Monday, March 5, 2018

எளிமை

திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மிக எளிமையாக வாழ்ந்தாரென சொல்லி அவரோடு காமராஜரையும் துணைக்கழைத்து .. காமராஜருக்கு பிறகு எளிமையானவரென புகழ்கிறார்கள் .. இருவருக்குமான வேறுபாடுகளை கணக்கில் கொள்வதில்லை .. காமராஜர் வாழ்ந்த காலமும் காமராஜருக்கு குடும்பமில்லை என்பதையும் மறந்து கடந்து போகிறார்கள்... .. முதலில் காமராஜரை பார்ப்போம்.. காமராஜருக்கென்று தனி திறமைகளோ.. அதாவது வேறேதாவது துறைகளில் ஆளுமையுடையவரோ அல்லது பொருள் ஈட்டும் திறமையோ அவருக்கு இருந்ததில்லை பொதுவாழ்வு வந்தபிறகு அதிலிருந்து வரும் வருவாயை தவிர வேறு வருவாய் இல்லை.. அதோடு அவருக்கு குடும்பமென்று மனைவி மக்கள் வழியே வருவாய் இருந்ததில்லை.. அதனாலேயே அவர் வாழ்வு மிக எளிமையாக இருந்தது.. ஆனால் மாணிக் சர்க்காரின் வாழ்வின் பொருளாதாரம் அவரது மனைவியின் சம்பாத்தியமும் சேர்ந்தது கட்சி அவருக்கு வழங்கும் சம்பளத்தில் குடும்பம் நடத்தினார்.. .. முதலில் அரசியல் தலைவர்கள் தொழில்களில் ஈடுபட கூடாதென்றோ அல்லது அவர்களுக்கு இருக்கும் இன்னும் பிற திறமைகள்.. எழுத்தாற்றல் தங்கள் குடும்பத்தினரின் வருவாய்.. தங்களின் முதலீடுகளிலிருந்து வரும் வருவாயெல்லாம் சரியான முறையில் வருமானவரி செலுத்தி நேர்மையான முறையில் சேர்க்க யாரும் தடுக்கவில்லை.. மாறாக முறைகேடாக சேர்த்தால் மட்டுமே தவறே தவிர.. யாரையும் பொருள் ஈட்டவேண்டாமென யாரும் தடுக்கவில்லை.. எளிமை என்பது எவ்வளவு பொருளீட்டினாலும் அமைதியாக... நிறைகுடத்தைப்போல ஆர்பாட்டாமில்லாமல் வாழ்வது.. எந்தவழியிலும் சம்பாதிக்க தடையில்லை ஆனால் அது சட்டத்திற்கும் நியாயத்திற்கு உட்பட்டதாக .. தவறாகவோ மோசடி செய்தோ .. அதிகாரத்தை பயன்படுத்தியோ இல்லாததாக இருத்தல் வேன்டும்.. அவ்வளவுதான்.. .. இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் தந்த தொடர்புகளை பயன்படுத்தமாட்டேன் என்பது அறிவீனமே தவிர.. எளிமையல்ல.. e.mail இல்லை சமூகவலைத்தளங்களிலே கணக்கில்லை என்பதை எளிமையாக சொன்னால் அது நகைப்புக்குரியது.. சமூகவலைத்தளங்களில் வரும் செய்திகள்/கருத்துகள் சாமானிய மக்களின் பிரதிபலிப்புகள்.. அவனின் கோபம் குறை எதிர்பார்ப்பு எதிர்ப்பு எல்லாம் தெரிந்துக்கொள்ளாமலேயே இருப்பதென்பது.. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டென்பதைப்போல.. நாட்டுநடப்பை நமக்கு வேண்டியவர்கள் மூலமும் கட்சிகாரர்கள் அதிகாரிகள் வழியே தெரிந்து கொண்டால் போதுமென்பது சரியான அணுகுமுறையாகாது.. எதையும் ஏற்றுக்கொள்ளாத பழைமைவாதத்தைப்போல.. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் போனால் தோல்வியே மிஞ்சும் .. குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் வாழ்வேன் என்பதும் செயல்படுவேன் என்பதும் எளிமையல்ல அறிந்துகொள்ளாமை அடக்கமல்ல அறிவின்மை.. .. அரசியலில் காமராஜர் மிக சிறந்த தலைவரைப்போல சித்தரிக்கிறார்கள்.. நல்லவர் என்பதில் உடன்பாடுண்டு.. சிறந்த நிர்வாகியா என கேட்டால் நிறைய பேசவேண்டிவரும்.. விவசாயிகள் வீடுதேடி வந்து நெல்மூட்டைகளை அரசே அள்ளிக்கொண்டுபோன கொடுமையெல்லாம்.. எம்மை போன்ற விவசாயிகளிடத்தில் கேட்டால் தெரியும் வீட்டுக்கு இவ்வளவுதான் வைத்துக்கொள்ளவேண்டுமென.. சொல்லி விதை மூட்டையை கூட தூக்கி கொண்டு போனா்கள் அவ்வளவு அரிசி பஞ்சம் வந்தது .. இந்திய அரசியலில் மிக சிறந்த ஆட்சியை .. தொலைநோக்கோடு கூடிய திட்டங்களை.. காலம் கடந்தும் பேசபட கூடிய வகையில் செயல்படுத்தி காட்டி .. இந்தியாவிற்கே வழிகாட்டியது திராவிட ஆட்சிதான்.. கலைஞரின் ஆட்சிதான்.. இதுவரை திமுக மீது சொல்லபட்ட குற்றசாட்டுகளில் ஒன்றை கூட நிரூபிக்க முடியாமல் காலம் கடந்து தவறை உணர்கிறநிலையில் தான் உள்ளோம்.. .. #கையேறுநிலை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment