Thursday, March 22, 2018
பைத்தியங்கள்..
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்த தமிழகம் ஒத்துக் கொண்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு...!
அடபாவிங்களா.. எந்தளவிற்கு அடிமைபட்டு கிடப்பீர்கள் உச்சநீதிமன்றம் நீண்டதொரு விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பு இடைக்கால தீர்ப்பை விட குறைந்தளவே தர உத்தரவிட்டு அதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் .. கடைசியில் சொந்த மக்களின் வாழ்வாதாரத்தையே .. நசுக்கபார்க்கும் இந்த பாவிகளை என்ன செய்வது.. பதவிக்காகவும் பணத்திற்காகவும் பெற்ற தாயை கூட வாடகைக்கு விட தயங்காத கொடியவர்கள் இனியும் பொறுக்காமல் உடனடியாக .. அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்தை கையிலெடுக்கவேண்டும்.. இன்னும் சிலகாலம் இவர்களை அனுமதித்தால் மொத்தத்தையும் அடமானம் வைத்துவிடுவார்கள்..
..
ஹெச்.ராஜாவை மனநிலை டாக்டரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்--உயர் நீதிமன்றம்..
உண்மையில் மன சிதைவிற்குள்ளானவர் போலதான் அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன தினம் தினம் பிற மதத்தவர்களை இழிவாக பேசுவதும் .. பாஜகவை எதிர்க்கிறவர்களை ஆன்டி இந்தியன் என்பதும்.. மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் .. அவரது செயல்கள் நமக்கு உணர்த்தும் .. இவரை மட்டுமல்ல திருமதி தமிழிசை கூட நல்ல மனநல மருத்துவரை நாடலாம் .. பாஜக இருக்கிறவர்களின் அறிவிற்கு உதவாதவற்றை பேசி திரிவார்கள் நாம் அறிந்தது தான் ஆனால் தமிழிசை இனியும் பொறுக்கமுடியாது பொங்கினால் நாடு தாங்காது என்றெல்லாம் உளறுகிறார் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டது.. சம்பூகவதத்தை பற்றி அறிந்திராமல் வானதி போன்றோர் விவாதத்திற்கு வந்து உளறுகிறார்கள்..
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பிராமண குழந்தை திடீரென விழுந்து இறந்து போகிறது .. பெற்றவன் அரசன் ராமனிடத்தில் போய் .. பிராமண குழந்தை இறந்து போனது ஆட்சிக்கு ஆபத்தென்க.. யாரோ சூத்திரன் தவம் செய்கிறான் அதனால் தான் குழந்தை இறந்ததென்க .. ரசயு நதிக்கரையில் தலைகீழாக தொங்கி கடும் தவம் செய்யும் சம்பூகனை யாரென்று கேட்டு அவன் சூத்திரன் என்றவுடன் தலையை வெட்டி .. அதை கொண்டு இறந்த பிராமண குழந்தையை உயிர்தெழ செய்கிறான் இதுதான் அதன் சுருக்கம்.. ராமராஜ்ஜியத்தில் பிராமணர்கள் மட்டுமே வாழ தகுதியானவர் என்ற நிலையை கூட புரிந்துக்கொள்ள முடியாத வானதிகளும்.. பிராமணர்களுக்கு நான் காவல் நிற்பேன் என்கிற கிருஷ்ணசாமி போன்ற நிறைய பைத்தியங்கள் இங்கே உலவுகின்றன..என்ன கொஞ்சம் முத்திப்போன நிலையில் எச்சை ..அவ்வளவுதான்...
..
சந்தையூர் தீண்டாமை சுவர்.. அருந்ததியர் சமூகமக்கள் மதம் மாற போவதாக வேதனை ..
உண்மையில் இப்போதுதான் தாழ்ந்துபோய் நிற்கிறீர் பறையர்களே.. தன்னிலும் தாழ்ந்தவன் உண்டென்று எண்ணும் கீழ்தரமான எண்ணம்..
பிராமணனின் வர்ணசரமத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.. உண்மையில் உயர்ந்தவர்கள் அவர்கள்தான்.. மனிதனின் கழிவுகளை அகற்ற சுகாதாரமாய் வாழ வழி செய்யும் உன்னதமானவர்கள்..
உண்மையில் தாழ்ந்து போனீர்கள் ..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலர் அ.செல்லப்பாண்டியன் "தீண்டாமைச் சுவர் என்று உறுதி செய்யப்பட்டால் அதை இடிக்கிற முதல் நபர்களாக நாங்கள் இருப்போம்.. என்கிறார்..
அவ்வாறே செய்யுங்கள் தோழரே.. ஆதிக்க சாதியினரைப்போல நடந்துக்கொள்வது ஒருவகை பைத்தியகாரத்தனம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment