Wednesday, March 14, 2018
தளபதி ..
மூன்றாம் கலைஞர்..
..
சிலரின் அதீத ஆர்வகோளாறு இன்றைக்கு டிரெண்ட் ஆகியிருக்கிறது.. கலைஞர் ஒருவர்தான் கலைஞர் அவரை பிரதியெடுக்க முடியாது .. எப்படி பெரியாரென்றால் அண்ணா என்றால் அவர்களை குறிக்குமோ அதைப்போல கலைஞரென்றால் .. திராவிட பெருவுடையாரைதான் குறிக்கும்.. இரண்டாம் அண்ணா என்றோ,மூன்றாம் பெரியாரென்றோ கலைஞரை எப்படி அழைக்க முடியாதோ அப்படி கலைஞர் பெருமகனோடு யாரையும் ஒப்பிட்டோ அல்லது அவரின் தோன்றலென்றோ எவரையும் ஒப்பிடவோ இணைத்து பேசவோ முடியாது ..
..
திரு.ஸ்டாலின் ஒரே நாளில் திணிக்கபட்டவரில்லை திணிக்கபட்டிருந்தால் காலம் அவரை புறக்கணித்திருக்கும்.. அழகிரியைப்போல.. திருமதி கனிமொழியை கூட இன்னமும் பயிற்சிக்கான காலமாக அவரின் அரசியல் கருதபடுகிறதே அன்றி தலைமைக்கான தகுதி இருப்பதாக கருதவில்லை.. கலைஞர் செய்த சில தவறுகளில் அழகிரி கனிமொழி வரவென்று நினைக்கிறேன் முதலாமவர் தகுதியில்லாதவராக அல்லது கொடுக்கபட்ட வாய்ப்பை பயன்படுத்த தெரியாதவராக இருந்தார் .. ஆனால் கனிமொழி சில சமரசங்களுக்காக கொண்டுவரபட்டாலும் .. தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்.. கலைஞரே ஒருமுறை கனிமொழி என் இலக்கிய வாரிசாக வருவதையே விரும்புகிறேன் என்றார்.. சில கசப்பான அனுபவங்கள் தரும் படிப்பினை பின் வரும் நாட்களில் மிகப்பெரிய தாக்கத்தை தருமென்பதை காலம் உணர்த்தியிருக்கிறது..
திரு.அழகிரியோ அல்லது இன்றைக்கு முன்னெடுக்கபடுகிறவர்களோ(கனிமொழி உதயநிதி) திராவிட இயக்கத்தில் எந்த மாற்றத்தையும் தரவல்லவர்கள் இல்லை .. இன்றைய காலகட்டத்தில் திரு.ஸ்டாலினை முன்னெடுக்க முயலவேண்டுமே அன்றி மற்ற விடயங்களில் கவனத்தை திசை திருப்புவது எதிராளிகளுக்கு பயனாகி போகும்..
..
தளபதி ..
தவிர்க்கமுடியாத தமிழகத்தின் எதிர்காலம் நீண்ட வரலாற்று பின்ணணியோடு நீண்ட நெடிய பயிற்சியோடு படிப்படியான வளர்ச்சியும் மெல்ல மெல்ல மெருகேற்றிய திறமையும் எதிர்க்கிறவர்கள் கூட ஏன் பகைவர் கூட போற்றுகிற ஏற்கிற தலைவனாக வலம் வருவதை அவர்கள் குடும்ப உறுப்பினர்களே விரும்பவில்லையோ என எண்ண வேண்டியிருக்கிறது.. இப்படி கேனத்தனமான செயல்கள் வரும் தேர்தலில் ஒருவித மெல்லிய கேள்வியை எழுப்பி அது விரிந்து படர்ந்து தம்மையே திருப்பி தாக்குமென அறியாதவர்கள் .. கனிமொழியாக இருந்தாலும் உதயநிதியாக இருந்தாலும் உறுப்பினர் கார்டோடு கடைசி உறுப்பினரின் செயல்படுவதல் போல இருக்கவேண்டுமே தவிர முன்னிலை படுத்துவதோ .. அடுத்த வாரிசென்பதோ அவர்களுக்கு வினையாகும்..
தொடர்ந்து கழகப்பணியாற்றுங்கள்.. மக்கள் ஏற்கிற காலம் வருமெனில் அப்போதைய தேவையெனில் .. காலம் முன்னிறுத்துமே தவிர இன்றைக்கு இவர்கள் முன்னிலைப்படுத்துவது தேவையில்லாதது
திருமதி கனிமொழி காத்திருப்பது நலம்
இவரின் சில ஆதரவாளர்கள் குறிப்பாக நாடாரிய சகோதரர்கள் முன்பு முன்னெடுக்க ராசாத்தி அம்மாவால் களமிறக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தளபதியை கேலி செய்வதும் திமுகவில் தளபதியின் செயல்பாட்டை விமர்சிப்பதும்
செய்து வருவது வெளிப்படையாக தெரிவது அவருக்கு சங்கடத்தை தரும்.. கடைசியில் தூக்கியெறியபடுகிற திமுக தொண்டர்களால் வெறுக்கபடுகிற நிலை உருவாகும்.. திறமை தகுதியை வளர்த்துக்கொள்வதோடு களப்பணியில் தளபதி தோளோடுதோள் சேர்ந்து பணியாற்றினால் நன்று.. இல்லையேல் சருகைப்போல .. விழ நேரிடும்..
கலைஞர் மொழியில் இவர்களுக்கு சொல்வதெனில் இது சங்கரமடமல்ல..
..
நிறைய பணி காத்துகிடக்கிறது .. இவரிகளின் அக்கறையின்மையை .. அதிகபிரசங்கிதனத்தை
ஆர்வகோளாறை கடந்து தளபதி தலைமையில் தமிழகம் மிளிர செய்ய உறுதி ஏற்ப்போம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment