Saturday, March 17, 2018

மாநில சுயாட்சி

திரு சந்திரபாபு நாயுடு கேட்கும் சிறப்பு அந்தஸ்தின் இன்னொரு பெயர் என்ன தெரியுமா..? அது தான் திமுகவின் தாரக மந்திரம் #மாநில_சுயாட்சி.. எல்லா அதிகாரங்களும் மத்தியில் இருந்தால் எதையும் பெற வேண்டுமெனில் கைகட்டி நிற்கிற நிலையை தவிர்த்து .. வெளியுறவு கொள்கை ராணுவம் தவிரித்து எல்லா துறைகளிலும் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு வேண்டிய நிதியை தாமே ஏற்படுத்திக்கொள்ள .. மாநில வருவாயை மாநில நலனுக்கே செலவு செய்துக்கொள்ள.. கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் மண்ணின் மைந்தருக்கே முன்னுரிமை.. ஆட்சி மொழியாக அந்தந்த மாநில மொழிகளே செயல்பாட்டில்..வளர்ச்சியில் பிரதானமான பங்கை தாமே நிர்வகித்து கொள்ளல்... இவையெல்லாம் மாநிலங்களின் சுயத்தை நிறுவ பயன்படும்.. மத்தியில் அதிகார குவியல் என்பது சிறந்த ஜனநாயகமாக இருக்காது.. .. திராவிட நாடு கோரிக்கையை யாரும் இப்போது எழுப்பவில்லை எழுப்பினால் அதை திமுக ஆதரிக்கும் என்பதிலிருந்தே .. இன்னமும் அதற்கான தேவை இருப்பதை உணர்த்துகிறது .. மாநில உரிமைகள் பறிக்கபடுவதும் .. ஒரே இடத்தில் அதிகாரம் குவிதலும் நாட்டின் இறையாண்மையை உலுக்கும்.. இப்போது மெல்லிதாக கேட்கும் கேள்விகள்.. பின் பிரளயத்தை தரும்.. சிறிய உளிதான் மலையையே ஜல்லியாக்கிவிடும்.. தெற்கு உழைத்து வடக்கு உண்பதா என்ற சித்தராமையாவின் கேள்வி ஆயிரம் பொருள் பொதிந்தது.. தொடர்ந்து புறக்கணிக்கபட்டால் .. அதன் விளைவு அதிர்வாக இருக்கும்.. .. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குறிப்பாக குஜராத்தியர்கள் வலிமையோடு வலம் வருகிறார்கள்.. சிறுதொழில்களை அழித்து பெரும் கார்ப்பரேட்களுக்கு சலுகைகள் தாராளமாக வழங்கபடுகிறது.. கோடிக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் வெளிநாட்டிற்கு ஓட்டம்பிடிக்கிறார்கள்.. இன்னும் தென்னகத்தை சேர்ந்தவர்கள் தான் ஒழுங்காக வரிசெலுத்துவதும் அவை அனைத்தும் பிற மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவ பயன்படுகிறது அதுவும் கொள்ளை போகிறது.. வடமாநிலங்களுக்கு நலன் மட்டுமே காக்கபடுமேயானால் .. தொடர்ந்து தென்னகம் புறக்கணிக்கபடுமேயானால்.. தளபதி சொன்னதைப்போல.. திராவிடநாடு கொள்கையை கைவிட்டிருக்கிறோமே தவிர அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.. இப்போது நடப்பதை பார்த்தால் அது நூற்றுக்குநூறு உண்மை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment