிகள் மூலம் தான் இயேசு உயிர்தெழவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.. இளையராசா .. கூடவே ரமண மகரிஷி மட்டுமே உண்மையில் உயிர்த்தெழுந்தார். உலகில் வேறு யாரும் ‌இதுவரை உயிர்த்தெழவில்லை என்கிறார் இளையராசா .. .. மரித்தவர்கள் உயிர்தெழுவதில்லை உயிரோடு எழுந்தால் அவர் மரிக்கவில்லை என்றே பொருள். சில நம்பிக்கைகள் அறிவுசார்ந்து இருப்பதில்லை மதம் சார்ந்தே இருக்கும் விளக்குங்கள் என்றால் வேதத்தில் இருக்கிறதென்பார் .. இயேசுவை ஈஸா என முஸ்லிம்களும் கொண்டாடும் அதேவேளை மீண்டும் வருவாரென (உலக அழியும் நாளில்) கடைசி நாளில் நம்பிக்கை கொள்கிறார்கள் .. உயிர்தெழுந்தாரென்று ஒரு மதமும் .. பின்னர் உயிர்தெழுவாரென மற்றொன்றும் சொல்கிறது.. உண்மையில் மரித்தவர்கள் வரமாட்டார்கள்.. சரி இடையில் ரமணர் மட்டுமே உயிர்தெழுந்ததாக சொல்கிறார் எங்கே என கேட்டால் வேறேதாவது கதை சொல்வார்.. ரமணர் கிருஸ்துவ பள்ளியில் தான் படித்தார் அவருன் கடைசி காலம் மிக கொடுமையாக இருந்தது .. நல்ல விடயங்களை சொன்னார் எளிமையாக வாழ்ந்தாரென சொல்லி சென்றிருக்கலாம் .. .. இளையராசாவை இசையோடு நிறுத்துக்கொள்வோம்.. மதம் ஆன்மீகம் என்றால் கொண்டாடினால் படுகேவலமாக தோன்றும்.. தன்னை தானே உயர்த்திபிடிக்காதவன் புழுவை விட கேவலமானவன் இந்த இழிபிறவிக்காக (தாழ்த்தப்பட்டவனாக பிறந்ததை சொல்கிறார்) பிராயசித்தம் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றவரிடம் வேறேதை எதிர்பார்க்கமுடியும்.. .. ராசா ஆரம்பகாலங்களில் தன் அண்ணனோடு சேர்ந்து பொதுவுடைமை மேடைகளில் பாடிய காலங்களில் எல்லாம் இத்தனை முக்திப்போய் இல்லை .. நாத்திக சீர்த்திருத்த கருத்துகளை கிராமங்கள் தோறும் பாடியவர்.. எங்கள் கீழ்தஞ்சை மாவட்டங்களில் பாவலர் சகோதரர்கள் பாடாத கிராமங்கள் இல்லை.. சினிமா வாய்ப்பு கிடைத்த புதிதில் கூட சிலகாலம்.. சுயமரியாதையோடுதான் இருந்தார்.. புதுராகம் படைத்ததாலே நானும் இறைவனே என அவரால் இசையமைக்க முடிந்தது .இப்போது இதுபோன்ற பாடல் வரிகளுக்கு இசையமைக்க சொன்னால் மறுத்துவிடுவார்.. அவரின் நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கவில்லை ஆனால் நம்பிக்கையென்ற பெயரில் உளறுவதும் மூடநம்பிக்கையை விதைப்பதும் சுயமரியாதையற்று குனிந்து கிடப்பதும்.. இளையராசா போன்ற ஆளுமைகள் செய்கிற போது அது இந்த சமூகத்தில் தாக்கத்தை தரும்.. முட்டாள்த்தனமான கருத்துகளை எதிர்க்கவேண்டியதும் தவறை சுட்டிகாட்டுவதும் .. அசிங்கத்தின் மீது நிற்கிறீர் என சொல்லி புரியவைப்பதும் எமது கடமை.. .. ஒருமதத்தை ஏற்றுக்கொண்டு வேறொரு மதத்தை விமர்சிப்பவன் அயோக்கியன் என்றார் தந்தை பெரியார்.. கடவுள்,அவதாரம்,வேதம்,சாதி, சடங்கெல்லாம் நாமே உருவாக்கியது அதில் ஒருவருக்கொருவர் உயர்வென்றும் தாழ்வென்றும் சொல்லி நம்மை குத்தி குதறி இரத்தம் கொட்ட நிற்கிறோம்.. .. மனிதனை நினை மனிதனை நினை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment