Friday, March 23, 2018
கம்பீர தலைவர் கலைஞர்
கம்பீரம்: தலைவர் எங்கள் கருணாநிதி..
..
செல்வி ஜெயலலிதா தன் இறுதிநாட்களில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக திருமதி.சசிகலா சொல்லியிருக்கிறார்..
ஆம்.. இரும்பு பெண்மணி என்று பொய்யான பிம்பத்தில் நின்று அதிகாரம் இருக்கிறதென்ற தைரியத்தில் ஆணவத்தோடு எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைபாடு சிலரால் அவரை இரும்பு பெண்மணி என புகழ தொடங்க அந்த புகழ்ச்சிக்குரிய தகுதி தன்னிடத்தில் இல்லையென்று கூட உணராதவர் தான் ஜெயலலிதா..
..
தன் பிறப்பு காக்குமென நம்பி ஆளும் பாஜக துணையிருக்கிறதென்ற தெனாவட்டில் எதற்கும் விலையுண்டு எதையும் விலைக்கு வாங்கிவிடலாமென்ற நினைப்பு தான் அவரை விசாரணை நீதிமன்றத்தில் இருமாப்போடு செல்லவைத்தது ..
நீதித்துறையில் சிலர் நீதிமான்களாக இருப்பாரென்பதை மறந்து போனார்.. முதல்வராக திமிரோடு போனவரை.. காரின் கொடியையும் அரசு முத்திரையோடு கூடிய பலகையை அகற்றி .. தனியறையில் இருக்க வைத்து.. நான்காண்டு சிறை ₹100 கோடி அபராதம் என்று தீர்ப்பை வாசித்த போதே தளர்ந்து போய்விட்டார்.. சிங்கமென வலம் வந்தோமே நம்மை சிறையில் அதுவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக அனுப்பவிட்டார்களென்ற
அதுவும் 23 நாட்கள் சிறையில் குற்றவாளியாக இருந்ததும் .. அவரை வெகுவாக பாதித்திருக்கிறது.. அதைதான் திருமதி சசிகலா சொல்லியிருக்கிறார்..
உண்மையில் ஜெயலலிதா மிகவும் பலவீனமானவர்.. தவறை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்தவர்.. நீதியை விலைக்கு வாங்கி தற்காலிக தீர்வை பெற்ற போதே (குமாரசாமி தயவில்) அவருக்கு தெரிந்திருந்தது எப்படியும் களி திங்க நேரிடுமென்று அதனால் தான் உடலை பேணுவதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை சசிகலாவின் வாக்குமூலம் இதை தான் உணர்த்துகிறது..
அஞ்சாத நெஞ்சம் போல் நடித்தே வாழ்ந்துவிட்டார்.. உண்மையில் பயம் அவரை தின்றுவிட்டது.. துணிவில்லாமல் ஒருவித பதட்டதோடே கடைசி காலத்தை கழித்தவர்..
மனவலிமை உடையவரென்று அவரே ஏற்படுத்திக்கொண்டது வெறும் பிம்பம் ..போலியானது..
..
எது மனவலிமை..
வெற்றியில்..தன் பின்புலத்தில்..தன் சாதீய பெருமையில் .. அதிகார திமிரில் தானென்ற ஆணவத்தில் நிற்பதல்ல மனவலிமை ..
தோல்விகளை தொடர்ந்த போதும்.. சுற்றி நின்றவர் முதுகில் குத்தியபோதும்.. நட்பைச்சொல்லி கழுத்தறுத்த போதும்.. வழக்குகளால் வேட்டையாடபட்டபோதும்.. பொய்யைச்சொல்லி வீண் பழியைச் சுமத்தியபோதும் உளஉறுதியோடு வாய்மையின் பக்கம் நின்று பொய்களால் வீழ்த்த முடியாதென்ற உறுதியோடு .. கொண்ட கொள்கையில் தளராமல் .. செயல்படுவதும் ..எதையும் எதிர்கொண்டு உண்மை வெல்லுமென்ற நம்பிக்கையோடு இருத்தலே மனவலிமை..
சின்ன சின்ன தோல்விகளால் எம்மை வீழ்த்திட முடியாது ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்காமல் கிடைக்கிற வாய்ப்பில் இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லதை அது காலங்கடந்தும் பயன் தரும் வகையில் பணியாற்றிய பெருந்தகை #கலைஞர் ..அவர்தான் மனவலிமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு..
உண்மையான இரும்பு மனிதர் அவர்தான்..
இந்தியா கண்ட தலைவர்களில் இவ்வளவு துயரங்களை ரணங்களை துரோகங்களை சந்தித்தவர் எவருமில்லை ..மக்களின் அவசர முடிவால் தோல்வியை தந்தபோதும்.. அறியாமையில் வீழ்ந்துவிட்ட சமூகத்தின் துயரத்தை கலைய அதிகாரமில்லாத போதும் போராடிய பெருந்தலைவர் .. எதிரிகளை விட கூட இருந்த குழிப்பறித்த துரோகங்கள் .. நயவஞ்சகர்களை புன்முறுவலோடு சந்தித்த தன்நிகரற்ற தலைவர்.. வெற்றி களிப்பில் மகிழ்வின் மதமதப்பில்.. அதிகாரம் இருக்கிறதென்ற தெம்பில் வருவதெல்லாம் வலிமையல்ல.. தோல்வியிலும் துவளமால்.. கட்சியை ஏற்றுக்கொண்ட கொள்கையை நழுவாமல் காத்துநிற்கும் மனவலிமை ..
இந்தியாவில் #கலைஞரை தவிர யாருக்குண்டு.
கம்பீர தலைவர் எங்கள் கருணாநிதி...
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment